அப்துற்-றஹீம் எழுதிய 'படியுங்கள் சிரியுங்கள்' நூலிலிருந்து..
Showing posts with label அல்லாமா இக்பால். Show all posts
Showing posts with label அல்லாமா இக்பால். Show all posts
Saturday, March 3, 2018
Thursday, April 5, 2012
நரகத்தை நிரப்புவதே நம் பணி!
இணையத்தை நிரப்புவதே ஆபிதீன் பணி!
***
***
நரகத்தை நிரப்புவதே நம் பணி
எக்காளம், எக்காலம் ஊதப்படுமோ
அக்காலம் வரை - மக்களெல்லாம்
அடிமைப்பட்டே - கிடக்கட்டும்
ஆமைகளாய் நடக்கட்டும் -
முக்காலம் உணர வேண்டாம்
முன்னேறிச் செல்ல வேண்டாம்
முதுகெலும்பை மறக்கட்டும்
முடுக்குகளில் முடங்கியே இருக்கட்டும் -
உலக வாழ்வில்
ஒன்றும் இல்லையென ஒதுங்கட்டும்
ஒன்றுமே இல்லாத பிரச்சினைகளுக்கெல்லாம்
ஒளிந்து ஒளிந்து பதுங்கட்டும் -
அவ்வண்ணம் அவர்கள் அழுக்கைப் புனுகாக
அர்த்தமாக்கிக் கொள்ளும் போதுதான்
நமக்கு வெற்றிகள் கிட்டும்
நன்மைகள் பலவும் கொட்டும் -
அரைகுறை ஆசான்கள் ஆன்மீகத்தில் மூழ்கி
புரையேறி வேதங்களுக்கான விளக்கங்களை வில்லங்கமாகத்
திரித்துக்கூறும் போதுதான் வீரியம் நமக்குச்சேரும்
நினைத்த காரியம் நடக்கும் நாளும் -
ஒடுங்கிக் கிடப்பவர்கள் - எங்கே உத்வேகத்தோடு
விழித்து எழுந்து விடுவார்களோ என வினாடிக்கு வினாடி
உள்ளுக்குள் பயப்படுகிறேன் - தினம்
உடைந்தே சந்தேக வயப்படுகிறேன் -
உலக உண்மைகளை ஓர்மனப்பட்டு ஆய்வதுதான்
உயர்நிலை மார்க்கம் என மக்கள்
உணர்ந்து கொள்வார்களோ? என விசனப்படுகிறேன் ஒவ்வொரு முறையும்
உலகை உற்று உற்றுப்பார்த்து வேதனைப்படுகிறேன் -
அவர்கள் அறியாமையிலேயே
மூழ்கிக் கிடக்கட்டும்
கடமையேதும் செய்யாமல்
கவலையின்றிக் களிக்கட்டும் -
உலகவாழ்வின் ஒவ்வொரு பங்கையும்
உதறித் தள்ளிய அவர்கள்
தோல்விகளைத் தழுவட்டும் - தங்களைத்
தொலைத்துவிட்டு அழுவட்டும் -
கவிதைகளில் மூழ்கட்டும்
கற்பனையால் சூழட்டும்
கண்கள்மூடி துறவறத்தில் அமரட்டும்
கருத்தெல்லாம் கயமையே நிலவட்டும் -
ஊண் உறக்கமின்றி மயங்கி
உலகினையே மறக்கட்டும்
தெருவோர மடங்களெல்லாம்
திக்ருசெய்து கிடக்கட்டும் -
கரத்திலுள்ள தஸ்பீஹ்
கணக்கின்றி புரளட்டும்
நூறு நூறு கிரகங்களும்
நூலினிலே உருளட்டும் -
சொன்னதெல்லாம் நடக்கட்டும்
சொர்க்கம் காலியாகவே இருக்கட்டும்.
