Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Monday, April 28, 2025

மரண அறிவிப்புக்குப் பின்னேயும் மத நல்லிணக்கம் - ராமச்சந்திர வைத்தியநாத்


சாதாரணமாக இன்றைய தினம் ஒரு வெற்றுச் செய்தியாக இருக்கககூடியது காலப்போக்கில் வரலாறாக மாற்றமடைகிறது.    சில நாளிதழ்கள் இதை அப்படியே அல்லது சற்று உருமாற்றி தங்களின் முழக்கமாக கொள்வதும் இருந்து வருகிறது.  ஆயின் இன்றைய செய்தி நேற்றைய வரலாற்றின் தொடர்ச்சியாகவும் அமைகிறது.  முந்தியகால நிகழ்வுகளை அறிந்த அல்லது தெரிந்தோருக்கு இது சுலபமாகவே சாத்தியப்படும்.  

பெரும்பாலும் அனைத்து நாளிதழ்களிலும்  “இரங்கலும், நினைவுகூறலும்” என்றொரு  விளம்பரப் பத்தியினை வெளியிட்டு வருகிறது.  குறிப்பிட்ட நபரின் மரணச் அறிவிப்பினை  அனைவருக்கும் தெரிவிக்க முடியாத நிலையில் இத்தகைய பத்தி அறியக்கூடிய  ஒரு வாய்ப்பாகவே இருக்கிறது.  இவ்வறிப்புகளின் பின்னே தகவல் மட்டுமின்றி வரலாறும் ஒளிந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடும் இருக்கிறது.  சமீபத்தில் 2025 ஏப்ரல் 18 வெள்ளியன்று  வெளியான இந்து ஆங்கில நாளிதழின் 9ம் பக்கத்தில் வெளியான இரங்கலும் நினைவுகூறலும் பத்தியில் இதுபோன்ற அனுபவமொன்று நிகழ்ந்தது.  

தமிழ்கூறும் நல்லுகில் உள்ளோருக்கு  கடையம் என்றவுடனே நினைவுக்கு வருவது மகாகவி பாரதியைத்தான்.  அதே போன்று அறுபது எழுபது வயதைக் கடந்தோருக்கு கடையநல்லூர் என்றாலே ஜனசமூகத்தில் நன்கறியப்பட்ட இருவர் நினைவுக்கு வருவது என்பது தவிர்க்க முடியாதது.  இந்த இருவரும் ஒரே பெயரினால் அறியப்பட்டவர்கள்தாம்.  காமராஜரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் மஜீத்.  சங்கரன் கோயில் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கடையநல்லூர்க்காரர்தான்.  கடையநல்லூரில் மற்றொரு மஜீத்தும் புகழ்பெற்றவராக  விளங்கி வந்தார்.  இவர் அரசியலில் ஈடுபட்டவர் அல்ல.  மாறாக இறை இசைப்பாடல்கள் வழியே தமிழகம் முழுமையிலும் அறியப்பட்டவர்.  இந்துக் கடவுளர்களை குறிப்பாக முருகனைப் பற்றிய இவரது பாடல்கள் அன்னாளில் பட்டிதொட்டியெங்கிலும் ஒலித்தது என்றே கூறலாம்.  பிறப்பால் இஸ்லாமியராக இருப்பினும் கர்நாடக இசையில் நன்கு பயிற்சி பெற்று கச்சேரிகளை நிகழ்த்தி வந்தவர்.  இவரது இசைக் கோர்வைகளின் பதிவுகள் இன்றும் இருந்து வருகிறது.  பக்திரச பாடல்கள் எனும் தொகுப்பில் அவர் எழுதி பாடிய பாடல்கள் சிறப்பானவை. குறிப்பாக  நாராயணணை அன்றி பாராயணம் செய்ய ஓர் நாமம் இருக்கிறதா,   கொண்டோடி வா மயிலே முருகனை இங்கு கொண்டோடி வா, திருத்தணிகாஜலத்திலிருக்கும் முருகனை போய் தரிசிக்க வாராய் போன்ற வசீகரமான  பாடல்கள் இசைக்கு அப்பாற்பட்டவர்களையும் சற்றே நின்று கேட்கச்  செய்திடும்.   அறுபது எழுபதுகளில் தென்மாவட்ட கோயில் திருவிழாக்களில் மஜீத்தின் இசையை கேளாத மக்கள் மட்டுமின்றி மூலவர்களும் உற்சவ மூர்த்திகளும் இருந்திருக்கவே முடியாது. 

