Wednesday, February 27, 2013

இதயதாசனுக்கு உதவுங்கள்

நண்பர்  இதயதாசனின் மகன் சென்னை பில்ராத் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டிருப்பதாக மெயில் அனுப்பியிருக்கிறார் சவுதியிலுள்ள சகோதரர் ஃபாருக்ராஜா. மனம் சோர்ந்து போகிறது... விபரங்களை இத்துடன் இணைத்திருக்கிறேன். உங்களால் இயன்றதைச் செய்யுங்கள். இறைவன் கிருபை செய்வான். நன்றி. - ஆபிதீன்
***


Dear Brothers and Friends,

Hamid Faisal Haris, son of S.M. Abdul Qassim from Nagore, is just 28 years old but very unfortunate to severely suffer from kidney failure recently. As both of his kidneys are dysfuntioning, now he is at the Bilroth Hospital in Chennai awaiting the transplantation of at least one kidney.  Specialist doctors have intensely recommended doing the transplant within a month time to avoid more dangerous situations. It is estimated from 700,000 to 1,000,000 Indian Rupees for the whole treatment apart from the dialysis cost of Rs. 2000 every alternate day until the transplant.
 
S.M. Abdul Qassim is a less-fortunate poet, better recognized as Idhaya Dhasan and he is my school classmate and well known to me. As he is from a poor family he has pleaded in his letter  to help him out of this tragic situation and to restore the health of his elder son.
 
I would like to request you all to consider saving a life of a young man by your generous donations to him for which Allah (SWT) will compensate with His countless rewards in multitudes.  The Bank details are given below for your convenience.
 
Thank you.


***

Beneficiary Name and Account Details:
S.M.ABDUL QASSIM
Indian Overseas Bank, Nagapattinam Branch, A/C No. 22718
Res: No.7 Darga Kulam East Street , Nagore 611002, Tamilnadu, Tel: 0091-4365-22716

Tuesday, February 26, 2013

மதறாஸி ஸிங்கிங்! - குலாம் அலியின் ஒரு கஜல்

'இஸ்மே ஆப்கோ சவுத் கா டேஸ்ட் மிலேகா.. ’ என்று சொல்லியவாறு உஸ்தாத் குலாம் அலி  பாடும் ஒரே கஜல் இதுதான்.  இந்த யூட்யூபில், 'is it raag brindavani sarang?’ என்பவரின் கேள்விக்கு ‘ This is the scale of Madhmat Sarang in Hindustani music. In Carnatic music, this corresponds to raga Madhyamavati. But, the raga of this ghazal is Megh. In Hindustani music, the same scale (Madhyamavati) delivers two ragas -- Madhmat Sarang and Megh’ என்று பதில் சொன்ன Ranchhoddasji-ம் மதறாஸியாகத்தான் இருக்கவேண்டும். ஆமாம், இவ்வளவு விபரங்களெல்லாம் தெரிந்துகொண்டுதான் இசை கேட்க வேண்டுமா என்ன? மினிமைஸ் செய்துவிட்டு கேளுங்கள். போதும், மதறாஸி போல ‘மியூட்’ செய்துவிட்டு கேட்டாலும் சரிதான்! - ஆபிதீன்

***

***
Thanks to : samarjitacharjee

***

போனஸ் : பழைய மதறாஸி பதிவு!

Courtesy : The Hindu - Metro Plus  (Wednesday, Sep 15, 2004)

Ghulam, ghazals and geet

His ghazals are as much about lyrics as they are about melody. SAVITHA GAUTAM in conversation with Pakistani ghazal maestro Ghulam Ali

"THERE MAY be many who enjoy my music, but I only listen to your ghazals... " That was Indian playback legend Mohammed Rafi's comment during a conversation with Ghulam Ali. Such has been the reach of the Pakistani ghazal maestro, who has been often dubbed one of the most influential cultural ambassadors from across the border.

Ghulam Ali was in the city after a 19-year hiatus for a charity concert put together by the Rotary Club of Chennai Samudra, Ability Foundation and Rotary Club of Madras. Why such a long gap? "Aapko hame yaad karne mein itni der lagi" (It took you so long to remember me), was his reply. Despite the fact that he was an hour late for a dinner engagement, the singer was happy to share his thoughts in an exclusive interview the evening before his show. ("Normally, we singers do not like to talk much on the day of a concert. We want to conserve our energy").

Do you remember your earlier concert here in 1985, you asked. With an endearing smile, he replied, "Yes, it was Hema Malini who organised the show at the Music Academy. I remember quite a few members of the film fraternity sitting in the first few rows. It was a memorable concert for me."

Pioneering role

In the early 1960s and 1970s, singers such as Ghulam Ali and Mehdi Hassan, played a pioneering role in popularising the ghazal in the film-dominated music scene. The Sialkot-born Ghulam Ali began his musical journey as a teenager under the tutelage of Bade Ghulam Ali Khan and his brothers Barkat Ali Khan and Mubarak Ali Khan of the Patiala Gharana. He recalls, "My father was a big fan of Bade Ghulam Ali saab, and in fact, I was named after him. I was in awe of Khan saab, sometimes even terrified. If I had to sing before him, I would do riyaaz (practice) for days, then sing before Barkat saab to ensure that I did not go wrong with the raag. I think I am blessed to have trained under him, even if it was for a short while."

Even though his training was in the classical form, it was the ghazal that attracted him most. "Besides raags, Barkat saab also used to sing thumris, dadras and ghazals. I was particularly drawn towards the ghazal and wanted to learn as many as I could," says Ghulam Ali, whose first ever public programme was in a classical one. It was to be 1960 before he could actually record a ghazal for Radio Pakistan in Lahore.

"I remember the number. It was Ahmed Nazim Kazmi's "Shaam ko subah chaman yaad aaye... " And I was paid a grand sum of Rs. 15!" The response was overwhelming. A new ghazal singer had captured the musical hearts of Pakistan. After that, radio programmes, live concerts in Pakistan and Europe, and recordings kept him busy.

However, it was not before 1980 that he could cross the border and showcase his rich baritone voice before an Indian audience, in Mumbai. "I recall doing eight shows in 15 days." Ever since, his bond with India has been getting stronger, despite some ugly and forgettable moments, like when his concert was disrupted by the Shiv Sena in 1998. Even then, he would sing "Faasle aise bhi hoonge yeh kabhi socha na tha" (I never thought there would be such differences).

In India, Ghulam Ali made friends and collaborated with various artistes, including Asha Bhonsle (who called him "a miracle of God") and Gulzar, releasing hit albums. As for his personal favourites the list includes "classical artistes such as Aamir Khan saab, Kishori Amonkar and Ravi Shankar, and the songs of A. R. Rahman. Yes, I hope to work with him some day." As far as shayars (poets) go, he names Nazim Kazmi as his favourite. "We worked together for a while with Radio Pakistan. I learnt a lot from him. I also enjoy singing Ghalib, Mir Taki Mir and Nida Fasli."

Western influence

Are the classical arts getting the attention they deserve in Pakistan? "Haan, yeh bahut buri baat hai. West ka influence bahut zyada ho gaya hai. Aaj kal koi bhi kala ko paise ki nazaron se dekha jata hai, puja ya ibadat ki nazar se nahin (It's a sad thing. There's too much of the Western influence. The arts have been commercialised. Devotion seems to be lacking.)

Ghulam Ali today spends quite a bit of time training students, including his son Nazar Ghulam Ali. "But my younger son Aamir's tastes lean more towards rock and jazz," he smiles.

He is a role model for many ghazal singers and aspiring musicians. What would he like to say to them, "I would say, give as much importance to the lyrics as to the music. A deep understanding of the classical form helps a singer go a long way. Also, it is important to learn Urdu to understand a ghazal.

On that positive note, he left for dinner, all fired up about some dish his friend had mentioned.



THE PACKED hall of the Kamaraj Arangam was evidence enough that Ghulam Ali is still a name to reckon with. Brought to Chennai by the Rotary Club of Chennai Samudra, Ability Foundation and Rotary Club of Madras, the Pakistani singer was in top form as he began the evening with guru Bade Ghulam Ali Khan's famous thumri, "Gori tori naina" in Raag Pilu. He was accompanied by Shamir Sarkar on the tabla, Arshad Ahmed on Guitar, Abrar Ahmed on the santoor and Raju Das on harmonium.

He set the pattern for the evening by beginning with some couplets before launching full flow on to a ghazal, letting the audience experience his superb vocal range. Somebody once remarked "Ghulam Ali is the master of the unpredictable turn of the phrase which he does with ease." One saw glimpses of that when he played on the word `leher' in "Dil mein ek leher."

The audience was, of course, waiting for classics such as Ghalib's "Har ek baat," "Chupke Chupke" (first recorded nearly 28 years ago for Radio Pakistan) "Yeh dil yeh paagal dil mera" and "Hungama hai kyon." And they were not disappointed.

Perhaps, the only sore note was the guitar, which somehow sounded out of place in the almost classical show.

The show raised funds for the various projects supported by the Rotary such as polio eradication, eye care, AIDS awareness and homes and education for the underprivileged.

Monday, February 25, 2013

நாய்ப் புணையலுக்குச் சோறூட்டிய கதை


வெளில தெரியிற வாலப்பழம் இவ்ளோ பெருசுன்னா உள்ள இரிக்கிறது எவ்ளோ பெருசா இரிக்கும்? கடைக்கி உள்ளே இரிக்கிறத சொல்றேன் காக்கா...! - ஆபிதீன்


***

அன்புள்ள ஆபிதீன்,

இங்கே புலவர் மாமாவின் அருமை மகனாரின் படத்தை அனுப்புகிறேன். எண்பத்து ஏழு வயதில் வபாத்தாப்போன புலவர் மாமாவுக்கு ஏழு பிள்ளைகள், நாலு பெண்களும் மூன்று ஆண்களும். புலவர் மாமா போல் ஞானவான்கள் ரொம்பக் குறைவுதான். புலவர் மாமாவின் முழுப்பெயர் அஹமது லெப்பை மரைகார் இப்ரா லெப்பை. இங்கே புலவர் மாமாவின் மகன் உமர் லெப்பை இப்பொழுது வாழைப்பழ வியாபாரியாக இருக்கிறார். ஒரு காலத்தில் வாப்பாவுக்கு நிகராக பகிடி விட்டவர். இப்பொழுது வாயே திறக்க மாட்டேன் என்கிறான். அன்று வாப்பாவின் வாளை எலிக்குச் சாப்பிடக் கொடுத்த அருமை மைந்தன் உமர் லெப்பை இன்று வாழைப்பழத்தை எலிக்குச் சாப்பிடக் கொடுக்கிறார்.

எஸ்.எல்.எம். ஹனிபா

***

நாய்ப் புணையலுக்குச் சோறூட்டிய கதை

மாமா சோளக்காட்டுச் சேனைக்கு காவலுக்காக இரண்டு கடுவன் நாய்க்குட்டிகளைப் பிடித்து வளர்த்தார். நாய்க்குட்டிகள் இரண்டு மாதப் பருவமடைந்ததும் மாமாவின் வாடிக்குப் பக்கத்திலிருந்த குறவர் இனத்தைச் சேர்ந்தவரைக் கொண்டு நாய்க்குட்டிகளின் விதைகளை அகற்றி விட்டார். (அந்தக் காலத்தில் இளவரசிகளின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஆண்களுக்கு நடந்த அதே கதிதான்)

இந்த நாய்கள் இரண்டுக்கும் எவ்வளவு சாப்பாடு கொடுத்தாலும் எப்பொழுதும் மாமாவைப் பார்த்து அழுது கொண்டே கிடக்குமாம். இதுகளின் பசியைப் போக்க வேண்டுமென்று நினைத்த மாமா, ஒரு நாள், பழைய சோற்றுடன் நன்றாகத் தயிரையும் குழைத்து ஒரு வாளியில் எடுத்துக் கொண்டு நாய்களை அவிழ்த்துக் கொண்டு அவருடைய வாடியின் மேற்குப் புறமாக இருந்த ஆற்றங்கரைக்குச் சென்றார்.

ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு சிறிய பானையளவு குழியை தோண்டி நீர் மெதுவாக ஊறி வரும் வேளையில் சோற்று வாளியைக் கொட்டினார். நீர் ஊறிக் கொண்டே இருந்தது. நாய்கள் இரண்டும் தயிரும் சோறும் கலந்த குழையலை நீருடன் சேர்த்துக் குடித்துக் கொண்டேயிருந்தன. தயிர், சோறு, ஊறும் நீர் என்று வயிறு முட்ட வயிறு முட்ட அன்றெல்லாம் எழுந்து நின்றும் படுத்துக் கிடந்தும் நாய்கள் குடித்துக் கொண்டேயிருந்தன.

இதிலுள்ள சங்கதியென்னவென்றால், ஊறும் நீரில் தயிரும் மெதுவாக மெதுவாக மணத்துக் கொண்டே இருந்ததுதான். அந்த மணத்தின் மயக்கத்தில் நாய்கள் குடித்து குடித்துக் களைத்துப் போனதுதான் கண்ட பலன். நாய்க்கு மாமாவால் சாப்பாடு கொடுக்க முடியவில்லை. நாய்தான் மாமாவை ஏமாற்றிப் போட்டது.

***


நன்றி : பலாப்பழத்துக்கு...

Sunday, February 24, 2013

ரிசானா நஃபீக்

ஹமீது ஜாஃபரின் எண்ணங்கள்...

வறுமையின் கோரப்பிடியிலிருந்து தன் குடும்பத்தை சற்றே தளர்த்திக்கொள்வதற்காக ரசூல்(சல்) அவர்கள் பிறந்த மண்ணிற்குச் சென்ற ரிசானா நஃபீக், வெறும் பதினேழே நாட்களில் தன்னையே அர்பணித்துக்கொண்ட நிகழ்வு உலகமறிந்த உண்மை. அந்த துயர சம்பவத்தின் காற்று இன்னும் வீசிக்கொண்டிருக்கிறது. அந்த காற்றில் மிதந்து வரும் குருதியின் வாடை  மாறாத நிலையில்  சில தினங்களுக்குமுன் ஃபேஸ் புக்கில் வந்த வீடியோ   என் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது. 
 
