Tuesday, October 30, 2012

திருடன் போட்ட வேடம் - பரமஹம்சர் சொன்ன கதை



ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை 

'ஏழாவது வாசல்’ தொகுப்பு.
எளிய தமிழில் எழுதியவர் : நாரா நாச்சியப்பன்

***

ஓர் ஊரில் ஒரு திருடன் இருந்தான். நள்ளிரவில் வீடுகளில் புகுந்து திருடுவது அவன் வழக்கம். திருடித் திருடி அவன் திருட்டுத் தொழிலில் தேர்ந்தவனாகி விட்டான்.

சின்னவீடு, பெரியவீடு, ஏழைவீடு பணக்காரன் வீடு எல்லா வீட்டிலும் அவன் திருடியிருக்கிறான். ஆனால் அரசனுடைய அரண்மனையில் மட்டும் அதுவரை அவன் திருடியதில்லை.

அரண்மனையில், அதுவும் அரசனிடத்தில் ஏதாவது திருடிவிட வேண்டும் என்று ஒரு நாள் தோன்றியது. அரண்மனையில் புகுந்து யாரிடமும் அகப்படாமல் அரசனுடைய பொருளைத் திருடிக்கொண்டு வந்துவிட்டால் தான் பெரிய திறமைசாலி என்று சொல்லிக் கொள்ள முடியும் என்று அவன் நினைத்தான்.

திட்டமிட்டபடி அவன் ஒரு நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்தான். எப்படியோ அரண்மனைக் காவலாளிகள் கண்ணில் படாமல் உள்ளே நுழைந்து விட்டான். அரசனுடைய படுக்கையறை அருகிலும் சென்று விட்டான். அப்போது அரசன் அரசியுடன் பேசிக்கொண்டிருந்தான். பேசி முடித்து உறங்கட்டும் என்று திருடன் வெளியே ஓர் இருட்டு மூலையில் ஒளிந்து காத்துக் கொண்டிருந்தான்.

அந்த அரசன் தெய்வபக்தியுடையவன். தெய்வபக்தியைக் காட்டிலும் அவனுக்கு அடியார் பக்தி அதிகம். அதாவது, தெய்வத்தை வணங்குகின்ற பக்தர்களை அந்த அரசன் தெய்வமாகவே எண்ணி வணங்குவான். அப்படிப்பட்ட அந்த அரசனுக்கு ஓர் அழகான மகள் இருந்தாள். இளவரசியான அந்த மகள் திருமண வயதை அடைந்தாள். அதனால் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அரசி ஆசைப்பட்டாள். ஆகவே, அன்று இரவு, தன் மகள் திருமணத்தைப் பற்றி அரசனிடம் பேசத் தொடங்கினாள்.

“அரசே, நம் மகள் திருமண வயதையடைந்துவிட்டாள். விரைவில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை ஒருவனைப் பார்க்க வேண்டுமே!” என்றாள் அரசி.

“ஆம்! நம் மகளுக்கு நாம் பார்க்கும் மாப்பிள்ளை ஒரு தெய்வ பக்தராக இருக்க வேண்டும்” என்றார் அரசர்.

”அப்படியானால்...?”

“நம் ஊர் ஆற்றங்கரையிலே சாமியார்கள் இருக்கிறார்கள் பார்த்திருக்கிறாய் அல்லவா? அவர்களில் ஒருவருக்கு நம் மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். தெய்வத்தின் அருளால் பிறந்த நம் மகளைத் தெய்வபக்தர் ஒருவருக்குக் கொடுக்கவே விரும்புகிறேன்” என்றான் அரசன்.

“தங்கள் விருப்பமே என் விருப்பம் என்றாள், அரசரை என்றுமே எதிர்த்துப் பேசியறியாத அரசி.

’நாளையே நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றான் அரசன்.

அதற்குப் பிறகு அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு உறங்கி விட்டார்கள்.

வெளியில் ஒளிந்திருந்த திருடன் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். நான் இங்கு வந்த நேரம் நல்ல நேரம்தான். இளவரசியை மணம் புரியும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நான் இப்போது திருட வேண்டியதில்லை. நாளை ஆற்றங்கரைக்குப் போய் சாமியார்களோடு சாமியாராய் உட்கார்ந்துவிட வேண்டியதுதான். வாய்ப்பு இருந்தால் இளவரசியின் கணவன் ஆகிவிடுவேன். அதனால் அரசருக்கு வாரிசும் ஆகிவிடுவேன்:” என்று எண்ணிக்கொண்டே திருடன் அங்கிருந்து கிளம்பினான்.

எப்படித் தந்திரமாய் அரண்மனையின் உள்ளே நுழைந்தானோ அப்படியே வெளியேறி விட்டான். மறுநாள் அவ்வூர் ஆற்றங்கரையில் சாமியார் வேடத்துடன் போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான்.

அரண்மனை அதிகாரிகள் வந்தார்கள். ஆற்றங்கரையில், மரங்களின் அடியில் ஆங்காங்கே உட்கார்ந்து இறைவனை நோக்கித் தொழுதுகொண்டிருந்த ஒவ்வொருவரிடமாகச் சென்றார்கள். “ஐயா, தாங்கள் எங்கள் அரசன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று கேட்டார்கள். குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என்று வந்திருந்த அந்த உண்மையான சாமியார்கள் இளவரசியைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்கள். அதிகாரிகள் அரசருடைய விருப்பத்தை எவ்வளவோ எடுத்துக்கூறியும் அந்தச் சாமியார்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தார்கள். மற்ற சாமியார்கள் மறுத்துவிட்டதைக் கவனித்த திருடன், தான் உடனே ஒப்புக்கொண்டால் ஐயம் தோன்றக் கூடும் என்று எண்ணி முதலில் மறுத்து விட்டான். ஆனால் அதிகாரி மேலும் மேலும் வேண்டியபோது இப்பொழுது ஒப்புக் கொள்ளலாமா, இன்னும் சிறிது நேரங்கழித்து ஒப்புக்கொள்ளலாமா? என்று நினைத்துக் கொண்டே பதில் பேசாமல் இருந்தான்.

அதிகாரிகள் அரசனிடம் திரும்பிச் சென்றார்கள். “மன்னவா, எந்தச் சாமியாரும் இளவரசியைத் திருமணம் புரிய ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இளம் வயதுடைய ஒரு சாமியார் இருக்கிறார். தாங்களே நேரில் வந்து கேட்டுக்கொண்டால் ஒருவேளை அவர் ஒப்புக்கொள்ளக் கூடும்” என்றார்கள். இதைக் கேட்ட அரசன் உடனே ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான்.

அதிகாரிகள் சுட்டிக்காட்டிய சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தான். தன் விருப்பத்தை எடுத்துக் கூறினான்.

திருடன் அப்பொழுது சிந்தித்தான்.

“சாமியார் வேடத்தில் இருக்கும் என்னை அரசனே வந்து கெஞ்சுகிறான். வேடத்தில் இருக்கும்போதே இவ்வளவு பெருமையிருந்தால், உண்மையான சாமியாராக இருந்தால் எவ்வளவு பெருமையுண்டாகும். அரசன் மகள் எனக்கு வேண்டாம். இன்று முதல் நான் உண்மையான சாமியாராகவே ஆகிவிடுகிறேன். இனி எனக்குக் கடவுளே எல்லாம்.”

மனந்திருந்திய திருடன் அரசன் மகளை மணக்க மறுத்து விட்டான். அரசன் திரும்பச் சென்று விட்டான். அந்தத் திருடனோ, உண்மை பக்தனாகி பிற்காலத்தில் ஒரு பெரிய மகாத்மா ஆகிவிட்டான்

உயர்ந்தவர்களைப் போல் வேடம் போடுபவர்களுக்கு சில சமயங்களில் உயர்ந்த எண்ணங்களும் உண்டாகும்.

உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும்,

***

நன்றி : நாரா நாச்சியப்பன் , அன்னை நாகம்மை பதிப்பகம்

Friday, October 26, 2012

அக்னிப் பறவை - ஹமீது ஜாஃபரின் ஹாரிபிள் ஜோக்கோடு...

'ஒண்ணு அனுப்பியிக்கிறேன், பாருங்க' என்று நம்ம நானா சொன்னதும் மாணவி மலாலாவைச் சுட்ட தாலிபான் மடையர்களை வாரப்போகிறார் போலும் என்று நினைத்தேன். இல்லை, இது வேறு. நானா சமகாலத்தில் இல்லை. அந்தக்காலத்திற்கு போய்விட்டார், ஆபாசம் குறையாமல்.  திடீரென்று சம்பந்தமில்லாமல் வரும் அரபி மெஹ்மூது சொல்வதுபோல நீட்டி நீட்டிப் பார்த்தால் 'இவ்வளவுதான் உலகம்' என்று விளங்கிவிடுகிறது. ஆனாலும் ஆண்கள் சும்மா இருக்கிறார்களா? 'Scent of Women' சினிமாவில் அல்பசீனோ சொல்வான். ''Women! What can you say? Who made 'em? God must have been a fuckin' genius. The hair... They say the hair is everything, you know. Have you ever buried your nose in a mountain of curls... just wanted to go to sleep forever? Or lips... and when they touched, yours were like... that first swallow of wine... after you just crossed the desert. Tits. Hoo-ah! Big ones, little ones, nipples staring right out at ya, like secret searchlights. Mmm. Legs. I don't care if they're Greek columns... or secondhand Steinways. What's between 'em... passport to heaven. I need a drink. Yes, Mr Sims, there's only two syllables in this whole wide world worth hearing: pussy.'"

'அக்னிப் பறவை' என்று ஏன் தலைப்பு வைத்தார்? அடியேனுக்கு விளங்கவில்லை. இருக்கட்டும், 'ஆமீன்குல'க் குஞ்சுகளுக்கு ஹஜ்பெருநாள் பரிசாக அளிக்கிறேன் அவருடைய அனுபவங்களை. படிச்சிட்டு நல்லா உருட்டுங்க, தஸ்பீஹை! - ஆபிதீன்
***



அக்னிப் பறவை - மலரும் நினைவுகள்

ஹமீது ஜாஃபர்

தொழில் கல்வி படிச்சு முடிச்சாச்சு. அடுத்து என்ன? வேலை தேடும் படலம். 'கால் காசா இருந்தாலும் கவர்மெண்டு காசா இருக்கணுமாம்'. மத்ததெல்லாம் சிவகாசி காசு பாருங்க! இதுமட்டுமல்ல 'கப்பலுக்கு போற பரக்கத்து வேறெ எதுலையும் வாராது'. நம்ம ஜனங்க இருக்குது பாருங்க வாழவும் விடாது சாகவும் விடாது. அதுலெயும் ஸ்பெஷல் கிழவிமாருங்க. எதையாவது சொல்லி மனசை மழுங்கடிச்சுடுங்க. ஊர்லெ இருந்து கவுரவமா எதாவது ஒரு வேலை செஞ்சா.. 'இதுலென்ன பரக்கத்து வரப்போவுது?' கப்பலுக்குப் போற பரக்கத்து வெறே எதிலாவது வருமா? அதாவது சிங்கப்பூரோ மலேயாவோ போயி புலுக்கை வேலைப் பார்க்கணும். அப்படி பார்த்தா கவுரவம்.

ஒரு காலத்துலெ நாகப்பட்டினத் துறைமுகத்துலெ கப்பலை நிறுத்திக்கிட்டு "சிங்கப்பூர் மலாயா போறவங்கல்லாம் வரலாம்" னு மணி அடிச்சு கூப்பிட்டான். வூட்டுலெ சண்டைப் போட்டுக்கிட்டு அல்லது பொண்டாட்டி கொஞ்சம் திரும்பி படுத்தாலும் கோவிச்சுக்கிட்டு உடனே கப்பல் ஏறிடவேண்டியது, வெறும் பதினாறு ரூபாதானெ டிக்கட்டு, பாஸ்போர்ட்டு
மண்ணாங்கட்டி ஒண்ணும் கிடையாது. அந்த செழிப்பா இப்போதிருக்கு? பவுனு நாற்பதோ ஐம்பதோ வித்த காலம். கொஞ்ச காசு இருந்தா போதும், பை நெறைய சாமான் வாங்கிட்டு வந்தாலும் மிச்சக் காசு இருக்கும். ஆனால் இப்பொ பை நிறைய காசு கொண்டு போனால் கை நிறையக்கூட சாமான் வாங்க முடியலெ. இந்த வார்த்தயை எங்க பாட்டியாகூட அப்ப
சொன்னாக, கறி வீசை (1கி 400கிராம்) 8ரூபா வித்த காலத்துலெ விலை ஏறிப்போச்சு, வெள்ளைக்காரன் காலம் மாதிரி இல்லேன்னு சொல்லிக்கிட்டிருந்தாக.

