Tuesday, October 1, 2019

'மனுஷன் எனும் மதம் மாத்திரமே மதி!’

Actor Sreenivasan's Speech at Edappal.  ‘தெய்வம் உண்டா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இல்லாமலிருப்பதுதான் தெய்வத்தின் அந்தஸ்துக்கு ஏற்றது’ என்று ஜெரால்ட் ரூட் சொன்னதைச் சொல்கிறார் எனக்கு மிகவும் பிடித்த சீனிவாசன். ரசித்துக் கேட்ட சமீபத்திய வீடியோ ஒன்றிலும் இதையே சொன்னார். அவர் நாத்திகவாதி ஒன்றும் அல்ல; நாம் செய்கிற நல்ல செயல்களில் எல்லாம் தெய்வம் இருக்கும் என்று சொல்பவர். எல்லா மத தெய்வங்களும் ஒன்று சேர்ந்து தன் திருமணத்தை நடத்திய விதம் பற்றிச் சொன்னதை ரசித்தேன். ‘கடவுளின் சொந்த நாடு’  ஏன் பைத்தியக்கார ஆஸ்பத்திரி என்று விவேகானந்தரால் அழைக்கப்பட்டது என்பதற்கு சீனிவாசன் கொடுக்கும் விளக்கம் முக்கியமானது. தெய்வம் எல்லாம் அறிந்திருக்கும்!
*
*
Thanks to : Yuva Kerala

No comments:

Post a Comment