இசைவழி இறைப்பணியை அவருக்குப் பின்னர் அவரது மகனும் மகளும்  தொடர்ந்து வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வியப்பினை அளிக்கக்கூடியது.  கலைமாமணி எம்.ஏ.மஜீத் சபையெனும் அமைப்பின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டுதோறும் திருத்தணியில் நடைபெறக்கூடிய படி உற்சவத்தில் எம்.ஏ.மஜீத் மற்றும் எம்.ராஜேஸ்வரி ஆகியோரின் வாரிசுகள் உஷாவும் குருநாயகமும் பங்கேற்று நடத்தி வந்திருக்கிறார்கள்.  சென்ற ஆண்டில் எம்.ஏ.எம்.குருநாயகம் இறந்திருக்கிறார்.  அதையொட்டிய முன்கூறப்பட்ட நினைவுகூறல் அறிவிப்புதான் இந்து நாளிதழில் வெளியானது. அது அறிவிப்பு மட்டுமல்ல  தங்கள் தனித்துவத்தை இழக்காது இந்து இஸ்லாமிய இணைப்பின் அடையாளமாய்  இக்குடும்பம் விளங்குவதோடன்றி இறைப்பணிகளை தொடர்வது தமிழ்நாட்டின் பாரம்பரியத்தின் வெளிப்பாடாகும் என்பதையும் அறிவிக்கிறது. போற்றலுக்குரிய மத நல்லிணக்கத்தை, வழிபாட்டு ஜனநாயகத்தை ஒரு  நினைவுகூறல் விளம்பரம்  வெளிப்படுத்துவது என்பது எந்த அளவில் அன்றாட நடப்பில், மக்கள் ஜனசமூகத்தில் பரஸ்பரம் புரிதலோடு வாழ்ந்து வருகின்றனர் என்பதை உணர்த்துகிறது. இத்தருணத்தில் இது போன்ற மற்றொரு செய்தியும் முக்கியத்துவம் வாய்ந்தது.  18ம் நூற்றாண்டில் வாழ்ந்த  இஸ்லாமியரான ஜவ்வாதுப் புலவர் ராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள மேலகொடுமலூரில் உள்ள முருகன் பெயரில்  குமாரபதிகத்தை இயற்றி அர்ப்பணித்திருக்கிறார்.  மத நல்லிணக்கத்தின் சின்னமாக திகழும் ஜவ்வாது புலவரை கௌரவிக்கும் வகையில் அவ்வூரில் அமைந்துள்ள முருகன் கோயில் கோபுரத்தில் அவரது உருவச்சிலையும் இடம் பெற்றிருக்கிறது.  இத்தோடன்றி அவர் இயற்றிய பதினோரு பாடல்களைக் கொண்ட குமார பதிகத்தையும்  ஆலயத்தின் உள்ளே  பளிங்குக் கற்களில் பொறித்து வைத்திருக்கின்றனர். தவிர அருணகிரிநாதரே முருகனை ராவுத்தனே என்று  விளித்துப் பாடியதும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கது. 

இந்து நாளிதழின் அன்றைய அதே பத்தியில் திவான்பகதூர் ஷண்முக முதலியாரின் பேத்தி பிரமீளா ஷண்முகம் என்பவரின் மரண அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. சென்னை நகர வரலாற்றோடு இணைந்த ஷண்முக முதலியார் துபாஷாக தன் பணிகளைத் துவக்கி பின்னாளில் இம்பீரியல் பேங்கில் நிர்வாக சபையில் மட்டுமின்றி பச்சையப்பன் அறக்கட்டளை ஜிம்கானா கிளப் போன்றவற்றிலும் உறுப்பினராக இருந்தவர். அவரது தோட்ட வீடு அஜ்மீர் சென்னை பூந்தமல்லி சாலையில் ஸ்பர் டாங்க்குக்கு எதிராக ஈகா திரையரங்கிற்கு அருகாமையில் அமைந்திருந்தது.    அறுபதுகளில் நான் பச்சையப்பனில் பயின்ற காலங்களில் ஷண்முக முதலியாரின் பேரனும் அறக்கட்டளை உறுப்பினராக இருந்தவருமான  டி.கே.சிங்காரம் இந்த வளாகத்தில்தான் வசித்து வந்தார். அவரது மகள்கூட இதே கல்லூரியில் அறிவியல் துறையில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார்.   தற்பொது அஜ்மீர் அடுக்கு மாடி வளாகமாக மாறி பெயரை இழந்த போதிலும்   சண்முக முதலியாரை நினைவுகூறும் விதமாக  அயன்புரத்தில் தெருவொன்று இன்றும் இருந்து வருகிறது. 

