Saturday, September 28, 2013

கவ்வாலியில் ஒரு (கன்)ஃபூசன்

நுஸ்ரத்-ன் 'ஸாஸோன் கி மாலா'வை  'கத்தாளக் கண்ணால’ குத்தியதை நண்பர் சிரில் அலெக்ஸ் ஃபேஸ்புக்கில் தெரியப்படுத்த, கடுப்பான நிஷாமன்சூர் ,‘கின்னா சோனாவை மாமா நீ மாமாவாக மாற்றிய புண்ணியவாண்கள் மலிந்த தேசமல்லவா இது..’ என்று கமெண்ட் கொடுத்திருந்தார்.  அவர்களைக் கேட்டால் 'கொய்லா'விலிருந்து உருவியதாக சமாளிப்பார்களே... சரி,  இந்தப் பாடல் தமிழில் எந்தப் பாடல்? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...
***

***
Thanks to : Khurram Imtiaz 
***
Lyrics from pakistanimusic.com

o jane man jahan wafa dil mange tera piyar
jub jub tum ko dekho jeewan main khile bahar bus too hai mera sapna jaan se piyari lage teri yaari mere yaar
o jaane man....

 dekho jub tumhe arman khil uthe yeh gajra yeh banhe yeh chup si nigahe
mukhre se zulfe hatao zara chand jaisa chehra dikhao zara
aa meri banho main chup ja nigaho main
dil ki nazro se dekho main dildara

tera naam hai meri zindagi main tera deewana too meri deewangi
 dil main basaya  main ne piyar tera
her pal chaho main dedar tera
tujh ko hi socho main tujh ko hi chaho main
teri hi mala jupoo too hi mujhe lage piyara

meri zindagi julti dhoop hai nazar ka nazar tera hi roop hai
too hi meri jaan mera dil hai to too hi meri raah manzil hai too
tere bina ab to jeena nahi mujh ko saathi main tere liye zana chod doo sara

dil maange tera piyar

Sunday, September 22, 2013

சுரேஷ் கண்ணன் சொன்ன சூப்பர் கதை!

நண்பர் சுரேஷின் அனுமதியின்றி பதிவிடுகிறேன் - உரிமை எடுத்துக்கொண்டு. 'மோடி இந்திய பிரதரமானால் (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்) அனந்தமூர்த்தி மாத்திரமல்ல, வெண்ணிறஆடை மூர்த்தி கூட இந்தியாவில் வாழ முடியாத சூழல்தான் நேரப்போகிறது. ' என்று ஃபேஸ்புக்கில் சுரேஷ் போட்ட ஸ்டேட்டஸுக்கும் இந்தக் கதைக்கும்  சத்தியமாக எந்த சம்பந்தமும் இல்லை!  - ஆபிதீன்
 *

சுரேஷ் கண்ணன் :
ஒரு கதை சொல்கிறேன்.. அது கதையா இல்லையா என்பதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்... சரியா?

நாங்கள் வாழும் பகுதியில் கபாலி என்றொரு ரவுடி இருந்தான். மன்னிக்க இருந்தார். நான் அவரை ரவுடி எனக்குறிப்பிடுவதே ஆபத்தானது. ஏனெனில் இப்போது அவர் இருக்கும் நிலையில் ரவுடி என்கிற அடிமட்ட வார்த்தையால் இப்போது அவரை நான் குறிப்பிடுகிறேன் என்று தெரிந்தாலே என்னை வெட்டிப் போட பலர் தயாராய் இருக்கிறார்கள்....

சிறிய அளவில் ரவுடித் தொழில் (?!) செய்து வந்துக் கொண்டிருந்த கபாலி தனது தனித்திறமையாலும் குயுக்திகளாலும் மற்ற ரவுடிகளைக் கடந்து தலைமைப் பொறுப்பிற்கு வந்தான்...மற்ற சில்லறை ரவுடிகளுக்குக்கூட கபாலி என்றாலே காப்ராதான். .. ஏன் காவல்துறையே...அவன் உத்தரவிற்கு மறைமுகமாக காத்திருந்தது. மொத்தத்தில் அந்தப் பகுதியே கபாலியின் முழுக்கட்டுப்பாட்டில் வந்தது.. சரியா,.

அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும் கபாலியின் வளர்ச்சியால் மகிழ்ச்சியே... ஏனெனில் பல சில்லறை ரவுடிகளை, காவல்துறை அதிகாரிகளை தனித்தனியாக பணம் கொடுத்து சமாளிப்பதை விட மூலவரான கபாலியை மாத்திரம் சந்தித்து லம்ப்பாக ஒரு தொகையை கொடுத்து விட்டால் அவர்களுக்கு பிரச்சினையே இல்லை. அந்தவகையில் அவர்களுக்கு நிம்மதி... இதனால் தொழில்கள் நன்றாக நடந்தன. அதனால் பல வேலை வாய்ப்புகள் பல ஏற்பட்டதில் பொதுமக்களும் வேலைக்கான திண்டாட்டங்கள் அன்றி..மகிழ்ச்சியாகவே இருந்தார்கள். கபாலி செய்த, செய்துக் கொண்டிருக்கும் வன்முறைகள், கொலைகள் பற்றியெல்லாம் அவர்கள் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களுக்குத் தேவையான ரொட்டி சரியாக கிடைக்கும் போது அவர்களும் இதைக் கண்டும் காணாமலும் விட்டு விட்டார்கள்.. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அதுதான் யதார்த்தமும் கூட...

இதுவரை சொன்னதை வைத்து... நீங்கள் கபாலியை, ராபின்ஹீட் போல ஏழைப்பங்காளன்.. ந்ல்லவனுக்கு நல்லவன் என்றெல்லாம் நினைத்து விடக்கூடாது...அதெல்லாம் வேலுநாயக்கர் சினிமாக்களில் மாத்திரமே சாத்தியம்... தமிழ் சினிமாக்களில் உள்ள பிரச்சினை, எதிர்மறையான குணாதிசயங்கள் கொண்டவனை ஹீரோவாக்க முடிவு செய்து விட்டால் அதற்கேற்ப சம்பவங்களை கச்சிதமாக உருவாக்கி விடுவார்கள்.. அவனைப் போல நல்லவன் போல உண்டா.. என..

அதாவது நம் ஊடகங்கள் நினைத்தால் எப்படி ஒருவனை திருவுருவாக்க முடியுமோ அப்படியே சினிமாக்களும் தங்களுக்கான கதைகளை உருவாக்கி விடும். வரவர மக்களுக்கும் ராமனை விட ராவணணைத்தானே அதிகம் பிடிக்கிறது... எதிர்அறம்..

ஆக.. ஒருவன் யாரும் எதிர்க்கவியலாத தாதாவாக இருக்கவேண்டுமெனில் அடிப்படையான விஷயமே சினிமாக்களில் காட்டுவது போல் நல்லவனாக இருக்க முடியாது. மனச்சாட்சிக்கு விரோதமாகத்தான் எல்லா அட்டூழியங்களையும் செய்தாக வேண்டும்.. ஆக கபாலியும் அப்படியே...

விவேக் ஒரு படத்தில் சொல்வது பத்திருபது ரவுடிகளை வைத்து மெயிடெயிண்ட் செய்ய வேண்டுமானால் எத்தனை செலவாகும்.. வெறுமனே தர்மகாரியங்கள் செய்ய முடியாது. 

சரியா...

***

இப்படியாக கபாலியால் அந்தப் பகுதியே அமைதிப்பூங்காவாகவும் தொழிற்புரட்சிக்களமாகவும் தேனும் பாலும் ஓடும் பகுதியாகவும்...மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது.. ஆமாம்.. அவ்வப்போது சில வன்முறைகள் நிகழத்தான் செய்யும்...அதையெல்லாம் பார்த்தால் முடியுமா, ஒரு கிராமம் நன்றாக இருக்க வேண்டுமெனில் நாலு பேர் செத்தாலும் பரவாயில்லை.. ஒருநாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒரு கிராமமே செத்தாலும் பரவாயில்லை என்று சாஸ்திரத்திலேயே சொல்லியிருக்கிறது....

