tag:blogger.com,1999:blog-35382373274644544472024-03-13T20:11:57.181+04:00ஆபிதீன் பக்கங்கள் (ii)சலாமலய்க்கும்..!Unknownnoreply@blogger.comBlogger450125tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-64013138209112280972024-01-04T13:18:00.000+04:002024-01-04T13:18:25.734+04:00A.R. Rahman - Kun Faya Kun<p> Thanks to : <a href="https://www.youtube.com/@Berklee">Berklee College of Music</a></p><p>*</p><p>
<iframe width="589" height="330" src="https://www.youtube.com/embed/R-dXS5TI_dQ" title="A.R. Rahman - Kun Faya Kun (14 of 16)" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen></iframe>
</p><p>*</p><p><br /></p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-40003337673384726622023-10-02T12:39:00.002+04:002023-10-02T12:39:49.171+04:00சிங்காவை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், ரியாஸ்! - கவிஞர் சாம்ராஜ் <p><a href="https://www.facebook.com/mohamed.riyas.393" target="_blank">அனிஷா மரைக்காயர் (Mohamed Riyas)</a> எழுதிய ‘சிகரி மார்க்கம்’ நூல் பற்றி எழுத்தாளர் சாம்ராஜின் விமர்சனம். ரியாஸின் ‘சிங்கா’ என்றதும் ஏதோ சாமான் என்று நினைத்தேன். அல்ல, அது ஒரு சிறுகதை! - AB</p><p>*</p><p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimDUgvalLUgyQCo5-AZSOc3eN2HwX74Z8REvFqjrIoWJq-bbuwkvDZxrqhDFgv97grCcvI6ZuqifTqi8jiCQ54uaVogixKvuqj0xJQurpRZGO0swC-_H5i2JrmjBpEr8EdNFN-G9fRT_WkaZ1QRosT5g67IV5MkjgjjwsvT88-fztbBepys-Gmp2uWAfzZ/s568/anisha-%20sikarimarkkam-fb2.jpg" imageanchor="1" style="clear: left; display: inline !important; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="568" data-original-width="370" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimDUgvalLUgyQCo5-AZSOc3eN2HwX74Z8REvFqjrIoWJq-bbuwkvDZxrqhDFgv97grCcvI6ZuqifTqi8jiCQ54uaVogixKvuqj0xJQurpRZGO0swC-_H5i2JrmjBpEr8EdNFN-G9fRT_WkaZ1QRosT5g67IV5MkjgjjwsvT88-fztbBepys-Gmp2uWAfzZ/s320/anisha-%20sikarimarkkam-fb2.jpg" width="208" /></a></p><p><br />பொதுவாக இஸ்லாமிய வாழ்வு, பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த எழுத்துகள் தமிழில் குறைவு. தோப்பில் முகமது மீரான், கீரனூர் ஜாகிர் ராஜா, மீரான் மைதீன், ஆபிதீன் என்று உண்டென்றாலும் மொத்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்களின் தொகையோடு ஒப்பிடுகையில் இஸ்லாமிய எழுத்தாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.</p><p>பிரதானமாக, இஸ்லாமிய எழுத்தாளர்கள் மாத்திரமே அவர்கள் எழுத்தை எழுதும் சூழல் உள்ளது. மலையாள சினிமாவில் காட்டப்படும் இஸ்லாமிய வாழ்வு அளவிற்குகூட இங்கு அது மையநீரோட்டத்தில் இல்லை. அங்கு ஒரு சாதாரண வெகுஜன சினிமாவில்கூட இஸ்லாமியப் பாத்திரங்கள் இயல்பாய் வந்துபோகும். இன்றும் இங்கு அதுவொரு ‘தனித்த’ பாத்திரம்தான்.சினிமாவே இப்படியிருக்க, இலக்கியம் இன்னும் தூரத்திலிருக்கிறது.</p><p>இப்படியான சூழலில் ரியாஸ் எழுதவருகிறார். இது அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்பு ‘அத்தர்’ சீர்மை வெளியீடாக வந்து கவனம் பெற்றது.</p><p>மொத்தம் ஒன்பது கதைகள் கொண்ட இந்த இரண்டாவது தொகுப்பில் எட்டு கதைகள் சமகாலத்திலும், ‘சிங்கா’ என்ற ஒரு கதை மாத்திரம் கடந்த காலத்திலும் நிகழ்கின்றன.</p><p>ரியாஸின் கதை உலகம் இஸ்லாமிய வாழ்வும் அதில் பெரும்பாலும் பாவப்பட்டவர்களின் பாடுகளுமாய் இருக்கின்றன. அப்படி ஒற்றைப் படையாய் சுட்டுவது ரியாஸின் மீதான வன்முறைதான்.பாவப்பட்டவர்களின் துயரத்தோடு, ‘உள்ளவர்களின்’ துயரமும் உள்ளது.</p><p>ரியாஸின் தனித்தன்மை முதன்முறையாக காவிரிப் பாசனத்திலிருந்து சற்று கீழே இருக்கும் கடற்புர இஸ்லாமிய வாழ்வை அதன் நுணுக்கங்களோடு துல்லியமாக முன்வைப்பதும், அதனோடு நின்றுவிடாமல் அந்த பிரதேசத்துக்காரர்களின் ஓட்டம்போல சிங்கப்பூர், மலேசியா என்று தன் கதைக்களத்தை விரித்துக் கொள்வதும்தான்.</p><p>பொதுவாக, பிழைப்புக்காக புலம்பெயர்ந்தவர்கள் எழுதும் கதைகளில் ஊர் குறித்தான ஏக்கங்களும், அங்கு ஒரு பொன்னுலகம் இருந்ததற்கான பாவனைகளும் இருக்கும். வாழும் நாட்டைப் பற்றிய ‘நான்காம் மாடி’ அவதானிப்பு கொண்ட கதைகளே அதிகம்.</p><p>நான்காம் மாடி அவதானிப்பென்பது, நான்காம் மாடி பலகணியில் நின்றுகொண்டு சாலையில் நடப்பவர்களை அவதானிப்பது.பொத்தாம் பொதுவான மனிதாபிமானக் கதைகள். சிங்கப்பூரில் உமா கதிரின் ‘ரோவெல் தெரு’ சிறுகதைத் தொகுப்பு இதற்கு ஒரு இனிய விதிவிலக்கு. தரையில் இருப்பவனை தரையிலிருந்தே பார்ப்பவை அவரது கதைகள்.</p><p>ரியாஸ் தன் கதைகளில் ஊர் குறித்தோ, தான் வாழும் நாட்டைக் குறித்தோ அப்படி எந்த மனமயக்கமும் பெருமிதமும் இன்றியே வாழ்வை முன்வைக்கிறார். அந்த வகையில், ரியாஸும் உமா கதிரும் ஒரு சாலை மாணாக்கர்கள். நுட்பமான விவரிப்புக்களைக் கொண்டது ரியாஸின் கதை உலகம்.</p><p>... கணக்குப்பிள்ளை நாசர் மூர்ச்சையாகிக் கிடந்தார். உடலை பள்ளிவாசலில் இருந்து தருவித்த மய்யத்துக்கான கட்டிலில் மாற்றி வைத்தவன், மய்யத்தைத் குளிப்பாட்டப் போவதாகவும் பெண்கள் அனைவரும் முற்றத்தை நீங்கும்படியும் சத்தமாகக் கத்தினான் பெம்பலா. அவன்தான் இலந்தை இலை ஊறவைத்த அண்டா தண்ணீரில் சிறிது ஜம்ஜம் தண்ணீர் கலந்து கணக்குப்பிள்ளையின் உடலுக்கு ஏதுவாக வெந்நீர் கலந்து, நாள்பட்டுப் படுக்கையில் கிடந்த நாசரின் உடலை அவரின் முதுகுப் புண்களைக் கிழித்துவிடாத அளவு குவளையில் தண்ணீரை அள்ளி உடல் முழுதும் அள்ளி ஊற்றினான். நாசர் உடலை பின்பக்கம் திருப்பி ஆசனவாய்க்குள் தனது பெருவிரலை விட்டு நோண்டினான். ஆசனவாயில் இருந்து சிறிய மல உருண்டையை எடுத்து எறிந்தான். அவர் உடலை இறைவனிடம் பரிசுத்தமாக அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் மீண்டும் தன் விரலை ஆசனவாய்க்குள் விட்டவாறு குவளைத் தண்ணீரை ஊற்றிக்கொண்டே கூறினான், ‘அஷ்ஷஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ்’.</p><p>... செவத்தகனி கொழும்பு மருதானையில் படித்த காலத்தில்தான் அலிமாப்பூ அவருக்கு அறிமுகம். செவத்தகனி வாப்பாவின் தாஜ் டீ ஹவுஸ் வெள்ளவத்தையில் வெகு செல்வாக்கு செலுத்தியிருந்த காலம். செவத்தகனி சிங்கள ஆக்களைப் போல் படிக்க வேண்டும் என்று செவத்தகனியை கான்வென்ட்டில் சேர்த்துவிட்டார் செவத்தகனி வாப்பா. ஆனால் ஒருநாள் சிலோனில் இருந்து கோட்டையூருக்கு வரும் சரக்குப் படகு நெய்னார் சர்வீசில் செவத்தகனியும் அலிமாப்பூவும் ஜோடியாய் வந்திறங்கினர். காங்கேசந்துறையில் இருந்து கோட்டையூருக்கு வந்திறங்கும் சரக்கு மெயிலில் செவத்தகனி ஜோடியாக வந்திறங்கினார் என்று செவத்தகனி வாப்பா அவரை வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.</p><p>... வழமையான நேரமாக இருந்தால் இந்நேரம் சர்க்கஸ் கூடாரம் களைகட்டியிருக்கும். க்ளோன் சேர், ரசியன் ரோப், காமிக் ஜாக்கிங், புல் பெண்ட் ரோலிங், அக்ரோபேட் ஸ்டேச், சைனீஸ் வாக்கிங் லேடர், டெத் குளேப், ரிங் ஷிப்-அப், டெத் எட்ஜ், ஸ்கை வாக், ஆப்பிரிக்கன் நெருப்பு நடனம், ரசியன் டிராம்போ, பிரமிட் இப்படி எண்ணற்ற கலைகளோடு மிருக வித்தைகளையும் மக்கள் கண்டுகளித்திருப்பார்கள். சிங்கம் காணாமல் போனதிலிருந்து பதட்டம் இருந்தாலும் அரசாங்கம் தினசரி புதிய கட்டுப்பாடுகளுடன் இரண்டு காட்சிகளை நடத்த அவர்களுக்கு அனுமதி தந்திருந்தது.</p><p>விசிலடித்ததும் தன் கால்களைத் தூக்கி மக்களுக்கு சலாம் போடும் பாமரனியன், டால்மியன், பாண்ட் நாய்கள், பாரசீகப் பூனைகள், ஓநாய்கள், நீர்யானை, வரிக்குதிரை, பஃபூன் குரங்கு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாஷையில் பேசிக்கொண்டிருந்தது.</p><p>... பயம், தெய்வீகம் இரண்டும் கலந்த ஒன்றாக சங்கரனின் சர்க்கஸ் கூடாரச் சிங்கம் அந்நிய நிலத்தில் மாறிக்கொண்டிருந்தது. சீன கம்போங்கிலோ கதை வேறு மாதிரி உருவெடுத்தது. புராணத்தில் வரும் நியென் மிருகம் மீண்டும் உலவுவதாக நம்பினார்கள். வீடுகளில் சிவப்பு விளக்கை ஏற்றிவைத்தார்கள். அவர்களது கிராமத்தை கொள்ளை நோய் ஆட்டியது. நோயில் மடிந்துகொண்டிருந்தவர்களில் சிலர் குணம் பெற்றது சர்க்கஸ் சிங்கம் தப்பித்துப்போன நாள்களில் நிகழ்ந்தது. முற்றாக அவர்கள் குணம்பெற்ற அடுத்தடுத்த நாள்களில் அம்மக்களே சர்க்கஸ் சிங்கத்திற்கு தாமாக முன்வந்து வைத்த பெயர்தான் ‘சிங்கா’.</p><p>... எந்த நாளில் இவ்வளவு கறார்தன்மையை உருவேற்றிக்கொண்டாள் என்று தெரியவில்லை. மூன்றுமுறை கருத்தரித்தும் கறுப்பும் சிவப்புமாக இரத்தக் கட்டிகள் வெளியாகிவிட்ட ஏதோ ஒரு நாளிலா? ஏப்புக்காட்டும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிடலாம் என்று தோன்றிய ஒரு நாளிலா? யாரையோ எடுத்து வளர்ப்பதற்கு பதிலாக தன் அண்ணன் மகனையே எடுத்து வளர்த்தாள். ஆசையசையாய் அவனுக்கு புதிய துணிமணிகள் வாங்கிப்போட்டு ‘செல்லான், செல்லான்’ என்றழைத்தவளை, அவன் பெரியவனானதும் ‘இங்கிரு மாமி... என்ன அங்கின உக்காராதே, இதை செய்யாதேனு பெரிய சட்டம் போடுற? நீ ஒன்னும் என்னய பெத்த உம்மா கிடையாது’ என்று சொன்னதும் அழுகையும் விம்மலுமாக ஹலிமா மனம் உடைந்து சுக்குநூறாக உடைந்துபோன ஒரு நாளிலா?</p><p>... பாதாம் துறைமுகத்தைச் சுற்றியும் கடல். தூரத்தில் எங்கோ பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பு. தான் தவறவிட்ட பாதை கடலுக்குள் ஒரு பச்சை மினாரா நோக்கிச் செல்கின்றது.அவனுடைய அத்தா பள்ளிவாசலின் உள்விதானம் நிழல் படியும் தரையில், ஒரு விரிப்பில் முழங்காலிட்டுப் பிரார்த்திப்பவராகத் தெரிகின்றார். கடலின் ஓரத்தில் படகில் இருந்த மீனவன், வலையைத் தூக்கி கடலுக்குள் எறிகின்றான். வலை முக்காலத்திற்கும் அப்பால் போய் விழுகிறது. இனி என்றும் மீட்க முடியா தூரத்தில் போய் அவனுக்குள் விழுகின்றது. பாதை மெல்ல கடலுக்குள் சரிகின்றது. உண்மையில் மனிதனுக்கு இரக்கம், அன்பு, கருணை ஆகியவை அவனைத் தீண்டும்போது மனிதன் பலவீனமடைந்துவிடுகிறான்.</p><p>இப்படி நுட்பமாய் சிறுகதைகளை நெய்வதன் வழி ரியாஸின் கதை உலகம் நமக்கு அணுக்கமாகிறது.</p><p>இந்த தொகுப்பிலுள்ள ஒன்பது கதைகளின் சுருக்கத்தையும், பழைய ‘B.இரத்தின நாயக்கர் & சன்ஸ்’ வெளியீடுபோல விவரித்துக்கொண்டு போவதில் எனக்கு உவப்பில்லை. சாரமாக ரியாஸ் கதைகள் என்ன முன் வைக்கின்றன என்பதை சொல்வதே சரி. ரியாஸின் கதை உலகு துரோகம், கருணை, வன்மம், மிகுபுனைவு, வீழ்ச்சி, வாய்மொழி வரலாறு என விரிகிறது.</p><p>புதுமைப்பித்தன் 99 கதைகள் எழுதினார். அதற்குப் பின் வந்த எல்லோரும் அந்த நூறாவது கதையைத்தான் எழுத முயல்கிறோம் எனப் பகடியான வரியுண்டு. ரியாஸும் அந்த நூறாவது கதையை எழுத விரும்புகிறார் என்றே நான் நம்புகிறேன்.</p><p>நமக்கு கலையில் என்னதான் வேண்டும்? எது நம்மை ஈர்க்கிறது? இந்தக் கேள்விகள் பதில் சொல்ல முடியாத அத்வைதக் கேள்விகளோ இருப்பியல் கேள்விகளோ அல்ல.</p><p>கலை நம்மை ஆட்கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். அவை நமக்கு உள்ளே போய் நம்மை தொந்தரவுசெய்ய வேண்டுமென விரும்புகிறோம். அந்நிய நிலத்திலோ அருகிலோ சிந்தப்படும் குருதியில் நம் இரத்தமும் இருப்பதாக உணர விரும்புகிறோம். நம்மைத் தேடுகிறோம். பிரபஞ்சத்திற்குப் பொதுவான, மறுக்க முடியாத, நிரந்தரமான அறத்தைத் தேடுகிறோம். அங்கு ஏசு சிலுவையில் அறையப்பட்டால், நாம் வலப்பக்கம் பாரபாஸைத் தொங்கவிட விரும்புகிறோம்.</p><p>அப்பொழுதில் விமர்சகர்கள் வேண்டுமானல் ஏரோது மன்னனாக நின்று வேடிக்கை பார்க்கட்டும். நாம் கண்ணீர் விட விரும்புகிறோம். நம் கண்ணீரை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி அதைப் பரிசோதித்து வகைப்படுத்துவது பேதமை மிகுந்த விமர்சகனின் பணி.</p><p>நாம் கலையில் சரணடைய விரும்புகிறோம். அது-நாம் என்ற வேறுபாடின்றி அதனோடு கலக்க விரும்புகிறோம்.</p><p>தஸ்தயேவ்ஸ்கியை விட இவ்வுலகில் யார் மீது கூடுதலாக கண்ணீர் சிந்தப்பட்டிருக்கும்?! இன்றும் அவரின் கல்லறையில் கண்ணீர் நதியில்தான் நாம் மிதந்துகொண்டிருக்கிறோம்.</p><p>சிங்கா, <a href="https://abedheen.wordpress.com/2022/03/25/anis-story-1/" target="_blank">நகுதா</a>, ஏழாவது வானத்தில் வீடு, பெம்பலா — இந்த நான்கு கதைகள்தாம் என்னைப் பொறுத்தவரையில் இத்தொகுப்பில் ஆகச் சிறந்தவை.</p><p>கலையில் ஒரு கொடூர விதியிருக்கிறது. அதாவது, ஆக மோசமான வறுமையைக் கூட மிகுந்த கலையுணர்வுடனும் அழகியலுடனும்தான் நாம் முன்வைக்க வேண்டும்.</p><p>கலைஞன் டப்பிங் ஆர்டிஸ்ட் அல்லன். அவன் அழவைக்க வேண்டுமேயொழிய அவனே அழக்கூடாது. டப்பிங் ஆர்டிஸ்டுகள் நிறைந்த இக்காலத்தில் மிகுந்த கவனமாய் இருக்க வேண்டியிருக்கிறது. குழந்தையைக் கிள்ளிவிட்டு கிள்ளியவர்களே அழும் காலம் இது.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://anishamaraikayar.wordpress.com/" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;" target="_blank"><img border="0" data-original-height="297" data-original-width="227" height="220" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMbcgorwqDum_X6Q0NuscqtKd7XIn2kctLy_Xau7EIvTH7tDM3rmgZJtU1B08EUyyCPsajoCm1ndOp2R7fh0g3QOabsEsidVzU2-2rPnXZ6zow_PlzQkgal4fdH1zEe06jlCNg4Mxw0tUbWyqUBmwq_t0_DSmxzjQ543Q5G68s_RQwCNVz_XhQangFz2oI/w168-h220/anisha-fb2.jpg" width="168" /></a></div>இந்தக் கதைகளில் ரியாஸ் நம்மை தொந்தரவு செய்கிறார். கதையை வாசித்த பின், அன்றாடத்திற்குள் நம்மால் உடனடியாக நுழைய முடியவில்லை. நாம் கோட்டையூர் தர்காவின் வாசலிலோ, 1950களின் சிங்கப்பூரில் விமலா சர்க்கஸிலோ நிற்கிறோம். பெரியம்மா நம் கைபிடித்து சந்தனக்கூட்டிற்கு அழைத்துப் போகிறாள். சீனன் வளர்க்கும் மலைப்பாம்பு நம் மீது ஊர்ந்துசெல்ல, பெம்பலா நம் காதருகே வந்து புலம்புகிறான். துரோகத்தின் நாணயங்களை வீசி எறிய ஹலீமா எதிரே வந்துகொண்டிருக்கிறாள்.<p></p><p>நிழல் சிறுகதை நாவலாய் விரிய வேண்டியது. மலே பாஜு சிறுகதை இந்த தொகுப்பின் குழுப் புகைப்படத்தில் கூச்சப்பட்டுக் கொண்டு நிற்கிறது. ரியாஸிடம் நாம் எதிர்ப்பார்ப்பது மலே பாஜுக்களை அல்ல.</p><p>ரியாஸ் நமக்கு புதிய நிலப்பரப்புகளையும், வாழ்முறைகளையும், பிரச்சனைகளையும் காட்டுகிறார். அவை தமிழுக்குப் புதியவை. கலையின் நியாயத்தைக் கைவிடாதவையாகவும் இருக்கின்றன. அதுவே ரியாஸிடம் நம் எதிர்ப்பார்ப்பைக் கூட்டுகிறது.</p><p>1950களில் நிகழும் சிங்கா கதையில் தொலைந்த சிங்கம் கடைசிவரை பிடிபடாமல் ஓரு தொன்மாக மாறிவிடுகிறது. சந்தா சாகிபு வீட்டில் இருப்பதாகவும் ஒரு நம்பிக்கையுண்டு. அந்த சிங்கம் சந்தா சாகிப் வீட்டிலிருந்து தப்பி ரியாஸ் வீட்டில் தலைமறைவாக அல்லது குரல் மறைவாக வாழ்வதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>அந்த தொன்ம சிங்கம் ரியாஸுக்கு இன்னும் நிறைய கதைகளை வழங்கட்டும். அந்த சிங்காவை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ரியாஸ். சிங்கா இருக்கும்வரைதான் நாம். அல்லது, நாம் இருக்கும் வரைதான் சிங்கா.</p><p>மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ரியாஸ்!</p><p>ஆன்லைனில் ஆர்டர் செய்ய: <a href="https://www.commonfolks.in/books/d/sigari-maarkkam">https://www.commonfolks.in/books/d/sigari-maarkkam</a></p><p>📞 வாட்ஸ்அப்பில் ஆர்டர் செய்ய: +91-755017476</p><p>*</p><p>நன்றி : <a href="https://tamil.wiki/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">கவிஞர் சாம்ராஜ்</a></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpdn5Dr_SQmcKG1PN03iyHKdlvXgLk25Nb0irRORf13UQqHOBm_Ve4ITX4nFGWTZTePDk1qkmqAmY55HAWzUTcJ7sEs0sfQzhOs9LtrVymFSz3dwkfAVLqlLth_U659iOwdZWxDh6QEqGoEnNTONlT8hZ8nz4FEDncsIKdLwSIdvUmBF-XPGRUHTPXuvnu/s253/samraj-fb1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="253" data-original-width="201" height="208" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpdn5Dr_SQmcKG1PN03iyHKdlvXgLk25Nb0irRORf13UQqHOBm_Ve4ITX4nFGWTZTePDk1qkmqAmY55HAWzUTcJ7sEs0sfQzhOs9LtrVymFSz3dwkfAVLqlLth_U659iOwdZWxDh6QEqGoEnNTONlT8hZ8nz4FEDncsIKdLwSIdvUmBF-XPGRUHTPXuvnu/w165-h208/samraj-fb1.jpg" width="165" /></a></div><br /><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p style="text-align: center;">*</p><p style="text-align: center;">தொடர்புடைய ஒரு சிறுகதை :</p><p style="text-align: center;"><a href="https://abedheen.wordpress.com/2022/03/25/anis-story-1/" target="_blank">நகுதா - முஹம்மது ரியாஸ்</a></p>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-65732348522435050252023-09-27T11:38:00.000+04:002023-09-27T11:38:37.526+04:00லக்ஷ்மி பாலகிருஷ்ணன் - 'பொதிகை’ நேர்காணல் <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/xWVG_a8snyg?si=TKAz31zyZZlgX6io" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen></iframe>