***
***
மகாகவி இக்பால் அவர்கள் எழுதிய 'இபுலீஸின் சபை' எனும் கவிதையில் தலைமை இபுலீஸ் (ஷைத்தான்) தன் சீடர்களுக்கு மொழிவதைப் பகிர்கிறேன். தமிழாக்கம் : தாழை மதியவன். ('காஷ்மீர் பெண்ணின் கவலைகள்' நூலிலிருந்து)
***
நரகத்தை நிரப்புவதே நம் பணி
எக்காளம், எக்காலம் ஊதப்படுமோ
அக்காலம் வரை - மக்களெல்லாம்
அடிமைப்பட்டே - கிடக்கட்டும்
ஆமைகளாய் நடக்கட்டும் -
முக்காலம் உணர வேண்டாம்
முன்னேறிச் செல்ல வேண்டாம்
முதுகெலும்பை மறக்கட்டும்
முடுக்குகளில் முடங்கியே இருக்கட்டும் -
உலக வாழ்வில்
ஒன்றும் இல்லையென ஒதுங்கட்டும்
ஒன்றுமே இல்லாத பிரச்சினைகளுக்கெல்லாம்
ஒளிந்து ஒளிந்து பதுங்கட்டும் -
அவ்வண்ணம் அவர்கள் அழுக்கைப் புனுகாக
அர்த்தமாக்கிக் கொள்ளும் போதுதான்
நமக்கு வெற்றிகள் கிட்டும்
நன்மைகள் பலவும் கொட்டும் -
அரைகுறை ஆசான்கள் ஆன்மீகத்தில் மூழ்கி
புரையேறி வேதங்களுக்கான விளக்கங்களை வில்லங்கமாகத்
திரித்துக்கூறும் போதுதான் வீரியம் நமக்குச்சேரும்
நினைத்த காரியம் நடக்கும் நாளும் -
ஒடுங்கிக் கிடப்பவர்கள் - எங்கே உத்வேகத்தோடு
விழித்து எழுந்து விடுவார்களோ என வினாடிக்கு வினாடி
உள்ளுக்குள் பயப்படுகிறேன் - தினம்
உடைந்தே சந்தேக வயப்படுகிறேன் -
உலக உண்மைகளை ஓர்மனப்பட்டு ஆய்வதுதான்
உயர்நிலை மார்க்கம் என மக்கள்
உணர்ந்து கொள்வார்களோ? என விசனப்படுகிறேன் ஒவ்வொரு முறையும்
உலகை உற்று உற்றுப்பார்த்து வேதனைப்படுகிறேன் -
அவர்கள் அறியாமையிலேயே
மூழ்கிக் கிடக்கட்டும்
கடமையேதும் செய்யாமல்
கவலையின்றிக் களிக்கட்டும் -
உலகவாழ்வின் ஒவ்வொரு பங்கையும்
உதறித் தள்ளிய அவர்கள்
தோல்விகளைத் தழுவட்டும் - தங்களைத்
தொலைத்துவிட்டு அழுவட்டும் -
கவிதைகளில் மூழ்கட்டும்
கற்பனையால் சூழட்டும்
கண்கள்மூடி துறவறத்தில் அமரட்டும்
கருத்தெல்லாம் கயமையே நிலவட்டும் -
ஊண் உறக்கமின்றி மயங்கி
உலகினையே மறக்கட்டும்
தெருவோர மடங்களெல்லாம்
திக்ருசெய்து கிடக்கட்டும் -
கரத்திலுள்ள தஸ்பீஹ்
கணக்கின்றி புரளட்டும்
நூறு நூறு கிரகங்களும்
நூலினிலே உருளட்டும் -
சொன்னதெல்லாம் நடக்கட்டும்
சொர்க்கம் காலியாகவே இருக்கட்டும்.
***
நன்றி : தாழை மதியவன் (எஸ். எம். அலி)
நன்றி : ஷார்ஜா ஷைத்தான்!
Subscribe to:
Comments (Atom)