சரியா...

இப்படி கபாலி ஒரு ஹீரோ... போல அந்தப் பகுதியில் உலவிக் கொண்டிருக்கும் போது வெட்டியாக அமர்ந்திருந்த மெல்ல ஒரு பெரியவர் ஆரம்பித்தார்...

"நம்ம கபாலியால நம்ம ஏரியாவே இத்தனை மகிழ்ச்சியா இருக்கும் போது.. இந்த நாட்டையே...அவன் கிட்ட ஒப்படைச்சா.. நம்ம மாதிரி எத்தனை பேர் மகிழ்ச்சியா இருப்பாங்க..."

பக்கத்திலிருப்பவரும் இதை பலமாக ஆமோதித்தார். கூடவே "நம்ம ராணுவத்தையே கபாலி கிட்ட ஒப்படைச்சா... மற்ற நாடுங்க கூட பயப்படும்.. நம்ம நாடு வல்லரசாயிடும்''

இந்த உரையாடல் மெல்ல மெல்ல பரவி வலுப்பட்டு மற்ற பகுதிகளுக்கும் தீ போல் பரவியது. நம் ஏரியாவிலும் இப்படியொரு ரவுடி கபாலி இல்லையே .... என்று ஒவ்வொரு ஏரியாக்காரர்களும் நினைத்தார்கள்...அதற்காக ஏங்க ஆரம்பித்தார்கள்...

சரியாக அந்தச் சமயத்தில்தான் தேர்தலும் வந்தது

***

இந்த இடத்தில் கதை முடிகிறது. எனக்கென்னவோ கபாலி, அந்த நாட்டுக்கே அல்ல, செவ்வாய் கிரகத்திற்கும் இணைத்தான தலைமைப் பொறுப்பை அடித்தாவது பிடுங்கி விடுவான் என்று தோன்றுகிறது...ஜகஜ்ஜால கில்லாடி கபாலி...

கபாலி நாமம் வாழ்க...நமோ கபாலி....

Thursday, September 19, 2013

ஐஸ் கீஸ் வைக்கிறானா பய?

'புதுசா என்னா பாட்டு வாப்பா நல்லாக்கிது?' என்று நேற்று கேட்டதற்கு ஆஷிக்கீ-2வில் வரும் 'தும்ஹி ஹோ'வைச்   சொன்னான். 'அத கேட்டுட்டேன் வாப்பா முதல்லயே. தமிழ்ல சொல்லு' . 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் வரும் பாட்டை சொன்னான். இப்போதுதான் கேட்கிறேன். பாடியவர்: விஜய் ஏசுதாஸ் இசை: யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர்: நா.முத்துகுமார். 'நமக்கெனவே வந்த நண்பன் தந்தை…' என்ற வரியில் நெகிழ்ந்துதான் போனேன். என் சீதேவி வாப்பாவின் நினைப்போடு பயமும் வந்தது. அஸ்மா மூலமாக இன்றிரவு என்ன கேட்கப்போகிறானோ இந்தப் பயல்? என்று. ஆனாலும் கஷ்டத்தோடு கஷ்டமாக நிறைவேற்றத்தான் வேண்டும்! - ஆபிதீன். நன்றி : சுப்றமணியம் முத்துலிங்கம்

Saturday, September 14, 2013

'கோவிந்த’னுக்கு (நாவல்) கே. டானியல் எழுதிய முன்னுரை

நாவலை தரவிறக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். மூன்று வகை எழுத்து பற்றி சொல்கிறார் கடைசியில். முக்கியமாக அதை முதலில் படியுங்கள்! - ஆபிதீன்
***
எனது இலக்கியக் கோட்பாட்டினை வாசகர்கள் நன்கறிவர். நூலுருவம் பெற்ற எனது படைப்புகளில் “கோவிந்தன்” என்ற நாவல் ஐந்தாவதாகும். ஏறக்குறைய அறுபது ஆண்டுகால யாழ்ப்பாணப் பிரதேசத்து வாழ்க்கையின் பொது அம்சங்கள் சிலவற்றை இந்த நாவல் அறிய வைக்கிறது.