சில தினங்களுக்கு முந்தைய Gulf News ல் 'Saudi envoy to Sri Lanka recalled' என்று தலைப்பிட்டு வந்த செய்தியைப் படித்தபோது நிகழ்வின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்று உணரமுடிகிறது. அப்பெண்ணுக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மையின் பின்னணியைப் பற்றி  ஆராயவோ அல்லது விமர்சிக்கவோ எனக்கு தகுதி கிடையாது. ஆனால் எட்டாண்டுகளுக்குமுன் 25-2-2005 ல் 'திண்ணை' இணையப்  பத்திரிக்கையில் 'தண்டனை'  என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையின் சில பகுதியை இங்கே மீள்பதிவு செய்ய விரும்புகிறேன்.

'எக்காலத்தும் யாராலும் மாற்றமுடியாத இறைச் சட்டத்தைப் பற்றி அறியாமல், இஸ்லாத்தில் கையாளப்படுகின்ற ஷரீஅத் தண்டனைகளை தற்காலத்திலும் கையாள வேண்டுமா ? இது மனிதாபிமானமில்லாதது மட்டுமல்ல மிருகத்தனதாயிற்றே, ஐந்து ரூபாய்க்காக ஒரு திருடனின் கையை துண்டிக்கமுடியுமா ? விபச்சாரத்திற்காக கல்லெறிந்து கொல்ல வேண்டுமா ? என்று கடந்த நூற்றாண்டிலிருந்தே உலகளவில் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குற்றவாளியைத் தண்டிப்பது அவசியமா இல்லையா என்று தீர்மானிக்குமுன் அவன் இழைத்த குற்றத்துக்கு அவன் எந்த அளவுக்கு பொறுப்பாளியாகின்றான் என்பதை தீர்மானிப்பதே மிக முக்கியமான பிரச்சினையாகும். இப்பிரச்சினைப் பற்றி அதாவது குற்றமும் தண்டனையும் பற்றிய பிரச்சினையில் இஸ்லாம் முக்கிய கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் தாறுமாறாகத் தண்டனைகளை விதிக்கவுமில்லை, ஈவிரக்கமின்றி அவற்றை நிறைவேற்றவுமில்லை. இத்துறையில் இஸ்லாம் கடைபிடிக்கும் கொள்கையை கூர்ந்து பார்க்கவேண்டும்.

இஸ்லாம் நீதியின் துலாக்கோலைச் சரியாகப்பிடித்துக் குற்றச்செயலுக்கு வழிகோலிய அனைத்து சந்தர்ப்பசூழ்நிலைகளையும் முற்றிலுமாக சீர்தூக்கிப்பார்க்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஒரு குற்றச்செயலை ஆராயும்போது அது ஒரே பார்வையில் இரண்டு அம்சங்களை நோக்குகிறது. ஒன்று குற்றவாளியின் நிலை, மற்றொன்று அக்குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் அல்லது அந்த சமூகத்தின் நிலை. இவ்விரண்டையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் நியாயமான தண்டனையை விதிக்கிறது. இஸ்லாத்தில் விதிக்கப்படும் தண்டனைகளை மேலெழுந்தவாரியாகவோ போதிய அளவு ஆழமாக ஆராயாமலோ நோக்கினால் அவை பயங்கரமானவையாகவும் கொடூரமானதாகவும் தோற்றமளிக்கக்கூடும். ஆனால் குற்றச்சாட்டு நியாமற்றதாகவோ குற்றவாளி அக்குற்றத்தைப் புரிவதற்கு எவ்வகையிலும் நிர்பந்திக்கப்படவில்லையெனவோ திட்டவட்டமாக முடிவு செய்யப்படாவிட்டால் இஸ்லாம் அத்தண்டனையை நிறைவேற்றுவதில்லை.

திருடனின் கையை துண்டிக்கவேண்டுமென்பது இஸ்லாத்தின் தண்டனையாகும். ஆனால் திருடனுக்குத் திருட்டைச் செய்யத்தூண்டியது அவனுடைய பசி, வேறு வழியில்லை என்ற காரணம் சிறிய அளவில் உண்டானால்கூட அவனுக்குத் தண்டனை அளிக்கப்படக்கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.

இஸ்லாத்தின் தலை சிறந்த ஆட்சியாளரும் ஷரீஅத் சட்டங்களை நிறைவேற்றுவதில் மிகக்கண்டிப்பானவர் என்று பெயர் பெற்றவருமான இரண்டாம் கலீஃபா ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின்போது ஹாதிப் இப்னு அலீ பால்த்ஆவிடம் பணிபுரிந்த சில சிறுவர்கள் வேறொருவரின் பெண் ஒட்டகையைத் திருடி புசித்துவிட்டார்கள். இது ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களின் நீதிமன்றத்திற்கு வந்தது. அவர்கள் அச்சிறுவர்களை அழைத்து விசாரித்தபோது, தாங்கள் திருடியதை சிறுவர்கள் ஒப்புக்கொண்டனர். கைகளை துண்டிக்குமாறு தீர்ப்பளிக்குமுன் காரணத்தை அராய்ந்து, 'இறைவன் மீது ஆணையாக, இப்பையன்களை வேலைக்கமர்த்தி அவர்களைப் பட்டினிப்போட்டதன் காரணமாக அவர்கள் ஒட்டகையைத் திருடிப்புசிக்க நீர் காரணமாயிருந்ததை நான் அறிந்திருக்காவிட்டால் நிச்சயமாக அவர்களின் கைகளைத் துண்டிக்குமாறு தீர்ப்பளித்திருப்பேன் ' எனக்கூறி திருடப்பட்ட ஒட்டகையின் விலையைப் போல் இருமடங்கு விலையை ஒட்டக உரிமையாளருக்குக் கொடுக்குமாறு அச்சிறுவர்களின் எஜமானருக்கு தீர்ப்பளித்துவிட்டு சிறுவர்களை விடுதலை செய்தார்கள். மேலும் அவர்கள் ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது பசியின் காரணமாக மக்கள் திருடக்கூடும் என்ற நிலை ஏற்பட்டிருந்ததால் அப்போது திருட்டுக்குரிய தண்டனையை நிறைவேற்றாது விட்டுவிட்டார்கள்.'

இது, தண்டனை வழங்கப்படுவதற்குமுன் காரண காரியத்தை இஸ்லாம் எப்படி ஆராய்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இத்தகைய காரண காரியங்கள் அங்கு ஆராயப்பட்டனவா ? அல்லாஹ் அஃலம்.

அப்பெண்ணிற்காக இலங்கை அரசு எடுத்துக்கொண்ட முயற்சி அனைத்தும் தோல்வி அடைந்து தண்டனை நிறைவேற்றிய பிறகு தனது தூதரை திரும்பப் பெற்றுக்கொண்டது . இது ஒருபக்கம் என்றால் உலக அளவில் கண்டனம் பதிவு செய்யப்பட்டது இன்னொரு பக்கம்.

' Human Rights Watch said Nafeek had retracted “a confession” that she said was made under duress. She said the baby accidentally choked to death while drinking from a bottle.'

'Saudi Arabia, a US ally, is an absolute monarchy that follows the strict Wahhabi school of Islam. Judges base decisions on their own interpretation of sharia, or Islamic law, rather than on a written legal code or on precedent.'   என்று கல்ஃப் நியூஸில் வந்த இந்த இரு செய்திகளும் மேலும் மன இறுக்கத்தையே தருகிறது.

***

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

Saturday, February 23, 2013

விஸ்வரூபம் தந்த வியப்பு! - ஒரு கவிஞரின் பார்வை

ஒரு கண்ணால் 'காயத்தை ரத்தத்தால் கழுவும் கதை’யை வாசித்துக்கொண்டு மறுகண்ணால், அல்லது மாறுகண்ணால் , இதையும் வாசிக்கலாம்.  ஆபிதீன்.

***




பார்வை: விஸ்வரூபம் தந்த வியப்பு!

தாஜ்

24 பிரிவாகவும்
எண்ணற்ற கோணங்களாகவுமான
தமிழக இஸ்லாமிய கட்சிகளின்
ஒருங்கிணைந்த வேடிக்கைகளிடமும்...
அதிகார அரசியலின் கரங்களிடமும்
சிக்கோ சிக்கென்று சிக்கி
அலைக்கழிக்கப்பட்ட
கமலின் விஸ்வரூபம்
பல வெட்டுகளுக்கும்
ஒரு சில வசன அழிப்புகளுக்கும்
உள்ளான நிலையில்,
மூன்று நாட்களுக்கு முன்
அப்படத்தைக் கண்டு களித்தேன்.

நல்ல தியேட்டர்!
சிதம்பரம் மாரியப்பா!
100 பேர்களுக்கும் குறைவான
பார்வையாளர்கள்!
அமைதியான
இரவுக் காட்சி! 
ஓர் இனிமையான அனுபவம்.

இஸ்லாமியக் குழுக்கள்
இப்படத்தை பிரத்தியேகமாக
கண்டுவந்த நாளில்
அவர்கள் கூறிய மதம் சார்ந்த
கருத்துக்களையெல்லாம்
முற்றாய் ஒதுக்கிய மனோநிலையில்
காண அமர்ந்தேன். என்றாலும்
வியாபார ரீதியிலான படங்களின் மீது
எப்பவும் நான் கொள்ளும்
அவநம்பிக்கை மட்டும் வாழ
படத்தை காணத் தொடங்கினேன்.

படத்தின் ஒவ்வொரு காட்சிகளும்
விரிய விரிய
என் அவநம்பிக்கை முற்றாய் மறைந்தது.
இது வியாபாரப் படம் என்றாலும்
முகம் வேறு!

அடுத்தவர்கள் சொல்லத் தயங்குகிற
நிஜத்தை
துணிந்து சொல்ல முனைகிற
வித்தியாசமான
ஆண்மை கொண்ட முகமிது!

குத்திட்ட விழி,
தேவைக்கும் இமைக்காத பார்வையோடு
அடுக்கடுகாய்
வியந்து கொண்டே இருந்தேன்!
துணை வியப்பாய்
'காண்பது தமிழ்ப் படம்தானா?"
எனுமோர் கேள்வி!

ஹீரோ பலரை சாய்ப்பது
தியேட்டரையே கிடுகிடுக்க வைக்கும் இசை
தெரிந்தே வைக்கும் சில ’லாஜிக்’ அற்ற
பிழை போன்ற
சினிமா சங்கடங்களைத் தவிர்த்து,
படம்
முழு நீள உண்மைச் சம்பவங்களின்
தடம்பிடித்து
விஸ்தீரணக் காட்சிகளாக
தீவிரப்பட்டு கொண்டே இருந்தது.

அங்கே இங்கே திரும்பியென
ஒரு காட்சியையும் விட்டுவிடாது
என்னைப் பார்க்கவைத்த
ஒரு ஆக்சன் தமிழ்ப் படமென்றால்...
அது,
இதுவொன்றாகத்தான் இருக்கும்!

படத்தைக் குறித்து பேச
நிறைய இருக்கிறது.
அதற்கு இங்கு இடம் போதாது.
நேரமும் பஞ்சம்.

விஸ்வரூபத்தில்
விரியும் பிரமாண்டம் தவிர்த்து
அதன் கலை நேர்த்திகள் குறித்தும்
யுக்திகள் குறித்தும் நிறைய எழுதலாம்.
சில யுக்தியான
சங்கதிகளை மட்டும் பார்ப்போம்.

பலரும் அறிந்த
பெரியாரிஸ்ட்டான கமல்.
தான் நடிக்கும் படங்களில்
சாமி கும்பிடும் காட்சிகளை
கிண்டலும் கேலியுமாகவே
காட்சிப் படுத்தியிருப்பார்.
இதற்கு முன் வந்த
கமலின் தசாவதாரத்தில்
சுவாமி சிலை பந்தாட்டப்படுவதாக
படம் பூராவும் சித்தரித்திருப்பார்.

இந்தப்படத்தில்
'வாசிம் அஹமத்' என்னும் பெயர் கொண்ட
காஷ்மீரி முஸ்லிமாக நடிக்கும் கமல்,
ஓர் இந்துவாக....
விஸ்வநாதன் எனும் பெயர்தாங்கி
மாறு வேடத்தில் இருக்கிற போது...
தொழுகைக்கு அவர் விரையும் விரைவும்
தொழுகையை நிறைவேற்றும் விதமும்
குறைகாண முடியாத அளவில்
பவ்யமாகவே
காட்சியாக்கியிருக்கிறார்.

தான் கொல்லப்படப் போவதை அறிந்து
தனது கடைசி ஆசையாக
தொழ அவர் வேண்டுகோள் வைப்பதும்
தொழுது முடித்த நிலையில்
'ரப்பனா...' என்று தொடங்கும் 'சூரா'வை
சப்த லயத்துடன் ஓதி முடித்தவராக,
ஓதப்பட்ட சூராவின் துவா பலத்தோடு
எதிராளியைப் பந்தாடுவார்!
தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது இது.

அதாவது,
அடிப்படையில்
தான் ஒரு பெரியாரிஸ்டாக இருந்தாலும்,
கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும்,
இப்படத்தில்
இஸ்லாமிய வேடமேற்றிருக்கும் கமல்
நம்பிக்கைச் சார்ந்த எந்தவொரு
கிண்டலோ கேலியோ இல்லாமல்
கௌரவமான முறையிலும் செய்திருக்கிறார்.

ஒரு கோணத்தில் பெரியாருக்கு
இஸ்லாத்தையும்,
இஸ்லாமியர்களையும் பிடிக்கும்.
இங்கே,
இப்படத்தில் கமலுக்கும்
அப்படி பிடித்ததோர் நிலையே
வெளிப்படுவதாக உணரமுடிகிறது!

ஆப்கானிஸ்தானில்
தலைமை கொண்டிருக்கும்
அல்கொய்தா இயக்கத்தை
வேவு பார்க்க
இந்திய அரசின் 'ரா'வால்
’ஜிஹாதி’யாக
அனுப்பிவைக்கப்பட்டிருக்கும்
உயர் அதிகாரியும், முஸ்லிமுமான கமல்
அல்கொய்தா இயக்கத்தினரோடு
இரண்டறக் கலந்து
வேவு பார்க்கும் காலத்தில்
அவரையும் அறியாமல்
ஓர் ஜிஹாதியின் மனோநிலைக் கொண்டு
அமெரிக்கர்களின் வான் தாக்குதலில்
படுகொலை செய்யப்படும்
ஆப்கான் இஸ்லாமியர்களுக்காக
மனம் பதறுகிறார்.
தவிர, அவர் பங்கிற்கும்
அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்த
ஆக்ரோஷம் கொள்கிறார்.

