Monday, November 7, 2022

தந்தை சொல் மிக்க (நாடகம்) - மஜீது

முதலில் ஒரு ’பிஸாது’ : முதல் பரிசு வாங்குன நாடகமே இப்படின்னா மத்ததுலாம் ?!
*

தந்தை சொல் மிக்க (நாடகம்) - மஜீது

அண்ணே, ஒரு குறுநாடகம் போடுறோம், 'தந்தை சொல் மிக்க' ன்னு தலைப்பு. 12 நிமிசத்துக்குள்ள இருக்கனும்.. அதுல ஒரு சின்ன கேரக்டர்ணே...நம்ம ரஃபீக் சுலைமான் நடிக்க வேண்டியது..

அவரா? அவரு ஊருக்குல்ல போயிருக்கார் ஆசிஃப்? நான்  ஃபேஸ்புக்ல பாத்தேன்...

ஆமண்ணே.. ஊர்லதான் இருக்காரு..ஆனா வர்றதுக்கு லேட்டாகும்போல தெரியுது...

அடுத்த க்விக் ஆப்ஷன் நீங்கதான்னு தோனுச்சு... அதான் கூப்ட்டேன்... வர முடியுமா?

(வரமுடியுமான்னு கேக்குற மாதிரியேஏஏஏ, வரனும்னு ஆர்டர் போட வேற யாரால முடியும்?)

அப்டியா?

“ஆமண்ணே.... ஒரு காலேஜ் சீன்,மூனு நிமிசம்தான் வரும்...” ன்னு ஆரம்பிச்சு முழு கேரக்டர் பத்தியும் ஒரு நிமிசத்துல சொல்லிட்டாரு... (அதாவது டீல் முடிஞ்ச்சாம், அப்டியான்னு கேக்குறமாதிரியேஏஏ சரின்னுட்டேனாம்)

வரச்சொன்ன அன்னைக்குப் போனேன்... ஸ்க்ரிப்ட்டைக் கொடுத்தாரு... படிச்சுப்பாத்தா உள்ளபடியே சிம்ப்பிள்தான்... பெருசா ஒன்னும் சிரமப்படாம, சின்ன மாடுலேஷன்ஸோட பேசுனாலே நல்ல அவ்ட்புட் கிடைக்கும்.. ரொம்ப ஈசிதான்... அதனால ஒன்னும் கஸ்ட்டமா தோனலை....

ஒரு சீன்ல என் கேரக்டர் செல்ஃபோன்ல தன்னோட அப்பாட்ட ஒரு நிமிசம் தொடர்ச்சியா பேசுறமாதிரி இருந்துச்சு. அதுதான் ஸ்க்ரிப்ட்ல முக்கியமான ட்விஸ்ட்.. 

ஆசிஃப் கொடுத்த அந்த சீன் டயலாக்கை படிக்கும்போதும் ஒன்னும் வித்தியாசமா தோனலை.. பண்ணிறலாம்னு தைரியமா சொல்லிட்டேன்.

ஆனா, அடுத்த நாள் ஒரு குண்டு வெடிச்சிச்சு..

முதல் ரிகர்சல்: அந்த போன் பேசுற சீன் வந்தப்பதான் அந்த ட்விஸ்ட் என் மண்டைக்குள்ளயும் திடீர்னு ஏறுச்சு.

பல வருசங்களுக்கு முன்னால் என்னோட வாழ்க்கைல நடந்த பலத்த அதிர்வுகள்..

தொலைஞ்சுச்சு.... மொத்தமும் காலி....

அந்த டயலாக் வரும்போது நான் அங்கெயே இல்லை..

எங்கெயோ போய்ட்டேன்... வாய்லாம் கொழறுது..

வார்த்தைலாம் திக்குது... மாடு சாணிபோடுறமாதிரி டயலாக் டெலிவரி வருது...

எனக்கே தெரியுது.. ஆனா வெளில சொல்ல புடிக்கலை..

சமாளிச்சிறலாம்னு தோனுச்சு... யாருக்கும் திருப்தி இல்லை..

மறுபடி ரெண்டாவது ரிகர்ஸல்ல இன்னும் மோசமா போய்ருச்சு...

குரல்லாம் உடைஞ்சு நடுங்க ஆரம்பிச்சிருச்சு...

பாத்துக்கிட்டு இருந்த தம்பி பாலாஜிக்கு ஏதோ தோனுச்சு போல...

விறுவிறுன்னு ஓடிப்போயி கொஞ்சம் தண்ணி கொண்டாந்து கொடுத்து, “என்னாச்சுண்ணே... தண்ணியைக் குடிங்கண்ணே... குரல் ரொம்ப உடைஞ்சு ஒரு மாதிரியாயிருச்சுண்ணே...”ன்னு சொன்னவொடனே, வாங்கிக் குடிச்சுட்டு, பாலாஜி முகத்தைப் பாத்தேன்...

