Showing posts with label பொன்மொழிகள். Show all posts
Showing posts with label பொன்மொழிகள். Show all posts

Thursday, October 17, 2019

முத்துக்கள் பத்து (பொன்மொழிகள்)

தம்பி சகீர் ஹூசைன் தொகுத்துக்கொடுத்த பொன்மொழிகள் இவை. எழுதிக் கொடுத்து ஓரிரண்டு வருடங்கள் இருக்கும். என் சோம்பலால் இன்றுதான் கிடைத்தது. பகிர்கிறேன். - AB

*

1. எவன் முட்படுக்கையை மலர் படுக்கையாய் கொள்கிறானோ அவனே பார்வையற்றவர்களுக்குப் பார்க்கும் திறனை வழங்குகிறவன். - மௌலானா ரூமி (ரஹ்)

2. வெட்கம் வீதிக்குப் போனபின் திரையிட்டு என்ன பயன்? - இமாம் சாஅதி (ரஹ்)

3. ’என் தலைவனின் உலகம் ஒளிமயமானது! எங்கும் பேரொளி வீசிக்கொண்டிருக்கும். அந்த ஒளி தூயது, மகிழ்ச்சியளிப்பது’ என்று தமக்குள் (அறிவுடையோர்) சொல்லிக்கொள்வர். - மீர்ஸா காலிப்

4. உலகினை விரும்புபவன் ஆணும் பெண்ணுமல்லாத அலி ஆவான். மறு உலகில் சொர்க்கத்தை விரும்புபவன் பெண்ணாவான். ஆண்டவனையே விரும்புபவன் ஆணாவான். - அன்னை ராபியா பஸரி (ரஹ்)

5. காற்றடித்தால் வளர்வாள்; தண்ணீர் குடித்தால் சாவாள் - நெருப்பைப் பற்றி அமீர் குஸ்ரு (ரஹ்)

6. வாழ்க்கையில் இரண்டு முறை சோகம் நிகழலாம். a: விரும்பாதது நெருங்கி வரும்போது, b: விரும்பியது விலகிப் போகும்போது. - யாரோ

7.ஒன்றையொன்று நினைவில்கொண்டு உளதாயிருக்கிற இரண்டு ஒன்றுபடாமல் போய்விடுமா?  - மன்சூர் ஹல்லாஜ்

8. ரூமி கூறுவதாக எங்கள் ஹஜ்ரத் சொல்வார்கள் : உங்கள் கண்கள் மிகச்சிறியவை; ஆனால் மிகப் பெரியவைகளை அவைகள் பார்க்கின்றன.

9. எல்ல இடங்களிலும் எல்லாவற்றிலும் நல்லதைக் கண்டுபிடிப்பதற்கான மனநிலைதான் மன ஆரோக்கியத்திற்கான அளவீடு - ரால்ப் வால்டோ எமர்ஸன்

10. செயல்தான் வளமான பேச்சு - ஷேக்ஸ்பியர்
*




நன்றி : நாகூர் கவிஞர் சகீர் ஹூசைன்

தொடர்புடைய பதிவு :
இசை : உத்தமர் உஸ்மான் (ரலி) பொன்மொழிகள்