'வெஜிட்டேரியன்' என பீற்றிக் கொள்ளும்
அவரது சொந்த இன மக்களிடத்து
கிளைக்கும் சிக்கன் உணவு மோகத்தை
போர் சூடும்
அதன் தகிப்புகளும் கொண்ட
இந்தப் படத்தில்
சந்திக்கு இழுத்து வைத்திருக்கிறார்!

தமிழக இஸ்லாமியர்களின் காவலர்களாக
தங்களை பிரகடணப்படுத்திக் கொள்ளும்
24 இஸ்லாமியக்
கூட்டமைப்பு கட்சிமார்களுக்கு
கமல் நிகழ்த்தியிருக்கும்
இந்த யுக்திகள் எதுவும்
கண்ணில் பட்டதாகவே தெரியவில்லை.

//முல்லா உமர்,
கோவையிலும், மதுரையிலும்
இரண்டு வருடம்
இருந்ததாக சொல்வது எப்படி?//

//வீட்டின் உள்ளிருக்கும்
சிறுவர்களையும் பெண்டீர்களையும்
அமெரிக்க ராணுவம் கொல்லாது என்று
சொல்வதெப்படி?//

//எதிரிகளைக் கொல்லத் தலைப்படும் போது
ஜிஹாதிகள்
குர்-ஆன் சூராவினை
ஓதுவதாகக் காட்டலாமா?//

//அமெரிக்க நகரங்களை
காபந்து செய்ய
கமலுக்கு ஏன் இத்தனை அக்கறை//

இப்படியான...
ஒரு நிமிடத்தில் பதில் சொல்லிவிடக் கூடிய
படு அற்பமான,
படு அபத்தமான
கேள்விக் காரணிகளை முன்வைத்து
விஸ்வரூபத்தை தடைசெய்ய சொல்லி
24 - இஸ்லாமியக் கூட்டமைப்பு கட்சிமார்கள்
அடித்தக் கொட்டம்
அந்த அல்லாவுக்கே அடுக்காது.

'துப்பாக்கி' படத்தில்
இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின்
தேசப்பற்று கேள்விக் குறியாக
சித்தரிக்கப்பட்டிருந்தது
இஸ்லாமியர்கள் கோபம் கொண்டார்கள்.
படவெளியீட்டை எதிர்த்தார்கள்
அதில் குறைந்தப் பட்ச அர்த்தமிருந்தது.

விஸ்வரூபம்
அமெரிக்கா - ஆப்கானிஸ்தான்
இடையேயான தளத்தில்
கதையும் காட்சிகளுமாக
படமாக்கப்பட்டிருக்கிறது.
இதனில்
இஸ்லாமிய கூட்டமைப்பினர்
கோபப்பட வேறு என்ன
பிரத்தியோக காரணமாக இருக்கும்?

24 இஸ்லாமியக் கூட்டமைப்பின்
சிப்பாய்களும்
மற்றும் அதன் 
அரும் பெரும் தொண்டர்மார்களும்
கடந்த முப்பத்தி ஐந்து வருடக்காலமாக
ஆப்கானிஸ்தானில்
என்ன நடந்துக் கொண்டிருக்கிறதென்பதை
அறிந்திருப்பார்களா என்ன?
அறிந்திருக்கும் பட்சம்
இத்தனைக்கு...
கொதித்தெழுந்திருக்க மாட்டார்கள்.

*
இப்படத்தையொட்டி
கமல் செய்திருக்கிற தவறுகள் இரண்டு.

ஒன்று.
ஆப்கானிஸ்தானின்
கடந்த கால நிகழ்வுகள் அத்தனையும்
தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும் என்கிற
தொனியில்
இப்படத்தின் கதை மையத்தை
தேர்வு செய்தது.

இரண்டு,
கமல்,
சப்தம் காட்டாமல்
இப்படத்தை ஆங்கிலத்தில்
எடுக்கத் தவறியது.

தமிழ்த் திரையை
உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டுமென்று
கமலிடம்
இங்கே யார் அழுதார்கள்?.

*
24 இஸ்லாமியக் கூட்டமைப்பு கட்சிமார்களுக்கு
ஓர் தாழ்மையான வேண்டுகோள்.
படைப்பாளியையும்
அவனது படைப்புகளையும்
அசிங்கப்படுத்தி
சிதைப்பதையெல்லாம் விட்டுவிட்டு
முதலில் நீங்கள்
சினிமா பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

***

நன்றி : தாஜ்

Monday, February 18, 2013

தி.மு.க.,வின் குஷ்பு அரசியல் - தாஜ்



தி.மு.க.,வின் குஷ்பு அரசியல் - தாஜ்

தி.மு.க.வின் அரசியல்
அதாவது
கருணாநிதியின் அரசியல்
எப்பவுமே விசேசமானது!

அரசியல் தலைவர்களுக்கு
அரசியல் என்பது
சாணக்கியம் கொண்டதே என்றாலும்
கருணாநிதிக்கு அது
ஓர் கலைஞனின் சாணக்கியமாக
பரிமாணித்து
அதீத விசேசம் கொண்டுவிடும்.

அவரது
அத்தகைய
அதீத விசேசங்கள் குறித்து
பல அரசியல் நிகழ்வுகளை
இங்கே பட்டியல் இடமுடியும்,
சொல்லித்தான் மாளாது.

2-ஜி வழக்கில் தி.மு.க சிக்கிய பிறகு
அரசியலில்
கருணாநிதியின்
அதீத விசேசங்கள் செல்லுபடி
ஆகாது போனாலும்...
அந்த வழக்கின் உக்கிரத்தை
மக்கள் கவனத்திலிருந்து திசை திருப்ப
அவர் நிகழ்த்தும்
அதீத நடவடிக்கைகளுக்கு
அளவே இல்லை!
ஓட்டு போடும் மக்கள்
தி.மு.க.வின்
'2-ஜி எனும் உலகமகா ஊழலை'
மறக்க வேண்டாமா?
மறந்தால்தானே வரும் தேர்தல்களில்
அவர்கள் ஓட்டுப் போட முன்வருவார்கள்!

2-ஜிக்குப் பிறகான
கடந்த மூன்று வருடங்களாக
அதையொட்டிதான்
அரசியலில் கருணாநிதி காய் நகர்த்துகிறார்!
வழக்கில் எதையும் செய்ய முடியவில்லை.
இவர்கள் எந்த விளக்கத்தை முன்வைத்தாலும்
சுப்ரீம் கோர்ட் கடாசிவிடுகிறது.
அது குறித்து மேடையிலும்
எதுவும் பேச முடியாத சூழ் நிலை.
கனிமொழிக்கும், ராஜாவுக்கும்
ஜாமீன் எடுக்கவே
போதும் போதும் என்றாகிவிட்டது.

அதனால்தான்
மக்களின் கவனத்தை திசைத் திருப்ப
இத்தகைய
வறட்டுத்தனமான
அதீத அரசியல்!

நேற்று...
அழகிரி - ஸ்டாலின் இடையேயான
பொய் லடாய்!
இன்றைக்கு 
குஷ்பு அரசியல்!
இடையில்
எப்பவோ அவர்கள் மறந்து போன
டெசோ அரசியல்.

மீடியாக்கள் பெருமளவில்
இத்தகைய விசேச செய்திகளை
ஆர்வமுடன் வெளியிட
மக்களும் மெய்மறந்து
அச்செய்திகளில் பங்கெடுக்கிறார்கள்!

*
'அழகிரி இல்லாத போது
ஸ்டாலின் மதுரை போய்வந்தார்!'

'டெல்லி போகும் வழியில்
கோபாலபுரம் சென்று
அழகிரி தாயாரை கண்டுவந்தார்.
கருணாநிதி அப்போது
அறிவாலயத்தில் இருந்தார்’

'சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்
கலந்து கொண்ட
அழகிரியும் ஸ்டாலினும்
மேடையில் ஆளுக்கு ஒரு பக்கம்
உட்கார்ந்திருந்தார்கள்.
இருவரும் கடைசிவரை
பேசிக் கொள்ளவே இல்லை'
'இந்த வருட
அழகிரியின் பிறந்த நாளுக்கு
ஸ்டாலின் வாழ்த்து சொல்வாரா?'

'அறிவாலயத்தைச் சுற்றி
அழகிரியின் பிறந்ததின
வாழ்த்து போஸ்டர்கள்
ஒட்டப்பட்டிருந்தன!
அதில் அழகிரியை பாராட்டிய
வாசகங்கள் இருந்தன.'

'அழகிரியின் கோவத்தை
அவரது தாயார் சமாதானப் படுத்தினார்.
அந்த சமயம் கருணாநிதி
சி.ஐ.டி.காலணி வீட்டுக்கு
சாப்பிட போய்விட்டார்'

'டெசோ மாநாடு'

'ஐ.நா.சபையில்
இலங்கைத் தமிழர்களின்
உரிமைக்கான மனு!'
'அறிவாலத்திற்கு வந்த குஷ்பு
இன்று புடவைகட்டி இருந்தார்'

'குஷ்புவின் புடவையில்
கடவுள் படம் போடப்பட்டிருந்தது'

'பொது குழுவுக்கு வந்த குஷ்பு
கருணாநிதிக்கு வணக்கம் சொன்னார்.
அடுத்த அறையில் இருந்த ஸ்டாலினுக்கு
குட்மார்னிங்கூட சொல்லவில்லை!'

மக்களை திசைத் திருப்பும்
இதன் தொடர்ச்சியாகத்தான்
இந்த வார
'குமுதம் ரிப்போர்ட்ரில்' வெளியான
வித்தியாசமான செய்தியும் படமும்!
கருணாநிதி அருகில்
மணியம்மை கோலத்தில்
குஷ்பு பவ்வியம் காட்டி நிற்க....
'இன்னொரு மணியம்மையா குஷ்பு?
கொதிக்கும் கருணாநிதி குடும்பத்தினர்கள்!'
என்கிற செய்தி.

கருணாநிதியின் கண் அசைவுக்கு இணங்க
இப்படியான செய்திகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்த
மீடியாக்கள் போட்டிபோட்டுக் கொண்டு
நிற்பதுதான் ஆச்சரியம்!
ஒருவகையில்
இதில் ஆச்சரியப்படவும் ஒன்றுமில்லைதான்
திரைமறைவில்
சூட்கேஸ் கைமாற்றப்படும் போது...
எதுவும் நடக்கும்.
எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு!
பெரும்பாலும்
நம் பத்திரிகைகளின்
கற்பும் அப்படியானதுதான்!

அவர்கள் அரங்கேற்றியபடிக்கு
இத்தகைய
அதீத அரசியல் கூத்துக்கள்
சிறப்பாக, திறம்பட நடந்தேறுவதில்
கழகத் தலைமைக்கு மகிழ்ச்சிதான்.
ஓர் கலைஞனின்
சாணக்கியமென்பதென்ன
சும்மாவா பின்னே?

***

நன்றி : தாஜ் | மின்னஞ்சல் : satajdeen@gmail.com

Thursday, February 14, 2013

அல் ஸாபி தாபித் பின் குர்றா பின் மர்வான் அல் ஹர்ரானி

’தாய் மண்ணே வணக்கம்’ என்பதையே ’தாஜ் அண்ணே இணக்கம்’ என்றுதான் படிக்கிறேன். கண் அவிஞ்சு போச்சுடி அப்படி.  தலைப்பிலுள்ள ‘தாபித் பின் குர்றா’வின் முழுப்பெயரை எப்படி படிக்க இயலும்? கஷ்டம்தான். சரி, அருட்கொடையாளர் நம்பர் பதினாலாக வருகிறார் இந்த மேதை - ஹமீதுஜாஃபர் நானாவின் எழுத்தில் (முந்தைய அருட்கொடையாளர்கள் வரிசை பார்க்க இங்கே சொடுக்கவும்). கஷ்டப்படுத்தும் கணிதம் வேறு வருவதால் கண்ணைச் சுழற்றிவிட்டது இந்தக் கட்டுரை. பொறுமையாக வாசி...ப்பது போல ’பாவலா’ காட்டிவிட்டு ஓடிவிடவும். இதுவே இஸ்லாத்திற்கு நல்லது!
‘மனித குல வளர்ச்சிக்கு எல்லா துறையிலும் பங்களித்த இஸ்லாமிய சமுதாயத்தின் இன்றைய தேக்க நிலை எப்போது தொடங்கியது என்பதையும் அதன் மூல காரணங்களையும், தீர்வுகளையும் முன் வைக்கும் கட்டுரையையும் தந்தால் நானாவின் அருட்கொடை  இன்னும் முழுமை பெறும்.’ என்று  நூருல்அமீன்பாய் - சென்ற கட்டுரையில் - போட்ட பின்னூட்டத்தை நானாவுக்கு ஞாபகப்படுத்துகிறேன். - ஆபிதீன்
***