கிராமப் பகுதிகளை அப்படியே காண வைத்து, அதைக் குலைக்காமல், நலுங்காமல் நகரவும் வைத்து, அந்த நகர்வுகளுக்கேற்றதான கதை ஒன்றினையும் கண்டடைந்து, சாமுத்திரிகா இலட்சணங்களும் பொருந்திய தலைவன், தலைவியையும் , “வில்லன்”, “வில்லி”களையும், நடுநிலையாளர்களையும் உலாவவிட்டு, அந்தப் படைப்புக்குட்பட்ட கதாமாந்தர்கள் பாரம்பரிய சம்பிரதாய உறவு முறைகளை மீறி விடாமல் பக்குவமாகப் பாதுகாத்து சுபம் சொல்லி முடிக்கும் ‘சோலி சுறட்டற்ற’ இலக்கியக்காரனாக என்னால் இருக்க முடியவில்லை.

கோவிந்தனில் கிராமப்புறங்களைப் பார்ப்பதுடன் கிராமப்புறங்களின் இயல்பான பேச்சுக்களையும் வாசகர்கள் கேட்பார்கள். அத்துடன், சாதியால் - மதத்தால், வேறு பல சிக்கல்களால் முரண்பட்டு பிளவுபட்டு நிற்கும் சாதாரண மக்கள் உலக வியாபகமான வர்க்க ஐக்கியத்துள் தங்களையும் அறியாமலே இணைத்து வழிநடக்கும் வரலாற்று உண்மையினையும் காண்பார்கள்.

இந்த நாவலை படிக்கும்போது வழமைக்கும் அதிகமாகச் சிலர் முகம் சுளித்துக் கொள்வார்கள் என்பதும் , பெருவாரியான கிராமப்புற மக்களும், பின்தங்கியவர்களும், பின் தள்ளப்பட்டவர்களும் தங்கள் வாழ்க்கையினைத் தாங்களே காண்பது போன்ற உணர்வினைப் பெறுவார்களென்பதும் எனக்குத் தெரியும்.

தூரத்தேயிருந்து மனதால் மேலோட்டமாகக் கிராமத்தைப் பார்த்து, பேச்சுவாக்கில் அறிந்தவைகளையும்., ஊகிப்பவைகளையும் வைத்துக்கொண்டு புனைந்த கதைகளையும், நாடோடிப் பாடல்களைத் தேடிப்பிடித்து, தேடியவற்றுள் காமரசம் சொட்டும் பகுதிகளை மட்டும் தெரிவு செய்து தரப்பட்ட நாடோடிப் பாடல் திரட்டுக்களையுந்தான் கிராமிய இலக்கியங்கள் என்று தமிழ் வாசர்கர்கள் கண்டிருக்கின்றனர். இந்த மட்டங்களில் நின்றுகொண்டேதான் இவைகளுக்கானவிமர்சனங்களும் தரப்பட்டுள்ளன. இதனால் கிராமிய இலக்கியங்கள் எனப்பட்டவை கிராமப்புற வாசகர்களாலேயே விரும்பப் படாதவை ஆகியிருந்தன.