வாழும் சமூகம் பற்றிய  பிரக்ஞையினை இரங்கற் குறிப்புகளும் நினைவுகூறுல்களும்  ஏற்படுத்துவதில்லை.  வாழ்ந்த மனிதர்களின் செயல்பாடுகள்தான் இத்தகைய செய்திகளை நமக்கு அறிவுறுத்துகிறது. மஜீத்தின் மத நல்லிணக்கமும் ஷண்முக முதலியாரின் கல்விக்கான வழிகாட்டலும் இதைத்தான் உறுதி செய்கிறது. 

*

நன்றி : ராமச்சந்திர வைத்தியநாத் | veeorr52@gmail.com
*
தொடர்புடையவை : 

1. 'நாராயணனையன்றி...’ - கடையநல்லூர் ஏம் ஏ மஜீத்
Thanks to : yogesh digital raja

2. கடையநல்லூர் ஏம் ஏ மஜீத் அவர்களின் நாடக மேடை பாடல்கள் 
*
3. நாடாக்காரர்கள் - சுஜாதாவுக்குப் பிடித்த சிறுகதை

Friday, August 11, 2023

Soul Searcher - L Shankar

பேஸ்புக்கில் வாசு பாலாஜி :

முதல் முதல்ல இசையமுதம்ல 74 வாக்குல ஓட்டை ட்ரான்ஸிஸ்டர்ல குப்புறப் படுத்து ரெண்டு கையும் குழிவா வச்சு காதைப் பொத்திக்கிட்டு (ஸ்டீரியோ எஃபக்ட் வரும்) வயலின் ட்ரையோ எல்.வைத்தியநாதன், எல். சுப்ரமணியம், எல். ஷங்கர் பஞ்சநடை வர்ணம் கேட்டதும் வேலைக்குப் போனதும், கேசட் ப்ளேயர் வாங்குனதும்னு பக்கெட் லிஸ்ட்ல போட்டது. அப்புறம் கேசட் பைத்தியம் புடிச்சதும் ரெகார்ட் ஸ்டூடியோவா அலைஞ்சும் கிடைக்கலை. 

அப்புறம் சக்தி க்ரூப்ல சிலதெல்லாம் கிடைச்சாலும் என்னமோ நிறைவில்லை. 

ஒரு நாள் டாரண்ட்ல தேடுவோம்னு தேடுனா எல். ஷங்கர் மட்டும் கிடைச்சது. ஆபேரி, கீரவாணி, சங்கராபரணம்னு எல்லாம் ராகம் தானம் பல்லவி. டபுள் வயலின்ல ஆபேரி, கீரவாணி, முக்கியமா சங்கராபரணத்துல கூடவே பாடி வாசிக்கறது கேட்டதும் கூஸ் பம்ப்ஸ். அய்யோ இந்த மனுஷன் முழுசா பாடிண்டே வாசிச்சா எப்படி இருக்கும்னு ஏக்கமாவே இருந்தது. 

நடுவுல தேடறப்போ எல். ஷங்கெர்னு போட்டு சிலது கிடைச்சது. அதுலயும் ஒரு 55 நிமிஷ கான்ஸர்ட். விக்கு, ஜாஹீர் ஹுசேன் முந்தா நேத்து கிடைச்சது. வழக்கம் போல இங்க ஷேர் பண்ணேன். நோ டேக்கர்ஸ். அப்படியே கிடைக்கிறதெல்லாம் பார்த்துட்டிருந்தேன். எல்லாம் வெள்ளக்காரப் பயலுவ கலக்ஷன். 

இப்ப சாப்பிட்டு வந்து உட்கார்ந்தேன். எவனோ ஒரு வெள்ளக்காரப் பாவி சைட்ல ஸோல் செர்ச்சர் எல் ஷங்கர்னு போட்டிருந்தான். ரெண்டு விஷயம் கிடைச்சது.

1. எல் ஷங்கர், ஷங்கெர்னு மட்டும் தேடுனா போறாது. லக்ஷ்மி நாராயணன் ஷங்கர்னும் தேடணும்.