“போதுமாண்ணே... இப்ப ட்ரை பண்ணுங்க”ன்னு சொன்னதும், போதும்ப்பா, சரியாயிருச்சுன்னு சொல்லிட்டு, சட்டுனு உள்ளதை சொல்லிறலாமான்னு யோசிச்சேன்..

அப்ப பாத்து ஒரு ஃபோன் வரவும், இன்னும் ஒரு தடவை ட்ரை பண்ணிட்டு சொல்லலாம்னு அடங்கிட்டேன்... ,

போன் பேசிட்டு அஞ்சு நிமிசத்துக்கு அப்பறம் திரும்ப வந்து பேசும்போது சுமாரா வந்துச்சு...

அதுவே போதும்கிற அளவுக்கு ஆசிஃப்க்கு திருப்தி..

ஆனா எனக்கு திருப்தி இல்லை...

ஆனாலும் அவர்ட்ட நம்பிக்கையோட சொன்னேன்:

"என் கேரக்டரை பத்தி கவலை வேணாம்... இதைவிட சிறப்பா செஞ்சிர்றேன்"

அவரும் 'ம்ம்.. சரி'ன்னு சொன்னாரே தவிர அவருக்கு அன்னைக்கு பெருசா நம்பிக்கை இல்லை.

அடுத்த மூனு நாலு நாள்ல ஸ்டேஜ் ரிகர்சல். நாங்க நடிச்சு முடிச்சதும், அமைப்பாளர்கள்ல ஒருத்தர் (எனக்கு அறிமுகம் இல்லாதவர்) என்னைக் காமிச்சு, இவரு நல்லாப் பண்ணுனாரு, முக்கியமா அந்த ஃபோன் பேசுற சீன் நல்லாப் பேசுனாருன்னு குறிப்பிட்டு சொல்லவும் ஆசிஃப் முகத்துல லேசா ஒரு ஒளிவட்டம். 

இவ்வளவு தூரத்துக்கு என்னை ஆட்டிப் படைச்ச அந்தவிசயம் என்னன்னா,

ஆசிஃப் கொடுத்த அந்த செல்ஃபோன் டயலாக்,எனனோட இருபதாவது வயசுல, என்னோட தகப்பனார்ட்ட,

நெசம்மாவே நான் பேசுன அதே டயலாக்..

வாசகங்களும் 95 பெர்சண்ட் அப்படியே டிட்டோ...

நான் அப்டிப் பேசுனதுனால ஆரம்பிச்ச பிரச்சினை பெருசாகி, எப்டிலாமோ திசைமாறி, ஒரு பெரிய பிரளயமா மாறி, அவரைவிட்டு நான் பிரியவேண்டியதாயிருச்சு...

பிரிவுன்னா சாதாரண பிரிவில்லை...

மறுபடி அவர் முகத்தை சகஜமா பாத்து, நல்லாருக்கீங்களான்னு கேக்க 14 வருசம் ஆகிருச்சு...

அதுவும் எப்டி? எங்கே?

காரைக்குடி கடைவீதில எதிரும் புதிருமா ரெண்டுபேரும் கடந்துபோயிட்டோம்..

அடையாளம் தெரியாம....

என் தோள்ல என் ரெண்டாவது மகன்,

3 வயசு நிரம்பாத சின்னபபையன்..

10 செகண்ட்ல எனக்கு பொறிதட்டி, திருப்ப ஓடிப்போய்,

அவருக்கு நேரா நின்னு, முகத்தை சகஜமாப் பாத்து, 

கேட்டேன்: நல்லாருக்கீங்களா?

அவரு: நல்லாருக்கேன்... நீங்கஅஅஅஅ? யார்னு தெரியலையே....

இப்ப எனக்கு சுர்ர்ர்ர்னு கோபம்... ஆனா உடனே அடங்கிருச்சு..

நான்: நெசமாவே அடையாளம் தெரியலையா? இல்லை கோபத்துல சொல்றீங்களா?

அவர்: இல்லை, எனக்கு நெஜமாவே தெரியலை...

நான்: சரி நான் பாக்குறதுக்கு நிறைய மாறிருக்கேன்தான்... இல்லைங்கலை...ஆனா குரல் கூடவா தெரியலை?

அவர்: இல்லை தெரியலை... யார்ன்னு சொல்லிருங்க...

நான்: மஜீது த்தா....

10-15 செகண்ட் மவுனம்... ஆனா அது ரொம்ப நீளமான கனமான மவுனம். 

அப்பறம்,

அவர்: ம்ம்ம்ம்... நல்லா இருக்கியா..?