நாட்டின் பெரும்பான்மையினர் கிராமங்களிலேயே வாழ்கின்றனர். இந்த மக்கள் அன்றாடம் சந்திப்பவைகள், சமூக அமைப்பு; சமூக அமைப்பு முறையினால் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பெரும் பளுக்களைத் தூக்கி வீச அவர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், கிராமிய இயல்புகளோடு ஒட்டிய போராட்டங்கள்; அப்போராட்டங்கள் ஒரு தனி மனிதனுக்கு மேலாக அல்லாமல் அவன் உள்ளடங்கி நிற்கும் வர்க்கத்திற்கெதிராகப் பரிணமித்து வருதல் ஆகிய உண்மைகள் புறக்கணிக்கப்பட்டுப் படைக்கப்படும் எந்த இலக்கியமும் உண்மையான கிராமிய இலக்கியம் ஆகிவிட முடியாது.

எமது நாட்டில் இதுவரை வெளியான சிருட்டி இலக்கியங்களுள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில , கிராமப்புற மக்களின் வாழ்வினைப் பிரதிபலித்துள்ளன. அவ்வப்போது அவைகள் கிராமப்புற மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டும் உள்ளன.

அந்த வேளைகளில் மௌனம் சாதித்த மெத்தப்படித்தவர்கள் சிலர் இப்போது அந்தச் சிருட்டிகள் மீளாய்வு செய்யப்படவேண்டுமென்று குரல் வைக்கின்றனர். இப்போது இந்தக் குரல் எழுவதற்கான காரணங்கள் என்ன? இந்தக் குரலை வைப்பவர்கள் திடுதிப்பென்று கிராமங்களில் குதித்து, அங்கு செவ்வனே காலூன்றி நின்று, கிராமங்களையும், கிராம மக்களையும், அவர்களின் வாழ்க்கை முறைகளையும் படித்திருக்க வேண்டும். அல்லது கிராமப்புற மக்களைத் தங்கள் விருப்பபடியெல்லாம் பிரித்து வைத்து, வேண்டியபோதெல்லாம் அவர்களை ‘ஆடாய்க் கட்டித் தோலாயுரித்து’ அவர்களில் குருதி, தசை, நீர், நிணம் ஆகியவைகளைச் சுவைத்துப் பெருவாழ்வு கண்டு மடிந்து போய்விட்டவர்களின் மண்டைஓடுகளைத் தேடி எடுத்து விஞ்ஞான ரீதியான ஆய்வு நடத்தி, அவரக்ளின் அந்த அசுர வாழ்க்கை நடப்புக்கான காரணம் காரியங்களைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. பதிலுக்கு இந்தக் குரலை எழுப்புபவர்கள் கிராமப்புற மக்களை விட்டுத் தூரத்தூரப் போவதையே காணக்கூடியதாக இருக்கிறது. இவர்கள் இப்போது நேருக்கு நேராகவே கோவிந்தனுக்கு மேலாக ஒரு போர் தொடுப்பர் என்பது தெரிந்ததே.

நலிந்தவர்களின் வாழ்க்கையோ, அந்த நலிவிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளோ இதுவரை தமிழ் இலக்கியத்தில் நவீன கால வரலாற்று அந்தஸ்தினைப் பெற்றதில்லை. ஆனால், கோவிந்தனைப் படிக்கும் மக்கள் அந்த அந்தஸ்தினை இதற்குத் தருவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களோடு பாத்திரங்களாக இரண்டு நாய்களை வாசகர்கள் பார்ப்பார்கள். அவைகளின் நடவடிக்கைகளைக் கூர்மையாக அவதானிப்பவர்கள் உலக வியாபகமாகிவிட்ட வர்க்கம் சார்ந்த ஒரு உண்மையினை இந்த இரண்டு ஜீவன்களும் வெளிப்படுத்தி, மதைத் தொடும் மானிட அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டதைக் காண்பார்கள்.