2. என்னப்பா கேட்ட. முழுசா பாடியும் கேட்கணுமா. இந்தான்னு 50 நிமிஷம் காபி ராகம் தானம் பல்லவி. 

3. இன்னைக்கு ஆடிக் கிருத்திகையா. முருகன் பாட்டு

புடிச்சி 320க்கு கன்வர்ட் பண்ணி இறக்கியாச்சு. 😄

*

Thanks to : Aljosha Thomas / Nicodemus  & Vasu Balaji


Saturday, April 23, 2022

இசை : ஆண் மோகினி !

நாதஸ்வர வித்வான் திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை அவர்களின் அழகைப் பார்த்து ‘ஆண் மோகினி’ என்று அழைப்பாராம் செம்மங்குடி! வாசிப்பைக் கேட்டும் சொல்லியிருப்பார். மயங்கிவிட்டேன். தேடித்தேடி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

Thiruvengadu Dr .T.P.Subramania Pillai-Pallavi_Mohanam_Ragamalika

Thanks to : Guruvayurappa Dhasan & Yuvan

*

ஃபேஸ்புக்கிலிருந்து ஒரு பதிவு :

திருவெண்காட்டாரும் நானும் :

- நாதஸ்வர ரசிகமணி குருவாயூரப்பதாசன் Dr. B.சுந்தரராமன், M.A, BEd, M.Phil ,PhD

1969ல் நாதஸ்வர நவராத்திரி இசை விழாவை பிரதி வருடம் பத்து நாட்கள் நான் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பழமார்நேரியில் தொடக்கிய பொழுது திருவீழிமிழலை, செம்போன்னார்கொவில், இஞ்சிக்குடி ,திருப்பாம்புரம் திருமெய்ஞானம், ஏகேசி, போன்ற பிரபல மேளங்கள் வருகை தந்தாலும் திருவெண்காட்டார் வருகை தராத குறை மிக இருந்தது .இதைப்பற்றி அவரிடம் முதல் தவிலாக பன்னெடும்காலம் பணி புரிந்தும் அவரது ஒலிப்பதிவு ரிகார்டுகளில் தனிதவில் வாசித்தும் இருந்த பிரசித்தி பெற்ற தவில் கலைஞர் கும்பகோணம் அமரர் திரு கே. ஏ.தங்கவேல் பிள்ளை அவர்களிடம் கூறியதும் அவர் என்னை திருவெண்காட்டிற்கு அழைத்து சென்று டாக்டர் திருவெண்காடு டிபி சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அது முதல் டி பி எஸ் அவர்களின் இனிய குடும்பத்தில் அவரது மூன்று மகன்களுடன் நானும் நான்காவது மகன் ஆனேன். இனி இக்கட்டுரையில் திருவெண்காடு திரு டி பி சுப்பிரமணிய பிள்ளை அவர்களை “டி பி எஸ்” என்றே குறிப்பிடுகிறேன்.

டி பி எஸ் அவர்களை அவரது தெய்வத்தாய் கருவில் சுமந்து இருந்த பொழுது திருவெண்காட்டில் அகோர மூர்த்தி திரு வீதி உலா வந்த சமயம் சிவாசாரியார் ஒருவருக்கு தெய்வ சாந்நித்யம் ஏற்பட்டு பின் வருமாறு அருள் வாக்குக் கூறினார் “உலகம் போற்றும் புகழ் மிக்க இசை மேதை ஒருவன் இந்த இல்லத்தில் பிறக்க போகிறான் ! அவனுக்கும் பிறகு இவ்வூர் அவன் பெயரினாலேய இயங்கும் “ அது அப்படியே உண்மையானது

சிறுவயதிலேயே தம் தகப்பனார் திரு பிரமநாத பிள்ளை அவர்களை டி பி எஸ் அவர்கள் இழந்ததால் இவரது தாய் மாமன் இவரை தம் தோளிலேயே நாங்கூரில் இருந்து சிதம்பரம் வரை (அந்நாட்களில் பஸ் வசதி இல்லாததால்) அடிக்கடி சுமந்து சென்று சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை அவர்களிடம் நாதஸ்வரம் பயிற்றுவித்தார்.

