Wednesday, December 31, 2014

ஆனந்தமும் மாலினி ரஜூர்கரும்

'ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் கொள்ளும் நம்பிக்கைகள் பல. இவ்வாண்டு இத் தொடக்கத்திலும் அப்படியே சந்தோஷம் கொள்வோம். வாழ்வில் சந்தோஷமே முக்கியம்.' என்று ஸ்டேட்டஸ் போட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில்,  ‘இருளில் வெளிச்சத்தைக் காண பரிதவிக்கும் மனம் வெளிச்சத்தில் இருளையே தேர்ந்தெடுக்கிறது.’ என்று இன்னொரு ஸ்டேட்டஸ் போடுகிறார் கவிஞர் தாஜ் - முகநூலில். மாலினியைக் கேட்கும் நமக்கு மனசெல்லாம் எப்போதும் ஆனந்தமே.  அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

"I sing because it gives me anand, joy. I want to give that anand to others.'' - Malini Rajurkar
**
**
Thanks to : Rohit Bapat

Thursday, December 25, 2014

மக்காவில் ஏசுநாதர் !

'மக்கால ஏசு இக்கிறாஹாம்மா' என்று ஓடிவந்து அஸ்மா காட்டினாள், குமரன் தங்கமாளிகை காலண்டரை. ‘நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்து இன்னும் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகின்றார்களோ அவர்களே சுவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள் (குர்ஆன் 11:23).’ என்று குயீன்மா கோல்டுஹவுஸ் காலண்டரில் இன்று (ரபியுல் அவ்வல் 2) போட்டிருப்பதை நானும் காட்டினேன்.

'ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்’ (எபேசியர் 2:10; Ephesians 2:10 )
**
அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே...
***