சொன்னேன்: நான் நல்லா இல்லை.. கடனோடவும் பல பிரச்சினைகளோடவும் இருக்கேன்..

(கொஞ்சங்கூட கூச்சமோ வெட்கமோ எதுவுமே இல்லாம சொன்னேன்)

அவர்: நீ சவூதில இருக்குறதா கேள்விப்பட்டேன்.. அப்பறம் என்ன கடன், பிரச்சினை..?

நான்: அந்த சம்பாத்தியம்லாம் போச்சு.. அதெல்லாம் அப்பறமா சொல்றேன்..

அவர்: சரி, இப்ப என்ன பண்ற?

நான்: ஒன்னும் பண்ணலை.. துபாய் போறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன்..

மறுபடி அமைதியானோம்...

அதுக்கப்பறம், ரெண்டு பேரும் அப்ப எங்கே இருந்தோம்னு விசாரிச்சுக்கிட்டோம்,

என் பையனுக்கு அவன் கேட்ட ‘மக்ரூன்’ வாங்கிக்கொடுத்தார்.

கிளம்பிட்டோம்... அவ்வளவுதான்..

மறுபடி தொடர்பில்லை..

அதுக்கப்பறம், 6-7 மாசம் கழிச்சு, துபாய் வந்து சேந்தேன்...

வந்த ஆறுமாசத்துல என் தம்பிட்ட சொல்லி அவர்ட்ட என் சார்பா பேச சொன்னேன்

(செல்ஃபோன்லாம் இல்லை)

அடுத்த ஆறுமாசத்துல என்னோட முதல் வெக்கேஷன்,

ஷார்ஜா - திருச்சி டைரக்ட் ஃப்ளைட் சர்வீஸ்,

முதல்முதல் ஃப்ளைட்

இறங்குன தேதி: 01-01-1997 அதிகாலை 1:00 மணி

எல்லாமே, ஒன்னுல ஆரம்பம்,

என்னோட புது வாழ்க்கையும்..

என்னை அழைக்கிறதுக்கு அத்தா வந்திருந்தார்

(வர வச்சிருந்தேன்)

வழில கிராமத்துக்கு கிராமம், இளவட்டப் பயலுக

எங்க வண்டிய அங்கங்கெ நிறுத்தி

சத்தம் போட்டு அலப்பறை பண்ணி

ஒரே வரவேற்பு!

ஸ்வீட்டுகளும், கேக்குகளுமா கொண்டாட்டம்..

ஒரே ஹேப்பி நியூ இயர் ஆர்ப்பாட்டம்!

அதுக்கப்பறம் அவரை அவராவே

அப்டியே ஏத்து அணைச்சிக்கிட்டு

நான் அவரை விடவே இல்லை..

கடைசிவரைக்கும், 

அதாவது 27/07/2018 வெள்ளிக்கிழமை ராத்திரி வரைக்கும்..

அன்னைக்கு ராத்திரி சாப்பிட்டுட்டு, மயங்கி பின்னால சாய்ஞ்சு மயங்கினவருதான்..

தகவல் கிடைச்சு பதறி  ஓடிவந்து, மவுத்தை உறுதி செஞ்ச டாக்டர் வேற யாருமில்லை..

அன்னைக்கு 3 வயசுல மக்ரூன் வாங்கி  அறிமுகம் ஆன என் ரெண்டாவது மகன் தாரிக்..

எனக்கு அத்தாவோட செய்தி வந்தப்ப,

நான் துபாய்ல ஒரு ரெஸ்டாரண்ட்ல ராத்திரிச் சாப்பாட்ல இருந்தேன்...

அதிர்ந்து நிக்கும்போது,

"தைரியமா இருங்கண்ணே"ன்னு சொல்லி தேத்துனது வேற யாரும் இல்லை

என்கூட சாப்ட்டுக்கிட்டுருந்த இதே ஆசிஃப் மீரான் அண்ணாச்சிதான்..

என்ன சொல்ல...!

நாடகம் என்னாச்சுன்னு கேக்குங்கிறீங்களா?

17 நாடகங்கள்ல “சிறந்த நாடகம்” னு தேர்வாச்சு,

த ந் தை சொ ல் மி க் க

அந்த வசனத்தை நீங்களே நேரடியா நாடகத்துலயே கேக்கலாம்.

கீழே இருக்குற லிங்க்கை ஓப்பன் பண்ணுனா கரெக்டா இந்த நாடகம் ஆரம்பமாகும்

https://www.youtube.com/watch?v=jdUtj9FZ1hY&t=13055s

(14 minutes from this point)

*

நன்றி : மஜீத்

*

தொடர்புடைய ஒரு பதிவு

ல்லிணக்கம் : ஒரு நினைவோட்டம் – மஜீத்


3 comments: