Thursday, October 17, 2019

முத்துக்கள் பத்து (பொன்மொழிகள்)

தம்பி சகீர் ஹூசைன் தொகுத்துக்கொடுத்த பொன்மொழிகள் இவை. எழுதிக் கொடுத்து ஓரிரண்டு வருடங்கள் இருக்கும். என் சோம்பலால் இன்றுதான் கிடைத்தது. பகிர்கிறேன். - AB

*

1. எவன் முட்படுக்கையை மலர் படுக்கையாய் கொள்கிறானோ அவனே பார்வையற்றவர்களுக்குப் பார்க்கும் திறனை வழங்குகிறவன். - மௌலானா ரூமி (ரஹ்)

2. வெட்கம் வீதிக்குப் போனபின் திரையிட்டு என்ன பயன்? - இமாம் சாஅதி (ரஹ்)

3. ’என் தலைவனின் உலகம் ஒளிமயமானது! எங்கும் பேரொளி வீசிக்கொண்டிருக்கும். அந்த ஒளி தூயது, மகிழ்ச்சியளிப்பது’ என்று தமக்குள் (அறிவுடையோர்) சொல்லிக்கொள்வர். - மீர்ஸா காலிப்

4. உலகினை விரும்புபவன் ஆணும் பெண்ணுமல்லாத அலி ஆவான். மறு உலகில் சொர்க்கத்தை விரும்புபவன் பெண்ணாவான். ஆண்டவனையே விரும்புபவன் ஆணாவான். - அன்னை ராபியா பஸரி (ரஹ்)

5. காற்றடித்தால் வளர்வாள்; தண்ணீர் குடித்தால் சாவாள் - நெருப்பைப் பற்றி அமீர் குஸ்ரு (ரஹ்)

6. வாழ்க்கையில் இரண்டு முறை சோகம் நிகழலாம். a: விரும்பாதது நெருங்கி வரும்போது, b: விரும்பியது விலகிப் போகும்போது. - யாரோ

7.ஒன்றையொன்று நினைவில்கொண்டு உளதாயிருக்கிற இரண்டு ஒன்றுபடாமல் போய்விடுமா?  - மன்சூர் ஹல்லாஜ்

8. ரூமி கூறுவதாக எங்கள் ஹஜ்ரத் சொல்வார்கள் : உங்கள் கண்கள் மிகச்சிறியவை; ஆனால் மிகப் பெரியவைகளை அவைகள் பார்க்கின்றன.

9. எல்ல இடங்களிலும் எல்லாவற்றிலும் நல்லதைக் கண்டுபிடிப்பதற்கான மனநிலைதான் மன ஆரோக்கியத்திற்கான அளவீடு - ரால்ப் வால்டோ எமர்ஸன்

10. செயல்தான் வளமான பேச்சு - ஷேக்ஸ்பியர்
*




நன்றி : நாகூர் கவிஞர் சகீர் ஹூசைன்

தொடர்புடைய பதிவு :
இசை : உத்தமர் உஸ்மான் (ரலி) பொன்மொழிகள்

Tuesday, October 1, 2019

'மனுஷன் எனும் மதம் மாத்திரமே மதி!’

Actor Sreenivasan's Speech at Edappal.  ‘தெய்வம் உண்டா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இல்லாமலிருப்பதுதான் தெய்வத்தின் அந்தஸ்துக்கு ஏற்றது’ என்று ஜெரால்ட் ரூட் சொன்னதைச் சொல்கிறார் எனக்கு மிகவும் பிடித்த சீனிவாசன். ரசித்துக் கேட்ட சமீபத்திய வீடியோ ஒன்றிலும் இதையே சொன்னார். அவர் நாத்திகவாதி ஒன்றும் அல்ல; நாம் செய்கிற நல்ல செயல்களில் எல்லாம் தெய்வம் இருக்கும் என்று சொல்பவர். எல்லா மத தெய்வங்களும் ஒன்று சேர்ந்து தன் திருமணத்தை நடத்திய விதம் பற்றிச் சொன்னதை ரசித்தேன். ‘கடவுளின் சொந்த நாடு’  ஏன் பைத்தியக்கார ஆஸ்பத்திரி என்று விவேகானந்தரால் அழைக்கப்பட்டது என்பதற்கு சீனிவாசன் கொடுக்கும் விளக்கம் முக்கியமானது. தெய்வம் எல்லாம் அறிந்திருக்கும்!
*
*
Thanks to : Yuva Kerala