<p><br /></p><p>***</p><p>Thanks to : Doordarshan Podhigai , <a href="https://www.facebook.com/lakshmi.balakrishnan.9" target="_blank">Lakshmi Balakrishnan</a></p><p><br /></p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-5437114757571389542023-08-28T10:00:00.000+04:002023-08-28T10:00:00.172+04:00மன்னிப்பு (சிறுகதை ) - நாகூர் ரூமி<p><b><br /></b></p><p></p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdoSqk7a5NLkD6rzducW8KPAWp9s8svyC0QQvN-ltyMT_HICmMq4snAEei4Td_YMZst2UPvvDfIKDcH_pIaJ0AHVs7Bg1jGydwhnHoaNyjyqBTdqJj7MoizXNvz8UbyFYB8mvKk1eyulgXi9IjQeucgUAJQVcuJouL7DzQ-TTvo1Xc0xmOKADkbbCiOuZl/s546/rumi-thaadi-fb.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="514" data-original-width="546" height="176" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdoSqk7a5NLkD6rzducW8KPAWp9s8svyC0QQvN-ltyMT_HICmMq4snAEei4Td_YMZst2UPvvDfIKDcH_pIaJ0AHVs7Bg1jGydwhnHoaNyjyqBTdqJj7MoizXNvz8UbyFYB8mvKk1eyulgXi9IjQeucgUAJQVcuJouL7DzQ-TTvo1Xc0xmOKADkbbCiOuZl/w187-h176/rumi-thaadi-fb.jpg" width="187" /></a></div><b><p><b><br /></b></p>மன்னிப்பு - நாகூர் ரூமி</b><p></p><p><br /></p><p>சாயங்காலம் ஆரம்பித்த வேதனை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான். கால்வலிக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. என்றாலும் எங்கோ நெருடுவதை அவனால் உணர முடிந்தது.</p><p><br /></p><p>வலது பாதத்தைப் பார்த்தான். பெரு விரலிலிருந்து கணுக்கால் வரை வெட்டி எடுத்து விடலாம் போலத் தோன்றியது. ஆயிரம் கோடாரிகளை வைத்து யாரோ உள்ளே கொத்துகிறார்கள். நின்றால், நடந்தால் ம்ஹூம் சாயங்காலத்திலிருந்து விரலைக்கூட அசைக்க முடியவில்லை. யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. எப்படிச் சொல்வது? பாட்டிக்கு மட்டும்தான் தெரியும். அவள் 'அப்பவே சொன்னேனே' என்று அரற்ற ஆரம்பித்து விட்டாள். பாட்டியின் புலம்பலை ஒரு முறைப்பு அடக்கிவிடும். ஆனால் மனசாட்சியின் புலம்பலை? சாயங்காலத்திலிருந்தே அவனது அறிவு சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து கிடக்கிறது. மீசையில் மண் ஒட்டிவிடுமே என்று சமாளித்து வந்தான். இனிமேல் முடியாது.</p><p><br /></p><p>பாட்டியின் நாற்பது வருஷ மூடநம்பிக்கைகள் பச்சிலை உருவில் பாதத்தில் தேய்க்கப்பட்டனவே தவிர, வலி குறையவில்லை. பாட்டியின் நம்பிக்கை பச்சிலையாகக் காய்ந்து, உதிர்ந்து விட்டிருந்தது. ராமநாதன் சில தைலங்களின்மீது நம்பிக்கை வைத்திருந்தான். அதில் சிங்கப்பூர் 'கோடாலி' தைலமும் ஒன்று. அவனைப் பொறுத்தவரை அதுவும் சர்வரோக நிவாரணி மாதிரி. அதையும் காலில் கொட்டியாயிற்று. விறுவிறுவென்று ஏறியதே தவிர, பாதத்தினுள்ளே நரம்புகளுக்குப் பதில் அக்கினிக் கட்டிகள் தான்.</p><p><br /></p><p>ஈஸிசேரில் சாய்ந்தபடி காலைத் தூக்கி எதிரிலிருந்த கட்டிலில், மெத்தைமீது போட்டுக் கொண்டான். கொஞ்சம் வசதியாக இருந் தாலும் கோடாரிகள் தங்கள் வேலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.</p><p><br /></p><p>ராமநாதன் தன் நண்பன் ரவியின் உபாயத்தைக் கையாண்டு பார்த்தான். உடலில் எங்காவது அரித்தால் ரவி சொறிய மாட்டான். மனதின் திடத்தன்மைக்கு உடனே ஒரு போட்டி. 'அரிக்கிறாயா...ம்... அரி... எவ்வளவு நேரம் அரிப்பாய்... பார்க்கிறேன்... நான் சொறியவே மாட்டேன்...' என்று வாய்விட்டுச் சங்கல்பம் செய்து கொள்வான். தோலின் தினவையும் நகங்களின் பரபரப்பையும் அவன் மனம் வெற்றி கொள்வதை ராமநாதன் எத்தனையோ தரம் பார்த்திருக்கிறான். அதை நினைத்துக்கொண்டான். 'வலிக்கிறாயா... பார்ப்போம்... எவ்வளவு நேரம் வலிப்பாய்...' என்று வாய்விட்டுச் சங்கல்பம் செய்துகொண்ட கனமே அது சுக்கு நூறாய் உடைந்து போனது. ஆயிரம் ரவிகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத வலி.</p><p><br /></p><p>நத்தைபோல் வந்தது இரவு. ராமநாதன் முனங்க ஆரம்பித்தான். பாட்டி மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள். ஒருமுறை முறைத்து, “உடனே டாக்டர் சீனிவாசனை வரச்சொல்லி ஃபோன் பண்ணு," என்றான்.</p><p><br /></p><p>'அப்பவே சொன்னனே... மாரியாத்தாட்ட விளையாடாதடான்னு'' - போகும்போதும் புலம்பிக் கொண்டே சென்றாள் பாட்டி.</p><p><br /></p><p>மாரியாத்தா, நகங்களும் மீசையும் கொண்ட மாரியாத்தா! சே... என்ன அறிவு கெட்டவர்கள் என்று நினைத்தான். வலி அதிகமாகியதுபோல் இருந்தது. கண்ணை மூடிக் கொண்டான். பல்லைக் கடித்துக் கொண்டான்.</p><p><br /></p><p>சீனிவாசன் வந்தார். பாதத்தைத் தட்டிப் பார்த்தார். திருப்பினார் அப்படியும் இப்படியும் சுண்டினார். கடைசியில் ராமநாதனிடம், 'வாட் ஹாப்பண்ட் ஆக்ச்சுவலி?" என்றார். இப்போது என்ன சொல்வது? ஒரு கணம்தான். தயக்கம் உணரப்படுவதற்குமுன் பதில் சொல்லிவிட வேண்டும்.</p><p><br /></p><p>"காலை உதறினேன். சுவரில் இடித்துவிட்டது''. பாட்டியைத் திருட்டுத்தனமாய்ப் பார்த்துக் கொண்டான். அவள்தானே ஒரே சாட்சி. சாட்சியும் மௌனித்துவிட்டது. அவன் எதிர்பார்த்தது போலவே.</p><p><br /></p><p>"இடிச்சுதுன்னா சொல்றே?" வீக்கமே இல்லையே?" ஆச்சரியப்பட்டார் சீனிவாசன். 'ஓகே... ஒரு ஆயின்ட்மென்ட் தாரேன், தடவிக்கோ" என்றார்.</p><p><br /></p><p>''சார்... இரவு நான் எப்படியாவது தூங்கணூம்."</p><p><br /></p><p>'ஏன், அவ்வளவு வலிக்கிறதா?” என்று கேட்டு ஒரு இன்ஜெக்சன் போட்டார்.</p><p><br /></p><p>ஊசி போட்ட வலியை உணர முடியவில்லை. இமைகள் லேசாக கனத்தன. டாக்டர் காலையில் வருவாராம்.</p><p><br /></p><p>மனத்தில் அந்த நிகழ்ச்சி மறுபடியும் நடந்தது.</p><p><br /></p><p>வீட்டுக்குள் வந்தபோது பாட்டியைத் தவிர யாருமில்லை. அம்மாவும் அப்பாவும் சிதம்பரம் கோயிலுக்கு. பாட்டி அடுப்பங்கரையில் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்தான் ராமநாதன். ஓசைப்படாமல் வழக்கம்போல. அப்போது தான் அது நடந்தது.</p><p><br /></p><p>பாட்டியின் பக்கவாட்டில் எவர்சில்வர் ப்ளேட்டில் மல்லிகைப் பூவாய்ச் சாதம். பாட்டி திரும்பி ஏதோ செய்து கொண்டிருந்தாள். அவள் பார்க்காதபோது, சோற்றில் வாயை வைத்து நக்கிக் கொண்டிருந்தது மாரியாத்தா. மாரியாத்தா, வீட்டுப் பூனை. பாட்டியின் செல்லப் பூனை. பாட்டி வைத்தபெயர். பாட்டியின் இஷ்ட தெய்வம் மாரியாத்தா. இஷ்டத்துக்குச் சாதத்தை எச்சில் பண்ணிக் கொண்டிருந்தது.</p><p><br /></p><p>ராமநாதனுக்குப் பூனைகள் என்றாலே கால்கள் பரபரக்கும். நக்கும் சுவாரஸ்யத்தில் மாரியாத்தா இவனைக் கவனிக்கவில்லை. மெல்ல மெல்லப் பூனைபோல் ஓசைப்படாமல் நடந்து அதனருகில் சென்றான்.</p><p><br /></p><p>அதன் வயிற்றுக்குக் கீழ் தன் வலது பாதத்தை நுழைத்தான். பாட்டி திரும்பிக் கொண்டிருந்தாள். அதற்குள் காரியத்தை முடித்து விடவேண்டும். இல்லையேல் சத்தம் போட்டுக் கிழவி காரியத்தைக் கெடுத்துவிடுவாள். இந்தச் சனியன் பிடித்த பூனை இனிமேல் இந்தப் பக்கமே வரக்கூடாது.</p><p><br /></p><p>கால் பந்தை 'கோல்' நோக்கி உதைப்பதுபோல ஒரே எத்து. பூனை எதிரே இருந்த சுவரில் 'டக்' என்ற ஒலியுடன் பயங்கரமாக மோதிக் கீழே விழுந்தது. விழுந்தபோது 'மோவ்' என்று பரிதாபகரமான ஒரு ஒலியை எழுப்பியது. அந்த ஒலி ராமநாதனைச் சற்றுப் பயமுறுத்தியது. பின்பு பூனை ஓடிவிட்டது.</p><p><br /></p><p>பாட்டி பார்த்துவிட்டு, "அடப்பாவி! மாரியாத்தா சூலிடா, அடப் படுபாவி” என்று பதறினாள்.</p><p><br /></p><p>சூல்கொண்ட மாரியாத்தா. ராமநாதனுக்கும் சற்றுப் பாவமாக இருந்தது. அவசரத்தில் வயிற்றின் உப்பலைக் கவனிக்கவில்லை. </p><p><br /></p><p>''சரி ...சரி ...இந்தச் சோத்தை வெளியிலே கொட்டு... மாரியாத்தாவாம் மாரியாத்தா...” என்று திட்டிவிட்டு வந்ததுதான். அரைமணியில் ஆரம்பித்தது வலி.</p><p><br /></p><p>திடீரென்று விழிப்பு வந்தது. மணி பார்த்தான். இரவு ஒரு மணி. வீடு பாட்டியோடு சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவனோடு சேர்ந்து வலது பாதம் விழித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் கோடரிகள்.</p><p><br /></p><p>ஒரு யோசனை தோன்றியது. அப்படிச் செய்துவிட வேண்டியது தான் என்ற முடிவோடு எழுந்தான். ஹாலின் கிழக்கு மூலையில் உள்ள அலமாரிக்குப் பின்புறம்தான் மாரியாத்தாவின் குடித்தனம். இந்நேரம் அங்கிருக்கிறதோ என்னவோ.</p><p><br /></p><p>ஹால் விளக்கைப் போட்டான். அலமாரிக்குச் சென்றான். பின்னால் பார்க்கப் பயம். மாரியாத்தா மேலே பாய்ந்து விடுமோ?</p><p><br /></p><p>மெதுவாக எட்டிப் பார்த்தான். மாரியாத்தா குட்டிகள் ஈன்றிருந்தது. இரண்டு குட்டிகள். வெள்ளையும் சாம்பலுமாய். குட்டிகளை நக்கிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தலையை நுழைத்தான். இவனைப் பார்த்தவுடன் பளபளக்கும் கண்களுடன் போருக்குத் தயாராவதுபோல் எழுந்து நின்றது.</p><p><br /></p><p>ராமநாதன் என்ன ஆனாலும் சரியென்று மண்டியிட்டு அமர்ந்தான். மிகுந்த சிரமத்துடன் இரு கைகளையும் குவித்து வணங்கினான். வார்த்தைகள் பயனற்றுப் போயின. கரகரவென்று கன்னங்களில் சூடாகக் கண்ணீர் வழிந்தோடியது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தானென்று தெரியாது. 'சரி போ' என்று மாரியாத்தா உத்தரவு கொடுத்ததுபோல் இருந்தது. எழுந்து வந்து, விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.</p><p><br /></p><p>காலையில் காப்பியுடன் பாட்டி எழுப்பினாள். விசாரித்தாள். ராமநாதன் பாதத்தைப் பார்த்தான். கோடரிகள் புதைக்கப்பட்டிருந்தன. வலி இறந்து விட்டிருந்தது. உற்சாகமாகப் பாதத்தை ஆட்டிக் காட்டினான். பாட்டி வாஞ்சையாகத் தலையைக் கோதினாள். அறைக்குள் பார்வையை ஓட்டினான் ராமநாதன். அறை வாசலில் நின்று மாரியாத்தா பார்த்துக் கொண்டிருந்தது.</p><p>*</p><p>(குமுதம் 27.8.1987)</p><p>*</p><p>நன்றி : மாரியாத்தா & <a href="https://www.facebook.com/Nagorerumi" target="_blank">நாகூர் ருமி</a></p>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-13657374738902122222023-08-11T11:44:00.000+04:002023-08-11T11:44:20.022+04:00Soul Searcher - L Shankar<p>பேஸ்புக்கில் <a href="https://www.facebook.com/vasu.balaji">வாசு பாலாஜி</a> :</p><p>முதல் முதல்ல இசையமுதம்ல 74 வாக்குல ஓட்டை ட்ரான்ஸிஸ்டர்ல குப்புறப் படுத்து ரெண்டு கையும் குழிவா வச்சு காதைப் பொத்திக்கிட்டு (ஸ்டீரியோ எஃபக்ட் வரும்) வயலின் ட்ரையோ எல்.வைத்தியநாதன், எல். சுப்ரமணியம், எல். ஷங்கர் பஞ்சநடை வர்ணம் கேட்டதும் வேலைக்குப் போனதும், கேசட் ப்ளேயர் வாங்குனதும்னு பக்கெட் லிஸ்ட்ல போட்டது. அப்புறம் கேசட் பைத்தியம் புடிச்சதும் ரெகார்ட் ஸ்டூடியோவா அலைஞ்சும் கிடைக்கலை. </p><p>அப்புறம் சக்தி க்ரூப்ல சிலதெல்லாம் கிடைச்சாலும் என்னமோ நிறைவில்லை. </p><p>ஒரு நாள் டாரண்ட்ல தேடுவோம்னு தேடுனா எல். ஷங்கர் மட்டும் கிடைச்சது. ஆபேரி, கீரவாணி, சங்கராபரணம்னு எல்லாம் ராகம் தானம் பல்லவி. டபுள் வயலின்ல ஆபேரி, கீரவாணி, முக்கியமா சங்கராபரணத்துல கூடவே பாடி வாசிக்கறது கேட்டதும் கூஸ் பம்ப்ஸ். அய்யோ இந்த மனுஷன் முழுசா பாடிண்டே வாசிச்சா எப்படி இருக்கும்னு ஏக்கமாவே இருந்தது. </p><p>நடுவுல தேடறப்போ எல். ஷங்கெர்னு போட்டு சிலது கிடைச்சது. அதுலயும் ஒரு 55 நிமிஷ கான்ஸர்ட். விக்கு, ஜாஹீர் ஹுசேன் முந்தா நேத்து கிடைச்சது. வழக்கம் போல இங்க ஷேர் பண்ணேன். நோ டேக்கர்ஸ். அப்படியே கிடைக்கிறதெல்லாம் பார்த்துட்டிருந்தேன். எல்லாம் வெள்ளக்காரப் பயலுவ கலக்ஷன். </p><p>இப்ப சாப்பிட்டு வந்து உட்கார்ந்தேன். எவனோ ஒரு வெள்ளக்காரப் பாவி சைட்ல ஸோல் செர்ச்சர் எல் ஷங்கர்னு போட்டிருந்தான். ரெண்டு விஷயம் கிடைச்சது.</p><p>1. எல் ஷங்கர், ஷங்கெர்னு மட்டும் தேடுனா போறாது. லக்ஷ்மி நாராயணன் ஷங்கர்னும் தேடணும்.</p><p>2. என்னப்பா கேட்ட. முழுசா பாடியும் கேட்கணுமா. இந்தான்னு 50 நிமிஷம் காபி ராகம் தானம் பல்லவி. </p><p>3. இன்னைக்கு ஆடிக் கிருத்திகையா. முருகன் பாட்டு</p><p>புடிச்சி 320க்கு கன்வர்ட் பண்ணி இறக்கியாச்சு. 😄</p><p>*</p>
<iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/lZf1v33xT-w" title="YouTube video player" width="560"></iframe>
