இன்று ரசித்த கவிதை இது. ஃபேஸ்புக்கில் சகோதரி தமிழ்நதி எழுதியதை G+ல் தோழி பிரபா பகிர்ந்திருந்தார். இருவருக்கும் நன்றி - இளம் வழுக்கையோடு. அடியில் கொடுத்த சுட்டி மூலம் மறுமொழிகளையும் அவசியம் பாருங்கள். ஓர் எழுத்தாளக் கிழம் வன்மையாக கண்டிக்கிறேன் என்று சொல்லி நகைத்திருக்கிறது! - AB
---
வயதாக மறுக்கும் ஆண்கள் - தமிழ்நதி
பெருந்தொப்பைக்காரர்களாகிவிட்ட
முன்னாள் இளைஞர்களெல்லோருக்கும் வேண்டியிருக்கிறது
சிற்றிடையும் சிற்ப மார்பும் கொண்ட காதலிகள்
வழுக்கையைத் துயரத்தோடு தடவுமவர்கள்
வாசனை வீசும்
அடர் கூந்தலுள் முகம் புதைக்கவே விரும்புகிறார்கள்
கனத்த கண்ணாடிகளுக்குப் பதிலாக
கண்வில்லைகளை அணிந்துகொள்ளுமவர்கள்
கனவுகளின் நீர்மை நிறைந்த நீள் விழிகளை
கூட்டங்களில் தேடியலைகிறார்கள்
அவர்களுக்கு வயதாகிவிட்டதென்று
படுக்கையில் யாரோ ஒரு பெண்ணால்
அறிவுறுத்தப்படுத்தும் நொடியில்
பல்லாண்டுகளை மூச்சிரைக்க ஓடிக்கடந்து
இளமையின் பந்தயத்தை
துக்கத்தோடு நிறைவுசெய்கிறார்கள்.
*
Thanks to : Thamizhnathy Nathy
https://www.facebook.com/thamizhnathy/posts/10154883785460834