மிக குறுகிய காலத்திலேயே நாதஸ்வரத்தின் முடி சூடா மன்னன் ஆகி நாதஸ்வர ராஜா’ புன்னாக நாத மணி மகுடி மன்னன் கலா சிகாமணி கலைமாமணி போன்ற உயரிய விருதுகளைப்பெற்றார் .இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் இவர் புகழ் பரவியது . உலகத்தின் வரைபடத்தில் இவர் கால்தடம் பதிக்காத நாடுகளே இல்லை எனலாம் அந்நாளில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை நாதஸ்வர சக்கரவர்த்தி திரு, டி .என்.ராஜ ரத்னம் பிள்ளை அவர்கள் தம் இரு சகோதரிகளையும் ஒரே நாளில் இவருக்கு மணம் முடித்து வைத்தார் .திருவெண்காட்டில் நடந்த ஊர்வலத்தின் போது ராஜ ரத்னம் அவர்கள் நாதஸ்வரம் இசைப்பதாக இருந்தது.சில சூழ்நிலைகளால் அவர் கலந்து கொள்ள முடியாமல் போகவே வந்திருந்த மாபெரும் ஜனத்திரள் டி பி எஸ் அவர்களே நாதஸ்வரம் இசைக்க வேண்டும் என்று ஒரு மாபெரும் போராட்டமே நடத்தியது .உடனே ஊர்வலத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண் வேடம் இட்டு நடுவில் உட்கார வைத்து இரு புறமும் தம் இரு மனைவியரை அமர வைத்து தம் திருமண ஊர்வலத்துக்கு தாமே நான்கு திரு வீதிகளிலும் டி.பி.எஸ் நாதஸ்வரம் வாசித்தார் .( இந்த சம்பவம் அடியேனால் எழுதப்பட்டு இதயம் பேசுகிறது இதழில் 1976ல் வெளி வந்துள்ளது .)

பழனி, திருவையாறு இசைக்கல்லூரிகளுக்கு டிபி எஸ் முதல்வராக இருந்த பொழுது அவருடன் சென்று வருவேன்.எம் ஜி ஆர் வீட்டுக்கும் சென்று இருக்கிறேன் கலைஞர் வீட்டுக்கும் சென்று இருக்கிறேன்.கட்சிகட்கு அப்பாற்பட்டு எல்லாத் தலைவர்களும் டி பி எஸ் அவர்களுடன் ஒன்று கலந்து அவருக்கு உரிய மரியாதை அளித்து மனித நேயத்துடன் பழகுவார்கள்.

தனிப்பிறவி படத்தில் எம் ஜி ஆர் அவர்கள் முருகன் வேடத்தில் வருவது டி பி எஸ் அவர்களின் காத்தவராயன் படித்தில் அவர் தோன்றிய முருக வேட ஸ்டில் ஒன்றைப்பார்த்த பிறகே ஆகும். இவரைப்போன்ற சிகை அலங்காரத்தையே எம் ஜி ஆர் அவர்கள் தம் முன்னாள் படங்களில் மேற்கொண்டார் .இவரிடம் இருந்த அபரிமிதமான நட்பின் அடிப்படையிலேயே தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்கியதும் முதல் கௌரவ டாக்டர் பட்டம் இவருக்கு அளித்து எம் ஜி ஆர் மகிழ்ந்தார்

மக்களின் ஏகோபித்த ஆதரவு டிபி எஸ் அவர்களிடம் இருந்தது .கல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இவர் கலந்து கொண்ட விழா நிறைவின் போது மேலிருந்து மேடை முழுவதும் ரோஜா மலர்களை கூடை கூடையாக கொட்ட ஏற்பாடு செய்து இருந்தார்களாம் .வட இந்திய திரைப்பட இசை அமைப்பாளர் சைகால் அவர்களின் பாடல் ஒன்றை இவர் வாசித்ததற்கு வெகுமதி அந்த கௌரவம் தரப்பட்டது .இதே பாடல் பிறகு நௌஷாத் அவர்களால் சோல்ஜர் என்ற படத்தில் கையாளப்பட்டது ,

ஆல் இந்தியா ரேடியோ என்று நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பு சிவ ரஞ்சனி ராகத்தில் ஒரு தொடக்க இசை இசைக்கப்படுமே அது டி.பி.எஸ் அவர்களின் கருத்தாக்கத்தில் உருவானது . இவர் நாதஸ்வரத்தில் வாசித்ததை அடியொற்றி வாத்திய விருந்தா குழுவினரால் ஒப்புமை ஆக்கம் செய்யப்பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்ததும் முதன் முதல் ஆல் இந்தியா ரேடியோவில் முதன் முதல் நிகழ்ச்சியாக சுதந்திரப்படல்கள் நாதஸ்வரத்தில் வாசித்து ரிகார்ட் ஏற்படுத்தியவர் இவரே எனலாம்.

