Tuesday, November 30, 2021

கும்மந்தான் கான்சாகிபு (pdf) - ந. சஞ்சீவி

 

முன்னுரை - ந. சஞ்சீவி :
தமிழக வீரர்களுள் தனிச் சிறப்புக்கள் பல வாய்க்கப் பெற்ற பெருவீரன் கும்மந்தான் கான் சாகிபு. இலக்கியத்திலும் வரலாற்றிலும் இடம்பெற்ற அம் மாவீரனின் கதையை ‘கலைமகளுக்குக் காணிக்கையாக 1959-ஆம் ஆண்டு மே, ஜூன் திங்கள்களில் படைத்தேன். அப் படையலே இப்போது நூல்வடிவில் வெளிவருகிறது. அளவால் சிறியதே ஆயினும், முதன்முதலாகத் தமிழில் கும்மந்தான் கான்சாகிபைப் பற்றி வரலாற்று ஆராய்ச்சி நோக்குடன் வெளிவரும் நூல் என்னும் அருமைப்பாடு உடையது.
' கலைமகள்' கருணைக்கும் தமிழ் மக்களின் ஆதரவுக்கும் நன்றி செலுத்தி இந்நூலை வெளியிடுகிறேன்.
 

இந்நூல் அச்சாகும் காலத்துத் திருத்தங்கள் செய்துதவிய ஆசிரியர்-வித்துவான்-உயர் திரு-சி. அருணை வடிவேலு முதலியார் அவர்கட்கு எனது உளங் கனிந்த நன்றி உரித்து.
 

வாழ்க தமிழகம்!

**

'கலைமக'ளின் கருத்து (மே, 1959) :

தமிழ் நாட்டில் நாடோடியாக வழங்கும் நெடும் பாடல்கள் பல. அல்லியரசாணிமாலை, பவளக்கொடிமாலை, முதலிய கதைப் பாடல்கள் மக்களிடம் வேரூன்றிப் புத்தக உருவத்தில் வெளிவந்திருக்கின்றன. தேர், திருவிழாக் கடைகளில் இந்தப் புத்தகங்கள் ஏராளமாக விலையாகி வந்த காலம் உண்டு. இந்தக் கதைப் பாடல்களில் சரித்திர சம்பந்தமானவைகளும் இருக்கின்றன ; தேசிங்கு ராஜன் கதை அத்தகையது. “ அண்ணா வாடா தம்பி வாடா ராஜா தேசிங்கு" என்பது போன்ற பல அடிகள் தமிழ் நாடு முழுவதும் பலருடைய வாக்கிலே தவழ்கின்றன. அதுபோலவே கான்சாகிபு சண்டை என்பது ஒன்று. யூசுப்கான் என்ற ஒரு வீரனுடைய கதையைச் சொல்வது அது. அவனுடைய வரலாற்றை ஆராய்ச்சி முறையில் பல நூல்களின் வாயிலாகத் தெரிந்து, திரு. ந. சஞ்சீவி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

**

View / Download PDF : http://www.tamilvu.org/library/nationalized/pdf/20-dr.sanjivi/kummanthankansakipu.pdf

**

தொடர்புடைய பதிவு :
தூங்காநகர நினைவுகள் - கான்சாகிப் என்கிற கும்மந்தான்
- அ. முத்துக்கிருஷ்ணன்