அருட்கொடையாளர் - 14

ஹமீதுஜாஃபர்
உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய பரப்புரையாளர் ஜாகிர்நாயிக் அவர்களை தெரியாதவர்கள் குறைவானவர்களே  என்று சொல்லிவிடலாம். அவரது பிரசங்கம் முடிந்ததும் கேள்வி நேரம் என்று ஒன்று வரும். அதில் சில கண்டிஷன்கள் உண்டு. அவர் எந்த தலைப்பை எடுத்துக்கொண்டு பேசுகிறாரோ அதை சார்ந்த கேள்விதான் கேட்க வேண்டும், ஒருவர் ஒரு கேள்விக்குமேல் கேட்கக்கூடாது, கேட்பதற்குமுன் தனது பயோடேட்டாவை சொல்லவேண்டும். சரியாக இருந்தாலும் தவறாக  இருந்தாலும் அவர் சொல்வதுதான் பதில், அது சரி என்றே நம்பவேண்டும், எதிர் கேள்வி கேட்கக்கூடாது. வேறு வார்த்தையில் சொல்லப்போனால் ஒரு organized hypnotism.
ஒரு கூட்டத்தில் சாபியீன்களைப் பற்றி ஒரு கேள்வியை முன் வைத்தேன். "நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும்  எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை  கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களின் கூலி நிச்சயமாக (நற்) அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." (2:62) என்று இறைவன் தன் திருமறையில் சொல்கிறானே இதற்கு உங்கள் கருத்தென்ன?  அதற்கு அவர், "கலிமா சொன்னவர்கள் சொர்க்கம் புகுவார்கள்" என்று சொல்லிவிட்டு next என்று  அடுத்தவருக்கு வாய்ப்புக் கொடுத்துவிட்டார்.
கலிமா சொல்வதால் ஒருவர் இஸ்லாத்திற்கு வந்துவிடுகிறார் என்றால், அவ்வசனத்துக்குப் பொருள் இல்லாமல் போய்விடும். பின் அந்த வசனத்திற்குரிய பொருள்தான் என்ன? இஸ்லாம் அல்லாத  சமுதாயத்தைப் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான். தவிர அங்கே சொர்க்க நரகத்தைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. ஆனால் அல்லாஹ்வுக்கு பதிலாக இவரே ஜட்ஜ்மெண்ட் கொடுத்துவிட்டார். இவருடைய நிலை என்னவென்று இவருக்கு தெரியுமா என்பது வேறொரு கேள்வி. நான் அந்த கேள்வியை முன் வைத்த காரணம் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களை புண்படுத்துவதுபோல் அவரின் பேச்சு அமைந்திருந்தது. வேறு வார்த்தையில் சொன்னால் இஸ்லாம் மட்டுமே உயர்ந்த மார்க்கம் என்ற கோட்பாடு தொனித்தது. 'அவரவருக்கு அவரவர் மார்க்கம் உயர்ந்தது' என்ற வசனத்தை மறந்துவிட்டார் போலும். இஸ்லாத்தை சாராதவர்கள் எத்தனையோபேர் மிகச் சிறந்த அறிவாளிகளாக இருப்பதும் அனைத்தையும் படைத்து அவற்றை பரிபாலிப்பவன் இறைவன் என்பதும், உருவுக்குள் அருவாய் அனைத்திலும் சூழ்ந்தவனாக இருக்கின்றான் என்பதும் இவர் போன்ற ஒரு சிலர் கண்களுக்குப் புலப்படுவதில்லை.
அந்த வகையில் நட்சத்திரங்களை  வணங்குவதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட சாபியீன்  பிரிவினர் வெறும் வணக்க வழிபாடுடன் நின்றுவிடாமல் வானவியலை பற்றி ஆராய்வதில் வலுவான நோக்கம் கொண்டிருந்தனர். அதனால் சாபியீன்களிடமிருந்து கணிதமும் வானவியலும் பற்றிய அனேக செய்திகள் வெளியாயின. கிரேக்க பண்பாட்டுடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததால் கிரேக்க கலாச்சாரமும் மொழியும் இவர்களின் வாழ்வில் இணைந்திருந்தது. தவிர கிரேக்க வரலாற்றிலிருந்து பெறப்பட்ட வலுவான அறிவும் சபூர் வேதத்திலிருந்தும் கிடைக்கபெற்ற சிறந்த ஞானமும் வானவியல் மற்றும்  கணிதவியல் வளர்ச்சிக்கு வித்திட்டது. அதன் காரணமாக கிரேக்க ஞானம் முழுவதுமாக சிதைந்து போகாமல் பாதுகாக்கப் பட்டது. இஸ்லாமிய ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரபி மொழியையும் கற்றனர். (தற்போதைய) தென்கிழக்கு துருக்கியில் வசித்த சாபியீன்கள் தாய் மொழியான சிரியாக் மற்றும் கிரீக், அரபி ஆகிய மும்மொழிகளில் வல்லுனர்களாக இருந்தனர்.  பல கிரேக்க நூல்கள் அரபிக்கு மொழி மாற்றம் செய்ய உறுதுணையாக இருந்தனர்.  தாங்கள் பெற்ற அறிவை, அறிவைக் கடந்து நிற்கும் ஞானத்தை, மேற்கொண்ட ஆய்வுகளை விட்டுச் சென்ற பெரியவர்களில் ஒருவர் தாபித் பின் குர்றா


தாபித் பின் குர்றா  (836 - 901)

அல் ஸாபி தாபித் பின் குர்றா பின் மர்வான் அல் ஹர்ரானி என்பது இவரது முழுப் பெயர். அல்ஸாபி இவர் சார்ந்திருந்த ஸாபியீன் பிரிவையும் அல்ஹர்ரானி சார்ந்த இடத்தையும் குறிக்கிறது. தற்போது துருக்கியிலிருக்கும் ஹர்ரான் என்ற இடத்துக்குப் புலம்பெயர்ந்த வான்இயல் ஆய்வில் தேர்ச்சிப் பெற்றிருந்த செமிட்டிக் பிரிவைச் சார்ந்த சிறந்த குடும்பத்தில் கி பி 836ல் பிறந்தார். பாக்தாத் வருவதற்குமுன் அங்கு நாணயமாற்றுத் தொழில் புரிந்தார் என  சில குறிப்புகள் கூறுகின்றன. இதனை சில ஆய்வாளர்கள் மறுத்து, அவர் சமூகத்தில் உயர் நிலையில் இருந்த ஒரு செல்வ மரபுடைய பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர் என்கின்றனர்.
இவரது இளமைப் பருவத்திலேயே சிறந்த அறிவாளியாக இருந்திருக்கிறார். இவரது மொழியாற்றலையும் அறிவுத்திறமையையும் கண்டு வியந்த கணித அறிஞர் முஹம்மது பின் மூசா பின் சாகிர் அப்பாஸிய கலிஃபாவால் பாக்தாதில் நிறுவப்பட்ட அறிவாலையத்திற்கு அழைத்துவந்து அங்கு பனுமுசா சகோதர்களிடம் கல்வி பயிலவைத்தார். பின்பு அறிவியலில் பல பிரிவுகள் குறிப்பாக கணிதம், வான்இயல், இயந்திரவியல் ஆகிய துறைகளில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. மும்மொழிகளில் தேற்ச்சி பெற்றிருந்த இவர் அதிக அளவில் கிரேக்க நூற்களை அரபியில் மொழிமாற்றம் செய்துள்ளார்..
பாக்தாத் வந்தடைந்த தாபித் பனு மூசா சகோதரர்களிடம் கணிதமும், மருத்துவமும் பயின்றார். பயிற்சிக்குப் பின் தன் தாயகம் திரும்பியதும் அவருக்கு கிடைத்த பரிசு, அவரது தாராளவாத தத்துக் கொள்கை மத நீதிமன்றத்தில் நிறுத்தியது. தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. மேலும் ஒரு அடக்குமுறைக்கு ஆளாவதற்குமுன் தப்பித்து மீண்டும் பாக்தாத் வந்தடைந்தார். அங்கு அரசவை வானவியல் நிபுணராக நியமிக்கப்பட்டார்.  கலிஃபா அல் முஃததின் ஆதரவில் வாழ்ந்த இவர் கிபி 901ல் பாக்தாதில் மரணமடைந்தார்
பொற்காலம்
அப்பாஸிய கலிஃபாக்கள் ஆட்சி பொறுப்பேற்றபிறகு இஸ்லாமியப் பேரரசில் பொற்காலம் மலரத்தொடங்கியது. கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். அறிவில் ஆர்வம்கொண்ட கலிஃபா ஹாரூன் ரஷீது பைத்துல் ஹிக்மா  என்று சொல்லக்கூடிய அறிவாலயம் ஒன்றை ஏற்படுத்தி அங்கு பல்வேறுதுறை அறிஞர்களை பணியில் அமர்த்தினார். பரந்து கிடந்த ரோமானிய கிரேக்க அறிவியல், தத்துவ நூல்களை அரபு மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டன. அறிவின் மறுமலர்ச்சிக்கு வளரத்தொடங்கியது. அங்கு பணியாற்றிய பல்வேறு அறிஞர்களுள் தாபித் பின் குர்றாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
கிரேக்க, அரபி, சிரியாக் ஆகிய மும்மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்ததால் பல நூற்களை அரபியிலும் சிலவற்றை சிரியாக்கிலும் மொழிபெயர்த்தார். குறிப்பாக தாலமியின் Almagest, இகுலிடின் Elements, ஆர்கிமிடிஸின் Measurement of  Circle. இதற்கு முன்பாக  அல்மாகெஸ்ட் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபி னால் செய்யப்பட்டன. (அவர் செய்த இரண்டு மொழிபெயர்ப்புகளின் சிதைவுகளே தற்போது காணப்படுவதாக சொல்லப்படுகிறது.) பல கிரேக்க நூல்களை தான் மாத்திரமே செய்யாமல் சமகாலத்தில் வாழ்ந்த சற்றே மூத்தவரான ஹுனைன் பின் இஸ்ஹாக்குடன்  சேர்ந்தே மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தவிர ஹுனைன் செய்த மொழிபெயர்ப்புகளை இவர் சரிபார்க்கவும் செய்துள்ளார்.
உண்மையில் சொல்லப்போனால்  பழம்பெரும் கிரேக்க நூல்கள் இன்றும்  உயிர் வாழ்வதற்கு காராணம் அன்று அரேபியர்கள் கிரேக்க மொழியில் தேர்ச்சி பெற்று பல நூல்களை தங்கள் மொழிக்கு கொண்டுவந்ததினால்தன் எனலாம்.
கணிதமும்  தாபித்தும்
கணிதத்துறையில் தாபித் பின் குர்றாவின் பங்கு மிக குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பிதகோரஸ், யுகலிட்ஸுக்குப் பிறகு கணிதவியலின் கண்டுபிடிப்புகள் இவர் வெகுவாக ஆய்வு செய்தார்.  நேர்ம மெய் எண் (positive real number), ஒருங்கிணைந்த நுண்கணிதம்(integral calculus) கோள கோணவியல் கோட்பாடு (theorem in spherical trigonometry), பகுமுறை வரைகணிதம்(analytic geometry), non-Euclidean geometry என கணிதத்துறையிலும், வானவியலில் தாலமியின் முறையை சீரமைவு செய்ததோடு இயந்திரவியலின் நிலைப்பண்பை(static) உருவாக்கியவரும் ஆவார்.
நிறைவெண் அல்லது செவ்விய எண் (perfect number), அல்லது நேர்ம முழு எண் (positive integer) அதன் சரியான வகுபடு( divisor) எண்களின் கூட்டுத்தொகைக்கு சமம். மிகச்சிறிய நேர்ம நிறைவெண் 6. அதன் வகுபடு எண்களான 1, 2 மற்றும் 3-ன் கூட்டுத்தொகைக்கு சமம்.அடுத்த நிறைவெண் 28, மூன்றாவது நிறைவெண் 496. இத்தகைய நிறைவெண்கள் பண்டைய கிரேக்க சரித்திரத்திலிருந்து மறைந்துவிட்டது என்றாலும் இதனை பிதகோரஸ் ஆராய்ந்து அவற்றில் எதோ ஒரு மாயப் பண்புகள் இருப்பதாக உணர்ந்தார்.

எடுத்துக்காட்டு

முதல் நிறைவெண் 6. அதன் வகுபடு காரணிகள் 1+2+3 = 6.
அடுத்த நிறைவெண் 28. அதன் வகுபடு காரணிகள் 1+ 2+ 4+ 7+ 14 = 28.
அடுத்த நிறைவெண் 496. அதன் வகுபடு காரணிகள் 1+2+4+8+16+31+62+124+248 = 496

நான்காவது நிறைவெண் 8128 என்பதை நிக்கொமாகசு என்ற கிரேக்க அறிவியலர் கி.மு100 இல் கண்டுபிடித்தார். ஆக நான்கு நிறைவெண்களும் பண்டைய கிரேக்க காலத்திலிருந்தே புழக்கத்திலிருந்தது. என்றாலும் அதன் பின் வந்த அறிஞர்கள் அவற்றை ஆய்வு செய்ததாகவோ அல்லது கையாண்டதாகவோ சரித்திரச் சான்றுகள் இல்லை.

மூன்று வகை எண்கள் 

கணிதத்தில் n என்ற ஒவ்வொரு நேர்ம முழு எண்ணுக்கும்(positive intiger), அதன் காரணிகளின் (1 உள்பட) கூட்டுத்தொகை σ(n) என்று குறிக்கப்படும். அக்காரணிகளில் n ம் ஒன்றாகும். n ஐ நீக்கிவிட்டு மீதமுள்ள எல்லா காரணிகளையும் கூட்டி வரும் தொகை s(n) என்று குறிக்கப்படும். இப்பொழுது மூன்றுவித சூழ்நிலைகள் உருவாகக்கூடும்.

1. σ(n) = 2n ; இதுவே s(n) = n என்பதற்குச் சமம்.
2. σ(n) < 2n ; இதுவே s(n) < n என்பதற்குச் சமம்.
3. σ(n) > 2n ; இதுவே s(n) > n என்பதற்குச் சமம்.

முதல் சூழ்நிலையில் n ஒரு நிறைவெண் (Perfect Number) அல்லது செவ்விய எண் என்றும் இரண்டாவது சூழ்நிலையில் n ஒரு 'குறைவெண்' (Deficient number) என்றும், மூன்றாவது சூழ்நிலையில் n ஒரு ' மிகையெண்' (Abundant Number)என்றும் பெயர் பெறும்.

நட்பு எண் (Amicable Number)

பிதகோரஸிடம் நட்பு என்றால் என்ன என்று கேட்கப்பட்டபோது, உனக்கு இணக்கமான ஒருவன், அந்த ஒருவன் நான், அதாவது மாயப் பண்புகளுள்ள 220 ம் 284 போல என்று பதிலலித்தார். எனவே மிகச்சிறிய நட்பு எண் 220 & 284 ஆகும். இதனை அவர் கண்டுபிடித்தார் என்பது தெளிவாகிறது.
இரண்டு வேறுபட்ட எண்கள் ஒன்று மற்றொன்றுடன் தொடர்புடையதாக இருக்கும் ஒரு ஜோடி எண்களை நட்பு எண்கள் எனப்படுகிறது. ஒன்றின் தொகை மற்றொன்றின் வகுபடு காரணிகளின் கூட்டுத்தொகைக்கு சமம்.