ஒருமுறை தமிழிசை சங்கத்தில் இவர் நாதஸ்வரம் வாசித்த போது ம்யூசிக் அகாடேமிக்கு கூடிய கூட்டத்துடன் சிலர் ஒப்பிட்டு பேசிஎதில் வருந்திய கலைஞர் அவர்கள் “காட்டில் காய்ந்த நிலா” என்று இதனை ஒப்பிட்டுப்பேசி அவர்கட்கு பதிலடி கொடுத்தார்.வயலின் மிருதங்கத்துடன் தம்பூரா ஸ்ருதியுடன் நாதஸ்வர கச்சேரிகளை உலகிற்கு அறிமுகம் செய்தவர் டி பி எஸ் அவர்களே

மத்யம ஸ்ருதியில் நாதஸ்வரம் இசைக்கும் மாண்பும் இவருக்கே உரியது .மோகனம் பிலஹரி போன்ற ராகங்களை வாசிக்கும் போது அடிக்கடி தைவதத்தை தொட்டு ஒரு ஜிலுஜிலுப்பை ஏற்படுத்தி வருவார். ஷண்முகப்ரியா போன்ற பிரதி மத்தியம ராகங்களில் அடிக்கடி மத்தியமத்தில் நிலைத்து நிற்பதும் டி பி எஸ் அவர்கட்கே உரிய தனித்துவமானது எனலாம். துரித கால ஸ்வரங்களைத் தமக்கே உரிய பாங்கில் மிக வேகமாக அதிரடியாக வாசிப்பதும் இவருக்கே உரிய கை வந்த கலை எனலாம் ! .

எந்த வித்துவான்களையும் குறைவாகப்பேசவேமாட்டார். வாய்ப்பாட்டு சங்கீத வித்துவான்களுடன் நெருங்கிய நட்பில் இருந்து வந்தவர்.

ஒரு குறிப்பிட்ட தினம் இரவு கச்சேரி என்றால் பிற்பகலில் ஓய்வு எடுக்கும் போது ஆக்கூர் மணி மற்றும் மலைக்கோட்டைபஞ்சாமி போன்ற உடன் வாசிப்பவரை விட்டு மெல்லிய குரலில் சில உருப்படிகளைக்காலடியில் அமர்ந்து பாட சொல்வார். அவரில் சிலவற்றை தேர்ந்து எடுத்து இரவு கச்சேரியை சோபிக்க செய்வார். அவருக்கு வாசிக்கும் தவில் வித்துவான்கள் அவரது கற்பனைக்கு இடைஞ்சல் செய்யாத வித்துவான்களாக இருக்க வேண்டும் .தற்போது உள்ளது போல நாதஸ்வர வாசிப்பின் இடையில் தன்னிச்சையாக தவுலை குறுக்கே புகுந்து வாசிப்பது,போன்ற அநாகரீகமான செயல்களில் யாரும் இறங்க அவரிடம் துணிந்ததாக சரித்திரமே கிடையாது.அந்நாட்களில் நாதஸ்வரத்துக்கு கட்டுப்பட்டு தவில் இயங்கி வந்தது.

“சிசு அறியும் பசு அறியும் பாம்பறியும் இசையின் பெருமையை” . அவ்விதம் இவர் மகுடி இசைத்தால் இவர் வீதி உலாவில் மகுடி வாசித்தால் அந்த மாபெரும் கூட்டத்தில் எங்கிருந்தோ பாம்பு ஒன்று வந்து புகுந்து கொள்ளும் அவ்விதம் பாம்பு தட்டுப்படாமல் இருந்தது கிடையவே கிடையாது

திருவையாறு தியாக பிரம்ம ஆராதனையின் செயலராக பல காலம் விருப்பு வெறுப்பு இன்றி சிறப்பாக செயல்பட்டு வந்தார்.இறுதி நிகழ்ச்சி இவருடையது தான் பெரும்பாலும் வயலின் மிருதங்கத்துடன் அமையும் .இதைகண்டும் கேட்டும் களிப்பதற்கு என்றே ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளம் வந்து இறங்கும்.