<p>Thanks to : Aljosha Thomas / Nicodemus & Vasu Balaji</p><p><br /></p>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-64230698767590383452023-07-07T11:02:00.000+04:002023-07-07T11:02:23.919+04:00ஃபோன் நகரம்‼️ (சிறுகதை) - எஸ்.எல்.எம். ஹனீபா<div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1Hhg_wLAMZAfDd73GjNONqGCHp8US8X4vj-fTNCF8N4MLWtpnV_rvywdbJ2yrpKWyU4TG1kfwnUf0RcY16dkZg-mrS4b64MvdLSo_3-LUcV8L5Z8qSiBTpVziP2eHesCKZkFUWFmuhN1RS1fxTlmfFTZHpQjTvsg_FTMY_gyNvdPS-FFcwoIDX8Br3uv7/s251/slm%20fb%201.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="251" data-original-width="201" height="251" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1Hhg_wLAMZAfDd73GjNONqGCHp8US8X4vj-fTNCF8N4MLWtpnV_rvywdbJ2yrpKWyU4TG1kfwnUf0RcY16dkZg-mrS4b64MvdLSo_3-LUcV8L5Z8qSiBTpVziP2eHesCKZkFUWFmuhN1RS1fxTlmfFTZHpQjTvsg_FTMY_gyNvdPS-FFcwoIDX8Br3uv7/s1600/slm%20fb%201.jpg" width="201" /></a></div><br /><p><b>ஃபோன் நகரம்</b></p><p><span style="color: red;">எஸ்.எல்.எம். ஹனீபா</span></p><p>அவன் அமரனான் : அவன் பொன்னகரம் படைத்தான் - நான் ஒரு போன் நகரம் எழுதினேன்..</p><p>வீட்டின் முற்றம் முழுவதும் விதவிதமான பூஞ்செடிகள் பூத்துக் குலுங்கும். அதிகாலையில் பனிகுளித்து, முகங்களில் அழகும் மணமும் துளிர்த்து புத்தம்புதிய மணமகள் போல நிற்கும் அந்தப் பூஞ்செடிகளைத் தினந்தினம் தரிசித்துத் திழைத்து நிற்கிறேன்..</p><p>அன்றும் வழக்கம்போல நிற்கிறேன், எனது பத்துவயதுச் செல்லக்குட்டி பாடசாலைக்குப் போக ! அவளை தரிசிக்க.... </p><p>அதோ வருகிறாள் எனது சசிக்குட்டி. அவளுக்குப் புன்னகையே முகமாக வாய்த்துள்ளது, அத்தனை அப்பாவித்தனமும் குறும்பும் நிறைந்த, நிலவில் வடித்த பேரழகு முகம் அவளுக்கு..</p><p>"ஹாய் அங்கிள் ! குட் மோர்னிங்"</p><p>"குட் மோனிங், குட் மோனிங்.. வாடா செல்லம்.. எப்டி இருக்காய் ?" - கேட்டுக்கொண்டே அந்தக் கணத்தில் பிறந்த ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள அந்தப் பூஞ்செடிகளைப் பார்த்தேன்.. மிகவும் அழகானவை அந்தப் பூக்களா அல்லது எனது சசிக்குட்டியா ? சந்தேகம் கலைந்தது, சசிக்குட்டிதான் பேழகு ! </p><p>அவள் பாடாசாலைக்குப் போகும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒவ்வொரு வகையான பூக்களில் ஒன்றைப் பறித்துக் கொடுப்பேன். அன்றும் அவளுக்கு ஒரு ரோசா மலரைப் பறித்துக் கொடுத்தேன்..</p><p>முத்துப் பற்கள் பளிச்சிட "தேங்க் யூ அங்கிள், Bye.." </p><p>எனக்கும் அவளுக்கும் இடையே இந்தச் சந்திப்புத் தினமும் நடக்கும்.. </p><p>மாலை நேரங்களில் அவள் ஓதல் பள்ளிக்குப் போவாள். அப்போது சற்று வெயில் நேரமாக இருப்பதால் நான் கொஞ்சம் வீட்டுக்குள் சாய்ந்து கிடப்பேன். சொந்த வீட்டுக்குள் வருவதுபோல எனது அறைக்குள் வருவாள். படுத்துக் கிடக்கும் எனது கைகளைப் பற்றி, கைகுலுக்கிவிட்டுச் செல்வாள். சிலபோது எமது கைகளில், நெற்றியில், தலையில் முத்தமிட்டுச் செல்வாள். அந்த வயதில் எனக்கொரு மகள் இருந்து அவள் இதையெல்லாம் செய்தால் எத்தகைய உணர்வுகள் ஏற்படுமோ அதே உணர்வுகளைத்தான் சசியின் செய்கைகளும் எனக்குள் ஏற்படுத்தின. </p><p>அவளுக்குச் சிறுசிறு பொருளாதாரத் தேவைகள் ஏற்படும். படிப்புச் செலவுகள், பாடசாலை உபகரணங்கள் வாங்க என்று என்னிடம் எப்போதாவது காசு கேட்பாள், அதையும் உரிமையோடு கேட்பாள். கொடுத்து உதவுவேன்.</p><p>வருடங்கள் அவளை முன்னோக்கி நகர்த்தி வந்தன. வேகமாக, அழகாக வளர்ந்து வந்தாள்.</p><p>ஒருநாள் மாலை நான் அறையில் சாய்ந்து கிடந்தேன். சசி திடீரென ரெண்டு பையன்களோடு எனது அறைக்குள் வந்தாள். ஓதல் பள்ளி போகிற வழியில் வந்திருக்கிறாள். அந்தப் பையன்களில் கொஞ்சம் வாட்ட சாட்டமான ஒருவனைச் சுட்டிக்காட்டி "அங்கிள், இவனைத்தான் நான் லவ் பண்றேன்" என்றாள். எனக்கு அதிர்ச்சியாகப் போயிற்று. இந்தச் சசிக்குட்டி அவ்வளவு வளர்ந்து விட்டாளா இப்போது ? எனக்குள் ஒருவிதமான பிரிவுத் துயரமும் அவளது வாழ்க்கை குறித்த அச்சமும் தோன்றிற்று... </p><p>மாலை நேரங்களிலும் அவள் எங்காவது போகும்போது என்னையும் கூப்பிடுவாள். இருவரும் இரண்டு சைக்கிள்களில் சவாரி போவோம் கண்டதையும் பேசிச் சிரித்தபடி... பாடசாலையில் நடக்கும் சுவாரஷ்யமான விஷயங்களை எல்லாம் என்னிடம் சொல்லிச் சிரிப்பாள்.. அவளுக்குள் அப்போது பால்யபருவக் காதல் உணர்வுகள் முனைப்புற்றிருந்தன.. அவளது 'லவ்வர்' பையன் தூரத்தில் தென்பட்டதும் எனக்குச் சைகை காட்டி, என்னைக் 'கழற்றி விட்டுவிட்டு' அவனை நோக்கிச் சைக்கிளில் பறந்துவிடுவாள்.. </p><p>அப்போது அவள் முன்னைய பையனை விட்டுவிட்டு இன்னொரு பையனுடன் நட்பாகி இருந்தாள். அது குறித்தும் அவளிடம் கேட்டேன். "என்னடி சசி, ஆளை மாத்திட்டியா ? </p><p>"அவன் சரில்லை அங்கிள், என்னை விட்டுட்டு இன்னொருத்தியப் புடிச்சிட்டான், எனக்கென்ன ஆளா பஞ்சம், நானும் ஆள மாத்திட்டன்" என்றாள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.! </p><p>இவள் தொடர்ந்து நன்றாகப் படிப்பாளா ? பொறுப்புடன் நடந்து கொள்வாளா ? வாழ்க்கையில் சறுக்கி விடுவாளா ? என்ற கேள்விகள் என்னை அடிக்கடி துளைத்தெடுத்தன.</p><p>ஒருநாள் மாலை பாதையில் என்னைச் சந்தித்தவள் திடீரென "அங்கிள், எனக்கொரு ஐயாயிரம் ரூபா காசு வேணும்" என்றாள். நானோ திடுக்கிட்டுப் போனேன்.</p><p>"என்னத்துக்குச் சசி உனக்கு இப்ப இவ்வளவு காசு ? என்ன அவசரம் ?" என்றேன்.</p><p>"நான் நாலைஞ்சி பொடியன்மார லவ் பண்ணிட்டன் அங்கிள்.. எல்லானும் ஏமாத்திப்போட்டு விலகிட்டான்கள். இப்ப இருக்கிறவனும் போய்ருவானோ எண்டு பயமாக் கிடக்குது, அவனும் இல்லாம எனக்கு இரிக்க ஏலாது. வாற கிழம அவன்ட பிறந்த நாள். அவனுக்கொரு ஃபோன் வாங்கிக் குடுக்கணும், அவனும் அதத்தான் கேட்கான் அங்கிள்.. எப்டியாவது வாங்கிக் குடுக்கத்தான் வேணும், அதுக்குத்தான் ஐயாயிரம் ரூபா வேணும்" </p><p>நான் சிலையாகிப் போனேன் ! இவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் ! இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறது ? சசியைப் பற்றிய ஒரு பேரச்சம் எனக்குள் பொங்கிப் பிரவாகித்து வெடித்தது ! </p><p>"உன்ட நெலெம எனக்கு விளங்குது சசி.. ஆனா இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோன்னுதான் கவலையாக் கிடக்கு. நீ அவனுக்கு போன் வாங்கிக் குடுக்க நினெக்கிறதுல தப்பில்ல.. நான் பென்ஷன்காரன், ஒனக்குத் தெரியும்தானே சசி, இருநூறு முன்னூறுன்னா எடுத்துக்கேலும்..</p><p>ஐயாயிரத்திற்கு ஒடனமே எங்க போற நான்.. அதான் கவலையாக் கிடக்குது..." - நான் மிகுந்த சங்கடப் பட்டேன்.</p><p>கொஞ்ச நேரம் நெற்றியில் கோடுகள் படர, புருவங்களைச் சொருக விட்டு எதையோ கடுமையாகச் சிந்தித்துத் தலை நிமிர்ந்தவள், "சரி அங்கிள், பரவாயில்லை, நான் சமாளித்துக் கொள்றன்" என்று சொல்லி என் வயிற்றில் செல்லமாகத் தட்டிவிட்டுப் புன்னகையுடன் போய்விட்டாள். </p><p>அவளது பாடசாலைக்கு அருகில் ஒரு ஃபென்சி ஸ்டோர் கடை இருந்தது. கடைக்காரர் தமிழ்ப் படங்களில் வரும் வில்லன்கள் போலிருப்பார். அண்டா வயிறு, பருத்த ஷரீரம், காட்டுத்தனமாக வளர்ந்துகிடக்கும் அரைவாசி நரைத்த தாடி, கழற்றாத தொப்பி, அஞ்சி நேரத் தொழுகையாளி, அஷில் முஸ்லிம், பெயர் நன்றாக நினைவில் உள்ளது, சொல்ல மாட்டேன். </p><p>அந்தக் கடைக்கு சசி அடிக்கடி போவாள். பாடசாலை உபகரணங்கள் வாங்குவாள். அவள் கடைக்கு வந்தால் கடைக்காரர் குளிர்ந்துபோவார். பொருள்களை அவசரமாகக் கொடுத்து அனுப்பாமல் இழுத்தடிப்பார். அவளைச் சீண்டிவிட்டுப் பேச்சுக் கொடுத்துக் கலாய்ப்பார். பொருள்களைக் காட்டும் சாட்டில் கைகளைத் தொடுவார், தேவையில்லாமல் உரசிக்கொண்டு நிற்பார், பட்டும்படாத மாதிரி அவளது மார்பில் பிஷ்டங்களில் உதடுகளில் தட்டி, வருடி விடுவார்.. இவற்றையெல்லாம் அவள் கண்டுகொள்ளாமல் இருப்பாள், போகும்போது அவரிடமிருந்து இலவசமாகக் கிடைக்கும் டொஃபி, சுவிங்கம் மாதிரி அற்பச் சந்தோஷங்களுக்காக ! </p><p>கடைக்காரரின் இந்தக் குஷால் செய்கைகள் பற்றியெல்லாம் சசி என்னிடமும் சொல்லியுள்ளாள். அந்த மனிதன் ஒரு புழுவைப் போல என மனக் கண்களில் தோன்றி மறைவார்...</p><p>என்னிடம் ஐயாயிரம் ரூபா கேட்ட அன்றைய தினம் மாலை சசி அந்தக் கடைக்குச் செல்கிறாள்...</p><p>வெற்றிலைக் கறைபடிந்த கோரமான பற்களைக் காட்டிச் சிரித்து வழிந்து சசியை வரவேற்கிறார்.</p><p>"மாமா, எனக்கொரு ஹெல்ப் பண்ணுவீங்களா..?"</p><p>"உனக்கில்லாத ஹெல்ப்பாடி செல்லம்.. சொல்லன் பார்ப்பம், உனக்காக நான் என்னெண்டாலும் செய்வன்.." சொல்லிக்கொண்டே அந்தப் புழு சசியின் கைவிரல்களைப் பிடித்து மெல்ல அழுத்துகிறது... </p><p>"மாமா, வாப்பா வெளிநாட்டுல இரிந்து வாற மாசம் காசி அனுப்புவாங்க, காசி கிடைச்சதும் தந்துர்றன்.. எனக்கொரு ஐயாயிரம் ரூபாய் காசி கடனா தருவீங்களா..?</p><p>" என்ன புள்ள, இப்டி சிம்ப்பளா ஐயாயிரம்னு கேட்காய்.. பெரிய தொகையாச்சே.. எப்டி தாற சின்னப் புள்ள உன்னய நம்பி..?"</p><p>"என்ன மாமா.. சும்மா கதய வளக்காதீங்க, நான் பெரிய புள்ளயாகி மூணு வரிசம் இப்ப ! வாற டிசம்பருக்கு ஓ.லெவல் எழுதப் போறன், காசி தர ஏலுமா ஏலாதா, அவ்ளோதான் கத !"</p><p>"டியே, டியேய். கோவிச்சுக்காதடீ, இப்ப லாச்சிக்குள்ளால அவ்ளோ காசில்ல, அந்திக்கி யாவாரம் நடந்துதான் காசி சேரணும். நீ கவலப் படாத, நாளெக்கி ஸ்கூலுக்கு கொஞ்சம் நேரத்தோட வா, நான் சுபஹ் தொழுதிட்டு வந்து கொஞ்சம் சாஞ்சி கிடப்பன், கட துறக்கிறதுக்கு கொஞ்சம் முந்தி ஒரு 6.45 க்கிப் போல வா, கடக்கிப் பின்னால் வந்து கதவ தட்டு, நான் எழும்பி கதவ தொறந்து நீ கேட்ட காச தாறன்" என்று சொன்ன புழுவின் கண்கள் சசியின் மார்புகளின் மீது பரவுவதை சசி அவதானித்தாள்... அவளுக்கு உள்ளேயும் ஏதோ செய்வதாக உணர்ந்தாள்..</p><p>"சரி மாமா, நான் காலைல வாறன் .." என்று நகர்ந்தவளின் கையைப் பிடித்து இழுத்து ஒரு யோகர்ட்டைத் திணித்தது புழு.</p><p>இன்று கையைப் பிடித்து இழுத்த இழுப்பில் நாளை காலை தனக்கு நடக்கப் போவதை நன்றாக உணர்ந்துகொண்டாள்.</p><p>மறுநாள் காலை 6.45 மணிக்குக் கடைக்குள் நுழைந்த சசி 7.00 மணிக்கு வெளியே வந்தாள்... </p><p>சீருடையையில் கசங்கி இருந்த இடங்களை, பர்தாவை தடவிவிட்டுச் சரிசெய்தவாறே கைக்குட்டையால் உதடுகளையும் கன்னங்களையும் அழுத்தித் துடைத்தவாறு பாடசாலை 'கேட்'டை நெருங்கினாள்...</p><p>'கேட்' அருகில் நின்றுகொண்டிருந்த அவளது 'லவ்வ'ரின் கைக்குள் அந்த ஐயாயிரத்தை வேண்டா வெறுப்பாகத் திணித்துவிட்டு, அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் பாடசாலைக்குள் நுழைகிறாள்...</p><p>*</p><p>நன்றி : எஸ்.எல்.எம். ஹனீபா</p><p><a href="https://www.facebook.com/slm.hanifa">https://www.facebook.com/slm.hanifa</a></p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-28123387780993996432023-05-31T11:33:00.000+04:002023-05-31T11:33:19.629+04:00செ.திவான் நேர்காணல்<p>நன்றி : <a href="https://www.youtube.com/watch?v=hqCiMShzji8">மகா தமிழ்</a> , செளந்தர மகாதேவன்</p><p>**
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/hqCiMShzji8" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen></iframe> **</p><p><a href="https://tamil.wiki/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D" target="_blank">செ. திவான் - தமிழ் விக்கி</a></p><p><br /></p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-57675065336979831712023-04-10T13:50:00.002+04:002023-04-11T12:14:17.396+04:00இனியொரு கோபாலன் - போகன் சங்கர்<div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://www.facebook.com/boganR" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="200" data-original-width="198" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj43zsX4O-JKU-YBQOEw-OjPDpM6W_OClTUlJ382hvp3XzR9UkOIYB2lxf2cQvS6CeD2QmeSPdgv_ofvD3wzPC4GU0fWEF491l4g-HmiIMz4W10ZOHzawV2nx7CV-GyfNsIURmr_0fXpKUk4fcb1RiYVMOvxj82KDaheba1b37BxXCU4--dAXYxd_fEYA/s1600/bogan-plus-ps2.jpg" width="198" /></a></div><br /><p>நேற்று மாலை குழித்துறை கோபாலன் இறந்துவிட்டான். கோபாலன் இந்தவிடத்துப் பிரசித்தி பெற்ற கோவில் யானை. நிறைய குழந்தைகளின் ஹீரோ. நிறைய பெரியவர்களின் குழந்தை. எதிர்பார்த்த மரணம்தான். கொஞ்ச நாளாகவே அவனுக்கு உடல் நலமில்லை. வயிற்றுப் புண், சர்க்கரை வியாதி என்று என்னென்னவோ சொன்னார்கள்.</p><p>‘தேரி ஏறும்போது மூச்சிரைக்குது. இருமறான்' என்றார்கள். "இங்கேயானா எல்லா இடமும் தேரி.' இன்னும் சிலர், 'அதெல்லாம் இல்லை சார். அவனுக்குச் சரியா சாப்பாடில்லை. அவ்ளோதான். ஆனைன்னா அதுக்குள்ள சாப்பாடு தரணும். ஆனையை ஆனையா வச்சிருக்குறது அதோட சாப்பாடுதானே? இவங்க போடற பிச்சை அதோட தும்பிக்கைக்குப் போதாது.’</p><p>இதில் ஓரளவு உண்மை உண்டு. இடையில் இது சம்பந்தமாக போராட்டம் எல்லாம் நடத்தப்பட்டு அவனுக்குக் கூடுதலாய் சாப்பாடு வாங்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இன்னும் கொஞ்சம் தென்னம் மட்டைகளும் மரப்பட்டைகளும். ஆனால் எல்லாம் ரொம்பத் தாமதமாக வந்து சேர்ந்தது.</p><p>இன்று காலை அடக்கம் என்று சொன்னார்கள். அலுவலில் இருந்து அவசரமாக விடுவித்துக்கொண்டு அவனைப் பார்க்க ஓடினேன். வழியில் அவனுக்கு அஞ்சலி செலுத்திப் பெரிய பெரிய போஸ்டர்கள் இருந்தன. நல்ல கூட்டம். கோவில் யானை என்றாலும் கம்யூனிஸ்டுகளும் ஒரு செவ்வணக்கம் செய்திருந்தார்கள். அவர்களது குழந்தைப் பருவத்திலும் அவன் உண்டு அல்லவா? </p><p>ஆனால் நான் போயிருந்திருக்கக் கூடாது. அங்கே நான் போனபொழுது கோபாலன் இல்லை. அவனது உடல்தான் முழுக்க அக்கக்காய்ப்ப் பிரிக்கப்பட்டு, தனித்தனியாக திசைக்கொன்றாக ரத்த விளாரியாகக் கிடந்தது. நான்கு கால்களும் ஒரு இடி விழுந்த கட்டிடத்தின் நான்கு தூண்கள்போலச் சிதறிக் கிடந்தன. மூன்று பேர், வெறும் முண்டு மட்டும் உடுத்திக்கொண்டு வியர்வை வழிய அவனது வயிற்றிலிருந்து ஈரலைக் கயிறு கொண்டு இழுத்து உரிக்க முயன்றுகொண்டிருந்தார்கள்.</p><p>நான் அதிர்ச்சியடைந்து, ‘என்ன இது?” என்றேன்.</p><p>ஒருவர், 'போஸ்ட் மார்ட்டம் என்றார்.</p><p>'எதற்கு? கோபாலனை யாராவது கொன்றுவிட்டார்களா?அல்லது அது தற்கொலை செய்துகொண்டுவிட்டதா?'</p><p>அவர் என் முகத்தை ஏறிட்டுப் பார்த்து, 'வயதான யானைகள் பல விஷமிட்டுக் கொல்லப்படுவதுண்டுதான்' என்றார். பிறகு சிந்தனையுடன், 'நாட்டில் பழக்கப்படுத்தப்பட்டு உலவும் யானைகள் தற்கொலைதான் செய்துகொள்கின்றன என்பது எனது சந்தேகம்.' </p><p>கோபாலன் பல நாட்களாகச் சரியாக உணவெடுக்கவில்லை. அதைத் தற்கொலை என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. </p><p>அந்த நபர் கசப்புடன் சிரித்து, 'இவையெல்லாம் அரசியல்சரியாகச் சொல்லப்படும் காரணங்கள். உண்மையான காரணம் அதோ' என்று காட்டினார்.</p><p>அங்கே எப்போதும் ஒரு நடன அசைவுபோல ஆட்டி ஆட்டி நடக்கும் கோபாலனின் தலை தனியாக கிடந்தது. ஒரு வலுத்த ஆள் வியர்வை சொட்ட அதன் தலையைக் கோடாலியால் பிளந்துகொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு தடவை கோடாரியை அடிக்கும்போதும் ஓர் உலோகச் சத்தம் கேட்டது. ஒவ்வொரு தடவை கோடாரியை அடிக்கும்போதும் அந்த அதிர்ச்சியைத் தாங்க மாட்டாற்போல கோபாலனின் மூடியிருந்த கண்கள் திறந்து திறந்து மூடின.</p><p>ரமேஷ் பேடி எழுதிய 'யானை: காடுகளின் அரசன்' நூலில் (நேஷனல் புக் ட்ரஸ்ட்) யானைகள் சாவதற்கு, வனத்தில் தனிமையை நாடிப் போய்விடுகின்றன என்கிறார். பொதுவாகவே கூட்டமாய்த் திரியும் குணமுடைய யானை, தான் ஒரு சுமையாகிவிட்டோம் என்று தோன்றுகையில் எல்லாரையும் விட்டுவிட்டு நீர் நிலைகளையோ சதுப்பு நிலங்களையோ நாடிப் போய் விடுகிறது என்கிறார். ஒரு தடவை வேட்டைக்காரார்களால் சுடப்பட்டுத் தப்பிய யானையை நான்கு மாதங்கள் கழித்து ஒரு நதியின் அடியில் கண்டுபிடிக்கிறார். பெரிய எலும்புக்கூடாக. அது ஆற்றில் அமிழ்ந்துகொண்டு உணவு ஒரு பிடிகூட உண்ணாமல் கொஞ்சம் கொஞ்சமாக இறந்திருக்கிறது. யானை தான் இறப்பதை மற்றவர்கள் பார்ப்பதை விரும்புவதில்லை என்கிறார் அவர்.