உதாரணமாக...

284 = 1+2+4+5+10+11+20+22+44+55+110.  இது 220 ன் வகுபடு காரணிகளாகும்(aliquot divisor of 220). அதுபோல் 220 = 1+2+4+71+142.  இது 284 ன் வகுபடு காரணிகளாகும்(aliquot divisor of 284).

நட்பு எண் பிதகோரஸ் காலத்திலிருந்து பெறப்பட்டாலும் தாபித் பின் குர்றா பொதுவான விதிமுறையை உருவாக்கினார். அதன் பின் அராபிய கணித ஆய்வாளர்களான அல் மஜிரிதி (இறப்பு.1007), அல் பகுதாதி(980-1037, அல் ஃபர்ஸி(1260-1320 முதலானோர் ஆய்வு செய்தனர். ஈரானிய கணிதவியலரான முஹம்மது பாகிர் யஜ்தி(16ம் நூற்றாண்டு) என்பவர்  9363584, 9437056 என்ற நட்பு எண் ஜோடியைக் கண்டுபிடித்தார்.
"நட்பு எண் விசயத்தில் அதன் மூலத்திலிருந்து பெறப்பட்டதிலிருந்து ஒரு தாக்கம் என் மனதில் இருந்துக்கொண்டே இருந்தது. அதன் சரியான நிரூபணம் இல்லாமல் எழுத விரும்பவில்லை ஏனென்றால் இகுலிட்டும் நிக்கொமகஸும் நிராகரித்திருந்தனர். எனவே அதை நிரூபணம் செய்வதற்கு முன்பாக தேவையான முன் உதாரண ஆதாரங்களை (necessary lemmas) அறிமுகப்படுத்தவேண்டும்..". என்கிறார் தாபித் பின் குர்றா.

தாபித் பின் குர்றாவின் அணுகுமுறை
p = 3 × 2n − 1 − 1,
q = 3 × 2n − 1,
r = 9 × 22n − 1 − 1,

எப்போது n >1 முழுமை எண்ணாக(integer) இருக்கிறதோ p,q மற்றும் r இவைகள் பிரதம எண்களாகும் (prime numbers) பின்பு 2n×p×q மற்றும் 2n×r ஆகியவை நட்பு எண்களின் ஜோடிகள். (220, 284) க்காக n =2, (17296, 18416)க்காக n =4, மற்றும் (936584, 9437056)க்காக n =7 க்கான சூத்திரம். ஆனால் வேறு ஜோடி நட்பு எண்களுக்கான சூத்திரம் அறியப்படவில்லை. 3 × 2n − 1 எனப்படுவது தாபித் எண்கள் என்று அறியப்படுகிறது. தாபித்தின் சூத்திரத்தின் மூலம் நட்பு எண்கள் உருவாக்கும்போது அடுத்தடுத்து வரும் இரு எண்கள் தாபித்தின் பிரதம எண்களாகும்.

அட்சர சதுரம் (magic square)
 
ஒரு முறை ஹஜ்ரத் அவர்கள் 'Archetype Force' பற்றி விளக்கம் கொடுக்கும்போது உதாரணத்திற்கு இரண்டிலக்கத்தில் ஒரு எண்ணைக் கொடுத்து ஒன்பது கட்டத்துக்குள் இருக்கும் எண்களை எந்த வரிசையில் கூட்டினாலும் அதன்
கூட்டுத்தொகை ஒருபோல் இருக்கவேண்டும், ஆனால் ஒரு கட்டத்துக்குள் இருக்கும் எண் ஒரு முறைதான் வரவேண்டும் வேறு கட்டத்தில் திரும்ப வரக்கூடாது என்ற நிபந்தனையும் வைத்தார்கள். எங்களில் யாரும் விடை எழுத முடியவில்லை ஆனால் அவர்கள் ஒரு நொடியில் எழுதி காண்பித்துவிட்டு சொன்னார்கள், "இது ஒன்றல்ல இதுமாதிரி பல கணக்குகள் இருக்கின்றன. இதை அஸ்மாக்காரர்கள் (ஜாதகம் பார்ப்பவர்கள்) , மாந்திரீகம் செய்பவர்கள் உபயோகிக்கிறார்கள், இது வேடிக்கை கணக்கல்ல நீங்கள் நினைத்துப்பார்க்காத சக்தி இதற்கிருக்கிறது"  என்றார்கள். அப்போது இது எனக்கு தேவையற்றது என்பதால் மேற்கொண்டு விளக்கம் கேட்கவில்லை.
ஆனால் இதுபோன்ற கணக்குகளை ஒரு சிலரால் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெளிவு. இவைகள் ஆரம்பகாலத்தில் தெய்வ அடையாளமாகக் கருதப்பட்டது, பின்பு எதிர்மறை சக்தியிலிருந்து பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தப்பட்டது, இப்போது புதிர் கணக்காக பயன்படுத்தப்பட்டாலும் இதனைக் குறித்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஆய்வுகள் நடந்திருக்கின்றன.  இன்றும் மேற்கத்திய கணிதவியலார் எண்கோட்பாடுகளுக்காக பயன்படுத்துகின்றனர்.
தாபித் பின் குர்றா,  பிதகோரஸின் தன்னிச்சை முக்கோணக் கோட்பாடு (arbitrary triangle) பற்றிய பொது விளக்கம் கொடுக்கும்போது அட்சர சதுரம், பாரபோலா  angle trisection முதலானவற்றையும் சொல்கிறார்.
இயற்பியலும் வானவியலும்
இயற்பியலில் இவர் எழுதிய கித்தாப் ஃபில் கரஸ்துன் (The Book on the Beam Balance) ல்  ஆர்கிமிடிஸின் நெம்புகோள் தத்துவத்தை ஆய்வு செய்து  சமநிலை (equilibrium of bodies, beams, levers) தத்துவத்தை நிரூபணம் செய்துள்ளார்.
சமதூரத்தில் இரண்டு புள்ளிகளில் இருக்கும் பளுவின் தாக்கம்(weight of load)  அதன் மையப்புள்ளியில் இருக்கும் சமநிலை(equilibrium) பகிர்ந்துகொள்கிறது. அச்சமநிலை பாதிக்காத வகையில் இரு பளுவையும்(load) மாற்றமுடியும். அவ்வகையில் வேறுபட்ட பளு(load) தொடர்ச்சியாக கொடுக்கும்போது வலுவான உத்திரத்தின் சமநிலையை(equilibrium of heavy beam) கண்டறியமுடியும் என்கிறார்.
வானவியலில் கோளங்களை ஆய்வு செய்து சூரியன் பூமியின் நடு நிலைக்கோட்டை(equator) கடந்து செல்லும் இரு நிலைகளை(equinoxes) யும் பூமி சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு (sidereal year) 365 நாள், 6 மணி, 9 நிமிடம், 12 வினாடி என்று துல்லியமாகக் கணக்கிட்டார். இது Copernicus கொள்கைப்படி 2 வினாடிகளே வித்தியாசம் உள்ளது. மேலும் சந்திரனின் சுற்றுப் பாதையையும், பிறை தோன்றும் காலங்களையும் துல்லியமாக கணக்கிட்டார். வானவியலைப் பற்றி எட்டுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.
Tabit b. Qurra and Arab astronomy in the 9th century என்ற நூலில் R Morelon இப்படி குறிப்பிடுகிறார்:- 'When we consider this body of work in the context of the beginnings of the scientific movement in ninth-century Baghdad, we see that Thabit played a very important role in the establishment of astronomy as an exact science (method, topics and program), which developed along three lines: the theorisation of the relation between observation and theory, the 'mathematisation' of astronomy, and the focus on the conflicting relationship between 'mathematical' astronomy and 'physical' astronomy. '
தாபித் பின் குர்றா கணிதவியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் மருத்துவம், உளவியல், தர்க்கம், அரசியல், சிரியாக் இலக்கணம் ஆகியவற்றை பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார். தாபித்தின் மாணவர்களில் அபு மூசா ஈசா இப்னு உசயித் என்ற கிருஸ்துவ மாணவர் மிக நுட்பமாண கேள்விகள் கேட்டதின் மூலம் பல ஆய்வுகள் உலகுக்கு கிடைத்திருக்கின்றன. உலக அறிவியலுக்கு செய்த தொண்டு இவருடன் நின்றுவிடாமல் இவரது மகன் சினான் இப்னு தாபித் சிறந்த மருத்துவராகவும், அன்றைய பாக்தாத் மருத்துவ மனை இயக்குனராகவும் இருந்திருக்கிறார். இவரது பேரன் இபுறாஹிம் பின் சினான் கணிதத் துறையில் வளைகோடுகள்(curves) பற்றி ஆய்வு செய்துள்ளார்.
இவருடைய சில நூல்கள் Gherard of Cremona (c.1114-1187)வால் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் பிறகு ஐரோப்பிய மொழிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

Sources

http://en.wikipedia.org/wiki/Th%C4%81bit_ibn_Qurra
http://islamsci.mcgill.ca/RASI/BEA/Thabit_ibn_Qurra_BEA.htm
http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Thabit.html
http://www.britannica.com/EBchecked/topic/589570/Thabit-ibn-Qurrah
http://www.renaissanceastrology.com/thabit.html
http://www.counton.org/timeline/test-mathinfo.php?m=al-sabi-thabit-ibn-qurra-al-harrani
http://www.britannica.com/EBchecked/topic/451491/perfect-number
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)
http://en.wikipedia.org/wiki/Amicable_number#Th.C3.A2bit_ibn_Kurrah_rule

***
நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

Tuesday, February 12, 2013

வைக்கம் விஜயலட்சுமியின் பாட்டு


இப்போது விரும்பிக் கேட்கும் பாடல் இது. கேட்கும்போது கண் நிறைகிறது.’Kaate Kaate’ feat. G Sreeram, Vaikkom Vijayalakshmi and M Jayachandran from Celluloid
***

Thanks to :  peppyeggs


Sunday, February 10, 2013

புலவர் மாமா பட்டாசு வறுத்த கதை

எனக்கென்னமோ ஹனீபாக்காதான் புலவர்மாமாவாக வருகிறார் என்று படுகிறது... என்று கெளப்பினேன் , டவுட்ட. ’டே  தம்பி , சத்தியமா புலவர் மாமாட கூத்துத்தான்டா இதெல்லாம். அடுத்த கதை புலவர் மாமா நாய்க்குத் தயிரும் சோறும் ஊட்டிய கதை’ என்று பதில் தந்திருக்கிறார் காக்கா. தமாஷ் செய்வதெல்லாம் சரி..  ஸ்கைப்-ல் என்னுடன் உரையாட ஆசைப்பட்டவரிடம் ‘அதெல்லாம் முடியாது.. தினம் அஸ்மாவ பார்த்து ஓடுவதோடு சரி.. நேரில்தான் இந்த வருடத்திற்குள் உங்களை பார்க்கப்போகிறேனே..’ என்று எழுதியதற்கு,  ’உனக்காக உசிரைப் பிடித்து வைத்துக் கொண்டு இருக்கிறேன்’ என்று.பதில் தந்து அழவும் வைக்கிறார்....   டாக்டர் முருகானந்தம் அவர்களின் புகழுரையை இங்கே பாருங்கள்.. எவ்வளவு பெரியவர் நம்ம காக்கா!  இவர் என் மேல் வைத்திருக்கும் பிரியத்தைப் பார்த்தால் நல்லவனாக மாறினாலும் மாறிவிடுவேன் போலிருக்கிறது! - ஆபிதீன்
***

புலவர் மாமா பட்டாசு வறுத்த கதை

அப்பொழுது புலவர் மாமாவுக்கு ஐம்பது வயதிருக்கும். ஆனை வணங்கி எனுமிடத்தில் ஐந்து ஏக்கர் மேட்டு நிலத்தில் மாமா சேனைப்பயிர் செய்தார். சோளன், குரக்கன், இறுங்கு, நிலக்கடலை என்று சேனைப்பயிர் செழித்துக் கிடந்தது. குடலைப் பருவத்தில் பன்றிகள், ஆனைகளின் தொல்லை மாமாவைக் கலங்கடித்தது. இரவு பகல் விழித்திருந்து காவல் காத்தார். மாமாவுக்குத் துணையாக எலிக்கு உணவாக வாளை வழங்கிய மாமாவின் தவப்புதல்வன் முகம்மது இஸ்மாயிலும் துணைக்கு நின்றான்.

மாமாவினதும் மகனினதும் கூக்குரலுக்கு பன்றியும் ஆனையும் மசியவில்லை. ஊருக்கு வந்த மாமா நான்கு பெட்டி சீனப் பட்டாசுகளுடன் வாடிக்குச் சென்றார். வரும் வழியில் பட்டாசுப் பெட்டிகள் மழையில் நனைந்து விட்டன. அன்றிரவு ஆனை, பன்றிகள் வரும் திக்கில் பட்டாசைக் கொழுத்திக் கொழுத்தி வீச ஒரு பட்டாசும் வெடிக்காமல் அடம் பிடித்தது. அந்த நேரம் பார்த்து மாமாவின் ஞானம் ஏடா கூடமாக செயல் படத் தொடங்கியது. மகனை அழைத்து, ரொட்டி சுடும் மண்ணோட்டை அடுப்பில் வைத்து நெருப்பு மூட்டச் சொன்னார். பட்டாசுப் பெட்டியை ஓட்டில் கொட்டி அகப்பையை எடுத்து வறுக்கத் தொடங்கினார். சிறிது நேரத்திற்கெல்லாம் பட்டாசு ஓட்டில் கிடந்து வெடிக்கத் தொடங்கியது. மாமாவும் மகனும் அலறியடித்துக் கொண்டு சோளக்காட்டுக்குள் ஓடி விட்டார்கள். சிறிது நேரத்திற்குப் பின் வந்தால், பட்டாசு அனைத்தும் பற்றி, வாடியில் கிடந்த பொருட்களும் பற்றி எல்லாமே புகைக் காடாகவும் கரிக்காடாகவும் கிடந்தன.

மாமாவின் ஞானத்தை என்னவென்பது?

***

நன்றி : எஸ்.எல்.எம். ஹனீபா | மின்னஞ்சல் : slmhanifa22@gmail.com

***

முந்தைய புலவர்மாமா கதைகள் :

குழந்தப் பிள்ள போல..!

வண்டிச் சில்லுக்குக் காத்துப் பத்தாது!

புலவர் மாமா கதைகள்

Wednesday, February 6, 2013

எகிப்திய எழுத்தாளர் நாகிப் மாஃபௌஸ் பேட்டி

’தீராநதி’யில் 2008ஆம் ஆண்டு வந்த பேட்டி இது. Paris Review 1992-இல் வெளியான நேர்முகத்தை தமிழில் தந்தவர்  நண்பர் : சா.தேவதாஸ். ’தொழுகையிடுகிறீர்களா?’ என்பதை ‘தொழுகிறீர்களா?’ என்று  வாசிக்கவும். சரி, இந்தப் பேட்டியின் சுட்டியை நாகிப் மாஃபௌஸ்-ன் நோபல் பரிசு  உரையில் முன்பு இணைத்திருந்தேன். அந்த சுட்டி காலாவதியாகிவிட்டது என்று நண்பர்கள் சொன்னார்கள்.  நல்வாய்ப்பாக அந்தப் பேட்டி கூடல் தளத்தில் இப்போதும் இருக்கிறது. அதை மீள்பதிவு செய்கிறேன் இங்கே, ’தமிழ் கூட’லுக்கு நன்றியுடன். - ஆபிதீன்

***

எகிப்திய எழுத்தாளர் நாகிப் மாஃபௌஸ்

நாகிப் மாஃபௌஸ் (1911-2006) எகிப்தின் தலைசிறந்த எழுத்தாளர். நோபல் பரிசு (1988) பெற்ற ஒரே அரேபிய எழுத்தாளர் என்ற பெருமைமிக்கவர். The Children of Gebeleuvi என்னும் இவரது நாவல், லெபனான் தவிர்த்த அரபு நாடுகளில் தடைசெய்யப்பட்டது. Palace walk, Palace of desire மற்றும் Sugar street என்னும் மூன்று நாவல்களும் "கெய்ரோ முத்தொகுதி" என்றழைக்கப்படுகின்றன. Arabian Nights and Days என்னும் நாவல் ஆயிரத்தோரிரவு கதைகளின் மறு எழுத்தாக்கம் ஆகும். "அதிருஷ்டவசமாக கலை தாராளமாகவும் கருணையோடும் இருக்கிறது. பிரச்சினைகளற்ற சந்தோஷங்களை மட்டும் கலை ஆகர்ஷிப்பதில்லை; துன்பத்தில் உழல்பவர்களை அது நிராகரித்து ஒதுக்குவதுமில்லை" என்று குறிப்பிட்டிருந்த மாஃபௌஸ், 14.10.94 அன்று கெய்ரோ வீதி ஒன்றில் நடந்து சென்றபோது, கத்திக்குத்துக்கு ஆளாகி, பல மாதங்கள் சிகிச்சை பெறவும் நேர்ந்தது.
 
திருடனாகவும், சிறைப்பறவையுமாக இருந்து, 22 துப்பறியும் நாவல்கள் எழுதிய ஹாஃபிஸ் நஜீப்தான், மாஃபௌஸ் எழுத்துக்களில் ஆரம்பகாலத் தாக்கம் கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப்பின், ஒருவித அவநம்பிக்கை வாதம் அவரை ஆட்கொண்டிருக்க, ஐம்பதுகளில் சூஃபி அனுபூதியில் ஈடுபாடு காட்டினார்.
***
 
- Paris Review 1992-இல் வெளியான நேர்முகத்தின் தமிழ் வடிவம்.
 
பேட்டியாளர் : சார்லெட் எல்சாப்ரவி
 
 
எப்போது எழுதத் தொடங்கினீர்கள்?
 
1929-இல் தொடங்கினேன். எனது கதைகளெல்லாம் மறுதலிக்கப்பட்டன. "உங்களிடம் திறமை இருக்கிறது. இன்னும் நேர்த்தி கைகூடவில்லை" என்பார் Majallaவின் ஆசிரியர். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் போலந்தைத் தாக்கிய செப்டம்பர் 1939இல்தான் "Abath alaqdar" என்னும் எனது கதை வெளியானது. இது என் வாழ்வில் பெரிதும் முக்கியத்துவம் நிரம்பியதாகும்.
 
உங்களின் Kharafish குழு பற்றிக் கூறமுடியுமா?
 
முஸ்தஃபா மஹ்முத், அஹ்மத் பஹா அல்-தின், சாலா ஜாஹின், முகம்மது அஃபிஃபி மற்றும் நான், 1943இல் ஒன்றாகக் கூடுவதும், கலை பற்றியும், நடப்பு நிலவரங்கள் பற்றியும் விவாதிப்பதும் என ஆரம்பித்தோம். எகிப்தின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அஹ்மத் மஸ்கர் இக்குழுவுக்கு Kharafish என்று பெயரிட்டார். அதற்கு "கேடி" என்று பொருள். ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்போது முதலில் கொள்ளையடிக்கத் தொடங்குபவர்கள் அவர்கள். ஆரம்பத்தில் அஃபிஃபியின் இல்லத்தில் சந்தித்து வந்த நாங்கள், சமயங்களில் பிரமிட்களின் அருகிலுள்ள Sahara city என்னும் இடத்தில் கூடுவோம்.
 
1952-க்கு முந்தைய அரசியல் நிலவரம் உங்கள் வாழ்வில் என்ன பங்காற்றியது?
 
1919 புரட்சியின்போது எனக்கு சுமார் ஏழு வயது. அந்த லட்சியத்தின் பால் மேலும் மேலும் உற்சாகம் கொண்டேன். எனக்குத் தெரிந்த ஒவ்வொருவரும் Wafd கட்சி பக்கமாகவும் காலனி ஆதிக்கத்திலிருந்து சுதந்திரத்தின் பக்கமாகவும் நின்றனர். பிற்பாடு ஸாக்லல் பாஷா சாதின் சீடனானேன். என்றாலும், நான் அரசியலில் பணியாற்றியதோ, அரசியல் கட்சியில் அதிகாரபூர்வ கமிட்டியில் உறுப்பினராகியதோ கிடையாது. எழுத்தாளன் என்ற வகையில், ஓர் அரசியல் கட்சி உறுப்பினருக்குக் கிடைக்காத முழு சுதந்திரத்தை நான் விரும்பினேன்.
 
1952இல்?
 
புரட்சியில் சந்தோஷமாயிருந்தேன். ஆனால், துரதிருஷ்டவசமாக அது ஜனநாயகத்தைக் கொண்டு வரவில்லை.
 
நாஸர் மற்றும் சதாத் காலங்களிலிருந்து ஜனநாயகத்தை நோக்கியும் சுதந்திரத்தை நோக்கியும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்றெண்ணுகிறீர்களா?
 
ஆமாம், அதில் சந்தேகமே இல்லை. நாஸர் காலத்தில் ஒவ்வொருவருக்கும் பயம். காபி விடுதிகளில் சந்திக்கும் எங்களுக்குப் பேச பயமாயிருந்தது. வீட்டில் இருந்தாலும் பேச பயமாயிருந்தது. புரட்சிக்கு முந்தையவற்றை என் பிள்ளைகளிடம் பேசுவதற்கும் பயமாயிருந்தது. சதாத் காலத்தில் மிகவும் பத்திரமாயிருந்தோம். முபாரக்? அவர் ஜனநாயகவாதியாக இருந்தாலும், அவரது அரசியலமைப்பில் ஜனநாயகத்தன்மை கிடையாது. இப்போது எங்களால் அபிப்பிராயங்களை வெளியிட முடியும். பத்திரிகை சுதந்திரம் உள்ளது.
 
சல்மான் ருஷ்டி விவகாரம் குறித்து என்ன கருதுகிறீர்கள்? ஓர் எழுத்தாளனுக்கு முழுமுற்றான சுதந்திரம் அவசியம் என்றெண்ணுகிறீர்களா?
 
ஒவ்வொரு சமூகமும் தனக்கென்றுள்ள சட்டங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் மரபுகளைப் பாதுகாத்திட முயலுகின்றது. தான் ஒத்துக் கொள்ளாதவற்றைத் தாக்கிடும் உரிமை ஒரு தனி நபருக்கு உள்ளது போல், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை சமூகத்திற்கு உள்ளதென்று நம்புகிறேன். தன் சமூகத்தின் சட்டங்களோ, நம்பிக்கைகளோ செல்லுபடியாகாதவை அல்லது தீங்கானவையும் கூட என்னும் முடிவுக்கு ஓர் எழுத்தாளன் வரும் பட்சத்தில், அதனைப் பேசுவது அவனது கடமையாகும். ஆனால், தனது துணிச்சலுக்கான விலையைத் தந்திட அவன் ஆயத்தமாயிருக்க வேண்டும். அவ்விலையைத் தர அவன் ஆயத்தமாயில்லாதபோது, அவன் நிசப்தமாக இருந்து விட வேண்டும். தம் கருத்துக்களை வெளியிட்டமைக்காக சிறை சென்றவர்கள், எரியூட்டப்பட்டவர்களால் வரலாறு நிறைந்துள்ளது. சமூகம் எப்போதும் தன்னைத் தற்காத்துள்ளது. இப்போதெல்லாம் தனது போலீஸ் மற்றும் நீதிமன்றங்களைக் கொண்டு அவ்வாறு செய்து கொள்கிறது. வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் அதனை எதிர்க்கும் சமூகத்தின் உரிமை என்னும் இரண்டும் வேண்டும் என்கிறேன். வேறுபடுவதற்கான விலையை நான் கொடுத்தாக வேண்டும். அதுதான் இயற்கையானது.
 
The Satanic Versusனை வாசித்தீர்களா?
 
இல்லை. அது வெளியான சமயத்தில் என்னால் சரிவர வாசிக்க முடியாது போனது. சமீபத்தில் என் கண் பார்வை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அலெக்ஸான்டிரியாவிலுள்ள அமெரிக்கப் பண்பாட்டு அலுவலர் அந்நூலினை அத்தியாயம் அத்தியாயமாக எனக்கு விளக்கினார். அதிலுள்ள புண்படுத்தல்கள் ஏற்கப்பட முடியாதவை. தீர்க்கதரிசியின் பெண்டிரைக்கூட ருஷ்டி புண்படுத்துகிறார்! என்னால் கருத்துக்களை வாதிடமுடியும், புண்படுத்தல்களை என்ன செய்வது? புண்படுத்தல்கள் நீதிமன்றப் பிரச்சினையாகும். அதே வேளையில், கோமேனியின் நிலையும் சமமான அளவில் அபாயகரமானதாகும். தீர்ப்புரைக்கும் உரிமை அவருக்கில்லை - அது இஸ்லாமியப் பண்பில்லை. இஸ்லாமிய நெறிகளின்படி, ஒருவன் சமயத்துரோக குற்றஞ்சாட்டப்பட்டால், அவன் வருந்தித் திருந்தலாம் மற்றும் தண்டனை பெறலாம். ருஷ்டிக்கு அந்த வாய்ப்புத் தரப்படவில்லை. கருத்துக்கள் என்ற அளவில் தான் விரும்புவதை எழுதும் ருஷ்டியின் உரிமையை நான் மதித்துள்ளேன். ஆனால் புனிதமாகக் கருதப்படும் ஒன்றினை அல்லது தீர்க்கதரிசியை புண்படுத்தும் உரிமை அவருக்கில்லை. ஒத்துக்கொள்கிறீர்களா?
 
உங்கள் கருத்தினைக் கவனிக்கிறேன்.... புண்படுத்தல்கள் / அவதூறு பற்றி குரான் விவாதிக்கின்றதா?
 
நிச்சயமாக. குரானும் பண்பட்ட தேசங்களின் சட்டங்களும் மத நிந்தனைக்கு எதிரான சட்டங்களைக் கொண்டுள்ளன.
 
குழந்தையாயிருக்கையில் மதவுணர்வு கொண்டிருந்தீர்களா? ஒவ்வொரு வெள்ளியும் உங்கள் அப்பாவுடன் மசூதிக்குப் போனீர்களா?
 
இளமையில் எனக்கு மதவுணர்வு இருந்தது. ஒவ்வொரு வாரமும் என் அப்பா வெள்ளிக்கிழமைத் தொழுகைகளுக்குச் சென்றாலும், என்னை வற்புறுத்தவில்லை. பிற்பாடு, மதம் திறந்த தன்மை கொண்டிருக்க வேண்டும் என்று வலுவாக உணரத் தொடங்கினேன் மூடுண்ட மதம் ஒரு சாபமாகும். மதத்தில் அதீத ஈடுபாடு கொள்வது, வாழ்க்கையில் ஓய்ந்து போனவர்களின் இறுதிப் புகலிடமாகத் தோன்றுகிறது. மதம் மிக முக்கியமானது மற்றும் மிக அபாயகரமானது என்றெண்ணுகிறேன். மக்களின் மனதைத் தொட வேண்டுமானால், அவர்களின் நாடித் துடிப்பில் கை வைக்கவேண்டும் எகிப்தில் மதத்தைப் போல் மக்கள் மனதைத் தொடுவது வேறொன்றுமில்லை. குடியானவனை வேலை செய்ய வைப்பது எது? மதம். இதன் காரணமாக மதத்தை வெளிப்படையான வகையில் விளக்க வேண்டும். அது நேசத்தையும் மனித சமூகத்தையும் குறித்துப் பேசவேண்டும். மதம், வெறுமனே உணர்வுகளுடன் மட்டுமல்லாமல், முன்னேற்றத்துடனும் பண்பாட்டுடனும் தொடர்புடையது. துரதிருஷ்டவசமாக இன்றைய மத வியாக்கியானங்கள் பெரிதும் பிற்போக்குத் தன்மையனவாகவும் பண்பாட்டுத் தேவைகளுடன் முரண்படுபவனவாகவும் உள்ளன.
 
தற்போது தொழுகையிடுகிறீர்களா?
 
சில சமயங்களில். ஆனால் வயது அனுமதிப்பதில்லை. உங்களுக்கும், எனக்கும் இடையே அத்தியாவசிய மானுட நடத்தையாக மதத்தைக் கருதுகிறேன். இருப்பினும், எப்போதும் பிரார்த்திப்பதும், நோன்பிருப்பதும் தொழுகைப் பாயில் தலையை வைப்பதுமாக இருப்பதை விடவும், சக மனிதனை சரிவர நடத்துவது மிகவும் முக்கியமானது ஆகும். மதத்தினை ஓர் உடற்பயிற்சி விடுதியாக கடவுள் உத்தேசிக்கவில்லை.
 
விருந்துகள், வரவேற்புகளுக்கான அழைப்புகளை இப்போதும் நிராகரித்து விடுகிறீர்களா?
 
இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு நான் போவதே இல்லை. நண்பர்களைப் பார்ப்பதற்குக்கூட நான் போவதில்லை. Casino Kasrelnil அல்லது ஒன்றிரண்டு காபி விடுதிகளில் அவர்களைச் சந்தித்து விடுவேன். எனவேதான்.
 
 நீங்கள் நோபல் பரிசைப் பெற ஸ்வீடனுக்குச் செல்லவில்லையா? ஏராளமான கூட்டங்களும், விருந்துகளுமாக இருக்கும் என்பதாலா?
 
அப்படியில்லை. இளமையில் எந்த அளவுக்குப் பயணம் செய்ய ஆசைப்பட்டேனோ, இப்போது அந்த அளவுக்கு வெறுக்கிறேன். இரண்டு வாரப் பயணம்கூட என் வாழ்க்கைப் போக்கினைத் தொந்தரவு செய்வதாய் இருக்கும்.
 
சீரான திட்டப்படி செயல்படுகிறீர்களா?
 
எப்போதும் நிர்ப்பந்தமாகி விடுகிறது. எட்டிலிருந்து இரண்டு மணிவரை நான் பணியாற்றினேன். நான்கிலிருந்து ஏழு மணி வரை எழுதினேன். அப்புறம் ஏழிலிருந்து பத்து மணி வரை வாசித்தேன். வெள்ளி தவிர்த்து, மற்ற நாட்களிலான எனது வழமை இப்படியிருந்தது. நான் விரும்பியபடி செய்திடும் நேரம் ஒருபோதும் எனக்கிருந்ததில்லை. ஆனால் மூன்றாண்டுகளுக்கு முன்பு எழுதுவதை நிறுத்திவிட்டேன்.
 
உங்கள் பாத்திரங்கள் எதனுடனும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களா?
 
முத்தொகுதியில் வரும் கமல் என் தலைமுறையினைப் பிரதிநிதித்துவம் செய்கிறான் - எங்கள் கருத்துக்களை, எங்கள் தெரிவுகளை, எங்கள் ஊடாட்டங்களை மற்றும் உளவியல் நெருக்கடிகளைப் பிரதிநிதித்துவம் செய்கிறான் - எனவே அந்த வகையில் அப்பாத்திரம் சுயசரிதத்தன்மை மிக்கதாகும். ஆனால் அதே வேளையில், அப்பாத்திரம் உலகளாவியதும் ஆகும். அப்பா, அப்துல் கவாடுடனும் நெருக்கமாய் உணருகிறேன்... வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படையாயுள்ள அவர், தன் நண்பர்களை நேசிக்கின்றார், யாரையும் புண்படுத்துவதில்லை. இவ்விருவரும் சேர்ந்து என் ஆளுமையின் இரு பாதிகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அப்துல் கவாட் ஆரவாரத்தன்மை கொண்டு, கலை - இசையினை நேசிக்கின்றார்; கமல் தயக்கமும் சங்கோஜமும் கொண்டு, தீவிரத்தன்மையும் இலட்சியப் பிடிப்பும் நிறைந்துள்ளான்.
 
The thief and the dogs என்னும் கதையை எவ்விதம் ஆரம்பித்தீர்கள்?
 
கெய்ரோவை சிறிதுகாலம் மிரட்டி வந்த ஒரு திருடனால் உத்வேகம் பெற்றது அக்கதை. மஹமுத் சுலைமான் என்பது அவனது பெயர். அவன் சிறையிலிருந்து வெளிவந்ததும், தன் மனைவியையும், வழக்குரைஞரையும் கொல்ல முற்பட்டான். அவர்கள் தப்பித்துவிட, அவன் கொல்லப்பட்டான்.
 
நாவலில் உள்ளதுபோல, அவன் மனைவி அவனைக் காட்டிக் கொடுத்திருந்தாளா?
 
இல்லை... அக்கதையினை அவன் பாத்திரத்திலிருந்து உருவாக்கினேன். அப்போது நான் பின்தொடரப்படுவதான விசித்திர உணர்வால் வதைக்கப்பட்டேன். அத்துடன் அப்போதைய அரசியல் நிலையில் எங்கள் வாழ்க்கை அர்த்தம் இழந்து காணப்பட்டது. ஆகவே அக்குற்றவாளியின் கதையினை நான் எழுதியபோது, அதனுடன் சேர்த்து என் கதையினை எழுதினேன். சாதாரண குற்றவியல் கதை, காலம் குறித்த தத்துவார்த்தத்தியானமாயிற்று! பிரதான பாத்திரம் சய்யித் மஹ்ரான், என்னுடைய குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் உள்ளாகுமாறு செய்தேன். ஷேக்கிடமும் "வழுக்கி விழுந்த" பெண்ணிடமும், பணம் - புகழிற்காக தன் கருத்துக்களைக் காட்டிக் கொடுத்திருந்த இலட்சியவாதியிடமும் பதில்களைத் தேடுமாறு செய்திருந்தேன். எழுத்தாளன் வெறுமனே பத்திரிகையாளன் இல்லை. தனது சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் மதிப்புகளுடன் அவன் ஒரு கதையைப் பின்னுகிறான். அதுதான் கலை.
 
அக்கதையில் மதத்தின் பங்கென்ன? ஷேக் உணர்த்துவதுபோல, கடவுளிடமான நம்பிக்கை உண்மையான மகிழ்ச்சிக்கான பாதையா? அக்குற்றவாளி தேடிக் கொண்டிருக்கும் விடை சூஃபி தத்துவமா?
 
ஷேக் வாழ்க்கையினை மறுதலிக்கின்றான் என்பதை நாமறிவோம். மாறாக, குற்றவாளியோ தன் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படுகிறான். அவர்கள் வெவ்வேறு உலகில் உள்ளனர். அழகான கவிதையை நேசிப்பது போல் சூஃபி தத்துவத்தை நேசிக்கிறேன் ஆனால் அது விடை இல்லை. சூஃபி தத்துவம் பாலையின் கானல்நீர். இங்கே வந்தமர்ந்து சற்று ஆசுவாசம் கொள் என்கிறது. வாழ்க்கையினை மறுதலிக்கும் எந்தப் பாதையினையும் நிராகரிக்கிறேன் மிக அழகானதாய்த் தோன்றும் சூஃபி தத்துவத்தை என்னால் நேசிக்காது இருக்க இயலாது... யுத்தத்தினிடையே அது ஆறுதல் அளிக்கிறது...
 
உங்களின் பெரும்பாலான கதாநாயகியர் சமூகத்தின் கீழ்த்தட்டுப் பெண்களாய் இருப்பது ஏன்? எதனையும் அடையாளப்படுத்த உத்தேசம் கொண்டுள்ளீர்களா? உதாரணமாக, எகிப்து?
 
இல்லை. இந்நாவல்கள் எழுதப்பட்ட காலத்தில் பெண்கள் உரிமை இல்லாதிருந்தனர். நல்ல கணவனைக் காண முடியாமலோ கெட்டவனை விவாகரத்து செய்யவோ முடியாத அவள், நம்பிக்கை இல்லாதிருந்தாள். சில வேளைகளில் அவளுக்கிருந்த ஒரே வழி, கள்ள ஒழுக்கம். இப்போது பெண்களுக்குக் கல்வி தரப்பட்டு, நிலவரம் மாறிக் கொண்டிருக்கிறது. ஏனெனில், கல்வி பெற்ற பெண் கையில் ஆயுதம் இருக்கின்றது என்றாகும்.
 
உங்கள் இருதயத்திற்கு நெருக்கமாயுள்ள விஷயம் எது? எழுதுவதற்கு நீங்கள் பெரிதும் நேசிக்கின்ற விஷயம் எது?
 
விடுதலை. காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை, மன்னனின் முழுமுற்றான ஆட்சியிலிருந்து விடுதலை மற்றும் சமூகம் - குடும்பச் சூழலில் அடிப்படை மானுட விடுதலை. இவ்வகையிலான விடுதலை, ஒன்றிலிருந்து இன்னொன்றிற்குச் செல்லும். உதாரணமாக, முத்தொகுதியில், புரட்சியால் அரசியல் விடுதலை கிடைத்தபின், அப்துல் கவாடின் குடும்பம் அவனிடமிருந்து மேலும் விடுதலை கோரிற்று.
 
மத்திய கிழக்கின் எதிர்காலம் குறித்து, குறிப்பாக வளைகுடா யுத்தம் மற்றும் நீடித்த வன்முறைச் சூழலில், நன்னம்பிக்கை கொண்டுள்ளீர்களா?
 
என் வயதில் அவநம்பிக்கை கொள்வது தகாதது. இளமையில் மானுடத்திற்கு
விடிவில்லை என்று நீங்கள் பிரகடனம் செய்யலாம் ஆனால் வயதாகும்போது உலகை வெறுக்குமாறு மக்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்க கற்றுக்கொள்கிறீர்கள்.
 
நாயகன் என்னும் கருத்தமைவு பற்றி என்ன கூறுவீர்கள்? உங்கள் கதைகளில் நாயகர்கள் இருப்பதாகத் தெரியவில்லை; எந்தவொரு சமகால எகிப்திய எழுத்தாளர் கதைகளிலும் அவர்கள் இல்லை.
 
எனது பெரும்பாலான கதைகளில் நாயகர்கள் இல்லை என்பது உண்மையே - பாத்திரங்கள் மட்டுமே உள்ளனர். ஏன்? ஏனெனில் விமர்சனக் கண்ணுடன் சமூகத்தை நோக்கும், நான் காணும் மக்களில், அசாதாரணமாக யாரையும் பார்க்கவில்லை. எனக்கு முந்தைய தலைமுறை, 1919 எழுச்சிகளால் தாக்கம் கொண்டு, வீர நடத்தையினைக் கண்ணுற்றது. ஒட்டுமொத்தத்தில் எங்கள் தலைமுறையில் நாயகன் என்பவன் அரிதாகிவிட்டான் புனைவியல் படைப்பாக இருந்தால் ஒழிய, நாயகனை இடம்பெறச் செய்ய இயலாது...

***
நன்றி: தீராநதி , சா.தேவதாஸ்,  தமிழ் கூடல்

Sunday, February 3, 2013

'வைக்கம்' அறைந்த அறை - தாஜ்

வைக்கம் முஹம்மது பஷீர் அவர்களின் சிறுகதைத் தொகுப்பை படித்துவிட்டு நண்பர் தாஜ்  நேற்று எனக்கு அனுப்பிய மெயில் இது. 'என்ன மயிர் எழுத்து எழுதுகிறேன் நான்!' என்று தனக்குள் புழுங்கிக்கொள்கிறார் நண்பர். என்னை நான் கேட்பது போலவே இருக்கிறது! - ஆபிதீன்

***



 

 ’குளச்சல்’
மொழிமாற்றத்தில் வந்துள்ள
வைக்கம் முகம்மது பஷீரின்
'உலகப் புகழ்பெற்ற மூக்கு' எனும்
சிறுகதைத் தொகுப்பை
சில நாட்களாக
வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

வாசிப்பிலான என் வேகம்
நீங்கள் அறியாததல்ல.
சாதாரண வேகமா அது!
ஆமையின் வேகம்!
வாசிப்புக்கு
ஏதோவோர் வேகம்
வேண்டித்தானே இருக்கிறது!?

முன்பெல்லாம்...
தேர்ந்த படைப்பாளிகளின்
படைப்புகளை வாசிக்க,
எனக்கு
ரூல்தடியும் பென்சிலும்
இன்றியமையாதது.

இஷ்டமான வரிகளையும்
சிலாகிக்க வைக்கும்
நுட்பமான கிளர்ச்சிகளையும்
அடிக்கோடிட்டுக் கொண்டே
வாசிப்பவன் நான்!
வாசிப்பில்,
வாசிப்பைவிட
அதுவே முக்கியமெனக்கு!.

குறிப்பிடத் தகுந்த
சில படைப்பாளிகளின்
படைப்புகளை வாசிக்கும் போது
அப் புத்தகத்தின் வரிகள் பூராவும்
நான் கிழிக்கும் அடிக்கோடுகள்
தவிர்க்க முடியாமல் போனதுண்டு!

நன்றாக ஞாபகம் இருக்கிறது
80 - களில் வெளிவந்த,
ஒன்றை விரல் அளவிலான
தடிமனே கொண்ட
சுந்தர ராமசாமியின்
'ஜே.ஜே. சில குறிப்புகள்'
மூன்று விரல் அளவில்
தடிமனாகிப் போனதை
மறக்கவே முடியாது!
நாவலான படைப்பு
காவிய தடிமனாகிப் போனதில்
பல நேரம் சிரித்திருக்கிறேன்.

வாசிப்பில் என் குணாதிசயம்
அடிக் கோடோடு நின்றுவிடுவதில்லை.
படைப்பின் வரிகளினூடே
அதன் அர்த்தபாவ சுவடுகளைப் பிடித்து
அடிமேல் அடியெடுத்தபடிக்கு
வாசிப்பவன் நான்.

என் வாசிப்பின்
இத்தனை வினோத அழகையும்
நீங்கள் அறிவீர்கள்.
சிரித்து,
முகம் சுளித்தும் இருக்கின்றீர்கள்.

அந்தச் சிரிப்பும், அந்த முகச்சுளிப்பும்
அடிக்கோடிடும்
என் சிறுப்பிள்ளைத் தனத்திற்காக மட்டுமல்ல
புதிய புத்தகத்தை இன்னும் புதிசாக
வைத்துக் கொள்ள வேண்டாமா? என்கிற
பரிசுத்த
அழகியல் சார்ந்ததென அறிவேன்.

நாமெல்லாம் கல்யாணமாகி
ஒன்றுக்கு இரண்டு
குழந்தை பெற்றவர்கள் என்பது
நினைவுக்கு வந்து தொலைய
எனக்குள் நான்...
சிரித்து கொள்வேன்.