படிச்சு முடிச்சுட்டு பார்க்காத பேப்பர் இல்லை, போடாத அப்ளிகேஷன் இல்லை. தினமும் போஸ்ட்மேன் குப்பண்ணனைப் பார்த்து "எதாச்சும் நமக்கு உண்டா?"ன்னு கேட்காத நாளுமில்லை கண்டாலே உதட்டைப் பிதுக்குவாரு. திடீரென்று ஒரு நாள் தினத்தந்தியிலெ முழுப்பக்க விளம்பரம், ஆவடி டேங்க் ஃபாக்டரியிலெ எல்லா கேட்டகிரிக்கும் வேலை காலி இருப்பதாக
விளம்பரம், நாங்க ஒரு செட்டா அப்ளிகேஷன் போட்டோம். எதிர்வீட்டு கூட்டாளிக்கு இண்டர்வியு வந்துச்சு நான் குப்பண்ணனைப் பார்த்து ஏங்கினதுதான் மிச்சம். அவரு என்னைப் பார்த்தாலெ "ஒன்னுல்லை தம்பின்னு" சொல்லிடுவாரு.

அதிர்ஷ்டம்னா சொல்லிக்கிட்டா வரும்? லூஸு மோகன் சொன்னமாதிரி அது இஷ்டத்துக்கு வர்ரதுக்குப் பேருதான் அதிர்ஷ்டம். அஷ்டலச்சுமியான அதிர்ஷடத்துக்கு என்னைக் கண்டா

பிடிக்கலைப் போலும். எதோ அட்ரஸ் மாறிப்போய் என்னிடம் வந்தாள் ஒரே ஒரு தபா. துபையிலெ, டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது குதிரைக் கொம்பா இருக்கிற காலத்திலெ(இப்பவும் அப்படித்தான்) ஒரே டெஸ்டில் லைசென்ஸ் எடுத்தேன். அவளை எப்பவும் கைலெ வச்சுக்கலாம்னு படாத பாடுபட்டேன். ஒனக்கு வேண்டியதெல்லாம் தாரேன், நீ சொல்றபடி நடக்கிறேன்,
உன் அடிமை என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஊ...ஹும், எவனையோ தள்ளிக்கிட்டுப் போயிட்டா. இருபத்தொரு வருஷமா தேடிக்கிட்டு இருக்கேன். எங்கே இருக்காள்னே தெரியலெ.

நான் படுற பாட்டைப் பார்த்துட்டு வாப்பா திடீரென்று ஒரு நாள், "தம்பி, சர்ட்டிபிகேட்லாம் அட்டஸ்ட் பண்ணி வச்சிருக்கியா? இல்லைன்னா நம்ம அலாவுதீனிடம் அட்டஸ்ட் பண்ணிக்க" ன்னு ரொம்ப அக்கரையோடு சொன்னாஹ. அப்பவெல்லாம் போட்டோ காப்பி எல்லாம் கிடையாது ஈ அடிச்சான் காப்பி மாதிரி சர்ட்டிபிக்கேட்டை டைப் பண்ணி அதுலெ யாராவது ஒரு கெஜட்டட் ஆபிஸரிடம் கையெழுத்து வாங்கிட்டா போதும், அட்டஸ்ட் ஆயிடும்.

அலாவுதீன் மாமா, வாப்பாவோட க்ளாஸ் மெட், கூட்டாளி; உத்தியோகம் ஃபஸ்ட் கிளாஸ் மாஜிஸ்ட்ரேட். சைக்கிள்லெ லைட் இல்லாமெ போறது, டபுள்ஸ் போறது, இந்த மாதிரியான பெட்டி கேஸுக்கெல்லாம் அவர்தான் ஜட்ஜ். ஒரு தடவை 'போலிஸ்காரன் மகள்' செகண்டு ஷோ படம்  பார்க்கிறதுக்கு எங்க அஜரத்தை டபுள்ஸ் வச்சுக்கிட்டு லைட்டும் இல்லாமெ
வேகவேகமா சைக்கில்லெ போனபோது இருட்டுலெ ஒளிஞ்சுக்கிட்டிருந்த போலீஸ் எங்களைப் பிடிச்சுட்டான். நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். ஒண்ணு காசு கொடு இல்லைன்னா கேஸ் போடுவேன்னு ஒரே நிலையா நிண்டார். முடிவா கேஸ் போடுறதா இருந்தா போட்டுக்குங்க சார் ஆனா அங்கேயும் காசு கட்டமாட்டேன். மாமாதான் ஜட்ஜு அங்கே
பார்த்துக்கிறேண்டு தெளிவா சொன்னேன். "நீ ரொம்ப பேசுறே, டபுள் கேஸ் போடுறேன்" ன்னு எழுதிட்டார்.

கேஸு வர்ரதுக்கு மொதல் நாளே மாமாவிடம் விஷயத்தை சொல்லிட்டேன். ஏண்டா லைட்டில்லாமெ டபுள்ஸ் போனே? ன்னு சின்னதா கோவிச்சுக்கிட்டு கேஸன்னைக்கு கோர்ட்டுக்கு வராமெ இருந்திடாதே,  பஞ்சரான சைக்கிளை தள்ளிக்கிட்டுப் போனேன்னு மாத்திரம் அங்கே சொல்லு நான் பார்த்துக்கிறேன்" னு ஐடியா கொடுத்தாஹ. கோர்ட்டுலெ அஹ சொன்னது
மாதிரியே சொன்னேன். அவ்வளவுதான் போலிஸ்காரரை லெஃப்ட் ரைட்டுன்னு ஏறு ஏறினாஹ. வெளியே வந்த போலிஸ்காரர் "இனிமே துலுக்கப் பசங்களை புடிக்கமாட்டேன், போங்கதம்பி" அப்டீன்னார் என்னிடம் மறுவாதையா.

நாளைக்கு தஞ்சாவூர் போகணும் ரெடியா இருன்னு வாப்பா மொதல் நாளே சொன்னாஹ. எதோ வேலை செட்டப் பண்ணி வச்சுருக்காக என்கிற நெனப்புலெ நானும் இருந்த ஒரே பேண்டை தொவச்சு அயர்ன் பண்ணி இருக்கிற சர்ட்டிபிக்கேட் ஒரிஜினல் ப்ளஸ் அட்டஸ்ட்டட் காப்பி எல்லாத்தையும் ஒழுங்கு படுத்தி தயாரானேன். காலை ரயிலைப் புடிச்சுப் தஞ்சாவூர் போனது வேலைக்கல்ல, எம்ப்ளாய்மெண்டு எக்சேஞ்ச். எனக்கு "சீ" ன்னு போச்சு. சீதேவி வாப்பாவாச்செ, ஒன்னும் சொல்லாமெ பதிவு பண்ணிக்கிட்டு வந்தேன்.

சும்மா சொல்லப்டாது நம்ம காங்கிரஸ் கவர்மெண்டு என்னை மாதிரி குடிமகன் மேலே அக்கரையோடு போட்டத் திட்டத்தை நம்ம அண்ணா கவர்மெண்டு ஃபாலோ பண்ணியதால், பதிவுப் பண்ணி ரெண்டுமூணு மாசத்துலெ மஞ்சக்கொல்லை மகா புத்திரனான அடியேனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வந்துச்சு. NMEP டிப்பார்ட்மெண்டிலேந்து. NMEP ன்னா National Malaria Eradication Program அதாவது பூச்சி மருந்து அடிக்கிற யாவாரம், வீடுவீடாப் போய் மருந்தடிக்கிறது. அந்த ஏரியாவுலெ எல்லாத்தையும் தெரியும்கிறதாலே லோக்கல் ஆட்களை தேர்ந்தெடுத்து அந்த பொறுப்பை ஒப்படைப்பது அவங்க வழக்கம், அந்த வகையிலெ எனக்கு இந்த சான்ஸு வந்துச்சு. இது ஒன்னும் பெப்பர்மெண்ட்(பெர்மனண்ட்) வேலை கிடையாது. டெம்ப்ரவரிதான், தினக்கூலி, மருந்தடிக்க ரெண்டுபேர் நம்மகூட வருவாங்க, நாம வீட்லெ உள்ளவங்களிடம் கன்வின்ஸ் பண்ணி மருந்தடிக்க வைக்கணும்.  'நாளைக்கு கிடைக்கிற பலாப்பழத்துக்கு இன்னைக்கு கிடைச்ச கலாப்பழமே மேல்'னு இந்த புத்தி(ர) சிகாமணியும் வேலையை ஒப்புக்கொண்டான்.
ஆனால் நல்ல எக்பீரியன்ஸ் கெடச்சுது. சின்னபுள்ளையிலெப் பார்த்து வீட்டோட அடங்கி இருந்த சிறுசுகளை மறப்புக்கிடையிலெ பார்க்கும் வாய்ப்பு கெடச்சுது. அதைவிட சில பெருசுகளிடமிருந்து கெடச்ச அட்வைஸ், உம்மா..டி....! "ஏன் வாப்பா பயணம் போவாமெ இந்த வேலைக்கு வந்திருக்கே?" ன்னு செலதுகளும், "இதுக்கு வர்றதெவிட வயலுக்கு மருந்தடிச்சா இன்னு நல்ல காசு கிடைக்கும்"னு சில எடக்குப் புடுச்சதுகளும், "ஒனக்கு ஏம்பா இந்த வேலை"ன்னு சிலதுகள் சொன்ன பரிதாப வார்த்தைகளையும் கேட்கவேண்டியிருந்துச்சு. விதி.!

குலத்தொழில்னு அந்த காலத்துலெ ராஜாஜி சட்டம் கொண்டுவந்தாராம். அல்லாஹுத்தாலா ஏற்கனவே அந்த திட்டத்தைப் போட்டுட்டான் போலும். பாட்டனார், வாப்பா எல்லத்துக்கும் ரைஸ்மில் தொழில். அவங்க எல்லாம் மொதலாளியா இருந்தாங்க, எங்க வீட்டுக்கே மில்லுக்காரர் வீடுன்னுதான் பேரு. ஒரு நாள் குப்பண்ணன் என்னை தேடிப்பிடிச்சு "தம்பி இண்டர்வியூ
வந்திருக்குன்னு ஒரு கார்டை தந்தாரு. எப்பவோ பேப்பரைப் பார்த்து போட்ட அப்ளிகேஷனுக்கு அழைப்பு வந்திருக்கு.

மாடர்ன் ரைஸ்மில்லுக்கு மெஷின் ஆப்பரேட்டர் வேணும்னு ஒரே நேரத்தில் ரெண்டு விளம்பரம் வந்திருந்துச்சு. ஒண்ணு கல்லக்குறிச்சி இன்னொன்னு திருச்சி. ரெண்டுக்குமே அப்ளை பண்ணினேன். கல்லக்குறிச்சியிலிருந்து இண்டர்வியூ வந்திச்சு. அந்த ஊர் எங்கே இருக்குன்னே தெரியாது, கார்டை எடுத்துக்கிட்டு ஸ்டேஷன் மாஸ்டர் ஜீவராஜிடம் ஓடினேன். அவர்தான்
அப்பொ குரு, கூட்டாளி, அட்வைஸர் எல்லாம். பார்த்துவிட்டு போக ரூட் சொன்னார். ஆனால் ஜாக்கிரதை அது ஒரு மாதிரியான ஊர் என்றார் கூடவே.

மத்தியானம் இண்டர்வியூக்கு முதல் நாள் ராத்திரி மெட்ராஸ் மெயிலைப் பிடிச்சு சிதம்பரத்திலெ எறங்கி ஜீவராஜ் சாரோட மெஹ்ருபானி ரெக்கமண்டேஷன்லெ ஸ்டேஷன் ரிடையர் ரூமிலெ சின்ன தூக்கத்தைப் போட்டு அங்கேயே சின்ன குளியலையும் போட்டுட்டு மறு நாள் காலை விருத்தாச்சலம் பஸ்ஸை பிடித்து அங்கிருந்து உளுந்தூர்பேட்டை வழியா
கல்லக்குறிச்சியை அடைஞ்சேன்.

பஸ்ஸை விட்டு எறங்கியதும் மொதல்லெ கண்ணுலெ பட்டது AKT LODGE. பெரிய கொட்டை எழுத்துலெ லாட்ஜ்மேலே இருந்த போர்டு. மணி பத்தரையாயிடுச்சு. எங்கேயும் போவாமெ விசாரிச்சுக்கிட்டு மாடர்ன் ரைஸ் மில்லை அடஞ்சேன், பஸ் ஸ்டாண்டிலிருந்து கொஞ்சதூரம்தான், எனக்கு முந்தியே அங்கே ஒரு கூட்டம் நின்னுக்கிட்டிருந்துச்சு. இண்ட்ரவியூ மதியம்
ரெண்டு மணிக்கு ஏகப்பட்ட நேரம் இருந்துச்சு, மில்லை ஒரு சுத்து சுத்திப்பார்த்துட்டு வயத்துக்கும் கொஞ்சம் இரை எடுத்துக்கிட்டு, ஒரு வேளை தங்குறதா இருந்தா லாட்ஜ் சரியாவருமான்னு விசாரிச்சப்பொ ஒரு மாதிரியா சொன்னாங்க, இருந்தாலும் ஒரு முடிவா இண்டர்வியூ அட்டண்டு பண்ணினேன். பத்து நிமிஷம்தான் "நீங்க போலாம் அழைப்பு வரும்"னு
சொன்னாங்க. எனக்கு முந்தி இண்டர்வியு அட்டண்டு பண்ணிப் போனவங்கள் சிலபேரிடம் என்ன கேட்கிறாங்கன்னு விசாரிச்சப்ப சர்ட்டிபிகேட்டைப் பார்த்தாங்கன்னாங்க, சிலர் மூஞ்சியெ தொங்கப்போட்டுக்கிட்டுப் போனாங்க. 'வந்தால் மாங்கா, போனால் கல்லு' என்கிற தத்துவத்துலெ தைரியத்தோடு இண்டர்வியு அண்டண்டு பண்ணிட்டு சின்ன நம்பிக்கையோடு பஸ்
ஸ்டாண்டு வந்தபோது திருச்சி பஸ் புறப்பட்டுக்கிட்டிருந்துச்சு அதுலெ ஏறி திருச்சி போனேன். அங்கேதானே நம்ம செட் ஜமால்லெ படிச்சிக்கிட்டிருந்தாங்க.

படிச்சதுதான் ஜமால், தங்கிருந்தது ஒண்ணு ஆரிய பவன் அப்புறம் பேர்ட்ஸ் லாட்ஜ். செம அரட்டைங்க. மறு நாள் திருச்சி மாடர்ன் ரைஸ்மில்லை தேடிப்பார்த்தா அது ரொம்ப தூரத்துலெ எங்கேயோ ஒரு கிராமத்துலெ இருக்கு. சரியா வராதுன்னு ஊருக்கு நடையெ கட்டி நேரா நம்ம ஜீவராஜ் சாரைப் பார்த்து விஷயத்தை சொன்னேன். "தம்பி, நீ பாஸாயிட்டே" ன்னார். அவர்

எந்த ஆங்கிள்லெ சென்னார்னு எனக்குத்தெரியாது, ஆனா குத்து மதிப்பா சொல்லே.குலத்தொழிலுக்கு ஆர்டர் வந்துடுச்சு. ஆர்டரை எடுத்துக்கிட்டு மறுபடியும் ஜீவராஜ் சார்கிட்டே...

"தம்பி, அது ஒரு மாதிரியான ஊருன்னு மொதல்லெ சொன்னேனே ஞாபகமிருக்கா?"

"ஆமா சார்."

"இப்பதான் நீ ஜாக்கிரதையா இருக்கனும். ஊரு புதுசு, நீ எள வட்டம், கேட்க யாருமில்லேன்னு ரிங் டென்னிஸ் வெளையாடிடாதே! நீ செய்யமாட்டே எனக்கு நம்பிக்கை இருக்கு

இருந்தாலும் சொல்லிவைக்கிறேன்".

"ஒரு மாசத்துக்கு லிமிட்டட் டிரஸ் எடுத்துக்க, காலையிலேயெ புறப்பட்டு போயிடு, போனதும் உடனே ரூம் பாரு, ஒடனே கிடைக்காதுதான், அங்கே வேலை செய்றவன் யாரையாச்சும் பிடிச்சு கூட தங்கிக்க. லாட்ஜுலெ தங்கிடாதே."

அவர் சொன்ன தீர்க்கதரிசனம், அங்கே வேலை பார்த்த ரெங்கபாஷ்யம் என்கிற தஞ்சாவூர்காரரைப் பிடிச்சு தங்கறதுக்கும் போஜனத்துக்கும் ஏற்பாடு செஞ்சுக்கிட்டேன். ரெண்டு நாள்லெ லாட்ஜைப் பத்திய விபரம் முழுசா கிடைச்சுது. அடுத்த பதினைஞ்சு நாள்லெ லாட்ஜோட ஐக்கியமாயிட்டேன்.

அதாவது அப்பதான் ரைஸ்மில் புதுசா ஸ்டார்ட் பண்ணுறாங்க. மெஷனரி எரக்சன் கமிஷனிங்கிற்காக வந்திருந்த என்ஜினியர் மாதவன் எனக்கு பழக்கமாயிட்டார். அவர் அந்த லாட்ஜிலெதான் தங்கிருந்தார். சாயந்திரம் என்னை அங்கே வர சொல்லிடுவார். மறு நாள் வேலையெப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவார். அப்புறம் என்னன்ன மாதிரியான பிரச்சினைகள் வரும்

எப்படி நிவர்த்திப் பண்ணுவது, மெஷினையே அலக்கலக்க பிரிச்சு எப்படி மாட்டுறது என்பதெல்லாம் சொல்லிக் கொடுப்பார். நல்ல மனுசன் மலையாளி, மெட்ராஸ் செட்டுல்டு.

சும்மா சொல்லப்டாது, நல்ல அருமையான லாட்ஜ். பொறக்கி எடுத்த மாதிரி பச்சைக் கிளிலேந்து பஞ்சவர்ன கிளி வரை, பொன்னாந்தட்டான், கொண்டலாத்தி, மஞ்சக்கொழுப்பான் இப்படி பல குஞ்சுக்குருவிகள். ஒன்னுரெண்டு கருங்குயில்கள் கூட இருந்துச்சு. சேலம் பெங்களூர் இப்படி நார்த்தர்ன் பார்ட்டுலேந்து வரும் குருவிக் கூட்டம் ரெண்டு மூணு நாள் இருந்துட்டு மெட்ராஸ் போயிடும், மெட்ராஸிலிருந்து வரும் மேப்படிக்கள் அதேமாதிரி ரெண்டு மூணு நாள் இருந்துட்டு பெங்களூர் ஏரியாவுக்குப் போயிடும். சுருக்கமா சொன்னா அது ட்ரான்ஸிட் ஹப்பு, ஃபாரீஸ்ட்டுக்கு சிங்கப்பூர் இருக்கிறமாதிரி, மிடிலீஸ்ட்டுக்கு துபை இருக்கிற மாதிரி மெட்ராஸ் பெங்களூருக்கு அது hub. எதுவுமே நிரந்திரம் கிடையாது. இதுக்கென்று தனி மாம்ஸ் குரூப் இருந்துச்சு.

குருவிகள்னா குருவிகள்தான் எதுவுமே சோடை கிடையாது, எல்லாம் தேங்காய்கீத்து. சுண்டுனா ரெத்தம் வருதோ இல்லையோ அகர்வால் கடை பாதாம் அல்வா மாதிரி கரைஞ்சிக்கிட்டு எறங்கும். அந்த கூட்டத்துலெ இந்த மனுசன் எப்படி தங்கிருக்கார்னு ஆச்சரியமா இருந்துச்சு. எப்படி சார் தங்கியிருக்கிங்கன்னு கேட்டேன். இப்ப பார்த்தில்ல நாம மறுநாள் வேலையைப் பத்தி டிஸ்கஸ் பண்ணும்போது ஒன்னுரெண்டு ஒரசிக்கிட்டிருந்துச்சே, இந்த ஒரசலோடு சரி தொல்லை கொடுக்காது நாம கூப்பிட்டாத்தான் வரும், மத்தபடி எந்த தொந்திரவும் கிடையாது அப்டீன்னார்.

"ஏன் சார் ரெய்டு...?"

"அது எப்பவாச்சும் நடக்கும், ராத்திரி புடிச்சுக்கிட்டுப் போனா காலையில் திரும்ப வந்துடும். AKT லாட்ஜோட மகிமை".

உண்மையும் அப்படித்தான். சங்கராபுரம் ரோட்டுலெ அஞ்சு நிமிஷ தூரத்துலெதான் போலிஸ் ஸ்டேஷன் இன்னும் பத்து தப்படித் தள்ளி கச்சேரி(கோர்ட்) இருக்கு. அவ்வளவு தூரத்துக்கு அதுக போவாது. ஒரு சில நேரங்கள்லெ மாம்ஸ்தான் கையிலெ டவலைப் போட்டு மறைச்சிக்கிட்டு வந்து நிப்பாங்க கூட ரெண்டு போலிஸ் செக்யூரிட்டி இருக்கும். இதெல்லாம்
ஏகேட்டியார் ஊர்லெ இல்லாத நேரத்துலெதான் நடக்கும்.

ஏ. கே. டி, ரொம்ப நல்ல மனுசன், பெரிய தரும பிரபு, ஏழைப் பங்காளன். ஏகேடி லாட்ஜ், ஏகேடி ரைஸ் மில், ஏகேடி தாணிய மண்டி இப்படி பல தொழில்கள், ஏகப்பட்ட நெல் கரும்பு விவசாய நிலங்கள். அப்போதே அவர் கோடீஸ்வரர். ஆனாலும் ரொம்ப சிம்பிள். எளிமையான வாழ்க்கை. சாயந்திர நேரத்துலெ லாட்ஜுக்கு எதிர்தார்போல் சங்கராபுரம் ரோட்டுலெ இருக்கிற தாணிய மண்டி வாசல்லெ பழைய கயத்துக்கட்டில்லெ உட்கார்ந்திருப்பார். மேலே போட்டிருக்கிற பணியன் கிழிஞ்சிருக்கும், வேஸ்டிகூட அங்கங்கே ஓட்டை இருக்கும். ஒரு முசாபர் மாதிரி உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பார். அவரை சுற்றி எடுபிடிகள் நிக்கும் அவங்கல்லாம் நல்ல சட்டைப் போட்டு நீட்டா இருப்பாங்க. ஐயான்னு யாரும் வந்தா தர்மம் பண்ணிக்கிட்டுதான் இருப்பாரு, நெறைய தர்மம் பண்ணுவாருன்னு சொல்லுவாங்க. அவருடைய கார்லேந்து, டிராக்டர், மில், லாட்ஜ், வீடு இப்படி எல்லா வஸ்துக்களும் ஒரே கலர். ஆரஞ்சு
கலர்லெதான் இருக்கும் அதான் அவரோட ஃபேவரிட் கலர்போலும், ஆனால் அவர் மட்டும் ஒயிட் அண்டு ஒயிட்லெதான் இருப்பாரு.

இது ஒரு பக்கம்னா நான் தங்கிருந்த இடம் வேறே மாதிரி. நல்ல ரூம்தான் ஆனால் பக்கத்துலேயெ ரெண்டு மூனு கெண்டைமீன் இருக்கத்தான் செய்தது. தூண்டிலே இல்லாமெ ஈசியா புடிக்கலாம். கடைசிவரை ஜீவராஜ் சாரோட நம்பிக்கைக்கு துரோகம் பண்ணக்கூடாதுன்னு ஒரு வைராக்கியம். ஊருக்குப் போனா குறிப்பா கேப்பாரு. ஏன்னா வயசு அந்தமாதிரி பருவம்.
இருபது வயசு. சும்மாவா சொன்னான் அரபி?

துபையிலெ என்கூட வேலை செஞ்ச அரபி,  மெஹ்மூது ஒரு மூடுலெ சொன்னான், "என் பொண்டாட்டி தொல்லை தாங்கமுடியலெ". செலவு நெறைய வைக்கிறாள்போலும்னு

நெனைச்சேன். அதல்லவாம் சதா ஊறல் போட்டுக்கிட்டே இருக்கணுமாம். "என்னாலெ முடியலெ" அப்டீன்னான்.

"ஏன் மெஹ்மூது பாய் அப்படி சொல்றே?"

"எனக்கு வயசாயிடுச்சு."

"என்ன உனக்கு நாப்பத்தஞ்சு அம்பது இருக்கும். வயசுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லையே நீதான் நல்லா ஜவான் மாதிரி ஆரோக்கியமா இருக்கியே.."

"அதல்ல, உன் கையெ நீட்டு."

நீட்டினேன்.

"அஞ்சு வெரலையும் நல்லா விரி."

விரிச்சேன்.

"கையை படுக்கையில் வைக்காதே, இப்படி  நிமிர்த்தி வச்சுக்க" என்று திருப்பிவிட்டான்.


கட்டை விரலைப் பிடிச்சிக்கிட்டு "இது எங்கே பார்க்குது?"


"வானத்தைப் பார்க்குது."

"வானத்தையல்ல உன் முகத்தைப் பார்க்குதுன்னு சொல்லு, இது இருபது வயசு. ஆட்காட்டி வெரல்..?"

"மேலே பார்க்குது."

"தெளிவா சொல்லு."

"கொஞ்சம் சாஞ்சு வானத்தைப் பார்க்குது...."

"ம்...., இது முப்பது வயசு. நடுவுலெ இருக்கிற பெரிய விரலு...?

"உன்னைப் பார்க்குது.."

"இது நாற்பது வயசு. மோதிர விரலு...?"

'தூரத்துலெ வர்ற காரைப் பார்க்குது.."

"இது அம்பது வயசு. சுண்டு விரலு...?"

"தரையெப் பார்க்குது.."

"இது அறுபது வயசு.."

"இப்ப சொல்லு எனக்கு எவ்வளவு தாக்கத்து இருக்கும்னு.."

"அன மாஃபி கலாம். (என்னால் ஒன்னும் சொல்லமுடியாது) அப்டீன்னு சொல்லிட்டு சில பேருக்கு ஆறவது விரல் இருக்கே, அதுக்கு என்ன சொல்றே?"

"அது ஒன்னத்துக்கும் லாயக்கு படாது, எழுபது வயசு" அப்டீன்னு ஒரு போடுபோட்டான்.

"மெஹ்மூது பாய், சூ...ப்பர். லைஃப்லெ நிறைய கத்துக்கவேண்டியிருக்கு". இப்படி ஒரு உன்னதமான உதாரணத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை.

பக்கத்து வீட்டுலெ, இல்லை பக்கத்து ரூமிலெ ஆமாம் குறுக்கே ஒரு சுவர்தான், இரண்டு வீடு. கங்காராம் அதிபுத்திசாலி ஒரு வீட்டை ரெண்டா தடுத்து ரெண்டையும் வாடகைக்கு விட்டுட்டு கொல்லைப் பக்கம் ஒரு குடிசையைப் போட்டுக்கொண்டு அதுலே தங்கிக்கொண்டான். பீபி, புள்ளை கிடையாது. 

நாங்க ஒரு ரூம், செல்வியம்மா ஒரு ரூம் அதாவது வீடு வாடகைக்குப் புடிச்சிருந்தோம். செல்வியம்மா புள்ளைப் பெத்து கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் இருந்தாள், ரெண்டாவது பிரசவம். பக்கத்து வீட்டுக்காரியாச்சேன்னு நானும் ரூம்மேட் தமிழரசனும் ஆஸ்பத்திரிக்குப் போக புறப்பட்டபோது இவள் வீட்டுக்கு வந்துட்டாள். என்ன மறு நாளேன்னு கேட்டதுக்கு, "அந்த கசம்புடிச்ச ஆஸ்பத்திரியிலெ எவ இருப்பாள். குவாட்டர் பிராந்தியெ உள்ளே ஏத்தினேன். உடம்பு கல கலன்னு ஆயிடுச்சு, வந்துட்டேன்" என்றாள். புருஷன் பாவம்.. ஹோட்டல் வச்சிருந்தார் ராத்திரி வியாபாரம்தான் களளகட்டும். சேலம் ராசிபுரத்திலேந்து வரும் பால் வண்டிகள்(milk van) அத்தனைக்கும் கல்லக்குறிச்சிதான் ஸ்டாப் ஓவர். எல்லா டிரைவர்மாரும்
அவர் கடையிலெதான் சாப்பிடுவாங்க, அத்தனை டேஸ்ட். சாயந்திரம் ஆறு மணிக்குப் போனா மறு நாள் காலை எட்டு மணிக்குத்தான் வருவார். பகல் ராத்திரி எல்லாம் இந்த அம்மாவோட ராஜ்யம்தான். அது ஒரு டைப்பு.

தண்ணீர் ஊத்த வரும் சௌராஸ்ட்ர குட்டி வேறொரு மாதிரி... குளிக்கிற நேரம் பார்த்து தண்ணீர் கொண்டு வருவாள். கேட்டால் இப்பதானே முனிசிபாலிட்டி பைப்புலெ தண்ணி வருது என்பாள். அவளை சொல்லி குத்தமில்லை. நாமதான் குளிக்கிற டையத்தை மாத்திக்கணும். ஆனால் ரெண்டையுமே மாத்தமுடியாது. "எண்ணெய் தேச்சு குளிக்கிறதா இருந்தா சொல்லுங்க
நாலு கொடம் ஜாஸ்தியா ஊத்துறேன்." என்பாள். கொஞ்சம் விட்டா முதுகும் தேச்சு விடுவாள். அவள் கங்காராமுக்கு உறவு முறையா இருந்தாலும் மனுசன் கண்டுக்க மாட்டார். இன்னும் சொல்லப்போனா அவர் செக்யூரிட்டி மாதிரி.

என்ன செய்யிறது? கல்லக்குறிச்சி என்ன தென் ஆற்காடு மாவட்டமே வானம் பார்த்த பூமி, தண்ணீர் கிடையாது. கிணற்று நீர் பாசனம்தான் விவசாயம். பக்கத்துலெ கோமுகி ஆறு இருக்குது. இருந்து என்ன செய்ய? திட்டுத் திட்டா அங்கெங்கே கொஞ்சம் தண்ணி கிடக்கும். கொள்ளிடத்திலெயாவது ஒரு ஓரமா கோடு கிளிச்சது மாதிரி தண்ணி ஓட்டிக்கிட்டிருக்கும், இங்கே அதுவும் கிடையாது. ஏரி இருக்கு அதுலெ நீர்ப்பூசணி வெளைஞ்சிக்கிட்டிருக்கும். அதனாலெ குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் காசு கொடுத்து வாங்கவேண்டிய நிலை.

நாலு வீடு தள்ளி இருந்த பாலக்காட்டு ஐயர். ரொம்ப ஆச்சாரமான ஃபேமிலி, ஹோட்டல் பிஸினஸ் கடை AKT லாட்ஜ் பில்டிங்கிலெதான். ரொம்ப டீஸண்டான சாப்பாடு கிடைக்கும். அங்கேதான் எங்களுக்கு அக்கவுண்ட். நாங்க பக்கத்துவீட்டுக்காரங்க என்பதால் எங்களுக்கு சலுகை. அவருக்கு ரெண்டு மகள் ஒண்ணு கல்யாணம் ஆகி புருஷனோடு இருந்துச்சு. அதுக்கு
லதான்னு ஒரு மவள் மூணு வயசு பார்க்க என் லாத்தா மகளை உரிச்சு வச்சமாதிரி இருப்பாள். அதனாலெ அவமேலே எனக்கு அலாதிப் பிரியம், போட்டா எடுத்து லாத்தாவிடம் காட்டியப்ப "என்ன தம்பி நம்ம சேத்தான் மாதிரி அப்படியே இருக்காள்" ண்டு ஆச்சரியப்பட்டாஹ. வேலைவிட்டு வரும்போது மிட்டாயெல்லாம் வாங்கிக்கொடுப்பேன் அதனாலெ என்னை கண்டால் ஒட்டிக்கொள்வாள். இதை சாக்காவச்சு என்கூட இருந்த தமிழரசன் சின்னவள் சரஸ்வதியை கணக்குப் பண்ணிட்டான். அவளைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தகால்லெ நிண்டான்.

தமிழரசனுக்கு தஞ்சாவூர், வேளாளப்பிள்ளை வம்சம். வீடுகூட கீழ வாசல்லெ இருந்துச்சு. ரொம்ப கௌரவமான குடும்பம். ஒருமுறை அவன் வீட்டுக்குப் போயிருந்தப்ப அவன் அண்ணன், அப்பா, அக்கா எல்லோரும் முன்பின் பார்த்திராத என்னிடம் ரொம்ப சோஷியலாப் பழகினாங்க, அவங்க வீட்டுலெ கை நனைச்சப் பிறகுதான் என்னை விட்டாங்க.

இத்தனை நல்ல குடும்பத்துலெ பொறந்த இவன் செய்வது எனக்குப் பிடிக்கவே இல்லை. நான் சொன்னேன், "டேய் தமிழு, நீ தஞ்சாவூர் பச்சைத் தமிழன், வேளாளக் குடும்பம், அந்த ஏரியாவுலெ உள்ள எல்லாரும் உங்களை மதிக்கிறாங்க, அவள் மலையாளி, பாலக்காட்டு பிராமின், படிச்சிக்கிட்டிருக்கா சின்னப்பொண்ணு, ரெண்டுக்கும் ஒத்தே வராது, நீ எதாவது ஏடாகூடமாப் பண்ணி குடும்ப கௌரவத்தை கெடுத்துக்கொள்ளாதே". ம்ம்......... காதல் வேகம் எங்கே என் அட்வைஸ் ஏறுனுச்சு?

கல்லக்குறிச்சியில் வேலை கிடைச்சிருக்குன்னு சொன்னவுடனேயே சிலபேர் அங்கேயாப்பா அது ஒரு மாதிரியாச்சேன்னாங்க. அங்கே இருக்கிறவங்கல்லாம் மனுசங்களே இல்லை...? பஸ் ஸ்டாண்டை ஒட்டி பள்ளிவாசல் இருக்கு, நிறைய முஸ்லிம்கள் இருக்காங்க, ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வாழும் பெரிய ஊராக தெரியும்போது ஏன் ஒரு மாதிரியா பேசுறாங்கன்னு சந்தேகப்பட்டதுண்டு. ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துட்டு சொல்வது எனக்கு தப்பா பட்டுச்சு. இருந்தாலும் ஒரு ஏரியாவுலெ மட்டும் நெருடல் இருக்கத்தான் செஞ்சதுன்னு இங்கே வந்தபிறகுதான் தெரிஞ்சுது. வேலை கெடச்சுட்டுதேன்னு ஆண்டவனை மறந்துடாமல் தொடர்ந்து தொழுதுக்கொண்டுதானிருந்தேன். காலையிலெ சுபுஹுலையும் சாயந்திரம் மஃரிபுலையும் குழந்தைக்குட்டிகளோடு பள்ளிவாசல் வாசல்லெ வருசையா சிலபேர் நிப்பாங்க. தொழுதுட்டு வர்றவங்க அவங்க மேலே ஊதிட்டுப் போவாங்க. எங்க பக்கம் இது இல்லாததால் எனக்கு இது புதுமையா இருந்துச்சு, அதனாலெ நானும் ஊதிட்டுப் போவேன். ஆனால் கொஞ்சம் வித்தியாசம். தினம் வர்றவங்க வராமலிருந்தால் விசாரிப்பேன். அதாவது தொழுதுட்டு வர்றவங்க ஊதினால் வியாதி குணமாகும்னு அவங்களுக்கு நம்பிக்கை. எல்லாம் நம்பிக்கையிலெதானே இருக்கு. நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ முடியுமா?

அதுலெ ஒரு பாட்டிக்கு மட்டும் நல்லா ஊதணும் ஏன்னா நான் நாகூராண்டவர் ஊர்க்காரனாம். நான் அவ்லியாக் குஞ்சுன்னு அதுக்கு நெனப்பு போலிருக்கு. தொழுதுட்டு வர்ற சிலபேர் சீனஞ்சாடையிலெ போவாங்க. அப்படிப் போறவங்களைப் பார்க்கும்போது எனக்கு வருத்தம் வரும். எதோ அவங்க எதிர்பார்த்து வேலைவெட்டியெ விட்டுட்டு வந்து நிக்கிறாங்க, 'fooo...'ன்னு
ஊதிட்டுப் போறதுலெ என்ன கொறஞ்சு போவுது? அவநம்பிக்கை, தன்னால் ஒன்னும் ஆகாதுன்னு அவநம்பிக்கை.

அந்த ஊர் முஸ்லிம்கள் என்னை ஒரு மாதிரியா பார்ப்பாங்க ஏன்னா எனக்கு உருது தெரியாது. உருது பேசுறவங்கதான் அசல்னு அவங்க நெனப்பு, என்னமோ அவங்க பேசுறது லக்னொ உருது மாதிரி. 'வாளிமே பாணி லாக்கே... வாசமேலே ரக்கொ' உருது. அங்கேயும் ஒரு பள்ளப்பட்டிக்காரர் ஜவுளிக்கடை வச்சிருந்தாரு அதுலெ சேல்ஸ்மேனா இருந்த
ராமநாதபுரத்துக்காரர்தான் நமக்கு தோஸ்து. அந்த பள்ளிவாசல் இமாம் ஒருமுறை "இதர் நல்ல பொன்னு இருக்குங்கோ கண்ணாலம் பண்ணிக்குங்கோ" ன்னு சொன்னாரு, வெளங்கிடும்னு நெனச்சுக்கிட்டேன்.

ஆயிரம் தடவை சீர்காழி வழியா போயிருக்கேன், தாஜ் என்கிற மகா புருஷன் அறிமுகமில்லாமல் போயிட்டாரு. அவரு மட்டும் கெடச்சிருந்தால் கங்காராமை வேறு எடம் பார்க்க சொல்லிட்டு பக்கத்துலெ அவர் வூட்டுலெ உட்காரவச்சிருப்பேன். கூடவே கோமுகி டேமுக்கும் அழைச்சுப் போயிருப்பேன். கொடுப்புனை இல்லை.

பதினைஞ்சு இருபது கிலோமீட்டர் அந்தாண்டை உள்ள கோமுகி டேமைப் பார்க்க சாம்ராஜும் தமிழரசனும் மாரியப்பனும் வந்தாங்க. வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு வதக் வதக்குன்னு மிதிச்சிக்கிட்டுப் போய் தண்ணி இல்லாத டேமைப் பார்த்து வெறுத்துப்போனதுதான் மிச்சம். கல்வராயன் மலையிலெ மழை பேஞ்சாதானெ இங்கே தண்ணி வரும்.

சாம்ராஜ் நல்ல மனுசன், திருநெல்வேலி ஜில்லா தாழையூத்து அல்லது சாத்தான்குளம்னு நினைக்கிறேன், சரியா ஞாபகமில்லை. எங்க மில்லிலெ பாய்லர் ஆபரேட்டர். எக்ஸ் நேவி,இந்தியாவின் முதல் aircraft carrier INS VIKRANT லெ பாய்லர்மேனா இருந்தாராம். இங்லாந்திலேந்து கப்பலை டெலிவரி எடுத்துவந்த கூட்டத்துலெ இவரும் ஒருத்தர். கப்பலைப் பத்தி
தெரியாத எங்களை கப்பல் கதையா சொல்லி அசத்திக்கிட்டிருந்தாரு. கப்பல்லெயே ஊறின எனக்கு இப்ப மாதிரி இருந்தா போங்கனின்னு சொல்லிருப்பேன். 

சம்பளம் வாங்கின அன்னைக்கு செய்யிற ஃபர்ளான காரியம் சினிமாவுக்குப் போவது. அதுவும் சிவாஜி படம்னா உயிரு. அவரோட நடிப்பு மனசுலெ ஓடிக்கிட்டே இருக்கும். தெய்வ மகனைப் பார்த்துட்டு வழிஞ்ச கண்ணீரை யாருக்கும் தெரியாமெ  தொடச்சதை தமிழரசன் பார்த்துட்டு கங்காராமிடம் சொல்லி மானத்தை வாங்கிட்டான். உணர்ச்சி வசப்படுறது சிவாஜி

படம் மட்டும்தான். நம்ம எம்ஜியார் படம் நல்லா பொழுது போகும். அவரு சரோஜாதேவிக்கிட்ட செய்யிற சில்மிஷத்தை ரொம்ப ரசிப்பேன். கை அங்கே படுதோ இல்லையோ அங்கே படுறமாதிரி கேமராவின் ஆங்கிளும் சரோஜாதேவியோட முக இம்ப்ரஷனும் ஆண்டையோட நமட்டு சிரிப்பும் எனக்கு ரொம்ப இஷ்டம். இந்த மனுசன் சிவாஜி, பல படங்கள்லெ 
செத்துப்போறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கும் ஆனால் நம்ம அண்ணாத்தெ ஒரு படத்துலெக்கூட சாவமாட்டாரு. ஒரேயொரு படத்துலெ மட்டும் செத்துடுவாரு, அது ராஜா தேசிங்கு படம். என்ன செய்யிறது வரலாற்றை மாத்தமுடியதே! பிற்காலத்துலெ தன் பேருலெ ஒரு சினிமா வரும்னு தெரிஞ்சிருந்தா ஒரிஜினல் செத்திருக்கமாட்டாரு, தப்பிச்சுப் போயிருப்பாரு.

ஹெவி வெதர் (காத்தும் மழையுமா) இருக்கும்போது ப்ளேனை லேண்டிங் பண்றது ரொம்ப கஷ்டமாம். ஆட்டோ லேண்டிங் இல்லாமல் மேனுவல்லெதான் இறக்கணுமாம். அப்பொ பைலட்டோட நாடி நரம்பு அத்தனையும் வேலை செய்யுமாம். அந்த மாதிரி எனக்கு ஒரு நாள் இருந்துச்சு. அங்கே வாப்பா வந்த நாள். எவனோ ஊரோட சிறப்பை வச்சுக்கொடுத்துட்டான்
போலிருக்கு திடுதிப்புன்னு வாரேன்னு லட்டர் போட்டாஹ. நானும் அதுக்கு தகுந்தமாதிரி தயார் பண்ணிக்கிட்டு எந்த பஸ்ஸுலெ ஏறி எப்படி வரணும்னு தகவல் கொடுத்துட்டேன். நான் சொன்னபடியே கரெக்டா காலை பத்து மணிக்கு வந்து சேரும் பஸ்ஸில் வந்தாக. பஸ் ஸ்டாண்டுலேந்து பக்குவமா அழைச்சிக்கிட்டு ரூமுக்கு வந்துட்டேன். ஊரை சுத்திக்காமிச்சு, மில்லை சுத்திக்காமிச்சு, ஒரு இரவு தங்கிவிட்டு மறுநாள் புறப்படும் வரை வாலை சுருட்டி சுத்த சூஃபியாய் நடக்கவேண்டியதாயிடுச்சுன்னு சொன்னா பத்தாது. என்னுடைய அட்மாஸ்ஃபியரையே மாத்தி, வீட்டுக்காரர் கங்காராமை பாதுகாப்பா வச்சு சந்தேகப்படுற அளவுக்கு எதுவுமில்லைன்னு நம்பவைக்கிறதுன்னா சாதாரண காரியமா? 

ரெண்டு வருஷம் தண்ணி இல்லா காட்டுலெ இல்லே காடுன்னு சொல்லப்டாது சொர்க்கபூமியிலெ இருந்தபோது காசு கொஞ்சம் சேர்ந்துச்சு. வாங்குற சம்பளம் 180 லெ ரூமுக்கும் சாப்பட்டுக்கும் அறுபது அறுபத்தஞ்சு போயிடும், வூட்டுக்கு கொஞ்சம் அனுப்பினாலும் துண்டா அறுபது எழுபது மிஞ்சும். 'நண்டு கொழுத்தா வலையில் தங்காது' ன்னு எங்கப்பக்கம் ஒரு
பழமொழி உண்டு. சிங்கப்பூர் போகனும்கிற ஆசை ஊற ஆரம்பிச்சிடுச்சு. அந்த நேரம் பார்த்து சிங்கப்பூர்லெ இருந்த தாய்மாமா பிஸினஸ் ஆசையைக் காட்டினாரு. அதான் சாக்குன்னு ஐயா, தாயோடு புள்ளையா வந்துட்டாரு.

ஊருக்கு வந்திருந்த மாமா இனிக்கப் பேசி ஆசைக் காட்டியதோடு சரி, சிங்கப்பூர் போனபிறகு தன்னுடைய கூட பொறந்த அக்கச்சியா மவனை ஏத்திக்கிட்டவரு நம்ம விசயத்தில் சீனன் சாடை.  தண்ணி காமிக்கிறாருன்னு தெரிஞ்சபிறகு ஒட்டன் நாய்போல காத்திருக்காமல் மறுபடியும் வேலை தேடும் படலம்... இருந்த காசெல்லாம் போயிடுச்சு, சிங்கிள் டீக்கு சிங்கி
அடிக்கிற நிலமை, கல்லக்குறிச்சி போனால் கிடைக்கும் ஆனால் செல்ல மனமில்லை. எதிர்வீட்டு அமீருதீன் மூலமா மதுரையிலெ ஒரு வேலை கிடைச்சுது, பள்ளப்பட்டி ஹாஜியார் ஜவுளிக் கடையிலெ வேலை. சம்பளம் பெருசா இருக்காதுன்னு தெரியும். என்ன செய்யிறது? கௌரவத்தைப் பாத்தா காய வேண்டியதுதான், ஒப்புக்கொண்டேன்.

பாண்டியத் தலைநகரில் மூணுவருஷம், காலத்தைத் தள்ளிக்கிட்டிருந்தேன். பெருநாள், தீபாவளி பொங்கல் எல்லாம் அங்கேதான். பெருநாளன்று கடை ஸ்டாஃபுகளுக்குப் போடும் பகைர்கோஷ்(கறி இல்லாத) பிரியாணியை இன்னும் மறக்க முடியலை. ஒவ்வொரு பெருநாள் மதிய விருந்து அவர் வூட்டுலெதான். பூதக்கண்ணாடி வச்சு தேடினாலும் ஒரு துக்கடா கறி
கிடைக்காது. தங்கவேலு சொல்ற மாதிரி கறியை எவனோ லாவிக்கிட்டுப் போயிட்டான். ஹாஜியாரே லாவினாலும் லாவியிருப்பாரு ஒண்ணும் சொல்லமுடியாது.

மாமாவோட மெஹ்ருபாணி, அவர் போட்ட புள்ளையார் சுழி - ஏற்கனவே துளிர்விட்ட பயண ஆசை வைராக்கியமா மாறிடுச்சு. சிங்கப்பூர் இல்லாவிட்டாலும் வேறு நாட்டுக்குப் போயே ஆகணும், தொடர் முயற்சி கடைசியா பம்பாயில் மூணு மாசம் நாய் படாத பாடுபட்டு பெட்ரோலியத்தில் அரபியத்தில் முத்தஹிதாவுக்கு வந்து சேர்ந்தேன்.

நான் கல்லfக்குறிச்சியை விட்டு வந்தபிறகு இந்தப் பய தமிழரசன் அம்மா அப்பா பேச்சை கேட்காமல் அந்த சரஸ்வதியை கல்யாணம் பண்ணிக்கிட்டான். கல்யாணம் பண்ணியபிறகு தபால் போட்டான். அதன்பிறகு அவனை சந்திக்கவே இல்லை. இப்போது எப்படி இருக்கிறான் - தெரியாது. எமர்சன்ஞ்சி (emergency) வந்தபிறகு பல ஐயாமார்கள் கவர்மெண்டு

விருந்தாளியாக போனாக அதுலெ நம்ம ஏகேடி ஐயாவும் ஒண்ணுன்னு பின்னாலெ தெரிய வந்துச்சு. இனிப்புநீர், பிரஷர் அது இதுன்னு ஏகப்பட்ட செல்வங்களை கைவசம் வச்சிருந்ததாலெ போய் சேர்ந்துட்டாராம். இப்ப அந்த ஊருலெ அவரு பேராலெ காலேஜ் ஸ்கூல் எல்லாம் இருக்காம். நமபர் ஒன் அவர் காலேஜுதான்னு ஒரு கல்லக்குறிச்சிக்காரர் சொல்றாரு. இன்னும் அவர் பெயர் விளங்கிக்கொண்டுதான் இருக்கு.

'தங்கத்திலெ ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ...?' என்று FM ரேடியோவில் ஒலித்த பாடல் வரிகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது.

(நினைவுகள் தொடரும்)

நன்றி : ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

Sunday, October 21, 2012

கரெண்ட் கட்டும் அஸ்மாவின் கால்குலேஷனும்

தமிழ்நாட்டின் கரெண்ட் கட் பிரச்சனை தீர (?) அறிவாளி அஸ்மா சொன்ன யோசனையைக் கேளுங்கள். ‘எஹ வந்தா கரெண்ட் கட்டே இக்யாதும்மா’ என்று ஆசையோடு அம்மாவுக்கு ஓட்டு போட்டவள் அவள்தான்.

’மெட்ராஸ்ல ஒரு மணி நேரம் கரெண்ட் கட் இர்ந்தப்போ  நம்ம ஊர்லெ 15 மணி நேரம் கரெண்ட் கட் இர்ந்திச்சி. இப்ப மெட்ராஸ்ல ரெண்டு மணி நேரம் கட் பண்றதால நம்ம ஊர்லெ 5 மணி நேரம்தான் கட்டாவுது. அப்ப இன்னும் ஒரு மணிநேரம் மெட்ராஸ்ல கட் பண்ணுனா நமக்கு ஃபுல்லா கரெண்ட் கட்டே இரிக்காது. மேக்கொண்டு கூடவும் கெடைக்கிம். மிச்சமாறதை மெட்ராஸுக்கு திருப்பி கொடுத்துடலாமே மச்சான், எப்படி?’  என்கிறாள்.

எனக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச அக்கவுண்டண்ட் மூளையும் குழம்பிவிட்டது. ‘ஒன்னோட அம்மாக்கு ஃபோன் போட்டுச் சொல்லுடீ’ என்று வைத்துவிட்டேன்.

’டைமண்ட் நெக்லெஸ்’ படத்தில் , டாவடிக்கும் மலையாள டாக்டரிடம் தமிழ் நர்ஸ் போடும் ஒரு விடுகதை ஞாபகத்திற்கு வந்தது.

’எறும்பு வாய விட சின்னது. அது என்னது?’

குழம்புகிறதா?

பதில்  இதுதான் : எறும்பு தின்னது!

ஆனால் அதைவிடச் சின்னது , கரித்துக்கொட்டும் கவிஞர் தாஜ் பாணியில் :

முதல்வரின்...
வாய்
சொன்னது!

***
Image Courtesy : ThatsTamil


Tuesday, October 16, 2012

மனைவிகளுக்கு சம்பளம் கொடு! - துக்ளக் சத்யாவின் கெடு

இப்போதெல்லாம் அஸ்மாவை நான் வம்பிழுப்பதில்லையாம். நண்பர் தாஜ் ரொம்பவுமே கவலைப்படுகிறார். நெருங்கிய நண்பர்கள் என்றாலே அப்படித்தான்.  குடும்பம் குலைந்தால்தான் நிம்மதி! காரணம் எல்லாம் ஒன்றுமில்லை, 'என்னயப் பத்தி இன்னமே பேசுனீங்க.. பல்லைப் பேத்துப்புடுவேன்'  என்று பண்புடன் சொன்னாள் , மன்னிக்கவும் , சொன்னார் அஸ்மா. அவருடைய ’பாட்டுக்கு’ பிள்ளைகள் அனீகாவும் நதீமும் சேர்ந்து கோரஸ் வேறு கொடுக்கிறார்கள். அதனால்தான் தைரியமாக  வம்பிழுப்பதில்லை. போதுமா ? இந்த நிலைமையில் , மனைவிகளுக்கு சம்பளம் கொடுப்பது பற்றிய (யா அல்லாஹ்!)  ’துக்ளக் சத்யா’வின் தமாஷ் கட்டுரையை வேறு அனுப்பியிருக்கிறார் நண்பர். யோவ், முதல்ல எனக்கு மூணுமாசம் சம்பளம் கொடுக்கச் சொல்லுய்யா அரபிகிட்டே. அப்புறம் யோசிக்கலாம்.

சத்யாவின் கட்டுரைக்கு முன்னர்  சத்தியமாக தாஜ் பேசியதைப் படிக்கலாமா வேண்டாமா என்று வாசகர்கள்  ’கொஞ்சக்கோனு’ யோசியுங்கள். தங்கள் தங்கள் பேய்களிடம் - சே, ’சடார்’னு உண்மை தெறிச்சிடுது - பெண்டாட்டிகளிடம் அனுமதியும் வாங்கிக்கொள்ளுங்கள்.- 

ஆமா..., இந்த ஆண் ஏன் அடிமையானான்? (என்னமோ, முன்னாலெ சொதந்திரமா சூத்தகாட்டிக்கிட்டு இர்ந்த மாதிரி!)


நான் கொஞ்சம் பேசிவிடுகிறேன் - தாஜ்

 
'பெண்விடுதலை' வேண்டும் என்பதில் மனப்பூர்வமாக சம்மதம் கொள்பவன் நான். குறிப்பிட்டு சொல்லும் அளவில் இது பெரிய விசயமில்லை. 'பெண்ணியத்தை' வரவேற்கும் எத்தனையோ கோடிகளில் நானும் இருக்கிறேன் என்பதுதான் சரி. என்றாலும் இந்த மண்ணில் இந்த ஒப்புதல் விசயம் பெரிதான சங்கதியாகத்தான் பார்க்கப்படுகிறது. காலம் காலமாக நம் பெண்கள் இந்த மண்ணில் எதிர்கொள்ளும் சங்கடங்கள் கொஞ்சமல்ல. அதனை நம்மவர்கள் சற்று பின்நோக்கிப் போய், நடப்பு நிகழ்வுகளை ஆய்ந்தறிய முற்படுவதில்லை. பாரதியையும் பெரியாரையும் படித்ததினாலோ என்னவோ பெண்ணியம் குறித்து அப்படியோர் சிந்தையும், அப்படியோர் ஈடுபாடும் எனக்குள் துளிர்த்து தழைத்ததாகக் கருதுகிறேன்.

அந்தக் காலத்தில் பாரதி பேசிய பெண் விடுதலை சாதாரணமானது அல்ல. அவன் எவ்வளவோ பேசி இருக்கிறான். குறிப்பாய் அவனது பாஞ்சாலி சபதத்தை சொல்லலாம். பாரதியின் 'பாஞ்சாலி சபதம்' வாசிப்பவனின் முன் முடிவை மாற்றி கிளர்ச்சி கொள்ள வைக்கக் கூடியது. அதில் பேசப்படும் பெண்ணுரிமை வானளவியது! பாரதியின் பாஞ்சாலி சபதம் 'நவீன பாஞ்சாலி சபதமாகவே' பார்க்கப்படுகிறது கணிக்கவும் படுகிறது. இன்றைக்கு பாரதியின் 'நவீன பாஞ்சாலி சபதம்' மறைக்கப்பட்டு வருகிறது. அதனை நீங்கள் உணரக் கூடுமெனில்.., புராணகாலம் தொட்டு அது பேசும் பெண்ணுரிமையின் கீர்த்தியை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

பாஞ்சாலி சபதத்தில் கைவைத்து, மறுவுருவாக்கம் செய்ய, ஏக இந்தியாவில் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி; இன்னொருவர் இல்லை! அப்படி துணியவும் முடியாது. மதம் சார்ந்த, அதன் ஐதீகம் சார்ந்த அசடுகளை அசட்டை செய்தவனாக, பாரதி துணிந்து தன் கருத்துக்களை பதிவேற்றினான். அது போலவே, நம் மண்ணில் இருந்தபடி பெரியார் அளவில் 'பெண்ணியக் கருத்துக்களை முன்வைத்த இன்னொரு சமுகத் தலைவரை இந்தியா பூராவும் தேடி அலசினாலும் எவரொருவரும் கிடைக்கமாட்டார்! அவரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகத்தை வாசிப்பவர்களில் பலர், முதல் வாசிப்பில் உறைந்து போவார்கள் என்றால் நான் ஆச்சரியப் படமாட்டேன். பழைய மரபுசார்ந்த நம் சிந்தனைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி நொறுக்கிவிடும் அவரது அதிரடி கருத்துக்கள். இந்த இருவரின் மாபெரும் புரட்சி, தமிழ் மண்ணுக்கே சொந்தமானது.

பெண்ணியத்திற்கு எதிரானவர்கள் நம்மில் தாராளம். பழமைவாதிகள், மதவாதிகள், ஆதிக்கச் சக்திகள் என்று பலரும் இப்பட்டியலில் முதன்மை கொண்டவர்கள். பொதுவாக ஆண்கள் பலரிடம் பெண்ணிய எதிர்ப்புணர்வு அவர்கள் அறியாமலேயே வாழும். ஆனால், பத்திரிகைத் துறையில் பெண்ணியத்திற்கு எதிரான கருத்துக்கள் வருவதென்பது பரவலாக மிகக்குறைவு. பெண்களையும் பெண்ணியத்தையும் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவே அவர்கள் இருந்து வருகிறார்கள்.  குறைந்தபட்சம் வியாபார நோக்கை மனதில் கொண்டேனும் அவர்கள் பெரும் போக்காகவே நடந்து கொள்வார்கள். ஆனால், பத்திரிகையாளர்களுள் பெண்ணியத்தை எதிர்ப்பதில் நான் அறிந்து 'துக்ளக் சோ' மாதிரியான இன்னொரு பத்திரிகையாளரை கண்டதில்லை. அவரது பெண்ணிய எதிர்ப்பை விசாலமாக என்னால் காட்ட முடியும். குறிப்பாக சொல்லணும் என்றால்..., பாராளுமன்றத்தில் பெண்களுக்கு '33 சதவீதப் பங்கு' என்கிற குரல் பலமாக பாராளுமன்றத்தில் எழுந்த போது, அந்த பில் அங்கே பாஸாகிவிடக் கூடாது என்பதில் 'துக்ளக் சோ' காட்டிய வேகமும், தவிப்பும் அசாதரணமானது. அந்த அளவில் மாய்ந்து மாய்ந்து எழுதினார்.   

பெண்ணியத்திற்காக தமிழகத்தில் இருந்து பாரதியும் பெரியாரையும் கொடுத்த குரல், இந்திய அளவில் முக்கியம் வாய்ந்தமாதிரியே பெண்ணியத்திற்கு எதிராக தமிழகத்தில் இருந்து, பத்திரிகையாளர் சோ எழுப்பிய - எழுப்பிக் கொண்டிருக்கும் எழுத்தின் தாக்கம், இந்திய அளவில் எந்தவொரு பத்திரிகையாளரும் நிகழ்த்தாத ஒன்று. நம்பலாம்.

இந்தக் கட்டுரையில் ஒரு காரணம் தொட்டு, அது பற்றிய பெண்களின் மனநிலை இங்கே கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறது. 'துக்ளக் சத்யா' அப்படியொரு கிண்டலும் கேலியாகவும் எழுதியிருக்கிறார். அவரது பல கட்டுரைகளை படித்து ரசித்து சிரித்தது மாதிரியே இதனையும் அனுபவித்தேன். பெண்ணியத்தையும், பெண்விடுதலையையும் வரவேற்கும் நான்தான், பெண்களைக் குறித்த இந்தக் கேலியும் கிண்டலுமான இக்கட்டுரையையும் ரசித்து சிரித்தேன் என்பது உங்களுக்கு கொஞ்சம் குழப்பமாகத் தோன்றும்.

ஒரு காரணத்தை முன்வைத்து விமர்சன கண்ணோட்டத்தில் எழுதப்படுவது தவிர்க்க முடியாதது. அதில் சொல்லப்படும் காரணம் சரி என்றால் அதை மறுக்கவும் முடியாது. நானே என் எழுத்தில் பல இடங்களில், தக்க காரணம் பொருட்டு பெண்களை விமர்சனத்திற்கு உட்படுத்தி இருக்கிறேன். அந்த விமர்சனத்தில் கிண்டலுக்கும் கேலிக்கும் கூட பஞ்சம் இருந்ததில்லை. என்னைவிட 'நம்ம தலைவர்' ஆபிதீன் இன்னும் கெட்டி! அவரிடம் கிண்டலும் கேலியும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். ஆனால், அது சற்றைக்கு வித்தியாசப்பட்டது. மனைவியை வம்புக்கு இழுப்பது. அவரது அந்த வம்பு, ஏனையோரின் மனைவிமார்களையும் நேர் நிறுத்திப் பார்ப்பது. கொறைச்ச காலமாக அது அவரிடம் மட்டுப்பட்டு இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.

பெண்களை விமர்சனமே வைக்கக்கூடாது என்று சூளுரைக்கிற ஏகப்பட்ட பெண் எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். பெண்னென்றால் அவர்கள் தப்பே செய்யாதவர்கள் என்பது அவர்களது நிலைப்பாடு. இதற்கு, ஆனானப்பட்ட 'அம்பை'யும் விலக்கில்லை! திரு. ஜானகிராமன், தனது படைப்புகளில் பெண்கள் மீது வைத்த விமர்சனத்தை; அம்பையால் ஜீரணிக்க முடிந்ததில்லை என்பதை அறிவேன். எனக்குப் பிடிபடாத சில இலக்கியப் புதிர்களில் இதுவும் ஒன்று!   இறைவன் மீதே மேடை போட்டு விமர்சனம் வைக்கிற பூமி இது! இங்கே பெண் மட்டும் எப்படி தப்பிக்க முடியும்? பெண்ணியத்தை ஆதரிப்பதும், அவர்களது விடுதலைக்காக குரல் கொடுப்பதும் சரி என்பது மாதிரி, அவர்கள் மீதான... நியாயமான விமர்சனம் என்பதும் சரியே. இந்தக் கட்டுரையில் துக்ளக் சத்யா பெண்கள் மீது வைத்திருக்கும் விமர்சனத்தை அப்படியொரு சரியாகத்தான் பார்க்கிறேன்.

அவ்வளவுதான். இனி நீங்கள் சத்யாவை ரசிக்கலாம். முடிந்தால்... சிரிக்கவும் சிரிக்கலாம். தப்பே இல்லை.

-தாஜ்  

*

இது பெண்களின் பக்கம் [ஆண்களும் படிக்கலாம்]
சத்யா

(வீட்டில் வேலைகளைச் செய்யும் மனைவிக்கு, கணவன் கண்டிப்பாக சம்பளம் தர வேண்டும் எனச் சட்டம் கொண்டு வருவது பற்றி, மத்திய மகளிர் குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, பல்வேறு மாநில மகளிர் நலத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டம் இப்படி நடக்குமா?)

"மனைவிக்கு, கணவன் சம்பளம் கொடுக்கணும்ன்ற திட்டம், உலகத்திலே எந்த நாட்டுலேயும் இல்லை. நமக்குத்தான் இப்படி ஒரு யோசனை வந்திருக்குது. இதுதான் நம்ம கலாச்சாரத்தோட பெருமை. இச்சட்டத்தின் மூலம் பல லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பும் சம்பளமும் கிடைக்குது. இதை மேலும் செம்மைப்படுத்த உங்க கருத்துகளைச் சொல்லலாம்."

"இது சட்டப்படி, மனைவியின் சம்பளத்தை மனைவி நிர்ணயிக்கணுமா, கணவர் நிர்ணயிக்கணுமா?"

"இது பெண்ணுரிமை சம்பந்தப்பட்ட விஷயமாச்சே, மனைவியே நிர்ணயிக்கலாம். இதுலே கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை. கேக்கற சம்பளத்தைக் கொடுக்கிறது மட்டும்தான் கணவனோட வேலை."

"குடும்பத்திலே பெண்கள் படற கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. மெகா சீரியல் பார்த்து, முக்காவாசி நேரம் அழுதுகிட்டே வேலை பார்க்கிறாங்க, அந்தக் கஷ்டத்துக்கு வெறும் சம்பளம் மட்டும் எப்படிப் போதும்?"

"நிச்சயமாகப் போதாது. அதனாலே, தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஓணம்... என்று பண்டிகைகள் வரும்போதெல்லாம் ரெண்டு மாச போனஸும் கொடுத்துடணும். அவ்வளவு வருமானம் இல்லையேன்னு புருஷன்காரன் நொண்டிச் சாக்கு சொல்லக் கூடாது. லோன் வாங்கியாவது மனைவிக்கு போனஸ் கொடுக்கணும்."

"கணவன் கொடுக்கிற சம்பளம் போதலைன்னா, தொழிற்சங்க விதிகளின்படி அதிகச் சம்பளம் கேட்டு போராட்டம் நடத்தவோ, ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுக்கவோ மனைவிக்கு உரிமை இருக்கணும் மேடம். அந்த மாதிரி சமயங்களிலே  அரசு தலையிட்டு, மனைவி பக்க நியாயத்தை கணவனுக்கு எடுத்துச் சொல்லணும்."

"வெரிகுட். சம்பளம் கொடுத்தாச்சுன்னு ஹஸ்பெண்ட் பொய்சொல்லி அரசையும் மனைவியையும் ஏமாத்திடலாம். அதனாலே சம்பளப் பட்டியல் தயாரிச்சு, ரெவின்யு ஸ்டாம்ப் ஒட்டி, மனைவியின் கையெழுத்தை வாங்க வேண்டியது கணவனோட கடமை. அரசு வருஷா வருஷம் குடும்ப இன்ஸ்பெக்சன் நடத்தி, ரிஜிஸ்டர்களைச் சரி பார்க்கும்."

"மேடம் எனக்கு ஒரு சந்தேகம். திடீர்னு மனைவிகள் சங்கம் உருவாகி, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வேணும்னு பெண்கள் போர்க் கொடி உயர்த்தினா என்ன பண்றது?"

"நியாயமான சந்தேகம். கலெக்டர் மனைவிக்குச் கிடைக்கிற சம்பளம் குப்பன் - சுப்பன்களின் மனைவிக்கும் கிடைக்கிறதுதான் சமூக நீதி, அதனாலே அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை அரசே 'மனைவிகள் சம்பள கமிஷன்' அமைத்து குறைந்தபட்ச சம்பளத்தைப் பரிந்துரைக்கும்."

"இன்னொரு முக்கியமான பாயிண்டும் இருக்கிறது மேடம். வீட்டு வேலை செய்ய முடியாத வயசான பெண்களின் உரிமையையும் நாம பாதுகாக்கணும். அப்படிப்பட்ட பெண்களுக்கு பென்ஷன் கொடுக்க வேண்டியதும் கணவனோட கடமை."

"மனைவிக்கு சம்பளம் கொடுக்கறதாலே, கணவன் - மனைவி உறவுக்குப் பதிலாக எம்ப்ளாயர் - எம்ப்ளாயீ உறவு மலர்ந்துட்டதா நினைச்சு கணவன் ஆட்டம் போட முடியாது. இந்த சட்டம் வந்தாலும், கணவன் மனைவி உறவிலே எந்த மாற்றமும் ஏற்படாதுன்னு புரிஞ்சுகிட்டு, கணவன் வழக்கம்போல அடக்கத்தோடுதான் நடந்துக்கணும்."

"கரெக்ட், கணவன் வருமானவரி கட்டும்போது மனைவியின் சம்பளத்தைக் கழிச்சுகிட்டு கணக்கு காட்டக் கூடாது. மனைவியின் சம்பளத்துக்கும் சேர்த்து கணவன்தான் வருமானவரி கட்டணும்."

"ஆண் வர்க்கப் பிரதிநிதி ஒருத்தர் எனக்கு லெட்டர் போட்டிருந்தார் மேடம். மனைவிக்குச் சம்பளம் கொடுக்கிறதாலே, வீட்டுலே மனைவி சாப்பிடற சாப்பாடு டிஃபனுக்கெல்லாம் மார்க்கெட் ரேட்லே பில் போட்டு, சம்பளத்திலேந்து கழிச்சுக்கலாமான்னு எழுதியிருக்கார்."

"நோ... நோ... மனைவிக்கு சாப்பாடு போட்டுக் காப்பாத்த வேண்டியது கணவனோட கடமை. ஆனா, குடும்பத்தைக் காப்பாத்த வேண்டியது மனைவியோட கடமை இல்லை. அதுக்கு உரிய சம்பளத்தை மனைவிக்குக் கொடுத்துடணும். அதான் சட்டம்."

"சில குடும்பங்களிலே பையனையும் பொண்ணையும் கடைகளுக்கு அனுப்பி வேலை வாங்கற வழக்கம் இருக்குது. எதிர்கால வாக்காளர்கள்தானேன்னு அலட்சியமா நினைக்காம, அவங்களுக்கும் தந்தையாகப்பட்டவர் சம்பளம் கொடுக்கணும்னு பரிந்துரைச்சா என்ன?"

"அது சரியா வராது. குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி, குழந்தைகளைப் பெற்றோர் கடைகளுக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகள் சார்பா புகார் வந்தா, அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்."

"இன்னொரு பாயிண்ட். ஆபீஸ்கள்லே வேலை நேரம் பத்துலேர்ந்து அஞ்சு மணி வரைன்னு இருக்கிற மாதிரி, குடும்ப வேலை செய்யுற பெண்களுக்கும் டூட்டி டைம் நிர்ணயிக்கலாம். எட்டுமணி நேரத்துக்கு மேலே குடும்ப வேலை செய்யற அவல நிலை எந்த மனைவிக்கும் வரக் கூடாது."

"அப்படி வேலை செய்ய வேண்டிய அவசியம் வந்தா, ஓவர் டைம் சம்பளம் கொடுக்கணும். இதுக்காக ஒவ்வொரு குடும்பத்திலேயும் ஓவர் டைம் ரிஜிஸ்டர் பராமரிக்க வேண்டியது கணவனோட கடமை."

"குடும்ப வேலை செய்யற பெண்களுக்கு கண்டிப்பா லீவ் வேணும் மேடம். வருஷத்துக்கு 12 நாள் கேஷுவல் லீவ், பிராவிடண்ட் ஃபண்ட், வருஷா வருஷம் இன்கிரிமெண்ட், டி.ஏ. - எல்லாத்தையும் சட்டத்திலேயே குறிப்பிடலாம்."

"அது மட்டுமில்லை. அரசு விடுமுறை நாட்களிலே பெண்கள் வீட்டு வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த நாட்களிளிலே கணவன்மார்கள் ஹோட்டல்லே சாப்பிட்டுட்டு, மனைவிக்கும் பார்சல் கொண்டு வந்துடணும்."

"சம்பளம் கொடுக்கிறோம்ங்கற ஆணவத்திலே, சமையல்லே இது சரியில்லை, அது சரியில்லைன்னு குற்றம் சொல்ல கணவனுக்கு உரிமை இல்லை. 'நீ கொடுக்கிற சம்பளத்துக்கு இதுக்கு மேலே சமைக்க முடியாது'ன்னு சொல்ற உரிமை மனைவிக்கு உண்டு."

"அரசியல்வாதிகள், தங்கள் மனைவிகளை ஏமாத்திடக் கூடிய அபாயத்தையும் நாம கவனிக்கணும். அவங்க வெறும் சம்பளம் மட்டும் கொடுத்துட்டு வீட்டு வேலையைச் செய்யும்படி மனையிடம் சொல்ல முடியாது. ஊழல் பணத்திலேயும் ஐம்பது சதவிகிதம் மனைவிக்கு கொடுத்தாகணும்."

"மேடம், பல குடும்பங்களிலே பெண்கள் வேலைக்குப் போயிட்டு, ஆண்கள் குடும்ப வேலையைக் கவனிக்கிறாங்களே. அந்தக் கணவன்களுக்கு மனைவி சம்பளம் கொடுக்கணுமா?"

"அது ஆண்கள் நலத் துறை எடுக்க வேண்டிய நடவடிக்கை. கணவன் - மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போற குடும்பங்களிலே, மனைவி தன் சம்பளத்தை தானே வெச்சுக்கலாம். புருஷன் மட்டும்தான் மனைவிக்கு சம்பளம் கொடுக்கணும்."

"இன்னொரு சந்தேகம். மனைவிக்கு கணவன் சம்பளம் கொடுக்கிறது சரி. ஆனா, கல்யாணம் ஆகாத மகள் வீட்டு வேலை செஞ்சா, அவளுக்கு யார் சம்பளம் கொடுக்கிறது?"

"பெண்ணுக்கு கல்யாணம் ஆகறவரைக்கும், அவளோட அப்பாதான் சம்பளம் கொடுக்கணும். முடியாதுன்னா அந்தப் பெண் வீட்டுலே எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் பேசும்போதே, அவளுக்கு புகுந்த வீட்டிலே மாசம் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்னு இரு வீட்டார் ஒப்பந்தம் போட்டு சப்-ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ்லே பதிவு பண்ணிடணும்."

"பெண்ணுக்கு கல்யாணம் பண்ணும்போதோ, பையனை காலேஜ்லே சேர்க்கும்போதோ, மனைவிதான் நம்ம கிட்ட சம்பளம் வாங்கிறாளேன்னு அவளோட உதவியைக் கேட்டு கணவன் கொடுமைப்படுத்த கூடாது. அந்த முழுச் செலவையும் கணவன்தான் ஏத்துக்கணும்."

"சம்பளம் கொடுக்கிறதாலே, தான்தான் பாஸ்னு நினைச்சுக்கிட்டு, மனைவியை எந்தக் கணவனும் அதிகாரம் பண்ண முடியாது. அது ஈவ்டீஸிங் சட்டப்படி குற்றம். மனைவியை சம்பளம் பெறுகிற மேலதிகாரியாகத்தான் நினைக்கணும்னு சட்டம் தெளிவாச் சொல்லுது."  

"வீட்டுக்கு திடீர்னு விருந்தாளிகள் வந்தா, மனைவிக்கு கூடுதல் சம்பளம் தரணும். மனைவிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டா, மெடிக்கல் லீவ்லே அவங்களை உட்கார வெச்சுட்டு, கணவனே இலவசமா வீட்டு வேலை செய்யணும்."

"மனை டெலிஃபோன்லே மணிக்கணக்கா பேசினா, அந்தச் செலவை குரூரமா மனைவி சம்பளத்திலேர்ந்து கழிச்சுடக் கூடாது. அதுவும் வேலையின் ஒரு பகுதிதான். அந்தச் செலவை மேனேஜ்மெண்ட்டே அதாவது கணவனே ஏத்துக்கணும்."

"சட்டம் அருமையா வந்திருக்குது மேடம். எப்போதிருந்து இதை அமல்படுத்தறோம்?"

"மத்திய அரசு ஆட்சிக்கு வந்த மே 2009-லேர்ந்து முன் தேதியிட்டு அமல்படுத்தறதாலே, தேர்தலுக்கு முன்னாலே மனைவிக்கு கணவன் அரியர்ஸும் செட்டில் பண்ணிடனும்னு சட்டம் போடப் போறோம்."

"இந்தச் சட்டம் பார்லிமெண்டுலே எப்ப நிறைவேறும்?"

"இது மகளிர் விஷயமாச்சே! மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா மாதிரிதான். அது நிறைவேறினதும், இதுவும் நிறைவேறிடும்."

***
நன்றி: சத்யா / துக்ளக் (26.9.2012)
தட்டச்சும் - வடிவமும்: தாஜ் (satajdeen@gmail.com )

**
மேலும் :
துக்ளக்கும் சத்யாவும் – சில குறிப்புகள் : தாஜ்

Thursday, October 11, 2012

ஆபிதீன் கவிதைகள் : நான் பெய்த நாலு மூத்திரம்!

’ஒலஹ மஹா கவிஞர்’ தாஜுதீனின் வற்புறுத்தலுக்கு இணங்க உடன் வெளியிடுகிறேன்.  கிறுக்கல்களுக்கு அர்த்தம் சொன்னால் கிளுகிளுப்பாக உணர்வேன். - ஆபிதீன்

***


தாஜ் முன் குறிப்பு:

1987-ம் வருடம் பிறக்கிற தருணம்...
ஆபிதீன் சௌதி அல்-கோபரிலும்
நான் 'ரியாத்'திலும்
பஞ்சம் பிழைத்துக் கொண்டிருந்தோம்.
பிறக்கும் புத்தாண்டையொட்டி
நான் அவருக்கும், அவர் எனக்கும்
புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பி மகிழ்ந்தோம்.
இப்போதெல்லாம் புத்தாண்டுப் பிறப்பென்பது
எங்கள் இருவருக்கும்
இன்னொரு தினம் மட்டும்தான்!
ஏனாம் அப்படி?