</p><p>நான்என்னைச் சுற்றியுள்ள கூட்டம் பெருகுவதைக் கவனித்தேன். </p><p>‘டாக்டர் காலைல ஊசி போட வந்தார். அதால நிக்க முடியலை. கிரேன் வச்சித் தூக்க ட்ரை பண்ணோம். அதுவும் நடக்கலை. பிறகு கோபாலன் தும்பிக்கையால் மூன்று தடவை தரையில் அடித்தான். பிறகு செத்துப்போனான்' என்று விளக்கிக்கொண்டிருந்த பெரிய மனிதரின் பெரிய காதுகளையே நான் பார்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றிருந்தேன்.</p><p>இப்போது காற்றில் மெலிதாக ஒரு வீச்சம் பரவத் தொடங்கியிருந்தது.</p><p>‘தந்தங்கள்!' என்றார் அந்த முதல் நபர். 'அதற்காகத்தான் இத்தனை நாடகமும்.'</p><p>நான் மிகுந்த தளர்ச்சியாய் உணர்ந்தேன். கோபாலனின் இளமைக் காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க முயன்றேன். அங்கம் அங்கமாக ஒரு விபத்து நடந்ததுபோல இங்கே சிதறிக் கிடக்கும் அவன் எங்கே பிறந்தான்? அவன் எப்போது பிடிக்கப்பட்டான்? இறக்கையில் என்ன நினைத்துக்கொண்டான்?</p><p>என் பக்கத்தில் இப்போது இன்னொரு வயதான நபர் தள்ளாடியவாறே வந்து நின்றார். குடித்திருக்கிறார் என்று தெரிந்தது.</p><p>"என்ன கெம்பீரமான யானை! கஜ ராஜன் அல்லவா கோபாலன்' என்றார்.</p><p>நான், 'அதெல்லாம் இல்லை. அவனொரு அடிமை. அவனது கால் சங்கிலிகளை நீங்கள் பார்த்ததில்லையா' என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன்.</p><p>அவர், 'இனியொரு கோபாலன் இனி எங்கு காணாம் பத்தும்?' என்று கண்களைத் துடைத்துக்கொண்டார்.</p><p>‘இனியொரு கோபாலனை நாம் எங்கும் காணண்டாம் பெரியவரே' என்றேன் நான்</p><p>*</p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://www.panuval.com/boga-puththagam-10002164" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="499" data-original-width="324" height="218" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRzAkDJxPZy89aBOXeLMFdEwlzLK8-zF3kAQ03W1PnVnauQ8i1ThETVkbC0CpodxNHOcxGWzEgPZublXQBlBKn5IGkCWa1ftAq149ARXV3Vsh5r8uKTJoBXody5BBOslDlOUv4LElBpNdOWL8vfJ8gF6IbC6m2HpnECnPAnkJSAbIh0-zXo7AAnwBzUg/w142-h218/boga%20buthagam%20-%20bogan.jpg" width="142" /></a></div><br /><p>நன்றி : போகன் சங்கர் & கிழக்கு பதிப்பகம்</p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-28118436984684770722023-02-08T10:58:00.005+04:002023-02-08T11:08:46.707+04:001001 அரேபிய இரவுகள் - M D Muthukumaraswamy<p>Thanks to : Wow Tamizhaa & <a href="https://www.facebook.com/mdmuthukumaraswamy">MDM</a></p><p>1</p><p><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/2fJzYFQe9_8" title="YouTube video player" width="560"></iframe> </p><p>2</p><p><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/-rGPH24ouJw" title="YouTube video player" width="560"></iframe></p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-12213123937381204842022-12-08T12:17:00.000+04:002022-12-08T12:17:16.956+04:00அமானுதம் - மதுமிதாவின் வாசிப்பில்...<p>நன்றி: காற்றுவெளி</p>
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/zhCAkOuVKNA" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
<p><br /></p><p>*</p><p>சிறுகதை:</p><p><a href="http://old.thinnai.com/?p=10311136">http://old.thinnai.com/?p=10311136</a></p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-699180388169905462022-11-07T13:58:00.001+04:002022-11-07T13:58:48.798+04:00தந்தை சொல் மிக்க (நாடகம்) - மஜீது<p></p><div class="separator" style="clear: both; text-align: left;">முதலில் ஒரு ’பிஸாது’ : முதல் பரிசு வாங்குன நாடகமே இப்படின்னா மத்ததுலாம் ?!</div><div class="separator" style="clear: both; text-align: left;">*</div><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnW0VbenzmVhLEsYG2jwRILRrTqgjD7IP5Uhw-m6ud9kZbBZkNcLRCItHCapvdyKnlpJzO6ibJQ7EF_p_5Z1LGxzv00c3OPsuXkFmTEk--NukZZcWFdZItsLLY95Eqn05ep1PgYCIsiPaP4TJchU1A34B1TyFTPgdtLyrT1nurTJzLw9yqSZ2dQTvCRw/s300/majeed.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="300" data-original-width="225" height="177" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnW0VbenzmVhLEsYG2jwRILRrTqgjD7IP5Uhw-m6ud9kZbBZkNcLRCItHCapvdyKnlpJzO6ibJQ7EF_p_5Z1LGxzv00c3OPsuXkFmTEk--NukZZcWFdZItsLLY95Eqn05ep1PgYCIsiPaP4TJchU1A34B1TyFTPgdtLyrT1nurTJzLw9yqSZ2dQTvCRw/w133-h177/majeed.jpg" width="133" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: left;"><b><span style="color: red;">தந்தை சொல் மிக்க (நாடகம்) - மஜீது</span></b></div><br /><p></p><p>அண்ணே, ஒரு குறுநாடகம் போடுறோம், 'தந்தை சொல் மிக்க' ன்னு தலைப்பு. 12 நிமிசத்துக்குள்ள இருக்கனும்.. அதுல ஒரு சின்ன கேரக்டர்ணே...நம்ம ரஃபீக் சுலைமான் நடிக்க வேண்டியது..</p><p>அவரா? அவரு ஊருக்குல்ல போயிருக்கார் <a href="https://abedheen.wordpress.com/2018/11/25/asif-story2/">ஆசிஃப்</a>? நான் ஃபேஸ்புக்ல பாத்தேன்...</p><p>ஆமண்ணே.. ஊர்லதான் இருக்காரு..ஆனா வர்றதுக்கு லேட்டாகும்போல தெரியுது...</p><p>அடுத்த க்விக் ஆப்ஷன் நீங்கதான்னு தோனுச்சு... அதான் கூப்ட்டேன்... வர முடியுமா?</p><p>(வரமுடியுமான்னு கேக்குற மாதிரியேஏஏஏ, வரனும்னு ஆர்டர் போட வேற யாரால முடியும்?)</p><p>அப்டியா?</p><p>“ஆமண்ணே.... ஒரு காலேஜ் சீன்,மூனு நிமிசம்தான் வரும்...” ன்னு ஆரம்பிச்சு முழு கேரக்டர் பத்தியும் ஒரு நிமிசத்துல சொல்லிட்டாரு... (அதாவது டீல் முடிஞ்ச்சாம், அப்டியான்னு கேக்குறமாதிரியேஏஏ சரின்னுட்டேனாம்)</p><p>வரச்சொன்ன அன்னைக்குப் போனேன்... ஸ்க்ரிப்ட்டைக் கொடுத்தாரு... படிச்சுப்பாத்தா உள்ளபடியே சிம்ப்பிள்தான்... பெருசா ஒன்னும் சிரமப்படாம, சின்ன மாடுலேஷன்ஸோட பேசுனாலே நல்ல அவ்ட்புட் கிடைக்கும்.. ரொம்ப ஈசிதான்... அதனால ஒன்னும் கஸ்ட்டமா தோனலை....</p><p>ஒரு சீன்ல என் கேரக்டர் செல்ஃபோன்ல தன்னோட அப்பாட்ட ஒரு நிமிசம் தொடர்ச்சியா பேசுறமாதிரி இருந்துச்சு. அதுதான் ஸ்க்ரிப்ட்ல முக்கியமான ட்விஸ்ட்.. </p><p>ஆசிஃப் கொடுத்த அந்த சீன் டயலாக்கை படிக்கும்போதும் ஒன்னும் வித்தியாசமா தோனலை.. பண்ணிறலாம்னு தைரியமா சொல்லிட்டேன்.</p><p>ஆனா, அடுத்த நாள் ஒரு குண்டு வெடிச்சிச்சு..</p><p>முதல் ரிகர்சல்: அந்த போன் பேசுற சீன் வந்தப்பதான் அந்த ட்விஸ்ட் என் மண்டைக்குள்ளயும் திடீர்னு ஏறுச்சு.</p><p>பல வருசங்களுக்கு முன்னால் என்னோட வாழ்க்கைல நடந்த பலத்த அதிர்வுகள்..</p><p>தொலைஞ்சுச்சு.... மொத்தமும் காலி....</p><p>அந்த டயலாக் வரும்போது நான் அங்கெயே இல்லை..</p><p>எங்கெயோ போய்ட்டேன்... வாய்லாம் கொழறுது..</p><p>வார்த்தைலாம் திக்குது... மாடு சாணிபோடுறமாதிரி டயலாக் டெலிவரி வருது...</p><p>எனக்கே தெரியுது.. ஆனா வெளில சொல்ல புடிக்கலை..</p><p>சமாளிச்சிறலாம்னு தோனுச்சு... யாருக்கும் திருப்தி இல்லை..</p><p>மறுபடி ரெண்டாவது ரிகர்ஸல்ல இன்னும் மோசமா போய்ருச்சு...</p><p>குரல்லாம் உடைஞ்சு நடுங்க ஆரம்பிச்சிருச்சு...</p><p>பாத்துக்கிட்டு இருந்த தம்பி பாலாஜிக்கு ஏதோ தோனுச்சு போல...</p><p>விறுவிறுன்னு ஓடிப்போயி கொஞ்சம் தண்ணி கொண்டாந்து கொடுத்து, “என்னாச்சுண்ணே... தண்ணியைக் குடிங்கண்ணே... குரல் ரொம்ப உடைஞ்சு ஒரு மாதிரியாயிருச்சுண்ணே...”ன்னு சொன்னவொடனே, வாங்கிக் குடிச்சுட்டு, பாலாஜி முகத்தைப் பாத்தேன்...</p><p>“போதுமாண்ணே... இப்ப ட்ரை பண்ணுங்க”ன்னு சொன்னதும், போதும்ப்பா, சரியாயிருச்சுன்னு சொல்லிட்டு, சட்டுனு உள்ளதை சொல்லிறலாமான்னு யோசிச்சேன்..</p><p>அப்ப பாத்து ஒரு ஃபோன் வரவும், இன்னும் ஒரு தடவை ட்ரை பண்ணிட்டு சொல்லலாம்னு அடங்கிட்டேன்... ,</p><p>போன் பேசிட்டு அஞ்சு நிமிசத்துக்கு அப்பறம் திரும்ப வந்து பேசும்போது சுமாரா வந்துச்சு...</p><p>அதுவே போதும்கிற அளவுக்கு ஆசிஃப்க்கு திருப்தி..</p><p>ஆனா எனக்கு திருப்தி இல்லை...</p><p>ஆனாலும் அவர்ட்ட நம்பிக்கையோட சொன்னேன்:</p><p>"என் கேரக்டரை பத்தி கவலை வேணாம்... இதைவிட சிறப்பா செஞ்சிர்றேன்"</p><p>அவரும் 'ம்ம்.. சரி'ன்னு சொன்னாரே தவிர அவருக்கு அன்னைக்கு பெருசா நம்பிக்கை இல்லை.</p><p>அடுத்த மூனு நாலு நாள்ல ஸ்டேஜ் ரிகர்சல். நாங்க நடிச்சு முடிச்சதும், அமைப்பாளர்கள்ல ஒருத்தர் (எனக்கு அறிமுகம் இல்லாதவர்) என்னைக் காமிச்சு, இவரு நல்லாப் பண்ணுனாரு, முக்கியமா அந்த ஃபோன் பேசுற சீன் நல்லாப் பேசுனாருன்னு குறிப்பிட்டு சொல்லவும் ஆசிஃப் முகத்துல லேசா ஒரு ஒளிவட்டம். </p><p>இவ்வளவு தூரத்துக்கு என்னை ஆட்டிப் படைச்ச அந்தவிசயம் என்னன்னா,</p><p>ஆசிஃப் கொடுத்த அந்த செல்ஃபோன் டயலாக்,எனனோட இருபதாவது வயசுல, என்னோட தகப்பனார்ட்ட,</p><p>நெசம்மாவே நான் பேசுன அதே டயலாக்..</p><p>வாசகங்களும் 95 பெர்சண்ட் அப்படியே டிட்டோ...</p><p>நான் அப்டிப் பேசுனதுனால ஆரம்பிச்ச பிரச்சினை பெருசாகி, எப்டிலாமோ திசைமாறி, ஒரு பெரிய பிரளயமா மாறி, அவரைவிட்டு நான் பிரியவேண்டியதாயிருச்சு...</p><p>பிரிவுன்னா சாதாரண பிரிவில்லை...</p><p>மறுபடி அவர் முகத்தை சகஜமா பாத்து, நல்லாருக்கீங்களான்னு கேக்க 14 வருசம் ஆகிருச்சு...</p><p>அதுவும் எப்டி? எங்கே?</p><p>காரைக்குடி கடைவீதில எதிரும் புதிருமா ரெண்டுபேரும் கடந்துபோயிட்டோம்..</p><p>அடையாளம் தெரியாம....</p><p>என் தோள்ல என் ரெண்டாவது மகன்,</p><p>3 வயசு நிரம்பாத சின்னபபையன்..</p><p>10 செகண்ட்ல எனக்கு பொறிதட்டி, திருப்ப ஓடிப்போய்,</p><p>அவருக்கு நேரா நின்னு, முகத்தை சகஜமாப் பாத்து, </p><p>கேட்டேன்: நல்லாருக்கீங்களா?</p><p>அவரு: நல்லாருக்கேன்... நீங்கஅஅஅஅ? யார்னு தெரியலையே....</p><p>இப்ப எனக்கு சுர்ர்ர்ர்னு கோபம்... ஆனா உடனே அடங்கிருச்சு..</p><p>நான்: நெசமாவே அடையாளம் தெரியலையா? இல்லை கோபத்துல சொல்றீங்களா?</p><p>அவர்: இல்லை, எனக்கு நெஜமாவே தெரியலை...</p><p>நான்: சரி நான் பாக்குறதுக்கு நிறைய மாறிருக்கேன்தான்... இல்லைங்கலை...ஆனா குரல் கூடவா தெரியலை?</p><p>அவர்: இல்லை தெரியலை... யார்ன்னு சொல்லிருங்க...</p><p>நான்: மஜீது த்தா....</p><p>10-15 செகண்ட் மவுனம்... ஆனா அது ரொம்ப நீளமான கனமான மவுனம். </p><p>அப்பறம்,</p><p>அவர்: ம்ம்ம்ம்... நல்லா இருக்கியா..?</p><p>சொன்னேன்: நான் நல்லா இல்லை.. கடனோடவும் பல பிரச்சினைகளோடவும் இருக்கேன்..</p><p>(கொஞ்சங்கூட கூச்சமோ வெட்கமோ எதுவுமே இல்லாம சொன்னேன்)</p><p>அவர்: நீ சவூதில இருக்குறதா கேள்விப்பட்டேன்.. அப்பறம் என்ன கடன், பிரச்சினை..?</p><p>நான்: அந்த சம்பாத்தியம்லாம் போச்சு.. அதெல்லாம் அப்பறமா சொல்றேன்..</p><p>அவர்: சரி, இப்ப என்ன பண்ற?</p><p>நான்: ஒன்னும் பண்ணலை.. துபாய் போறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன்..</p><p>மறுபடி அமைதியானோம்...</p><p>அதுக்கப்பறம், ரெண்டு பேரும் அப்ப எங்கே இருந்தோம்னு விசாரிச்சுக்கிட்டோம்,</p><p>என் பையனுக்கு அவன் கேட்ட ‘மக்ரூன்’ வாங்கிக்கொடுத்தார்.</p><p>கிளம்பிட்டோம்... அவ்வளவுதான்..</p><p>மறுபடி தொடர்பில்லை..</p><p>அதுக்கப்பறம், 6-7 மாசம் கழிச்சு, துபாய் வந்து சேந்தேன்...</p><p>வந்த ஆறுமாசத்துல என் தம்பிட்ட சொல்லி அவர்ட்ட என் சார்பா பேச சொன்னேன்</p><p>(செல்ஃபோன்லாம் இல்லை)</p><p>அடுத்த ஆறுமாசத்துல என்னோட முதல் வெக்கேஷன்,</p><p>ஷார்ஜா - திருச்சி டைரக்ட் ஃப்ளைட் சர்வீஸ்,</p><p>முதல்முதல் ஃப்ளைட்</p><p>இறங்குன தேதி: 01-01-1997 அதிகாலை 1:00 மணி</p><p>எல்லாமே, ஒன்னுல ஆரம்பம்,</p><p>என்னோட புது வாழ்க்கையும்..</p><p>என்னை அழைக்கிறதுக்கு அத்தா வந்திருந்தார்</p><p>(வர வச்சிருந்தேன்)</p><p>வழில கிராமத்துக்கு கிராமம், இளவட்டப் பயலுக</p><p>எங்க வண்டிய அங்கங்கெ நிறுத்தி</p><p>சத்தம் போட்டு அலப்பறை பண்ணி</p><p>ஒரே வரவேற்பு!</p><p>ஸ்வீட்டுகளும், கேக்குகளுமா கொண்டாட்டம்..</p><p>ஒரே ஹேப்பி நியூ இயர் ஆர்ப்பாட்டம்!</p><p>அதுக்கப்பறம் அவரை அவராவே</p><p>அப்டியே ஏத்து அணைச்சிக்கிட்டு</p><p>நான் அவரை விடவே இல்லை..</p><p>கடைசிவரைக்கும், </p><p>அதாவது 27/07/2018 வெள்ளிக்கிழமை ராத்திரி வரைக்கும்..</p><p>அன்னைக்கு ராத்திரி சாப்பிட்டுட்டு, மயங்கி பின்னால சாய்ஞ்சு மயங்கினவருதான்..</p><p>தகவல் கிடைச்சு பதறி ஓடிவந்து, மவுத்தை உறுதி செஞ்ச டாக்டர் வேற யாருமில்லை..</p><p>அன்னைக்கு 3 வயசுல மக்ரூன் வாங்கி அறிமுகம் ஆன என் ரெண்டாவது மகன் தாரிக்..</p><p>எனக்கு அத்தாவோட செய்தி வந்தப்ப,</p><p>நான் துபாய்ல ஒரு ரெஸ்டாரண்ட்ல ராத்திரிச் சாப்பாட்ல இருந்தேன்...</p><p>அதிர்ந்து நிக்கும்போது,</p><p>"தைரியமா இருங்கண்ணே"ன்னு சொல்லி தேத்துனது வேற யாரும் இல்லை</p><p>என்கூட சாப்ட்டுக்கிட்டுருந்த இதே ஆசிஃப் மீரான் அண்ணாச்சிதான்..</p><p>என்ன சொல்ல...!</p><p>நாடகம் என்னாச்சுன்னு கேக்குங்கிறீங்களா?</p><p>17 நாடகங்கள்ல “சிறந்த நாடகம்” னு தேர்வாச்சு,</p><p>த ந் தை சொ ல் மி க் க</p><p>அந்த வசனத்தை நீங்களே நேரடியா நாடகத்துலயே கேக்கலாம்.</p><p>கீழே இருக்குற லிங்க்கை ஓப்பன் பண்ணுனா கரெக்டா இந்த நாடகம் ஆரம்பமாகும்</p><p><a href="https://www.youtube.com/watch?v=jdUtj9FZ1hY&t=13055s">https://www.youtube.com/watch?v=jdUtj9FZ1hY&t=13055s</a></p><p>(14 minutes from this point)</p><p>*</p><div class="separator" style="clear: both; text-align: left;">நன்றி : <a href="https://www.facebook.com/profile.php?id=100000114728906">மஜீத்</a></div><p>*</p><p>தொடர்புடைய ஒரு பதிவு</p><p>ந<a href="https://abedheen.wordpress.com/2010/12/30/majeed-nallinakkam/">ல்லிணக்கம் : ஒரு நினைவோட்டம்</a> – மஜீத்</p><p><br /></p>Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-76410351858471638082022-10-01T12:00:00.007+04:002022-10-01T12:00:00.198+04:00தோஹாவிலிருந்து ஒரு கடிதம் - ஜோ டி குரூஸ்<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D">ஜோ டி குரூஸ்</a> (Joe D Cruz) எழுதிய ‘அஸ்தினாபுரம்’ நாவலின் ஆறாம் அத்தியாயம் இது. நன்றியுடன் பகிர்கிறேன். - AB</p><p>**</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr8XTGbELt2z2fzR0ogLnIDaFD6kydudoS7-YzqJ35fVWJuxZAlMXbIiztUhLidqhObb9VoIuK524I9KJCfjiDnOoHqZ8Vg4F_CeDOpCb2skp0tODzeBuf05M5RRerrhnjMaf9opCxbXr3XoH-gwGdj5O0V5pTLCeb-OTqnit1K8hpremovuqNak4ONA/s499/asthinaburam%20novel%20attai.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="499" data-original-width="307" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr8XTGbELt2z2fzR0ogLnIDaFD6kydudoS7-YzqJ35fVWJuxZAlMXbIiztUhLidqhObb9VoIuK524I9KJCfjiDnOoHqZ8Vg4F_CeDOpCb2skp0tODzeBuf05M5RRerrhnjMaf9opCxbXr3XoH-gwGdj5O0V5pTLCeb-OTqnit1K8hpremovuqNak4ONA/s320/asthinaburam%20novel%20attai.jpg" width="197" /></a></div>எனதருமை மனைவி ஆனந்திக்கு, உன் அன்புக் கணவன் அமுதன் தோகாவிலிருந்து எழுதுவது. நான் இங்கு நலமே போல் நீயும் அங்கு நலமாய் இருப்பாய் என்று நம்புகிறேன். உண்மையைச் சொல்வதானால் நான் இங்கு நலமாகவே இல்லை . எப்படி இருக்க முடியும், ஆனந்தி? பொழுது போக்கென்றால் அது சாப்பிங் மட்டும்தான், நண்பர்கள் லுலு சூப்பர் மார்கெட்டுக்குள் சென்றிருக்கிறார்கள், நான் இங்கே ஒரு ஈச்சமரத்தடியிலமர்ந்து உனக்குக் கடிதம் எழுதுகிறேன்.