“உயிரினங்கள் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை அந்த உயிரினங்களில் உயந்ததான மனித இனத்தோடு சேர்ந்தாப்போல வளர்ச்சி அடைந்து வந்த ஒன்றே ஒன்று காதல் மட்டும்தான். அதனால் “காதல் இல்லாத இலக்கியங்கள் - முதன்மைப் படுத்தாத படைப்புகள் - மனித நாகரீகத்தை வளப்படுத்தத் தகுதியற்ற முண்டங்கள்” என்ற விதத்தில் இந்தக் காதலுக்கு தெய்வீக அந்தஸ்துக் கொடுப்பது மரபாகிவிட்டது. இந்த நாவலில் இந்த மரபு மீறப்படுகிறது. இந்தக் காதல் என்ற ‘இது’ மனிதனின் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்ப நீண்டும் நெளிந்தும் வளைந்தும், கூனியும் குறுகியும் வரக்கூடிய ஒன்றே அன்றி. அதற்கு மேல் அந்த ‘இது’வுக்கு எந்தவித தனி அந்தஸ்தும் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை என்பதனை இந்த நாவலைப் படிக்கும்போது தங்களைச் சூழ உள்ள இயல்பான நடைமுறைகளோடு வாசகர்கள் இதனை ஒப்பிட்டுப்பார்த்தால் ஒப்புக்கொள்வர்.

இந்த நாவலுக்குள்ளே இருப்பவை நான் அறிந்தவை, பார்த்தவை, அனுபவித்தவைகளே! இதைப் படிக்கும் வாசகர்களாலும் இவைகள் அறியப்பட்டவை; பார்க்கப்பட்டவை, அனுபவிக்கப்பட்டவைகளாகவே இருக்கும் என்பது நிச்சயம். இவைகளை எனது இலக்கிய ஆளூகைக்குட்படுத்தி மக்களுக்குத் தந்ததில் எனக்கு எந்தவிதச் சிரமமுமிருக்கவில்லை.

பேனாவைக் கையில் வைத்துக்கொண்டு அந்தப் பேனாவுக்குத் தீனி போட சமூகத்தை மேலாக நோட்டமிட்டு தசை உணர்வுகளைப் பேனா வசப்படுத்தி எழுதுவது ஒரு வகை.

சமூகத்தில் நடமாடும்போது தற்செயலாக அகப்படும் ஒரு சம்பவத்தை, வெறிமாடொன்றைப் பிடிப்பது போன்று பாய்ந்து பிடித்து ஒரு கைக்குள் அடக்கிக்கொண்டு, கால்களை இடறி நிலத்தைப் தடவி பக்கத்தே கிடக்கும் கயிற்றினை எடுத்து அந்த வெறிமாட்டினைக் கட்டிப்போடுவது போன்ற விதத்தில் கையிலிருக்கும் கதையும் கதைப் பின்னலும் மனதிலிருந்து கலைந்து போய்விடுமோ என்ற ஏக்கத்தில் பேனாவை அவசரத்துடனும், ஆவேசத்துடனும் நகர்த்திச் செல்வது இன்னொரு வகை.

சமூகத்தோடு சேர்ந்து மக்களின் இன்பதுன்பங்களில் பங்கெடுத்து, அவர்களைப் படித்து, அவர்களிடமிருந்து படித்தவைகளை இலக்கிய ஆளுகைக்குட்படுத்தித் தங்கள் சுமைகளைத் தாங்களாகவே எடுத்தெறியும் போதத்தை அவர்களுக்கு
அளித்து இயல்பான முறையில் அவர்களை நகர்த்திச் செல்ல நிதானமாகப் பேனாவை ஓடவிடல் வேறொரு வகை.

இந்த மூன்று வகைகளுக்கு உட்பட்டவர்களே விமர்சகர்களுமாவார்கள்.

"நாங்கள் விருப்பு வெறுப்புக்கு உட்படாதவர்கள்; நடுநிலையாளர்கள்” என்று விமர்சகர்கள் கூறுவதெல்லாம் வெறும் பொய்யானவை. அரசியலிலோ இலக்கியத்திலோ, வேறெந்த விவாகரங்களிலோ நடுநிலைமை என்பது ஒன்றில்லை. நீதி, அநீதி என்ற இரண்டு புள்ளிகள் ஒன்றோடொன்று முட்டி நெருங்கிக்கொண்டு நிற்கின்றன. இடையே மூன்றாவது ஒரு புள்ளிக்கு இடமேயில்லை. இதனால் கோவிந்தனை விமர்சிக்கப் புகுபவர்கள் ஏதாவது ஒரு பக்கத்தில் நின்று தங்களை வெளிப்படுத்தியே ஆகவேண்டும். (அல்லது இனங்காட்டிக் கொள்ள மனது இடந்தராதபட்சத்தில்) ஒதுங்கிவிட வேண்டும்.