இப்போது
என் வாசிப்பில் சிறிது முன்னேற்றம்.
அந்த வேகத்தை
குறைக்கவில்லையென்றாலும்
அடிக்கோடிடும் கவித்துவத்தை
தொடராது நான் விட்டுவிட்டேன்.

இது,
என் வாசிப்பின் முன்னேற்றமென்றோ,
கதை நெளிவுகளின் நுட்பங்களும்
புரியாமை வரிகளும்
இப்போதெல்லாம்,
உடனே புரிந்துவிடுகிறதென்றோ அர்த்தமல்ல.
அடிக் கோடிடுவதை
அழகு குறையாமல் செய்யும்
காலத்தை விழுங்கும் நேரம்...
இப்போது கஷ்டமாகிப் போனது.
வாழ்வோடான
எதிரோட்டக் குடைச்சலுக்கு
ஒரு தலை காணமாட்டேன் என்கிறது.
ஆபிதீன்...
அங்கே எங்காவது
எனக்கு பொருந்துகிற மாதிரி
எக்ஸ்ட்ரா தலை கிடைக்குமா?

எங்கே மறந்துவிட்டேனோவென
வருடா வருடம் வயதுவேறு
என்னை வருத்தி நினைவுறுத்துகிறது,
அந்த அடிக் கோடுகள்
என்னதான் கவிதையென்றாலும்
ரூல் தடியும் பென்சிலும்
கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறதென்றாலும்
சாதுர்யம் பிசகாமல்
இயக்க வேண்டிய ஒன்று!
அது ஆவதில்லை இப்போது.
சிரிப்பீர்கள், சிரித்துவிட்டுப் போங்கள்.
ஆனால்...
மறுக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

இந்தக் கழிவை
இங்கே கொட்ட
எழுதப்படுகிற கடிதமல்ல இது!
பேத்தல் எப்பவும்
நம்மை மீறிவிடும் ஒன்று!
அதுவாகவே ஆஜர் கொடுத்துவிட்டது.

வைக்கம் முகம்மதுவின்
1945 -ம், வருடத்தின்
இரண்டு கதைகளை
இந்தத் தொகுப்பில்
தீர வாசித்தேன்.
ஒன்று. 'உலகப் புகழ்பெற்ற மூக்கு'
இரண்டு. 'ஜென்ம தினம்'
தவிர, அந்தத் தொகுப்பை
இன்னும் முடிக்கவில்லை என்பது
வேறு செய்தி.

அந்த இரண்டு சிறுகதைகளின் ஊடே...
இத்தனை நாளும்...
நான் எழுதிக் கொண்டிருக்கிற
என் 'பீத்த' எழுத்திற்காக
வைக்கம் அறைந்த அறை
வலுவானது!
ஒருவகையில் சரியானது!

1945 - மகரம் (தை) மாதத்தின்
ஓர் நாளிலிருந்து
இந்த 2013 - தை மாதத்தின் ஓர் நாளில்...
என்னை பதம்பார்த்த அந்த அறை...
எதிர்பாராத சுளீர்......!
68 - வருடம் நீண்ட
அந்தக் கரம்...
இன்னும் என் வியப்பில்!

எழுத்தாளராக மட்டுமல்லாது
ஒரு கால கட்டத்தில்
குஸ்தி பயில்வானகவும் அறியப்படும்
வைக்கத்தின் அறை
அத்தனை வலு
கொண்டிருந்திருந்ததோ என்னவோ!

வீசப்பட்டு தூர விழுந்த
இடத்திலிருந்து யோசித்தேன்.
அவர் அறைந்ததில் கொஞ்சம் வருத்தமில்லை.
இன்னும் கூட அவர் என்னை
பொறிகலங்க அறைந்திருக்கலாம்.
கன்னம் சிவந்ததெல்லாம் போதாது
மூளைப் பழுதிருக்க வேண்டும்.

'என்ன மயிர் எழுத்து எழுதுகிறேன் நான்!'
அவர் அப்படி அறைந்து
வீசியெறிந்தப் பிறகேதானே
யோசிக்கிறேன் நான்!
இனியேனும் திருந்துவேனா!
இயலுமா...?
முயன்றாலும்
சாத்தியப்படக் கூடியதா எழுத்து?
வேண்டுமானால்...
நாய் வாலை நிமிர்த்தலாம்.
இயலவும் இயலும்!

இந்த இரண்டு கதைகளில்
ஜென்ம தினம்
அறைந்த அறைதான்
வலுவான வலி கொண்டது!
அந்தக் கதையில்
நிறையவும் கவிதைவரிகள் இருப்பது
நினைவுக்கு வர...
குளச்சலுக்கு போன் போட்டேன்.

''நான்...
வைக்கம் முகம்மது பசீரின்
சிறுகதைத் தொகுப்புகள் இரண்டும்
நாவல் இரண்டும்
இருபது வருடங்களுக்கு முன்னமே
படித்திருக்கிறேன்
அப்போதெல்லாம்
மொழிமாற்றச் சேவையில்
நீங்கள் ஈடுபட நினைத்தே இருக்காத நேரம்!
அன்றைய அந்த மொழி பெயர்ப்பாளர்கள்
ஆக்கித் தந்த வைக்கமின் மொழி
இன்னொரு சாதாரண மொழி!
படித்தேன்...,
வைக்கமை படித்தாகிவிட்டது
என்பதோடு
மறந்தேன்... அவ்வளவுதான்.

இன்றைக்கு
சிலாகிக்கும் இந்தக் கதைகளைக் கூட
முன்பு நான் வாசித்திருக்கக் கூடும்!
அன்றைக்கில்லாது
இன்றைக்கு இப்படி
இந்த இரண்டு கதைகளும்
என்னை வசீகரிக்க
என்ன காரணமாக இருக்கும்?
உங்களது மொழிபெயர்ப்பில்
இன்றைய
உங்களது மொழி
கூடுதல் வித்தைக் காண்பித்திருக்கிறதா?"
வெளிப்படையாகவே கேட்டேன்.

குளச்சல் சிரித்தார்..
"கேரளா முழுமைக்கும்
இன்றைக்கும் கூட வைக்கமை
தூக்கிவைத்துக் கொண்டாடுவது
இதனால்தான் தாஜ்!" என்றார்.

நம் இஸ்லாமிய படைப்பாளிகளில்
உண்மையை
பெரும் அளவில் முன்வைக்கும் எழுத்தை
உங்களிடம்தான்
நான் அதிகமும் வாசித்திருக்கிறேன்.
இப்போது
இன்னொருவராய்
வைக்கம் முகம்மது பஷீர்!

நீங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்
கோலமிடுவீர்கள் என்றால்...
அவர் அதே கோலத்தை
விரிந்த எல்லையில்
அசாத்திய லாவகதோடு
வரைந்தெடுப்பவராக தெரிகிறார்!

1945 - கேரளத்து
அரசியல் மாய்மாலங்களை...
'உலக புகழ்ப் பெற்ற மூக்கு'இல்
பின் நவீனத்துவப் பின்னலில்
அதிகத்திற்கும்
அதிரடித்திருக்கிறார்!

சுதந்திரத்துக்கு முன்னாலான
காலம் அது!
அனேகமாக
இடைக்கால அரசு
அங்கே நடந்தேறியிருக்கலாம்.
அப்பவே தொடங்கிவிட்டதாக
அறிய முடிகிறது
மலையாளிகளின் இன்றைய அரசியல்!
அந்த மக்கள்
கெட்டிக்காரர்கள் என்பது
திரும்பத் திரும்ப மெய்ப்பிக்கப்படுகிறது!

அதே ஆண்டில் எழுதப்பட்டிருக்கும்
'ஜென்ம தினம்'
ஒரு நாள் சம்பவமாக....
வலுவான
சிறுகதையாகியிருக்கிறது!

ஜென்ம தினமென்றால்...
பிறந்த நாளாம்
அவரது பிறந்த நாளில்
அவர் எதிர்கொள்ளும்
யதார்த்த,
வாழ்வின் எதிர்மறையான நிகழ்வுகளை...
விழிப்பில் இருந்து
தூங்கப் போகும்வரையிலான
அந்த அரைநாளின் சம்பவ அடுக்குகளை
சரளமாகப் பதிவு செய்திருக்கிறார்.

வாழ்க்கை / நண்பர்கள்/  இல்லாமை / பசி/
அரசியல்/ புரட்சி குறித்த விமர்சனம்/
நாகரீக முரண்/ கடன்பட நேரிடும் இறுக்கம்/
கழிவிரக்கம் கொள்ளவைக்கும் களவு/
கவிதை தாக்கம்...
இப்படி
அத்தனை வளையத்திற்குள்ளும்
வளைய வந்து 
அரிய எழுத்தாக
இக்கதையினைப் பதிவு செய்திருக்கிறார்!

1945-ல்
தமிழக இலக்கிய வட்டத்தில் 
மணிக்கொடி காலம் பிரசித்தம்.
மௌனியும், புதுமைப் பித்தனும்
ஆட்சி செய்த தருணம்.
மௌனி பெருமளவில்
மனவெளியைப் பதிவு செய்பரென்றால்...
புதுமைப்பித்தன்
மேலை நாட்டை கீழை நாட்டிற்கு
இறக்குமதி செய்து பெயர் போட்டவர்!
இன்னுமான
தனித்துவமிக்கப்
புதுமைகளையும் காண்பித்தவர்.
இவர்கள் இருவருமே
அரசியல் தொட்டு
எழுதியதாக நினைவில்லை.

அந்த ஆண்டுகளில்..
இன்றைக்கும் காணும்
வாழும் அரசியல் மாய்மாலத்தை
'உலகப் புகழ்ப் பெற்ற மூக்கு'-ல்
1945 - வாக்கிலேயே
பின்னியெடுத்திருக்கிறார் வைக்கம்!

இங்கே நான் சுட்டும்...
'ஜென்ம தினம்' ஒட்டிய
சரளமான கதையும் கூட
அன்றைக்கு
தமிழில்
அபூர்வமாகத்தான் இருந்திருக்க முடியும்.

இரண்டாயிரத்தாண்டு
வெளிவந்து பார்த்த
'பாரதி'யில்
ஓர் வசனம்
என்னால் மறக்க முடியாதது.
வெளியில் தங்கியிருக்கும் பாரதிக்கு
குடும்பதிலிருந்து ஒரு செய்தி வரும்...
'குழந்தைக்கு உடல் நலமில்லை
வைத்தியத்திற்கு பணம் வேண்டும்' என்று
பாரதி கையிழந்த நிலையில் புலம்புவார்
'காலையிலேயே
இன்றைக்கு...,
இல்லாமை கஷ்டம்
தலைவிரித்தாடுகிறது' என்பார்
அந்த இல்லாமை தரும்
விவரிக்க முடியாத வருத்தத்தை
நான் பலமுறை
எதிர்கொண்டதாலோ என்னவோ
அதையே
வேறொரு மண்ணில் பேசும்
வைக்கம் முகம்மது பஷீரின்
இந்தக் கதை
பெரிதினும் பெரிதாகத் தெரிகிறது.
தவிர,
வைக்கம் முகம்மது பஷீர்
குளச்சல் மு. யூசூப் கூட்டணி
என் இலக்கிய மனதையும்
பேதலிக்க வைத்துவிட்டார்கள்!


-தாஜ்

***
நன்றி: தாஜ், குளச்சல் மு. யூசூப் , காலச்சுவடு பதிப்பகம்

***

சிறுகதைகள்...

ஜென்ம தினம் - பஷீர் (மொழிபெயர்ப்பு : குளச்சல் மு.யூசுப்)

உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு -  பஷீர் (மொழிபெயர்ப்பு : நாகூர் ரூமி), வேறு சில முக்கியமான இணைப்புகளுடன்...

மற்றும்..

ஆயிரம் வருடத் தூக்கம் - பஷீரின் நேர்காணலும் சில பத்திகளும்
வறட்டுச் சொறி - பஷீரின் கடிதம்
பஷீரின் உண்மையும் பொய்யும் (கேள்வி பதில்)

Saturday, February 2, 2013

குழந்தப் பிள்ள போல..! - புலவர் மாமா கதைகள்

ஹனீபாக்காவின் உடல்நிலை கவலை தருகிறது. ’உடல் நலம் இன்னும் சரிப்பட்டு வரவில்லை. மனத்தோடு ஒத்துழைக்க உடல் மறுக்கிறது. கிழடு தட்டிப் போன இயந்திரம்...’ என்று மெயில் அனுப்பியிருக்கிறார். பார்த்து ஒரு மாதிரியாகிவிட்டது.. இறைவன் அவருக்கு உடல் சுகத்தைத் தரட்டும் - இந்நிலையிலும் ‘குழந்த புள்ள’யை அனுப்பி சிரிக்க வைத்ததற்காக. ஆமா, கதையில் சொல்கிற மாதிரி ’அதைப்’ பார்த்த மாமிகளெல்லாம் அலறி ஓடுவார்களா என்ன? நம்ப முடியவில்லை! - ஆபிதீன்

**

குழந்தப் பிள்ள போல...

வீட்டில் பிள்ளைகள் யாருமில்லை.
புலவர் மாமாவும் பொண்டியும் ஹாயாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
மாமாவுக்கு உற்சாகம் தலைக்கேறி, மாமியைக் குஷிப்படுத்திக் கொண்டிருந்தார்.
மாமி திடீரென்று மாமாவைப் பார்த்து -
"இஞ்செ குழந்தப் பிள்ள போல அந்த வெத்தில வட்டாவை எடுத்திட்டு வாங்க ராசா" என்றார்.
மாமாக்கு இன்னும் ரெண்டு அங்குலம் கூடிப் பெய்த்து.
உடனே மாமா மறுபேச்சில்லாமல், போட்டிருந்த பெனியனையும் உடுத்திருந்த சாரனையும் களைந்தெறிந்தார். மாமா முழு நிர்வாணம். ஆறு மாத ஆண் குழந்தை போல.
வெத்தில வட்டாவத் தேடித் தேடி தவழத் தொடங்கினார். மாமியோ முகத்தில் சீலையை வாரிப் போட்டு அலறி அடித்துக் கொண்டே முற்றத்திற்கு ஓடி வந்தார்.

**

நன்றி : பெரிய குழந்தைக்கு...