<p></p><p>'என்னடா எல்லோரையும் போலதான எனக்கும் திருமணம் நடந்திச்சி, இங்க இருந்தப்ப பொழுதன்னைக்கும் போலிசு, கேசுன்னு அலைஞ்சாரு, நிம்மதியான கஞ்சி ஒருநாள் கூட இல்லிய, ஒவ்வொரு நாளும் இன்னக்கி என்ன நடக்குமோன்னு பதட்டம், இந்த ஓட்டத்துக்கு எடையிலயும் வயித்துல குழந்த ஆயிப்போச்சி. சரி, இப்பவாவது நம்மளோட இருப்பார்ன்னு பாத்தா கண் காணாத இடத்துல இருந்து சம்பாதிக்கிறாராம். எத்தன நாள் ராயபுரத்துக்காரி கூட குப்ப கொட்ட, சாப்பாட்டுக்கு பணம் குடுக்குறோம் ஆனாலும் கட்டுன புருசனோட கூடயோ , குறையோ இருக்குறத சாப்புட்டுட்டு வாழ்றதுதான வாழ்க்க..... உன் மனவோட்டம் எனக்குப் புரியாமலில்லை. </p><p>இவையெல்லாம் எனக்கும் வரும் எண்ணங்கள். என்னடா வாழ்க்கையென்று சில சமயங்களில் சோர்ந்துவிடுகிறேன், மறுகணமே எழுந்து நின்று விடுகிறேன். காரணம், நான் வெல்லாத கோட்டைகளை வெல்ல என் மகன் வருவான் என்ற நம்பிக்கை என்னில் துளிர் விட்டிருக்கிறது. நானும் ஒரு குழந்தைக்குத் தகப்பன் ஆவேன் என்று கனவில் கூட நினைத்தவனல்ல. வாழ்வே சூன்யமாகிப் போயிருந்தது, நீ என் வாழ்வில் புது வசந்தம் ஆனந்தி.</p><p>இந்த வெளிநாட்டு வாழ்க்கைகூட இறைவன் கொடுத்த பாதுகாப்பாக இருக்கலாம், யோசித்துப் பார் அங்கு இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்குமோ ! ஆனால் என்ன, என் மனைவியின் அருகில் நான் இல்லை . கடவுள் எல்லாவற்றையும் எப்போதும் ஒருசேரத் தந்ததில்லை. எது எப்போது தேவையோ அதை அவ்வப்போது வாய்க்கப் பண்ணுகிறான். இங்கே மரத்தடியில் கிடந்த இரு பேரீச்சம் பழங்களை எடுத்துச் சாப்பிட்டேன். பழங்கள் வாயில் மாவாய்க் கரைந்து தேனாய் இனிக்கின்றன. இந்த மரத்தின் பழம் இன்று நான் சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது ஊழ்...</p><p>அந்தக் காலத்துல நம்ம கொற்கையப் போல கத்தாரும் முத்துக் குளித்துறையா இருந்திருக்கு, 1940ல கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம் இந்த நாட்ட செழிப்பா மாத்திருச்சி. ரெம்ப நாளுக்கு முன்னால பகரின் ஷேக்குகள் இந்தப் பகுதி ஆண்டாங்களாம், பின்னால கத்தாரோட அல்தானி குடும்பம் வெள்ளைக்காரங்க தயவுல ஆட்சிய பிடிச்சிருக்காங்க. 1995ல பழமைவாதியான தகப்பனார சத்தமில்லாம தூக்கி எறிஞ்சி ஆட்சியக் கைப்பற்றுன கமது பின் காலிஃப் அல் தானி, பரவலான முன்னேற்றத்த இந்த நாட்டுக்கு கொண்டு வந்திருக்கார். புதுசா அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகுறதா சொல்லுறாங்க, எந்த அளவுக்கு ஜனநாயகம் வருமின்னு தெரியில.</p><p>இது சூடான பிரதேசம், இங்கும் மனிதர்கள் சந்தோசமாகவே வாழ்கிறார்கள். எல்லோருமே ஒரு விதத்தில் குடும்பத்திற்காக தியாகம் பண்ணுகிறவர்களாகவே இருக்கிறார்கள். எண்ணி இரண்டு வருடங்கள் கண்ணிமைப்பது போல் போய் விடும். கடனும் போய் விடுமே ஆனந்தி. என் மகன் என்னை அப்பா எனத் தேடும்போது நிச்சயமாக அவனருகே நான் இருப்பேன்.</p><p>ஆமந்துறையில் அனைவரையும் விசாரித்ததாகச் சொல். ஊருக்கு நான் கடிதம் எழுத முடியாது, காரணம் நான் வெளியே இருக்கிறேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாமென்று பார்க்கிறேன். முதலில் வெளிநாட்டு வேலைக்கு போங்க என்ற அருண் இப்போது வந்துவிடுங்கள் என்று உயிரை வாங்குகிறான். அவனுடைய இமெயில்களைத் திறந்தால் எப்போதும் 'வந்தருளும் ஸ்வாமி வந்தருளும்' என்று ஜெபிக்கிறான். எனக்கும் நிறைமாத கர்ப்பிணியான உன்னை பக்கத்திலிருந்து பார்க்க வேண்டும் போலிருக்கிறது. எப்போதும் உன் வயிற்றில் வளரும் நம் பிள்ளை பற்றிய கனவு. என் பிள்ளைக்குக் கண் வந்திருக்குமா, கை கால் முளைத்திருக்குமா. என்னைப் போலிருக்குமா உன்னைப் போலிருக்குமா. ஆண்மையில்லையோ என உறவே கை கொட்டிச் சிரித்ததே, உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அந்தச் சாபம் நீக்க வரும் என் செல்லத்தை, அதன் பிறப்பை நான் அருகிருந்து பார்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஊரில் எத்தனையோ வழக்குகள், எல்லாமே பொய்வழக்குகள், நான் வந்த பிறகே அத்தனையும் பைசலாகும். பொய் கேஸ்களை முடிக்க வேண்டுமென்றால் கட்டுக்கட்டாகப் பணம் வேண்டுமே... அனுப்புகிற பணத்தையெல்லாம் கடன் அடைக்கிறேன் என்கிறாள் ஆத்தா, உண்மையிலேயே அடைக்கிறாளா என்று இப்போதெல்லாம் சந்தேகம் வந்துவிடுகிறது.</p><p>இங்கு காலையில் ஐந்தரை மணிக்கு எழும்பி பல் தேய்த்து உடனே குளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் குழாய் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்துவிடும். காலையில் ஏழு மணிக்கே வேலைக்கும் கிளம்பியாக வேண்டும். ஒரு மலையாளி கடையில் இட்டிலியும் சாம்பாரும் கிடைக்கிறது. அங்கேயே மதியமும் இரவும் சாப்பிடுகிறேன். </p><p>உன்னுடைய கைப்பக்குவத்தில் சாப்பிட்ட எனக்கு இந்தச் சாப்பாடு சப்பென்றிருக்கிறது. ஏழரை மணிக்கு அலுவலகம், சரியாய் பனிரண்டரை மணிக்கு மதியச் சாப்பாட்டுக்காய் கிளம்பி விடுவோம், குளிரூட்டப்பட்ட அலுவலக அறைக்குள்ளிருந்து வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் காருக்குள் வந்து அமர்ந்தால் அப்படியே அடுப்புக்குள் தூக்கிவைத்தது போல் இருக்கும், வியர்த்து ஊற்றும். உடம்பு தளர்ச்சியாகி விடுகிறது. வெப்பம் அதிகமென்பதால் மூன்றரைவரை ஓய்வு, ஒரு குட்டித் தூக்கம் கிடைக்கும். திரும்ப அலுவலகம் ஆறரைவரை இருக்கும், எனக்கு எப்போதும் போலவே வேலை கொஞ்சம் அதிகம். சிலவேளைகளில் ஒன்பது மணிவரைகூட இருக்க வேண்டி வருகிறது.</p><p>இதுவரைக்கும் அரசிடமிருந்த கப்பல் ஏஜென்ஸி தொழிலை இப்போது தனியாருக்குத் திறந்துவிட்டிருக்கிறார்கள். கஸ்டம்ஸ் கிளியரன்ஸா, சரியான பேப்பர்கள் கைவசமிருந்தால் உடனுக்குடன் முடிந்துவிடுகிறது. கத்தாரிகள் சோம்பேறிகள். ஆனாலும் துறைமுகச் செயல்பாடுகளைத் தெளிவாகவே வைத்திருக்கிறார்கள். துறைமுகப் பொறுப்புக் கழகம் பொறுப்போடு செயல்படுகிறது. மேல்மட்டத்தில் மட்டும் கத்தாரிகள் மற்றபடி எல்லா நிலைகளிலும் நம் ஊர் மலையாளிகள். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகக் கப்பல் ஏஜென்சி கம்பெனிகள் இங்கு முளைத்தவண்ணம் இருக்கிறது. மலையாளிகள், இங்குள்ள கத்தாரிகளோடு ஒப்பந்தம் செய்து கொண்டு தனியாக கம்பெனி ஆரம்பித்துவிடுகிறார்கள். இதுவும் அது போல ஒரு நிறுவனம். எங்களுக்குப் புதிதாய் ஒரு காண்ட்ரெக்ட் கிடைத்திருக்கிறது. அமெரிக்கா, ஈராக் மேல் போர் தொடுக்கப் போகிறதாம், கனடாக்காரர்களுக்கு இந்த நிலைப்பாட்டில் உடன்பாடில்லையாம். கனடா ராணுவத்தைப் பெட்டிப்படுக்கையோடு ஏற்றுமதி செய்து அமெரிக்கா ராணுவத்தைக் கத்தாரில் இறக்குமதி செய்ய வேண்டும்.</p><p>தமிழென்றால் நானும் ஈழத்துத் தம்பி ஒருவன் மட்டும்தான். புலிகள் எப்படியும் இலங்கையில் ஈழத்தை உருவாக்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்வைக் கடத்துகிறான் இந்த ஈழத்துத் தம்பி. தமிழகத்தின் திராவிட அரசியல் வியாதிகள் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறான், அய்யோ பாவம் போலிருக்கிறது.</p><p>அண்மையில் நண்பர் ஒருவர் அழைத்ததால் அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்த அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நாலாவது மாடியிலிருக்கிறதே லிஃப்ட்டில் செல்லலாமெனப் போனால் அங்கு விளையாடிக்கொண்டிருந்த அரபிக் குழந்தைகள் எங்கள் மீது எச்சில் துப்பி விளையாடுகிறார்கள், பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். </p><p>ஒரு முறை இப்படித்தான் காலையில் கார் வரத் தாமதமானதால் பக்கத்திலிருந்த கட்டிடத்தின் வாசலில் அமர்ந்துவிட்டோம். கட்டிடத்தின் உள்ளிருந்து காச் மூச்சென சத்தம் வருகிறதே என எட்டிப் பார்த்தால் கருப்பாய் நெடுநெடுவென ஒரு சூடன்காரன், புரியாத மொழியில் திட்டியபடியே எங்களை அடிப்பதற்காய் ஓடி வருகிறான். </p><p>நிலமையைப் புரிந்துகொண்ட மலையாளி நண்பர் எங்களை அந்தப் படிகளிலிருந்து எழுந்து விடச் சொன்னார். பரிதாபமாய் எழுந்து விலகி நின்றோம். கருப்பர்களும் தீண்டாமை பார்க்கிறார்கள் ஆனந்தி. அதற்கு மேல் அங்கு நின்றிருந்தால் சூடான்காரப் பெண்களை வைத்து எங்கள் மீது வழக்கு போட்டு விடுவார்களாம். அப்படிக் குற்றம் சுமத்திவிட்டால் எங்கள் கதி அதோ கதிதானாம். ஜனத் தொகையில் பார்த்தால் இந்தியர்கள் கத்தாரில் அதிகம், ஆனாலும் அடிமை வாழ்க்கை.</p><p>அலுவலகத்தில் கார் வாங்க வற்புறுத்துகிறார்கள், லோணும் தந்து கார் அலவன்ஸும் தருவார்களாம். யாருக்கு வேண்டும் இந்தக் காரும் பவுசும். நம்ம ஊரைப் போல, இங்கு கார் ஓட்டுவதும் அத்தனை எளிதில்லை. சட்டம் எல்லாமே இங்கே தலை கீழ். வலது கைப் பக்கமே அமர்ந்து ஓட்டிப் பழகிய நமக்கு இடது கைப் பழக்கம் அத்தனை எளிதில் வந்துவிடாது. தலைகுத்தர நின்று லைசென்ஸ் எடுத்து விட்டாலும் பெண்டாட்டி, பிள்ளைகளையும், அய்யா, ஆத்தாவையுமா காரில் ஏற்றிக்கொண்டு போக முடியும். கார் வைத்திருப்பவனெல்லாம் கூப்பாடு போடுகிறான். ஃபயின் கட்டுவதற்கே சம்பளம் பத்தவில்லையாம். இந்த ஊரைப் பார்க்கும்போது நம்ம ஊர் தேரிக்காடு எவ்வளவோ மேல். கடற்கரையா, வயல்வெளியா, வனாந்திரமா, மலைப் பிரதேசமா நம்ம ஊர் சொர்க்கம் ஆனந்தி. மலையாளிகளைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது, எப்படித்தான் இத்தனை அழகான தேசத்தை விட்டுவிட்டு வந்து இப்படி வேணா வெயிலில் கிடந்து மாய்கிறார்களோ தெரியவில்லை. வாழ்ற காலத்த வாழ்க்கைய இந்தப் பாலைவனத்துல தொலைச்சிட்டு, நோய்நொடியோட தன்னோட அந்திம காலத்துல ஊர் வந்து சேருறாங்க.</p><p>எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே, அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் எம் நாடேன்னு பாடத் தோணுது ஆனந்தி. படுத்தா, பாண்டி பஜாரிலும், ரங்கநாதன் தெருவிலும், புரசைவாக்கத்திலும், வண்ணாரப் பேட்டையிலும், மெரினாவிலும் நடந்து திரிவது போல் கனவுகள் வருகிறது. ஆனால் இத்தனை வலியும், அவமானமும் மாதச் சம்பளத்தை முழுதாய்ப் பார்த்தவுடன் சிட்டாய்ப் பறந்துவிடுகிறது.</p><p>அங்கு வெளிநாடு போக வேண்டுமென்று பாவம் கனவுகளோடு அலைகிறார்கள், இங்கு வந்து பார்த்தால் நம்ம ஊர் நிழலின் அருமை புரியும். எங்கு பார்த்தாலும் சுட்டெரிக்கும் சூரியனும், சுடுமணலும். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பழுப்பான மண். நம்ம ஊர் வேலிகளில் படர்ந்திருக்கும் கள்ளிச்செடிக்கு இங்கு சீரியல் பல்பெல்லாம் போட்டு அலங்காரம், விட்டால் பொட்டு வைத்து பூவும் வைத்துவிடுவார்கள் போல் தெரிகிறது. வானுயர கட்டிடங்கள் கட்டுகிறார்கள் கீழிருந்து பார்த்தால் எறும்பாய்த் தெரிகிறார்கள் மனிதர்கள். கஷ்டமான வேலைகளைப் பெரும்பாலும் தமிழர்களே செய்கிறார்கள். என் போல் கடன் சுமை அழுத்துவதால் இங்கு வந்திருப்பார்களென்று நினைக்கிறேன். எப்போதும் மனதில் இனம் புரியாத பாரம் அழுத்திக் கொண்டே இருக்கிறது. என்ன பெரிய வேலையாய் இருந்தாலும் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொள்கிறார்கள். அது என்னவோ கொத்தடிமையாய் மாட்டிக் கொண்ட உணர்வு. செய்தி பார்த்தேன், அப்துல் கலாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறாராமே! அரசியல், ஆனாலும் இதற்கெல்லாம் பெரிய மனசு வேண்டும்.</p><p>அவ்வப்போது அய்யாவை உன்னை வந்து பார்க்கச் சொல்லியிருக்கிறேன். பணம் தருவார்கள், வாங்கிக்கொள். சத்தான உணவாகச் சாப்பிடு, காரணம் நீ உனக்காக மட்டும் சாப்பிடவில்லை, உன் வயிற்றிலிருக்கும் நம் குழந்தைக் காகவும் அதன் நலனுக்காகவும் சாப்பிடுகிறாய். எப்போதும் சந்தோசமாக இரு. நீ இருப்பது உன் அக்கா வீடாக இருந்தாலும் முன்பு போல் இழுத்துப் போட்டுக்கொண்டு வேலை செய்யாதே.</p><p>அமுதன் தாலி கட்டிய மனைவி நீ, யார் வீட்டிலும் பத்து பாத்திரம் கழுவுவதற்காக நான் உன்னை அங்கு விட்டு வரவில்லை . ஏதோ நேரம் நம்மை பிரித்திருக்கிறது. </p><p>அன்புடன் தோகாவிலிருந்து உன் கணவன், </p><p>அமுதன் </p><p>25 ஜூலை 2002</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM3tXNzq5-8mt_MaPAUZGuAeX5UkuHfJd0s5DYi4aRpRfXrH6AyKyayA3geSDUtVBv6NNWUh1Pg8VnNJwjXVPFGjHEsF_LGa0dm69reOxRul55RgL3dJ4cHSp8k75b0ffV0pyzsFpagm-jevu210Cb-qzRUYEjnPDaotC5yZo2FnHNz5nzDbZyhXpGpA/s293/Joe-D-Cruz.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="293" data-original-width="222" height="202" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM3tXNzq5-8mt_MaPAUZGuAeX5UkuHfJd0s5DYi4aRpRfXrH6AyKyayA3geSDUtVBv6NNWUh1Pg8VnNJwjXVPFGjHEsF_LGa0dm69reOxRul55RgL3dJ4cHSp8k75b0ffV0pyzsFpagm-jevu210Cb-qzRUYEjnPDaotC5yZo2FnHNz5nzDbZyhXpGpA/w153-h202/Joe-D-Cruz.jpg" width="153" /></a></div><br /><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>நன்றி : <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D">ஜோ டி குரூஸ்</a>, காக்கை பதிப்பகம், தமிழ்நேசன்</p><p>*</p><p>தொடர்புடைய ஒரு சுட்டி :</p><p><a href="https://abedheen.wordpress.com/2008/12/30/jtkurus/">வெளிச்சம் – ஆழி சூல் உலகிலிருந்து…</a></p>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-83440438081121718992022-09-14T12:43:00.000+04:002022-09-14T12:43:17.265+04:00மாறுசாதி (சிறுகதை) – திக்குவல்லை கமால்<p>’<a href="http://noolaham.net/project/19/1806/1806.pdf">மல்லிகை’ இதழில்</a>, 1972ஆம் ஆண்டு வெளியான சிறுகதை இது. திக்குவல்லை கமால் அவர்களின் ‘விடை பிழைத்த கணக்கு’ தொகுப்பிலும் உண்டு. நன்றியுடன் பகிர்கிறேன். - AB</p><p>**</p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3EuyhrOSh1rGdT1qaTxrV9LYCZreUEvt4atAjHPmVgp_X5w-l0zLPn8eFRDAAgFCdl-kLaypCPfjQJjCdxMAqprxlxOfUr_yBeN-sBgA71hAmZ8NZ--s_7-Eb4Arhnw2l0bLOz58FmUQe76hDzlFpmabwkYLj1FZKoG77I-fhsmFxW0t4Nmx4oGWIzg/s398/t-kamal-fb.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="398" data-original-width="378" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3EuyhrOSh1rGdT1qaTxrV9LYCZreUEvt4atAjHPmVgp_X5w-l0zLPn8eFRDAAgFCdl-kLaypCPfjQJjCdxMAqprxlxOfUr_yBeN-sBgA71hAmZ8NZ--s_7-Eb4Arhnw2l0bLOz58FmUQe76hDzlFpmabwkYLj1FZKoG77I-fhsmFxW0t4Nmx4oGWIzg/w190-h200/t-kamal-fb.jpg" width="190" /></a></div><br /><p><b><span style="color: red;">மாறுசாதி – திக்குவல்லை கமால்</span></b></p><p>முன்வாசலில் எரிந்து கொண்டிருந்த குப்பி லாம்பின் வெளிச்சம் கதவுக்கிடையில் புகுந்து, அடுத்த அறை எதிர்ச் சிவரில் கோடு வரைந்தாற் போல் படிந்திருந்தது, தரையில் ஒரு பக்கமாகப் பதித்திருந்த கண்ணாடிக்குள்ளால் ஓரிரண்டு நட்சந்திரங்களும் மின்னிக்கொண்டிருந்தன.</p><p>இவை இரண்டையும் மாறிமாறிப் பார்த்தவண்ணம் பாயில் புரண்டு கொண்டிருந்தாள் ஹிதாயா. </p><p>ஏழெட்டு வருடங்களாக நாளாந்தம் இதே நேரத்தில் விரிந்து பழகிப்போன அவளது கண் இமைகள் இன்றும் விரிந்து கொண்டதில் தவறில்லைதான். -</p><p>இந்த ஒரு மாதத்தையும் மாத்திரம் தவிர்த்து, அதற்கு முன்பெல்லாம் அவள் இந்த நேரத்தில் நிச்சயமாகக் குசினிக்குள் குந்தி அடுப்பெரித்துக்கொண்டு அல்லது கோப்பி கலக்கிக் கொண்டுதானிருப்பாள். </p><p>அதிகாலையிலேயே பொட்டணியைச் சுமந்தபடி வெளிக்கிடும் ஜெஸில் நானாவிற்கு, அந்தக் கோப்பிக் கோப்பையில் எத்தனையோ நம்பிக்கைகளும் மன நிறைவுகளும் தான்.</p><p>ஆனால் இந்த ஒருமாத காலமாக...எல்லாம் அடிதலை மாறிப்போயிருக்கிறதே.</p><p>அவள் இன்னும் கண்களைத் திறந்தபடி புரண்டுகொண்டிருந்தாள். வெளியே காகங்கள் கத்திப் பறக்கத் துவங்கியதைத் தொடர்ந்து, விடிந்துவிடுமுன் தண்ணீர் எடுத்து வரக் கிளம்பும் கன்னியர்களின் கலகலப்பு அவளை ஒன்றும் செய்து விடவில்லை .</p><p>மாறாக முன்வாசலிலிருந்தெழும்பும் அந்த நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் ஒலி.......</p><p>" கஹ்.....கஹ்...... கஹ்க ஹ்''</p><p>தலையைக் கிளப்பி ஓய்ந்து விடுகிறதா என்ற எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள், அங்கே, அது தொடர்க் கதையாக நீண்டுகொண்டிருந்தது.</p><p>சடக் கென்றெழுந்து, நிலத்தில் உராய்ந்து இழுபட்டு வரும் பிடவையைக் கூட கவனிக்காமல் முன்வாசலுக்குப் போய் கணவனின் நெஞ்சை மேலிருந்துகீழாக இடைவிடாது தடவியபோதுதான் ஒருவாறு இருமல் ஓய்ந்தது.</p><p>அதே கைப்பட மேசையிலிருந்த 'சுடுதண்ணீர்ப் போத்தலிலிருந்து வெந்நீரில் கொஞ்சம் வாத்தெடுத்து நன்றாக பிடித்துகொண்டு தருவதற்கத்தாட்சியாக வெளிச்சம் பலபுறமும் பரவிக் கொண்டிருந்தது.</p><p>கதவைத் திறந்றகொண்டு வெளிக்கிட்டவள் பின்பக்கமாகக் கட்டிவைத்திருந்த இரண்டு ஆடுகளையும் அவிழ்ந்து விட்டுக் காலைக் காரியங்களில் ஈடுபடலானாள்.</p><p>அதிகாலை வேளையில் பனிக் குளிரில் கணவனை அதுவும் நேயாளியாக இருக்கும் நிலையில் வெளிக்கனுப்ப விரும்பாத அவள், அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்து தான் வைத்திருந்தாள். </p><p>அப்போது நேரம் ஏழு மணியைத் தாண்டியிருக்குமென்பதை குர்ஆன் பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருந்த சிறுவர், சிறுமியர் மூலம் தெரிந்துகொண்டதும் சீக்கிரம் போய் மருந்துக் குழிகைகளை எடுத்து அவருக்கு விழுங்கச் செய்துவிட்டு முற்றத்தைப் பெருக்கத் துவங்கினாள் .</p><p>உடற்கட்டுக் கலைந்து நோயாளியாகக் கிடக்கும் ஜெஸில் நானாவை , ’பொட்டணி ஜெஸில்' என்று சொன்னால்தான் எவருக்கும் ஒரேயடியாகப் புரிந்துகொள்வார்கள்.</p><p>வசதியாக வாழும் பலர் அவர்களுக்குச் சொந்தக்காரராக இருந்த போதிலும் அவர்களுக்குப் பல்லைக் காட்டித் தலை சொறியும் பழக்கம், வாழ்க்கை வசதியற்று இப்படி நோயாளியாக அவதிப்படும் நேரத்திலும் கூட அவரிடத்திலில்லை.</p><p>அவர் கல்யாணம் செய்துகொண்ட புதிதிலெல்லாம் உதவிக்கு இன்னொருவரையும் இருத்திக்கொண்டு பக்கத்து ஊர்களில் நடக்கும் சந்தைகளுக்குப் போய்ப் பிடவை வியாபாரம் செய்துகொண்டிருந்தார். நாட்பட நாட்பட இயற்கையான வாழ்க்கைச் சோதனைகளால் தாழ்த்தப்பட்டு, உள்ளூர்ப் பொட்டணி வியாபாரியாக மாறிவிட்டார்.</p><p>ஒவ்வொரு நாளும் அதிகாலையில் பொட்டணியைத் தலையிற் சுமந்து முழக்கோலைக் கையிலெடுத்தாரென்றால் இனி ஐந்தாறு மைல்கள் காற்தோல் தேய ”நடடாராஜா'' தான், பின்பு - மாலையில் விளக்கேற்றும் வேளையில் தான் சாப்பாட்டுச்சாமான்...காய்கறிகள் சகிதம் வீடு வந்து சேருவார்.</p><p>வாராவாரம் எப்படியோ கடைகளில் பிடலைத் தினுசுகள் வாங்கிச் சேகரித்துக் கொள்வார். அவளும் அப்பகுதி பெண்களின் ஓய்வு நேரக் கைப்பின்னலான 'ரேந்தை'களை வாங்கியும், சட்டைப் பிடவைகளுக்கு பூவேலைகள் செய்து கொடுத்தும் கணவனுக்கு ஒத்துழைப்பாள். </p><p>''முதலாளி இன்ன வத:''</p><p>இக்குரலைக் கேட்டதும் சரிந்து தோளில் விழுந்திருந்த பிடவையை இழுத்துத் தலையிற் போட்டபடி கழுத்தை உயர்த்திப் பார்த்தாள். அங்கே வெற்றிலைக் காவியேறிய பற்களால் சிரித்தபடி ஒரு சிங்களவர் நின்றுகொண்டிருந்தார்.</p><p>“ஒவ் எதுவட என்ன” என்றவாறு துடைப்பக் கட்டையை மூலையில் வைத்துவிட்டு, உள்ளே போய் இரண்டாம் அறைக்கதவு இடையால் பார்த்தபோது அவர் உள்ளே வந்தமர்ந்து கணவனிடம் சுகம்விசாரிப்பதை அவதானித்தாள்.</p><p>அப்போது அடுப்பில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு வசதியாகப் போய் விட்டது. உடன் தேநீர் தயாரித்தவள் ஒரு கணம் தயங்கிய போது.. வந்திருப்பவருக்கு அதனைக் கொண்டுபோய்க் கொடுக்க வேறு யாரும் இல்லையே என்பதால் அவளாகவே கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு உள்ளே வந்தாள்.</p><p>“உம்மா, ஆப்பா...உம்மா ஆப்பா'' விழித்தெழுந்து விட்டு மகள் ஓடிவந்து அவளின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு சிறுநீர் கழிக்கவோ முகம் கழுவவோ போகாத நிலையில் அடம் பிடித்த போது அவளுக்குப் பலத்த கோபம் வந்து முட்டியது. பாவம்; சிறு பிள்ளைகளுக்கே உரித்தான இயல்புதானே.</p><p>அன்று ஞாயிற்றுக்கிழமை; நேற்றைய நாளும் எப்படியோ கழிந்து போய்விட்டது. இன்றாவது அவளைக் கட்டிக்கொண்டுபோய் நீராடாவிட்டால் பின்பு பாடசாலை நாட்களில் அதை நினைத்துப் பார்க்கவே இயலாதல்லவா? அதே நேரத்தில் வீட்டில் சேர்ந்திருத்த அழுக்குத் துணிகளும் கூடி அவளை மேலும் உசார் படுத்தியது.</p><p>அடுத்த கணம் “ வா மகன் குளிக்கப் போக...' 'சிறுவ னையும் அழைத்தபடி துணிமணிகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு தயாரானாள்.</p><p>''எனக்கேலும்மா... பௌத்த நோவு''</p><p>எங்கிருத்துதான் அவனுக்கிந்த நோய் திடீரென்று வந்ததோ. குளிக்காமலிருக்க அவன் போடும் போலிக் காரணம்தான் அது என்பது அவளுக்குந் தெரியாதா என்ன ?</p><p>“குளிக்க வந்தாத்தான் ஆப்ப தார''</p><p>இந்த மந்திரத்தை அவள் சந்தர்ப்பம் பார்த்து உச்சரித்ததுதான் தாமதம்; தன்னிச்சையாக அவள் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.</p><p>"அம்ஜத்து... அம்ஜத்து... வாளியக் கொஞ்சம் எடுக்கவா'' அடுத்த வீட்டை அண்மிக் குரல் கொடுத்தாள் ஹிதாயா.</p><p>"ஆ... நானும் குளிக்கப் போகணும். சொணக்காமக் கொணுவாங்கொ'' உள்ளேயிருந்து நிபந்தனையுடன் அனுமதி வந்தது.</p><p>இரவல் வாளியையும் சுமந்து கொண்டு நடக்கத் துவங்கினாள். பாவம், ஒரு பொண்ணாக இருந்த போதிலும், அவளுக்குத்தான் எத்தனைப் பொறுப்புகளும் வேலைகளும்.. விடிவுகாண முடியாத சிந்தனைகளும்...</p><p>இன்னும் மூன்றே மூன்று நாட்கள் தான் இருக்கின்றன. டாக்டரின் உத்தரவுப்படி ஜெஸில் நானாவை 'வீரலில கயரோக ஆஸ்பத்திரியில் கூட்டிக்கொண்டுபோய் சேர்க்க வேண்டும். குறைந்த கணக்கில் அதற்கு இருபத்தைத்து ரூபாவாவது கையிலிருக்கவேண்டும், </p><p>இந்த ஒரே மாதத்திற்குள் கையில் மடியில் இருந்ததெல்லாம் விற்றுச் சுட்டு முடித்தாகிவிட்டது. யாரியமும் கேட்டுப் பெற்றுப் பழக்கப்படாத அவள் வேறெதுவுமே செய்ய முடியாத நிலையில் கடனுக்காவது கேட்டு வைப்போமென்று தான் நேற்று கண்ணாடி முதலாளியின் பெண்சாதியை நாடினாள்.</p><p>''உம்மா பகலக்கி மீன் வாங்கேம் சல்லில்ல'' என்பதுதான் அவனது பதில்.</p><p>வெட்கித்து வெட்கித்துக் கேட்டால் நிச்சயம் கிடைக்கு மென்ற நம்பிக்கையில் வாய் திறந்த முதல் முயற்சியே இப்படிப் படுதோல்வியை அரவணைத்தபோது அதற்குப் பிறகு இன்னுமொருவரிடம் போய் வாய் திறக்கும் தைரியம் அவளுக்கு வரவில்லை .</p><p>''எனக்கேல உ.ம்மா... பெனத்த நோவுது' ' கிணற்ற டியை அடைந்ததும் மீண்டும் சிறுவனின் போலிச்சாட்டு.</p><p>நிறைந்திருந்த பெண்களுக்கிடையே அவளும் நுழைந்து அவசர அவசரமாக துணிகளைத் துவைப்பதிலும் குளிப்பதிளும் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.</p><p>நான்கு புறமும் மதில்கள் எழுப்பிப் பெண்களுக்கென்றே விஷேசமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுதான் அந்தப் பள்ளிக் கிணறு. இடை விடாது பெண்கள் கூடிக்கொண்டிருக்கும் அங்கு , வழமை போல அன்றும் உள்ளூர்ச் சம்பவங்களின் விமர்சனங்கள் இடம்பெற்ற போதிலும் அவற்றுக்குக் காது கொடுக்கும் நிலையில் அவளில்லை.</p><p>அவளுக்குத்தான் எத்தனையெத்தனை பிரச்சினைகள் முக்கால் மணி நேரத்துக்குள் துணிகளைத் துவைத்து மகனைக் குளிப்பாட்டி, தானும் குளித்துப் புறப்படத் தயாரானபோதுதான் அந்த வேண்டுகோள்.</p><p>“வாளியக் கொஞ்சம் தா-... நான் குளிச்சிட்டு அனுப்பியன்''</p><p>எதிரே, காதிலும் கழுத்திலும் தங்க நகைகள் பள பளக்க மார்பு ரவிக்கையைக் கழற்றியபடி நின்று கொண்டி ருந்தாள் கண்ணாடியின் முதலாளியின் மனைவி. </p><p>அவள் சிறிது யோசித்தாள். இரவல் கொடுத்தவள் உடனே கொண்டுவந்து தரும்படி சொல்லியிருக்கிறாளே,</p><p>''புரியமில்லாட்டி எடுத்துக்கொணு போடி ஒன்ட அருமச் சாமன''</p><p>“இல்ல இது ஏன்டயல்ல; அடுத்தூட்டு வாளி.'' அவள் காரணம் காட்ட முனைந்தாள்.</p><p>*போதும் போதும் சாட்டு. நீ இப்ப பெரிய மனிசி தானே, '' அப்பெண் அனாவசியமாக வார்த்தைகளைப் பொழிந்ததை அவளால் பொறுக்க முடியவில்லை.</p><p>”நாங்க பெருக்கேயில்ல...சிறுக்கேமில்லே...எப்போதும் ஒரு மாதிரித் தான்''</p><p>"வாயப் பொத்து நாணயக்காரி... நசக்கார மனிசனக் கட்டில்ல வெச்சிட்டு, மறு சாதிய ஊட்டுள்ளுக்குப் போட்டுக் கொண்டு கூத்தாடியவள்...... ஓண்ட ரசம் பட்டுத்தானே ஒத்தனொத்தனா வாரானியள் ......',</p><p>அங்கு கிளர்ந்து வெடித்த சிரிப்பொலி அவளை இன்னும் அதிரச் செய்துவிட்டது. குனிந்தவர்களும், நிமிர்ந்தவர்களும் தண்ணீர் அள்ளுபவர்களும் முதுகு தேய்ப்பவர்களும்...அடக்க முடியாமல் வாய் விட்டுச் சிரிக்கத் தொடங்கி யதைப் பார்த்ததும், அவர்களெல்லோரும் ''கண்ணாடி முதலாளி' யின் மனைவியின் குரலை ஆமோதிப்பது போலிருந்தது.</p><p>அவள் வேறு எதுவும் பேச முடியாதவளாக...பேசியும் பயனில்லையே என்பதால் மகனையும் கையில் பிடித்துக் கொண்டு அமைதியாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.</p><p>''மாறுசாதி ஊட்டுக்குள்ள போட்டுக்கொண்டு''</p><p>இந்தச் சொற்றொடர் மீண்டும் மீண்டும் அவள் செவியில் எதிரொலித்து அவளது உள்ளத்தைத் துகள் துகளாக்கிக் கொண்டிருந்தது.</p><p>இருக்கின்ற துயரங்களும் வேதனைகளும் போதாக் குறைக்கு இப்படியும் ஓர் அவமானமா?</p><p>இந்த ஏழு வருட காலமாக ஜெஸீல் நாளா அன்றை யன்றைக்குப் பணம்தான் சம்பாதித்து வந்தார் என்றுதான் அவள் நம்பியிருந்தாள் , ஆனால் அவர் பணத்தை மாத்திரமல்ல பல மனித உள்ளங்களைக்கூடச் சம்பாதித்துள்ளார் என்பதை. அவர் நோயாளியாக மாறிய இந்த ஒரே மாதத்துக்குள் அவள் நன்குணர்ந்து கொண்டாள். - ஒவ்வொரு நாளும் அவர் பழகிய பகுதிகளான ஊராமம், ரதம்பல, பிடதெலி முதலிய பகுதிகளிலிருந்து வந்து போய்க்கொண்டிருக்கும் சிங்களச் சகோதர சகோதரிகளே அதற்குச் சான்று.</p><p>சொந்தக்காரர்களென்றும் ஊரவர் என்றும் இருப்பவர் களெல்லாம் புறக்கணித்து வைத்திருக்கும் இந்நிலையில், பழக்கப் பிணைப்பால் வந்து போய்க் கொண்டிருப்பவர்களைக் கூட விட்டுவைக்காது கெட்ட கதைகளைத் தொடுக்கும் இவர்களின் விகாரத் தனத்தை யாரிடம் சொல்வது?</p><p>”உம்மா ...ஆப்ப..... உம்மா ஆப்ப'</p><p>வீட்டை அடைவதற்கும் சிறுவன் மீண்டும் கோரிக்கை விடுவதற்கும் சரியாக இருந்தது. </p><p>முதன் முதலில் அவனுக்குக் காலைச் சாப்பாடு ஒழுங்கு செய்து கொடுத்துவிட்டு , கணவனைப் பார்க்கமுன்னே ஓடிச் சென்றாள் ஹிதாயா.</p><p>அப்பொழுது தான் இருமி ஓய்ந்தாரோ என்னவோ? நெஞ்சை தடவியபடி சுருண்டு கொண்டிருந்தான் அவள் கணவன். அவரைக் கண்டதும் கிணற்றடியில் நடைபெற்ற சம்பவம் அவள் நினைவில் கீறல் போட்டது. </p><p>’நசக்கார மனிசனக் கட்டில்ல வெச்சிட்டு... மாறுசாதிய ஊட்டுக்குள்ள போட்டுக்கொண்டு.......' </p><p>ஹிதாயா பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டாள். சடுதியாக அவள் பார்வை கீழ்நோக்கிப் பதிந்தது. தோடம் பழங்கள் கீரைகறிகள் நிறைந்த கூடையொன்று அவள் கண்ணிற் பட்டது. அது காலையில் வந்தவர் கொண்டு வந்ததாகத்தானிருக்க வேண்டும். அவர் மாத்திரமா? ஒவ்வொரு நாளும் வரும் அத்தனை பேரும் இப்படித்தான்.</p><p>”ஹிதாயா....... எனத்தியன் பாக்கிய. அது வெள்ளன வந்த மாட்டின் மஹத்தயா கொணுவந்தது. அவரு என்னோட உசிரு மாதிரி. நான் போனா ஒரு மொழம் நேரந்தயாவது எடுக்காம அனுப்பியல்ல. நல்ல வரும்படிக்காரன். நான் வாணாண்டு செல்லச்செல்ல இதேம் தத்திட்டுப் பெய்த்தார்,'' என்று சொல்லியவாறு தலையணைக்கடியிலிருந்து அதனையெடுத்து நீட்டினார். ஆமாம் ஐம்பது ரூபாத் தாள். அவள் இதற்காகத்தானே நேற்று முயற்சித்து இனிமேல் அந்த முயற்சியே வேண்டாமென வெறுத்து, இன்னும் மூன்று நாட்களுக்குப் பின் கணவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்ல என்ன வழியென்று தெரியாமல் தவித்துக் குழம்பிக் கொண்டிருந்தாள்,</p><p>அவனது நெஞ்சுப் பாரம் சட்டென்று இளகியது போன்ற உணர்வு.</p><p>இப்பொழுது அவளுக்குள் புது நம்பிக்கையொன்று சுடர் விடுகிறது.</p><p>*</p><p>(மல்லிகை . 1972 செப்டம்பர்.)</p><p>நன்றி : <a href="https://www.facebook.com/dickwellekamal.kamal">திக்குவல்லை கமால்</a></p><p>*</p><p>மேலும் வாசிக்க :</p><p><a href="http://abedheen.blogspot.com/2016/02/blog-post_24.html">செருப்பு (சிறுகதை) - திக்குவல்லை கமால்</a></p><p><a href="https://abedheen.wordpress.com/2009/07/06/kamal_story01/">ஆயுள் தண்டனை – திக்குவல்லை கமால்</a></p><p><br /></p>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-38740723038178839202022-08-26T16:00:00.000+04:002022-08-26T16:00:14.055+04:00இந்தியா எனும் மாயம்<p>Thanks to : <a href="https://www.facebook.com/kay.vee.716970/posts/pfbid06pMV5ssGcoNoeozXZAjHGfJh5cmqVSkFJPCySm3WMZEjEPjKXsWcJHo6SjJHY5WQl" target="_blank">Karthik Velu</a></p><p>கரன் தாப்பர் எடுத்த பல பேட்டிகளை பார்த்திருக்கிறேன் . மிகவும் மெனக்கெட்டு கேள்விகளையும் தரவுகளையும் தயாரித்துக்கொண்டு வருவார் .கேள்விகள் வெற்று சீண்டலாக இல்லாமல் முரண்களை முன்வைத்து கேட்கப்படுவதாக இருக்கும் . பொருட்படுத்ததக்க கேள்விகளாக இருக்கும் . </p><p>பேட்டி அளிப்பவர் கொஞ்சம் மழுப்பினாலும் இதைத்தான் சொல்ல வருகிறீர்கள் இல்லையா என்று எளிதில் ஒரு மூலைக்கு அவர்களை நகர்த்திப் போய்விடுவார் . PTR ஐ அவர் எடுத்த பேட்டியில் இப்படி நெருக்க வேண்டிய தேவையே இருக்கவில்லை . பதில்கள் அனைத்தும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இருந்தன , ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பேட்டி நேரம் ஆனால் கேட்க வேண்டிய எல்லா விஷயத்தையும் கேட்டுவிட்டார் PTR உம் சொல்ல நினைத்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் . </p><p>அண்ணாவின் தனித்தமிழ்நாடு கோரிக்கை , இந்தி திணிப்பு ,கூட்டாட்சி ,அதிகார குவிப்பு , பாகிஸ்தா பிரச்சனை , GST , மக்களவை தொகுதிகள் மறுபங்கீடு ,மொழி அரசியல் , மாநிலங்களுக்கு இடையான ஏற்ற தாழ்வுகள் என்று எல்லா கேள்விகளுமே முக்கியமானவை.</p><p>தமிழகத்தில் என்ன நிறை பிற மாநிலங்களில் என்ன குறை என்பதையும் சுருக்கமாக சுட்டியிருக்கிறார்.</p><p>எல்லா கேள்விகளுக்கும் தன்னம்பிக்கையுடனும் பொறுப்புடனும் பதில் அளித்தார் , ஆங்காங்க இடைமறிக்க முயன்ற போதும் சொல்ல வந்த கருத்தை சொல்லியே முடித்தார் .இந்தப் பேட்டியில் அவர் பேசிய விதம் திமுக வை சார்ந்த ஒரு அமைச்சர் பேசியது போல தொனிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் சார்பாக ஒருவர் பேசியதை போலவே பேசியிருந்தார் . </p><p>சில பதில்கள் ஆச்சரியப்படும் வகையிலான முதிர்ச்சியை கொண்டிருந்தன . சுயமரியாதையில் தொடங்கி self determination ல் முடித்த பதில் அருமை.தமிழகத்துக்கு உள்ளேயே தமிழ் மற்றும் தமிழர்கள் குறித்து எள்ளலான சொல்லாடல்கள் சரளமாக புழங்கும் சூழலில் இது போன்ற கண்ணியமான பேட்டி ஒரு தேசிய அளவிலான ஊடகத்தில் வந்திருப்பது தமிழகத்தின் நிலைப்பாட்டை நேர்மையாகவும் ,நேர்மறையாகவும் காட்டியிருக்கிறது. </p><p>ஒரு தேர்ந்த பேட்டியாளர் எப்படி பேட்டி அளிப்பவரிடம் இருந்து தரமான பதில்களை பெறமுடியும் என்பதற்கு கரன் தாப்பர் நல்ல எடுத்துக்காட்டு. இந்த பேட்டியின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுத்தாலும் நன்றாக இருக்கும் .இன்னும் பல முக்கிய கேள்விகளை முன்வைக்கலாம் . இந்த பேட்டி இந்திய அளவில் பலரை சென்றடையும் என்றாலும் , அதைவிடவும் தமிழகத்தில் இது முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய பேட்டி .</p><p>India Today is a Miracle…But That Miracle is Under Threat—Tamil Nadu Finance Minister P Thiaga Rajan</p><p></p><p><br /></p>