***
நன்றி : அலைகள் வெளியீட்டகம், படிப்பகம், 'தினம் ஒரு மின்நூல்' குழு
***
மேலும் வாசிக்க :

என்கதை - கே. டானியல் (பிறத்தியாள் வலைப்பதிவு)
கே.டானியல் கடிதங்கள்: நூல் விமர்சனம் கானப்பிரபா  (அ.மார்க்ஸ் தளம்)

Friday, September 13, 2013

பொன்னூஞ்சலில் என்னூஞ்சலில்...

from the movie Aaru Sundarimaarude Katha. Singers : Chithra / Venugopal . Lyrics : Kaithapram Music: Deepak Dev. Thanks to : saregamamalayalam.
***


Thursday, September 12, 2013

நடுத்தெருவில் சென்ஷி பாடிய பாட்டு!

ஓசி கிட்டார் கிடைச்சா இப்படி ஊர் ஊரா சுத்த ஆரம்பிச்சுடுறாங்க, குசும்பன் உதவியோடு!

**
'ஷார்ஜா தான்சேன்' சென்ஷிஜீ பாடியது குலாம்அலியின் இந்த பஞ்சாபிப் பாட்டுதான் (song composed by ustad Tasadaq Ali Khan). ஆனால் என்னமோ சத்தம் அன்று வெளிவரவில்லை, அவர் வாயிலிருந்து!

***

சித்தார்த் சொன்னது :

ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு 4 வயசு பையன் திருக்குறள் எல்லாம் நல்லா சொல்றான்னு அவன தூர்தர்ஷன்ல (அப்ப பொதிகை இல்ல) பேட்டி எடுத்தாங்க. கேள்வி கேட்டவங்களுக்கு தூர்தர்ஷன் தொகுப்பாளினிகளுக்கான குறைந்தபட்ச வயதான 40ஐ விட அதிகம் இருக்கும். ஆனாலும் குழந்தைய ஒவ்வொரு கேள்வி கேக்கறதுக்கு முன்னாடியும் ஒரு அதீத அடைமொழி போட்டு அழைச்சு தான் கேள்வி கேட்டாங்க. ”குறள் மொழியும் குறளே”, ”இரண்டடி இமயமே”,,, இப்படி....


நம்ம இசைமேதையை இப்படியான அடைமொழிகளுடன் கூடிய கேள்விகள் கேட்பது ஒரு சம்மூவமா நமக்கு பெருமை?  இல்ல... கடம. அதனால கேள்விகள நானே ஆரம்பிக்கறேன்.


1.
நாதமெனும் ஞானவிளக்கே.... இத்தனை வெயிலில் சுடும் தார்ச்சாலையில் அமர்ந்திருப்பதற்கான வேர்க்காரணங்களாக இரண்டினை நான் யூகிக்கிறேன்.

அ. கலைத்துறையின் மற்றோர் சிகரமான சம்மந்தி +குசும்பன் குசும்பு அவர்களின் பால் நீங்கள் கொண்டிருக்கும் மாறா நட்பு
 
ஆ. இத்தனை நட்பை மீறியும் உங்களை இங்கே உட்கார வைத்து தண்டிக்க வேண்டும் என்ற சம்மந்தியின் காழ்ப்பு.

இந்த காழ்ப்பு கலைரீதியான பொறாமையினால் உருவானதா? இதை பற்றிய உங்களது கருத்து என்ன? கூறுவீரா இருவத்த்தியோராம் நூற்றாண்டின் தான்சேனே?