ஆபிதீன் எனக்கு அனுப்பிவைத்த
1987-ம் வருடப் பிறப்பு வாழ்த்து அட்டையில்
இருந்ததுதான்...
அவரது இந்தக் கவிதைகள்.

என்னால் பத்திரப்படுத்தப்பட்ட
அந்தக் கவிதைகளை
வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

இதற்கு முன்
அவரது கவிதைகள் எதுவும்
வாசகர்களின் பார்வைக்கு வந்தது இல்லை.
ஏனெனில்...
அவர் கவிதைகள் எழுதுபவர் அல்ல.

இனியும் அவர் கவிதைகள் எழுதி
வாசகர்களின் பார்வைக்கு வைப்பார் என்பதற்கு
எந்த முகாந்திரமும் இல்லை.

கவிதைக்கும்/ கவிஞர்களுக்குமான எதிர் வரிசைக்கு
அவர் போய்
எத்தனையோ காலம் ஆகிவிட்டது.

அன்றைக்கு..
எனக்கு அனுப்பிவைத்த இக்கவிதைகளுக்கும் கூட
'நான் பெய்த நாலு மூத்திரம்....' என்பதாக
தலைப்பிட்டு அனுப்பி இருந்தார் என்றால்
பார்த்துக் கொள்ளுங்களேன்!

ஆக...
வாசர்களின் பார்வைக்கு வரும்
அவரின் கவிதைகள் என்கிற போது..
இதுவே
முதலும் கடைசியுமாக இருக்கும்!

-தாஜ்

***


ஆபிதீன் கவிதைகள்

நான் பெய்த நாலு மூத்திரம்

1. பாலையில் என் கவி

கானலும்
எண்ணெயும்
கண்டுணர் அசைவுடன்
திமிலுள்
நம்பிக்கை வைத்து
முளையில்லாக்
கூடாரம் தேடும்
அரிதான ஜீவனுக்கு
முண்டாசு கட்டினான்
பொருத்தம்
'தோப்' எனும் முழுமறைவே
என்றதாய்
பட்டது.
முறுக்கி வளர்த்தது பொசுங்கத்
தொடங்க
அந்திமத்துணி
எங்கும் கண்டானில்லை
இலக்கண நகர்
சுற்றி
திறந்த விண் துழாவி
ஒவ்வொரு
கல்லாய் நோக்கி
தன் உமிழும்
கண்கள் தீயும் வரை
முழுதும்
இலை மறந்து இலை மறைத்த
'ஷேக்'கின் கூட்டம்
காட்சியில் உறுதி கொண்டு
கனவானான் கவி
அச்சத்தோடு.
***

2. ஜீவன்

உயிர் தெறித்திடும்
புள்ளியோடு
முதல் அட்சரத்தை
ஆண்மைக்கு
வழங்கிய மாமறை
வழிவந்து
உறைந்த மனிதன்
கல்லெறிந்து
கௌரவப்படுத்துகையில்
அடிவாங்கி
புற்றில்
நுழையும்
என சர்ப்பம்
உறவைக் கொத்தி
மீட்டது
ஜீவன்.
***

3. பஞ்சம்

கரு
மேகத்தில் பொதித்த
கண் பிடுங்கி
மண்பூசி
நெஞ்சிலிட்டு வேதமதில்
ஒற்றினேன்
என்
நெற்றியை
வீறிற்று மூளை
பூமிப்பேய்
எப்போதும் தலைவிரிக்காது
பொருள் காக்கும்
ரகஸ்யத்தை - எனக்கும் கூட
அதுவரை
என் அரபி சகோதரன்
காறித் தரும்
அமிழ்தை
முகத்தில் ஏற்கலாம்
கைகட்டித்
தீ
மிதிக்க
திரும்புங்கால் எனை
விட்டுப்
பறப்பவற்றை விட்டு
விடுவேனோ?
அசைகிறது நீர்
விரிமண்
விளக்குமுன் வெளுத்து
முடிந்திடும்
அகம்.
***

4. தனியன்

எங்கும்
சுடுகிற இரவி
இடம்தேடி
அலைந்த
இருள்
என்னில் நுழைந்தது
தூரம் சொல்லி....



***

நன்றி (வேறு வழி?! ) : நண்பர் தாஜ்

Saturday, October 6, 2012

RAISE IT UP : அக்டோபரில் ஆகஸ்ட் ரஷ்!

Amadeus போல அற்புதமான இசைக்காவியமல்ல ‘The music is all around us.  All you have to do is listen’ என்று எளிமையாகச் சொல்லும் August Rush . அரதப்பழசான கதையும் கூட. ஆனாலும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். பகிர்கிறேன். கேளுங்கள். நன்றி. - ஆபிதீன்

***

***
The Song RAISE IT UP From The Warner Brother Movie AUGUST RUSH , Written by Jamal Joseph, Charles Mack, and Tevin Thomas ,Performed by The Academy Award (Oscar) Nominated Impact Repertory Theatre’ Featuring Jamia Simone Nash). Thanks to : IMPACT97

***



No father figure in the house
and i'm wonderin' how i'm gonna work it out
oh my friends keep on tellin' me how i don't need that man but they don't really understand
there's far too many presures in reality but dealing with the pain and stress and poverty
and i gotta be myself because there's nobody else for me (ohhhh)

(heading there with me)sometimes it takes a different kind of love to raise a child
(so don't give up)so don't give up
(when presures come down)sometimes it takes a different kind of dream to make you smile
(so raise it up)so raise
(hang in there with me)sometimes we need another helping hand to show the ways
(so don't give up) so don't give up
(when presures come down)sometimes it seems inpossible and that's why we pray
(so raise it up) we raise

[HOPE] seems to be nothing left for me mommas gone daddy didnt wanna be and now im all by myself wonderin where is love or
should i just give up

life falls down on me, cuts into my soul but i know i got the strength to make it throgh it all cause im still standin tall
breaking throgh this wall im gonna give my all

[HOPE] feelin like a motherless child hankered into my soul its bringing me down cant find my smile on a face of a
motherless child
im gonna break down these walls gonna give it my all ya know
yeah yeah yeah yeahhhh

(hang in there with me)sometimes it takes a different kind of love to raise a child
(so dont give up)so dont give up
(when pressures come down)sometimes it takes a different kind of dream to make a smile
(so raise it up) so raise it up
(hang in there with me) raise it up
sometimes it takes another helping hand to show you the way
(so dont give up, when presures come down)
[HOPE] sometimes it seems impossible thats why we pray
SO RAISE IT UP

Thursday, October 4, 2012

தாஸ்தாயெவ்ஸ்கியின் சூதாடி

நீங்கள் பாட்டுக்கு 'த்' & 'ட்' சேர்த்து 'சூதாடி'யைப் படித்துத் தொலையாதீர்கள். 'வார்த்தைகளின் சூதாடி' என்று நண்பர் காலபைரவன் அழைக்கும் தாஸ்தாயெவ்ஸ்கியின் நாவலை எங்கள் பொன்னான நேரத்தை இழந்தபிறகுதான் 'ஷார்ஜா ஷேக்'கிடமிருந்து வாங்க முடிந்தது. ஒரு ஃபோட்டோ அனுப்பச் சொன்னதற்கே நாளைக்கு நாளைக்கு என்று நாட்களைக் கடத்தும் சுறுசுறுப்பான 'ஷேக்'கிடம் இனி எதுவும் இழப்பதாக இல்லை. போகட்டும், கல்லூரிப் பருவத்தில் படித்த நாவல். ஆங்கிலத்தில் படித்ததால் அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது , அப்போது புரிந்ததுதான் சரியென்று. தமிழாக்கம் செய்திருப்பது யார் என்ற விபரத்தை சந்தியா பதிப்பகம் ஏனோ குறிப்பிடவில்லை. ஒருவேளை தாஸ்தாயெவ்ஸ்கி தமிழில்தான் இதை எழுதியிருப்பாரோ? இருக்கும். தாடி வைத்திருப்பதால் 'தாவா' செய்துவிடுவாரோ என்று பயம் வேண்டாம். படியுங்கள் கடைசிப்பகுதியை. நன்றி - ஆபிதீன்

**

சூதாடி - தாஸ்தாயெவ்ஸ்கி

... இவை யாவும் சொற்கள், வெறும் சொற்கள்! நமக்கு வேண்டியவை செயல்கள். ஸ்விட்ஜர்லாந்து இப்பொழுது எனக்கு மகத்தான முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது! ஆனால் நாளைக்கு, ஓ நான் புறப்பட்டு அங்கே போக முடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்! மீண்டும் உயிர் பெற்றெழுவேன், புதுப்பிறவி எடுப்பேன். அவர்களுக்கு காட்டியாக வேண்டும்.. இன்னமும் நான் மனிதன்தான் என்பதைப் பலீனா தெரிந்து கொள்ளட்டும். ஒன்றே ஒன்று மட்டும்தான் வேண்டும்... இன்று நேரமாகிவிட்டது. ஆனால் நாளைக்கு.. எனக்கு ஒரு முன்னுணர்வு ஏற்படுகிறது. ஆம், அப்படியின்றி வேறு எப்படியும் நிகழ முடியாது! இப்பொழுது என்னிடம் பதினைந்து லுயிதோர் இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் பதினைந்து கூல்டினுடன் தொடங்கியிருக்கிறேனே.. கவனமாய் ஆட்டத்தைத் தொடங்கினேன் என்றால்.. நான் சிறுபிள்ளை அல்லவே! நான் போண்டியான மனிதன்தான் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டேன்! ஆனால் - ஏன் நான் உயிர் பெற்றெழ முடியாது? என் வாழ்வில் ஒரேயொரு தடவையேனும் நான் எச்சரிக்கையுடன், பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் நான் செய்ய வேண்டியது! ஒரேயொரு தரம் நான் உறுதியாக இருந்தால் போதும், ஒரே மணி நேரத்தில் என் எதிர்காலத்தை மாற்றிக் கொண்டு விடுவேன். பிரதானமானது நெஞ்சழுத்தம். ஏழு மாதங்களுக்கு முன்பு ருலெட்டன்பர்கில், இறுதிக்குலைவு ஏற்படுமுன் நடைபெற்றதை நான் நினைத்துப் பார்த்தாலே போதுமே.. ஓ, நெஞ்சு உறுதிக்கு அது எவ்வளவு சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு! நான் அனைத்தையும் இழந்துவிட்டேன், ஆம், அனைத்தையும்.. காஸினோவை விட்டுப் புறப்பட்டு வெளியே போய்க்கொண்டிருந்தேன். அப்பொழுது என் மார்புக் கோட்டின் பையில் ஏதோ நகர்வது போல இருந்தது. இன்னும் என்னிடம் ஒரு கூல்டின் எஞ்சியிருந்தது என்பதைத் திடுமெனக் கண்டேன். 'இரவு சாப்பிடலாம், கவலை இல்லை' என்று என்னுள் கூறிக்கொண்டேன். ஆனால் நூறு அடி நடந்து செல்வதற்குள் என் எண்ணம் மாறிவிடவே, உடனே திரும்பினேன். அந்த ஒரு கூல்டின்னைக் 'குறைபாட்'டில் பணயமாய் வைத்தேன் (அப்பொழுது 'குறைபாட்'டில்தான் வைக்க வேண்டுமென்று தோன்றிற்று எனக்கு.) தாயகத்தையும் நண்பர்களையும் விட்டுப் பிரிந்து அந்நிய நாட்டில் தனியே இருக்கிறோம், அன்று இரவு சாப்பிட என்ன கிடைக்கும் என்பதுகூட தெரியாத நிலையில் இருந்து கொண்டு கையிலிருக்கும் கடைசி கூல்டினைப் பணயமாய் வைக்கிறோம் என்னும் அந்த உணர்வு இருக்கிறதே அதை என்னென்பது! நான் வெற்றி பெற்றேன். இருபது நிமிடங்களுக்குப் பிற்பாடு பாக்கெட்டில் நூற்றெழுபது கூல்டின்களுடன் காஸினோவிலிருந்து வெளியே சென்றேன். ஆம், உண்மை அது! கடைசியில் எஞ்சும் கூல்டினைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு! அப்பொழுது நான் தைரியமிழந்து இம்முயற்சியில் இறங்காது இருந்திருந்தால்...

நாளைக்கு, நாளைக்குப் பார்க்கலாம்!

**
நன்றி : சந்தியா பதிப்பகம், (முகமறியாத) மொழிபெயர்ப்பாளர் , நாவலை இழந்த சென்ஷி!

**
Image Courtesy : wikipedia (Portrait of Dostoyevsky in 1872 painted by Vasily Perov )
**

Bonus :