Showing posts with label நா. முத்துக்குமார். Show all posts
Showing posts with label நா. முத்துக்குமார். Show all posts

Thursday, September 19, 2013

ஐஸ் கீஸ் வைக்கிறானா பய?

'புதுசா என்னா பாட்டு வாப்பா நல்லாக்கிது?' என்று நேற்று கேட்டதற்கு ஆஷிக்கீ-2வில் வரும் 'தும்ஹி ஹோ'வைச்   சொன்னான். 'அத கேட்டுட்டேன் வாப்பா முதல்லயே. தமிழ்ல சொல்லு' . 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் வரும் பாட்டை சொன்னான். இப்போதுதான் கேட்கிறேன். பாடியவர்: விஜய் ஏசுதாஸ் இசை: யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர்: நா.முத்துகுமார். 'நமக்கெனவே வந்த நண்பன் தந்தை…' என்ற வரியில் நெகிழ்ந்துதான் போனேன். என் சீதேவி வாப்பாவின் நினைப்போடு பயமும் வந்தது. அஸ்மா மூலமாக இன்றிரவு என்ன கேட்கப்போகிறானோ இந்தப் பயல்? என்று. ஆனாலும் கஷ்டத்தோடு கஷ்டமாக நிறைவேற்றத்தான் வேண்டும்! - ஆபிதீன். நன்றி : சுப்றமணியம் முத்துலிங்கம்