தமிழ் நாட்டில் கவர்னர் ஆட்சி செயல் பட்ட போது(1975-1976) கவர்னரின் அட்வைசரி கமிட்டி உறுப்பினராக பணியாற்றினார் .தஞ்சையில் இருந்து முதன் முதல் சோழன் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்ட போது இந்த அடிப்படையில் இவருக்கு அழைப்பிதழ் வந்தது நானும் உடன் சென்று இருக்கிறேன்.

கண்ணன் குசேலர் வீட்டுக்கும் சென்று வந்ததைபோலத் தம் ரசிகர் எவ்வளவு எளிமையானவராக இருந்தாலும் நட்பின் அடிப்படையில் அவர்கள் வீட்டுக்கு சென்று அவர்களது சுய மரியாதை குறையாத வகையில் அவர்களே அறியாத வகையில் அவர்கட்கு மறைமுகமாக சில உதவிகள் செய்து வருவார். ஜாதகத்தில் இவருக்கு கஜ கேசரி யோகம் , தர்ம கர்மாதிபதி யோகம் போன்றவை உண்டு எனவே தான் இவருக்குப்பிறகும் இவர் பெருமை பேசப்படுகிறது! மேலும் இசை உள்ள அளவும் இசை ரசிகர் இப்பூவுலகில் உள்ள அளவும் திருவெண்காட்டார் அவர்கள் பெருமை பேசப்படும் !

Sunday, April 25, 2021

Ustad Bismillah Khan Live in Russia

Ustad Bismillah Khan Live in Russia  

Thanks to : Srikant

Tuesday, November 12, 2019

Tabla for Two

'Aane Se Uske Aaye Bahar' performed by Tabla for Two (Masood Omari and Abigail Adams)
Thanks to :  TablaForTwo & Asana Maricar


Visit : https://www.voanews.com/arts-culture/unusual-partners-make-afghan-music

Wednesday, August 21, 2019

Tere Nainon Ke Main Deep Jalaoonga

சும்மா ஒரு மூடு :)
Singes: Mohammed Rafi, Lata Mangeshkar ; Music: S. D. Burman
*

*
Thanks to : Bollywood Classics

Sunday, June 9, 2019

Music : Padayatra - Job Kurian

Vocals : Job Kurian, Harish Sivaramakrishnan
*

*
Thanks : Mathrubhumi Kappa TV

Saturday, May 25, 2019

Chandrapriya | Dr L Subramaniam (Live at Montreal)

Dr L Subramaniam's Ragam-Tanam-Pallavi in Raga Chandrapriya at Montreal, Canada accompanied by Ambi Subramaniam (Violin), Mahesh Krishnamurthy (Mridangam). Thanks : Dr L Subramaniam & Kavita Krishnamurti.
*
*
Thanks : Vasu Balaji

Saturday, April 13, 2019

Zakir Hussain with Hariharan (@ Jam Session)


'ஜாகீரு..அந்த தலமுடிய என்னா சிலுப்பு சிலுப்புவ..அப்பா மேரியே ஆயிட்ட போ . வாஹ்! பால் ஹோ கயே..!' - வாசு பாலாஜி (MeWe)
 'Kash Aisa Koi Manzar Hota'
*

*
Thanks : No1 YAARI JAM

Wednesday, December 12, 2018

Dam Dam Karo Fareed

Dam Dam Karo Fareed - Ustad Nusrat Fateh Ali Khan

**
Thanks : MrSaimbutt

Monday, March 19, 2018

2CELLOS - Now We Are Free - Gladiator

Luka Sulic and Stjepan Hauser playing Now We Are Free by Hans Zimmer from Gladiator with the Sydney Symphony Orchestra at the Sydney Opera House.


*
Thanks to : 2CELLOS

Saturday, June 17, 2017

Voice of the moon - Anoushka Shankar

Anoushka Shankar Live France 2014 - extract piece1 -This is 'Voice of the moon from Anoushka's album.....'Rise'. Jazz festival under the apple trees of Coutances (Manche, Basse Normandie) France. 



Thanks to Alain Guilloux

Tuesday, June 6, 2017

இசையோடு வந்த மதம்

"பொதுவா... வாளோடு வந்த மதம்னு இஸ்லாம் மதத்தைப் பற்றி சொல்றாங்க. ஆனா, அது இசையோடு வந்த மதம்னு நாகூரில்தான் நாங்க புரிஞ்சிக்கிட்டோம்." (18:34) . நன்றி : News18 & Balabharathi Yes.​

***