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/ZMsam_0CObA" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-53219016187569749732022-06-28T12:41:00.000+04:002022-06-28T12:41:20.108+04:00கேலக்ஸி புக்ஸ்<p></p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://galaxybs.com/" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;" target="_blank"><img border="0" data-original-height="110" data-original-width="315" height="93" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5dovQYKp0n6MdHYOVMOYxkKw7Di8oXD7sDVy_XHzpNz02WEx05MF3loopkY1RB7zt8jc4pQ9vPEeb8ZENHa41vClPi78JtX8Wh5PQ8f54C1NDcG7yUp8Net1cS00ikaxsE82e1o0xP3hmYKHsicRQZre24BF3QuSkXD_oyETwdmXxb5JNJ6N6SlN58A/w265-h93/galaxybook.jpg" width="265" /></a></div><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></span><p></p><p><span style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">வணக்கம்,</span></p><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">கிண்டில் முதல் சோசியல்மீடியா வரை டிஜிட்டல் எழுத்துக்கள் உள்ளங்கைக்கே வந்து வாசிப்பிற்குத் தீனி போட்டாலும் பொட்டலமிட்ட காகிதத்தை வீசியெறியும் முன்னால் கிழிந்த வார்த்தையும் சேர்த்து ஊகித்துப் படித்து முடிக்கும் ஆர்வம் இன்னும் எத்தனை காலம் மாறினாலும் மாறாதது அல்லவா? அச்சடிக்கப்பட்ட எழுத்தின் மீதான நேசம் பன்னெடுங்காலமாக மனித வாழ்வியலுடன் ஒன்றிப்போயிருக்கிறது. </div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">இன்றைய பரபரப்பான சூழலில் புத்தக வாசிப்பு குறைந்து போகக் காரணம் நேரமின்மை மட்டுமே அல்ல, புத்தகங்களை தேடி அலைந்து வாங்கி வரக் கூடிய நேரத்தை நம்மால் ஒதுக்க இயலாததும்தான். </div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">அந்த அலைச்சலை உணர்ந்தே புத்தகக் காதலர்களுக்கும் புத்தகங்களுக்குமான நேரடித் தொடர்பை உண்டாக்கும் முயற்சியை இணையதளம் வழியாக செயல்படுத்தியிருக்கிறோம். </div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">இதொன்றும் புதியவகை முயற்சியல்லதான். ஆனால் நிச்சயம் தனித்துவமான பயணமாக எங்களுக்கும் உங்களுக்கும் அமையப் போவது உறுதி. </div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">லாபம் எங்களின் முதன்மையான நோக்கமல்ல என்பதால் நீங்கள் எதிர்பார்த்திராத மிக மிகக் குறைந்த அஞ்சல் செலவு. </div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">தள்ளுபடி விலையில் புத்தகங்களை கிடைக்கச் செய்கிறோம். </div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">தினம் தினம் புதுப்புது சலுகைகள். </div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">தினந்தோறும் புதுப்புது புத்தக அறிமுகங்கள் … </div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">புதுப்புது எழுத்தாளர்களின் அறிமுகங்கள்... </div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">சிறந்த புத்தகமா வாங்க ஏற்ற தலைப்பா என்பதை முன்பேவாசித்து முடித்தவர்களின் அனுபவங்கள் வாயிலாக REVIEWS..</div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">படிக்க விரும்பியும் கிடைக்காத புத்தகங்களை உங்களுக்காகத் தேடிப் பெற்றுத் தர 'BOOK ON DEMAND' இந்தப் பகுதியில் உங்களுக்குத் தேவையான எந்தப் புத்தகமானாலும், எந்த மொழியானாலும் சரி நீங்கள் பதிவு செய்யலாம்… அதை உங்கள் கைகளில் கொண்டு வந்து சேர்க்க எல்லா முயற்சிகளும் செய்வோம்.</div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">வாசிப்பாளர்-எழுத்தாளர்-பதிப்பா<wbr></wbr>ளர்களை இணைக்கும் பாலமாக கேலக்ஸி இணையதளம் செயல்படும். </div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">இந்த பயணத்தில் நீங்களும் எங்களுடன் இணைந்து ஆதரவளிக்க அன்புடன் அழைக்கிறேன். </div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">மிக்க நன்றி.</div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">நட்புடன் </div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">பாலாஜி பாஸ்கரன்</div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br /></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">இணையதளம் : <a data-saferedirecturl="https://www.google.com/url?q=https://galaxybs.com/&source=gmail&ust=1656491531857000&usg=AOvVaw08EQkQYXM8FEu4YkGPGRQF" href="https://galaxybs.com/" style="color: #1155cc;" target="_blank">https://galaxybs.com/</a></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">அலைபேசி : +91 99944 34432 ( இந்தியா) , +971 50 434 5083 ( அமீரகம்) </div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">பேஸ்புக் : <a data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.facebook.com/GalaxyBookSellers/&source=gmail&ust=1656491531857000&usg=AOvVaw0I2W0Kt8vVCHZaAmc6-uJU" href="https://www.facebook.com/GalaxyBookSellers/" style="color: #1155cc;" target="_blank">https://www.facebook.com/<wbr></wbr>GalaxyBookSellers/</a></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">பேஸ்புக் குழுமம் : <a data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.facebook.com/groups/galaxybooks&source=gmail&ust=1656491531857000&usg=AOvVaw2sKWkAKelapuMl07W3eQuA" href="https://www.facebook.com/groups/galaxybooks" style="color: #1155cc;" target="_blank">https://www.facebook.com/<wbr></wbr>groups/galaxybooks</a></div><div dir="auto" style="background-color: white; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small;">வாட்சப் குழுமம் : <a data-saferedirecturl="https://www.google.com/url?q=https://chat.whatsapp.com/EZJ73qHr4LOLnzYhgz0acJ&source=gmail&ust=1656491531857000&usg=AOvVaw0w4QJ4siGM1Er2H3P6pkmJ" href="https://chat.whatsapp.com/EZJ73qHr4LOLnzYhgz0acJ" style="color: #1155cc;" target="_blank">https://chat.whatsapp.com/<wbr></wbr>EZJ73qHr4LOLnzYhgz0acJ</a></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-74429259305268640632022-06-14T12:00:00.001+04:002022-06-14T12:00:00.211+04:00தோழர் ஷாஜஹான் உரை<p></p><p>அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய ‘தூங்காநகர நினைவுகள்; புத்தக அறிமுக விழாவில் பேசியது. </p><p>ஷாஜஹானின் ’காட்டாறு’ சிறுகதைத் தொகுப்பை தேடிக்கொண்டிருக்கிறேன். சென்ஷியிடமும் சொல்லியிருக்கிறேன்., கிடைத்ததும், இலக்கியச் சிந்தனை அமைப்பில் பரிசுபெற்ற அவருடைய சிறுகதையைப் பகிர்வேன், இன்ஷா அல்லாஹ். அதுவரை சிரியுங்கள்! </p><p>நன்றி : ஸ்ருதி டிவி </p><p>*</p><p></p> <iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/VbQj49pMj0k" title="YouTube video player" width="560"></iframe>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-57869813596893976472022-05-31T13:08:00.002+04:002022-05-31T13:19:41.112+04:00உவைஸுல் கர்னீ<p><a href="https://abedheen.wordpress.com/category/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%87%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9c%e0%af%8d%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf/" target="_blank">இமாம் கஸ்ஸாலி (ரஹ்)</a> எழுதிய ’இஹ்யாவு உலூமித்தீன்’ நூலிலிருந்து ஒரு பகுதி - மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி) அவர்களின் விரிவுரையில் (நூல் : இம்மையும் மறுமையும்).</p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitnW_g3kBWnIChsw9iT5AQmutz6ZSPzTfYkFc4_76yg8xOCjYrf0UH8ee0WAfZIDVd_p0YXOaAy_nyVvXitVTjVns0FfiR7DgWMu99vURfKv0hFOUlKlXiPH2eTjCuR-W9fxF5At4C94C_shUyvepyZV4t2TluDNIbi6GJMXq7FrpmFbVcvvhQWIO_DQ/s710/uni-immai-marumai1.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="710" data-original-width="476" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitnW_g3kBWnIChsw9iT5AQmutz6ZSPzTfYkFc4_76yg8xOCjYrf0UH8ee0WAfZIDVd_p0YXOaAy_nyVvXitVTjVns0FfiR7DgWMu99vURfKv0hFOUlKlXiPH2eTjCuR-W9fxF5At4C94C_shUyvepyZV4t2TluDNIbi6GJMXq7FrpmFbVcvvhQWIO_DQ/s320/uni-immai-marumai1.jpg" width="215" /></a></div><p><span style="color: red;"><b>உவைஸுல் கர்னீ</b></span>யைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர் ஓர் இறை பக்தர்; சிறந்த அறிவாளி. வீட்டிலுள்ளவர்கள் அவரைப் பைத்தியக்காரர் என்றார்கள். வீட்டு வாசலில் ஒரு சிறு அறை நிருமாணித்திருந்தார்கள். அவர் அங்கேயே குடியிருந்தார்கள். வருடக் கணக்கில் அவர் முகத்தை மற்றவர்கள் பார்க்க முடியாத நிலை பரவிற்று. அவர் மிகச் சாதாரண உணவை உட்கொண்டார். கேட்பாரற்றுக் கிடக்கும் கந்தல் துணிகளைச் சேர்த்து யூப்ரடீஸ் நதியில் அலசிவிட்டு அணிந்து கொண்டார். சிறுவர்கள் அவரைக் கல்லால் அடித்தார்கள். அவர்களுக்கு அவர் கோலம் 'தமாஷா'ய் இருந்திருக்க வேண்டும்.</p><p><br /></p><p>அவரைப்பற்றிதான் பெருமானார் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புக் கொடுத்தார்கள் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். ''யமன் தேசத்திலிருந்து இறைவனின் மூச்சு வருகிறது'' என்று பெருமானார் (ஸல்) அவர்கள் சிலேடையாகக் கூறினார்கள். இது உவைஸுல் கர்னீயைப் பற்றிய முன்னறிவிப்பு என்பது அநேகரின் கருத்து. உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு ஒன்று இதற்கு ஆதாரமாய் அமைந்திருக்கிறது.</p><p><br /></p><p>ஆட்சிப் பொறுப்பேற்றதும் அவர்கள் முஸ்லிம்களை எல்லாம் ஒன்று திரட்டினார்கள். “உங்களில் இரக் தேசத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அவர்கள் எழுந்து நிற்கட்டும்!''</p><p><br /></p><p>கூட்டத்தின் நடுவிலிருந்து சிலர் எழுந்து நின்றனர். </p><p><br /></p><p>"கூபா வாசிகளைத் தவிர்த்து மற்றவர்கள் உட்காருங்கள்.” </p><p><br /></p><p>சிலர் உட்கார்ந்தனர். </p><p><br /></p><p>“முராத் வகுப்பாரைத் தவிர்த்து மற்றவர்கள் உட்காருங்கள்!" </p><p>இன்னும் சிலர் உட்கார்ந்தனர். </p><p><br /></p><p>''கர்னீகளைத் தவிர மற்றவர்கள் உட்காருங்கள்!''</p><p><br /></p><p>இன்னும் சிலர் அமர்ந்தனர். இப்போது அந்தப் பெருந்திரளுக்கு மத்தியில் ஒரே ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார்.</p><p><br /></p><p>''நீர் கர்னீயா? கர்ன் என்ற குடும்பத்தைச் சேர்ந்தவரா நீர்?” </p><p><br /></p><p>"ஆம்!” என்றார் நின்று கொண்டிருந்தவர்.</p><p><br /></p><p>''உவைஸ் பின் ஆமிர் கர்னீயை உமக்குத் தெரியுமா?'' - இது கலீபாவின் கேள்வி.</p><p><br /></p><p>''அமீருல் முஃமினின்! அவனைப் பற்றி நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? அவன் ஒரு முட்டாள்; பித்தன். எங்கள் குடும்பத்தில் அவனைப் போன்ற அறிவிலி எவருமில்லை.</p><p><br /></p><p>உமரின் கண்கள் கண்ணீரால் நனைந்தன. ''போதும் நிறுத்தும்... நீர் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டீர். ஆனால், பெருமானார் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி என்ன முன்னறிவிப்புக் கொடுத்திருக்கிறார்கள், தெரியுமா? தம் முடைய அன்பிற் குரியவர் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.</p><p><br /></p><p>கூட்டத்திலிருந்து ஒருவர் துள்ளி எழுந்தார். ஹரம் பின் ஹய்யான் என்ற பெயருடைய அவர் உடனே கூபாவை நோக்கிப் புறப்பட்டார். அவர் மனத்தில் எப்படியாவது</p><p>உவைஸைச் சந்தித்துவிட வேண்டும் என்ற ஓர் ஆசை துளிர்விட்டு எறிந்தது.</p><p><br /></p><p>கலகலவென்ற சப்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது புராத் நதி (யூப்ரடிஸ்). அதன் கரையில் உட்கார்ந்து 'உலூ' செய்து கொண்டிருந்தது ஓர் ஆண் உருவம். அடர்த்தியான தாடி, வழுக்கச் சிரைத்த சிரம். அனுதாபம் தேடும் முகம்-இந்த வர்ணனைகளுடன் காணப்பட்ட அந்த உருவம் தன் வேலையில் ஈடுபட்டிருந்தது. கண்கள் குழி விழந்திருந்தன. ஆனால், அவற்றில்தான் எத்துணைப் பிரகாசம்!</p><p><br /></p><p>"அஸ்ஸலாமு அலைக்கும்!" என்றார் ஹரம்.</p><p><br /></p><p>அந்த உருவம் வெடுக்கென்று திரும்பிற்று. ''வஅலைக்கு முஸ்ஸலாம்...'' ஒளி நிறைந்த அந்தக் கண்கள் ஹரமை எடை போட்டன.</p><p><br /></p><p>ஹரம் நிதானித்துக்கொண்டு, கை குலுக்கும் எண்ணத்துடன் கையை நீட்டினார். பயனில்லை. உவைஸ் கைகொடுக்க மறுத்துவிட்டார்கள். அவர் அணிந்திருந்த உடை பார்ப்போர் மனத்தில் இரக்க உணர்ச்சியை உருவாக்கிற்று.</p><p><br /></p><p>''உவைஸ்! நலம்தானே?” என்றார் ஹரம்.</p><p><br /></p><p>''ஆம், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், ஹரம்?'' என்றார் உவைஸ்.</p><p><br /></p><p>ஹரம் திடுக்கிட்டார். ஏனென்றால் உவைஸுக்கு ஹரமை அறவே தெரியாது. இதற்கு முன் ஒருவரையொருவர் சந்தித்ததும் கிடையாது. இப்படியிருக்கும்போது அவர் பெயர் எப்படி தெரிந்தது உவைஸுக்கு.</p><p><br /></p><p>"ஒரு சந்தேகம்! என்றார் ஹரம், "என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? என் பெயரைச் சொல்லிக் கொடுத்தவர் யார்?''</p><p><br /></p><p>உவைஸ் புன்னகை புரிந்தார்.</p><p><br /></p><p>ஹரம் மீண்டும் கேட்டார். ''இப்போது தான் முதல் தடவையாக நாமிருவரும் சந்திக்கிறோம். என் பெயர் எப்படித் தெரிந்தது உங்களுக்கு?''</p><p><br /></p><p>''இறைவன் அறிவித்தான்! நமக்கிடையில் நேரடிச் சந்திப்பு இல்லாவிட்டாலும், முஸ்லிம்கள் அனைவரும் ஒருவரை யொருவர் மானசீகமாகச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சந்திப்பு, உரையாடல் எல்லாம் மானசீகமாகவே நடைபெறுகின்றன.</p><p><br /></p><p>இருவரும் வெகு நேரம் உரையாடினார்கள். கடைசியில் உவைஸ் கூறினார் : ''ஹரம்! இதுதான் நமக்கிடையில் கடைசிச் சந்திப்பு. இனிமேல் என்னைத் தேடிக்கொண்டு வராதீர்கள். இந்த மதிப்பும் பெருமையும் எனக்குப் பிடிக்காது... எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நான் உங்களுக் காகப் பிரார்த்தனை செய்கிறேன்...''</p><p><br /></p><p>ஹரம் கூபாவை விட்டுப் புறப்பட்டார். சில சமயம் அவர் மனத்தில் உவைஸின் முகம் தோன்றுவதுண்டு. அப்போ தெல்லாம் அந்தக் கடைசிப் பேச்சை நினைத்துக்கொண்டு பேசாமலிருந்து விடுவார்.</p><p><br /></p><p>''ஒரு நாள் அபரிமிதமான அன்பினால் உவைஸைப் பற்றிப் பலரிடம் விசாரித்தேன். அவரைப் பற்றி யாருக்குமே தெரியவில்லை !'' என்று வேதனையோடு கூறுகிறார் ஹரம்!</p><p><br /></p><p>(பக் : 86-89)</p><p>*</p><p>நன்றி : <a href="https://www.universalpublishers.co.in/product/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/" target="_blank">யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்</a></p><p><br /></p><div><br /></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-87373516735094832232022-04-23T11:30:00.003+04:002022-04-23T11:31:04.757+04:00இசை : ஆண் மோகினி !<p>நாதஸ்வர வித்வான் திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை அவர்களின் அழகைப் பார்த்து ‘<a href="https://www.youtube.com/watch?v=YngUlol1xJk" target="_blank">ஆண் மோகினி</a>’ என்று அழைப்பாராம் செம்மங்குடி! வாசிப்பைக் கேட்டும் சொல்லியிருப்பார். மயங்கிவிட்டேன். தேடித்தேடி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.</p><p>Thiruvengadu Dr .T.P.Subramania Pillai-Pallavi_Mohanam_Ragamalika</p><p>Thanks to : Guruvayurappa Dhasan & Yuvan</p>
<iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/NnckSEuAaDQ" title="YouTube video player" width="560"></iframe>
<p>*</p><p><span style="color: red;">ஃபேஸ்புக்கிலிருந்து ஒரு பதிவு</span> :</p><p><b>திருவெண்காட்டாரும் நானும்</b> :</p><p>- நாதஸ்வர ரசிகமணி குருவாயூரப்பதாசன் Dr. B.சுந்தரராமன், M.A, BEd, M.Phil ,PhD</p><p>1969ல் நாதஸ்வர நவராத்திரி இசை விழாவை பிரதி வருடம் பத்து நாட்கள் நான் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பழமார்நேரியில் தொடக்கிய பொழுது திருவீழிமிழலை, செம்போன்னார்கொவில், இஞ்சிக்குடி ,திருப்பாம்புரம் திருமெய்ஞானம், ஏகேசி, போன்ற பிரபல மேளங்கள் வருகை தந்தாலும் திருவெண்காட்டார் வருகை தராத குறை மிக இருந்தது .இதைப்பற்றி அவரிடம் முதல் தவிலாக பன்னெடும்காலம் பணி புரிந்தும் அவரது ஒலிப்பதிவு ரிகார்டுகளில் தனிதவில் வாசித்தும் இருந்த பிரசித்தி பெற்ற தவில் கலைஞர் கும்பகோணம் அமரர் திரு கே. ஏ.தங்கவேல் பிள்ளை அவர்களிடம் கூறியதும் அவர் என்னை திருவெண்காட்டிற்கு அழைத்து சென்று டாக்டர் திருவெண்காடு டிபி சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அது முதல் டி பி எஸ் அவர்களின் இனிய குடும்பத்தில் அவரது மூன்று மகன்களுடன் நானும் நான்காவது மகன் ஆனேன். இனி இக்கட்டுரையில் திருவெண்காடு திரு டி பி சுப்பிரமணிய பிள்ளை அவர்களை “டி பி எஸ்” என்றே குறிப்பிடுகிறேன்.</p><p>டி பி எஸ் அவர்களை அவரது தெய்வத்தாய் கருவில் சுமந்து இருந்த பொழுது திருவெண்காட்டில் அகோர மூர்த்தி திரு வீதி உலா வந்த சமயம் சிவாசாரியார் ஒருவருக்கு தெய்வ சாந்நித்யம் ஏற்பட்டு பின் வருமாறு அருள் வாக்குக் கூறினார் “உலகம் போற்றும் புகழ் மிக்க இசை மேதை ஒருவன் இந்த இல்லத்தில் பிறக்க போகிறான் ! அவனுக்கும் பிறகு இவ்வூர் அவன் பெயரினாலேய இயங்கும் “ அது அப்படியே உண்மையானது</p><p>சிறுவயதிலேயே தம் தகப்பனார் திரு பிரமநாத பிள்ளை அவர்களை டி பி எஸ் அவர்கள் இழந்ததால் இவரது தாய் மாமன் இவரை தம் தோளிலேயே நாங்கூரில் இருந்து சிதம்பரம் வரை (அந்நாட்களில் பஸ் வசதி இல்லாததால்) அடிக்கடி சுமந்து சென்று சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை அவர்களிடம் நாதஸ்வரம் பயிற்றுவித்தார்.</p><p>மிக குறுகிய காலத்திலேயே நாதஸ்வரத்தின் முடி சூடா மன்னன் ஆகி நாதஸ்வர ராஜா’ புன்னாக நாத மணி மகுடி மன்னன் கலா சிகாமணி கலைமாமணி போன்ற உயரிய விருதுகளைப்பெற்றார் .இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் இவர் புகழ் பரவியது . உலகத்தின் வரைபடத்தில் இவர் கால்தடம் பதிக்காத நாடுகளே இல்லை எனலாம் அந்நாளில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை நாதஸ்வர சக்கரவர்த்தி திரு, டி .என்.ராஜ ரத்னம் பிள்ளை அவர்கள் தம் இரு சகோதரிகளையும் ஒரே நாளில் இவருக்கு மணம் முடித்து வைத்தார் .திருவெண்காட்டில் நடந்த ஊர்வலத்தின் போது ராஜ ரத்னம் அவர்கள் நாதஸ்வரம் இசைப்பதாக இருந்தது.சில சூழ்நிலைகளால் அவர் கலந்து கொள்ள முடியாமல் போகவே வந்திருந்த மாபெரும் ஜனத்திரள் டி பி எஸ் அவர்களே நாதஸ்வரம் இசைக்க வேண்டும் என்று ஒரு மாபெரும் போராட்டமே நடத்தியது .உடனே ஊர்வலத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண் வேடம் இட்டு நடுவில் உட்கார வைத்து இரு புறமும் தம் இரு மனைவியரை அமர வைத்து தம் திருமண ஊர்வலத்துக்கு தாமே நான்கு திரு வீதிகளிலும் டி.பி.எஸ் நாதஸ்வரம் வாசித்தார் .( இந்த சம்பவம் அடியேனால் எழுதப்பட்டு இதயம் பேசுகிறது இதழில் 1976ல் வெளி வந்துள்ளது .)</p><p>பழனி, திருவையாறு இசைக்கல்லூரிகளுக்கு டிபி எஸ் முதல்வராக இருந்த பொழுது அவருடன் சென்று வருவேன்.எம் ஜி ஆர் வீட்டுக்கும் சென்று இருக்கிறேன் கலைஞர் வீட்டுக்கும் சென்று இருக்கிறேன்.கட்சிகட்கு அப்பாற்பட்டு எல்லாத் தலைவர்களும் டி பி எஸ் அவர்களுடன் ஒன்று கலந்து அவருக்கு உரிய மரியாதை அளித்து மனித நேயத்துடன் பழகுவார்கள்.</p><p>தனிப்பிறவி படத்தில் எம் ஜி ஆர் அவர்கள் முருகன் வேடத்தில் வருவது டி பி எஸ் அவர்களின் காத்தவராயன் படித்தில் அவர் தோன்றிய முருக வேட ஸ்டில் ஒன்றைப்பார்த்த பிறகே ஆகும். இவரைப்போன்ற சிகை அலங்காரத்தையே எம் ஜி ஆர் அவர்கள் தம் முன்னாள் படங்களில் மேற்கொண்டார் .இவரிடம் இருந்த அபரிமிதமான நட்பின் அடிப்படையிலேயே தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்கியதும் முதல் கௌரவ டாக்டர் பட்டம் இவருக்கு அளித்து எம் ஜி ஆர் மகிழ்ந்தார்</p><p>மக்களின் ஏகோபித்த ஆதரவு டிபி எஸ் அவர்களிடம் இருந்தது .கல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இவர் கலந்து கொண்ட விழா நிறைவின் போது மேலிருந்து மேடை முழுவதும் ரோஜா மலர்களை கூடை கூடையாக கொட்ட ஏற்பாடு செய்து இருந்தார்களாம் .வட இந்திய திரைப்பட இசை அமைப்பாளர் சைகால் அவர்களின் பாடல் ஒன்றை இவர் வாசித்ததற்கு வெகுமதி அந்த கௌரவம் தரப்பட்டது .இதே பாடல் பிறகு நௌஷாத் அவர்களால் சோல்ஜர் என்ற படத்தில் கையாளப்பட்டது ,</p><p>ஆல் இந்தியா ரேடியோ என்று நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பு சிவ ரஞ்சனி ராகத்தில் ஒரு தொடக்க இசை இசைக்கப்படுமே அது டி.பி.எஸ் அவர்களின் கருத்தாக்கத்தில் உருவானது . இவர் நாதஸ்வரத்தில் வாசித்ததை அடியொற்றி வாத்திய விருந்தா குழுவினரால் ஒப்புமை ஆக்கம் செய்யப்பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்ததும் முதன் முதல் ஆல் இந்தியா ரேடியோவில் முதன் முதல் நிகழ்ச்சியாக சுதந்திரப்படல்கள் நாதஸ்வரத்தில் வாசித்து ரிகார்ட் ஏற்படுத்தியவர் இவரே எனலாம்.</p><p>ஒருமுறை தமிழிசை சங்கத்தில் இவர் நாதஸ்வரம் வாசித்த போது ம்யூசிக் அகாடேமிக்கு கூடிய கூட்டத்துடன் சிலர் ஒப்பிட்டு பேசிஎதில் வருந்திய கலைஞர் அவர்கள் “காட்டில் காய்ந்த நிலா” என்று இதனை ஒப்பிட்டுப்பேசி அவர்கட்கு பதிலடி கொடுத்தார்.வயலின் மிருதங்கத்துடன் தம்பூரா ஸ்ருதியுடன் நாதஸ்வர கச்சேரிகளை உலகிற்கு அறிமுகம் செய்தவர் டி பி எஸ் அவர்களே</p><p>மத்யம ஸ்ருதியில் நாதஸ்வரம் இசைக்கும் மாண்பும் இவருக்கே உரியது .மோகனம் பிலஹரி போன்ற ராகங்களை வாசிக்கும் போது அடிக்கடி தைவதத்தை தொட்டு ஒரு ஜிலுஜிலுப்பை ஏற்படுத்தி வருவார். ஷண்முகப்ரியா போன்ற பிரதி மத்தியம ராகங்களில் அடிக்கடி மத்தியமத்தில் நிலைத்து நிற்பதும் டி பி எஸ் அவர்கட்கே உரிய தனித்துவமானது எனலாம். துரித கால ஸ்வரங்களைத் தமக்கே உரிய பாங்கில் மிக வேகமாக அதிரடியாக வாசிப்பதும் இவருக்கே உரிய கை வந்த கலை எனலாம் ! .</p><p>எந்த வித்துவான்களையும் குறைவாகப்பேசவேமாட்டார். வாய்ப்பாட்டு சங்கீத வித்துவான்களுடன் நெருங்கிய நட்பில் இருந்து வந்தவர்.</p><p>ஒரு குறிப்பிட்ட தினம் இரவு கச்சேரி என்றால் பிற்பகலில் ஓய்வு எடுக்கும் போது ஆக்கூர் மணி மற்றும் மலைக்கோட்டைபஞ்சாமி போன்ற உடன் வாசிப்பவரை விட்டு மெல்லிய குரலில் சில உருப்படிகளைக்காலடியில் அமர்ந்து பாட சொல்வார். அவரில் சிலவற்றை தேர்ந்து எடுத்து இரவு கச்சேரியை சோபிக்க செய்வார். அவருக்கு வாசிக்கும் தவில் வித்துவான்கள் அவரது கற்பனைக்கு இடைஞ்சல் செய்யாத வித்துவான்களாக இருக்க வேண்டும் .தற்போது உள்ளது போல நாதஸ்வர வாசிப்பின் இடையில் தன்னிச்சையாக தவுலை குறுக்கே புகுந்து வாசிப்பது,போன்ற அநாகரீகமான செயல்களில் யாரும் இறங்க அவரிடம் துணிந்ததாக சரித்திரமே கிடையாது.அந்நாட்களில் நாதஸ்வரத்துக்கு கட்டுப்பட்டு தவில் இயங்கி வந்தது.</p><p>“சிசு அறியும் பசு அறியும் பாம்பறியும் இசையின் பெருமையை” . அவ்விதம் இவர் மகுடி இசைத்தால் இவர் வீதி உலாவில் மகுடி வாசித்தால் அந்த மாபெரும் கூட்டத்தில் எங்கிருந்தோ பாம்பு ஒன்று வந்து புகுந்து கொள்ளும் அவ்விதம் பாம்பு தட்டுப்படாமல் இருந்தது கிடையவே கிடையாது</p><p>திருவையாறு தியாக பிரம்ம ஆராதனையின் செயலராக பல காலம் விருப்பு வெறுப்பு இன்றி சிறப்பாக செயல்பட்டு வந்தார்.இறுதி நிகழ்ச்சி இவருடையது தான் பெரும்பாலும் வயலின் மிருதங்கத்துடன் அமையும் .இதைகண்டும் கேட்டும் களிப்பதற்கு என்றே ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளம் வந்து இறங்கும்.</p><p>தமிழ் நாட்டில் கவர்னர் ஆட்சி செயல் பட்ட போது(1975-1976) கவர்னரின் அட்வைசரி கமிட்டி உறுப்பினராக பணியாற்றினார் .தஞ்சையில் இருந்து முதன் முதல் சோழன் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்ட போது இந்த அடிப்படையில் இவருக்கு அழைப்பிதழ் வந்தது நானும் உடன் சென்று இருக்கிறேன்.</p><p>கண்ணன் குசேலர் வீட்டுக்கும் சென்று வந்ததைபோலத் தம் ரசிகர் எவ்வளவு எளிமையானவராக இருந்தாலும் நட்பின் அடிப்படையில் அவர்கள் வீட்டுக்கு சென்று அவர்களது சுய மரியாதை குறையாத வகையில் அவர்களே அறியாத வகையில் அவர்கட்கு மறைமுகமாக சில உதவிகள் செய்து வருவார். ஜாதகத்தில் இவருக்கு கஜ கேசரி யோகம் , தர்ம கர்மாதிபதி யோகம் போன்றவை உண்டு எனவே தான் இவருக்குப்பிறகும் இவர் பெருமை பேசப்படுகிறது! மேலும் இசை உள்ள அளவும் இசை ரசிகர் இப்பூவுலகில் உள்ள அளவும் திருவெண்காட்டார் அவர்கள் பெருமை பேசப்படும் !</p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-9815675254065772002022-04-12T12:15:00.000+04:002022-04-12T12:15:11.536+04:00நானும் என் எழுத்தும் - அசோகமித்திரன்<p>முன்குறிப்பு : 2001ஆம் ஆண்டு ராஜராஜன் பதிப்பகம் வெளியிட்ட ’அசோகமித்திரன் கட்டுரைகள்’ எனும் நூலிலிருந்து இந்தப் பகுதியைப் பகிர்கிறேன். இது சுருக்கமான வடிவம் போலிருக்கிறது. ‘நானும் என் எழுத்தும்’ என்ற தலைப்பிலேயே அசோகமித்திரனும் பிற தமிழ் எழுத்தாளர்களும் எழுதிய விரிவான உரை, தமிழிணையம் மின்னூலகத்தில் 153 கிலோ எடையுடன் கிடைக்கிறது. (பலமுள்ளவர்கள் <a href=" https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUdk0py&tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE %B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D#book1/" target="_blank">இங்கே</a> க்ளிக் செய்து பதிவிறக்கலாம்.) க.நா.சு , தி. ஜானகிராமன், வில்லியம் ஃபாக்னர், ஜான் அன்வி என்று பல ஆசிரியர்களைப் பற்றியும் அசோகமித்திரன் அவர்கள் எழுதி இருந்தாலும் இந்தப் பகுதியை நான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அந்த ரப்பர் ஸ்டாம்ப் விசயம் :-) எனக்குத் தேவை கொஞ்சம் புன்னகை. அவ்வளவுதான். நன்றி. - AB. </p><p>*</p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmazqMKhSuK5BK0zVOxg1I1k60yDQohqcIs_F8wA3qdtCU_sN_gnzwheglCODHuLy_MOSPdkiPzEdDOStJdaE44ToVTU0K-WxPLcLQpZq_CUna9zRN4UMGXQmNnfRgcH22A65VMGB1hl16GlPsQWpQKi9CxgQtPG59Ju5Xjrk8RlraVuhevsfdIGjbOQ/s315/nanum%20ezuthum%20asoga%20cover%20back%20-%20crop.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="249" data-original-width="315" height="249" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmazqMKhSuK5BK0zVOxg1I1k60yDQohqcIs_F8wA3qdtCU_sN_gnzwheglCODHuLy_MOSPdkiPzEdDOStJdaE44ToVTU0K-WxPLcLQpZq_CUna9zRN4UMGXQmNnfRgcH22A65VMGB1hl16GlPsQWpQKi9CxgQtPG59Ju5Xjrk8RlraVuhevsfdIGjbOQ/s1600/nanum%20ezuthum%20asoga%20cover%20back%20-%20crop.jpg" width="315" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: left;"><b>நானும் என் எழுத்தும் - அசோகமித்திரன்</b></div><p>இது ஆசிரியர் அழைப்பின் மீது எழுதப்படும் பகுதி. பொதுவாகப் பிரபலஸ்தர்களுக்குப் பொருந்திப் போகும் பகுதி. பிரபலமாவதும் தன்னைப் பற்றி விவரித்துக் கொள்வதில் தேர்ச்சியடைவதும் இணைந்து செல்பவை. மூன்று முறை முழுக்கட்டுரை எழுதித் தூக்கிப் போட்டுவிட்டு நான்காவதாக இதை எழுதுகிறேன்.</p><p>சுமார் இருபது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று கூறலாம். அச்சில் பெயர் வந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் போகிறது. அதற்கும் முன்னால் நான் எழுதிய ஒரு, ஒரு மணி நேரரேடியோ நாடகத்திற்கு, நமது அகில இந்திய ரேடியோக்காரர்கள் பரிசு கொடுத்தார்கள். சுமார் நான்கைந்து நாட்கள் உட்கார்ந்து எழுதி போட்டிக்கு அனுப்பித்த அந்த நாடகத்தை, பரிசு முடிவு அறிவிக்கப்பட்ட பின் ஒரு முறை வாசித்துப் பார்த்தேன். உடனே என் கைப்பிரதி, நாடகத்திற்காக நான் எழுதியிருந்த குறிப்புகள் எல்லாவற்றையும் சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தேன். அந்த நாடகத்தை இன்று ஏதாவது போட்டிக்கு மறுபடி அனுப்பினால் அவசியம் பரிசு பெறும்.</p><p>என் கதைகளைப் பொறுத்த மட்டில் அச்சுப்படுத்தும் முடிவுகள் அவ்வளவு சீக்கிரம் எடுக்கப்படவில்லை . ஒவ்வொரு கதையும் சாவகாசமாகப் பத்திரிகைக் காரியாலயங்களுக்குச் சென்று விட்டு வரும். அந்நாளில் அநேகமாக எல்லாப் பத்திரிகைக்காரர்களும் அவர்களுடைய முடிவை, அதாவது பிரசுரிக்க இயலாது என்ற முடிவை, ஒரு ரப்பர் ஸ்டாம்பு கொண்டு கையெழுத்துப் பிரதி மீது முத்திரையடித்துத் திருப்பியனுப்புவார்கள். என்னுடைய கையெழுத்துப் பிரதிகளின் முதல் பக்கத்தில் பல கட்டங்கள் வரைந்து வைத்திருப்பேன். அவற்றில் வெவ்வேறு பத்திரிகைகளுக்கான ரப்பர் - ஸ்டாம்பின் சுற்று வடிவத்தை வரைந்து இந்த இடம் இந்தப் பத்திரிகைக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் அந்த பத்திரிகைக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது' என்று குறிப்பிடவும் செய்திருப்பேன். அப்படியிருந்தும் பத்திரிகைக்காரர்கள் கண்ட கண்ட இடங்களில் முத்திரையடித்துத் திருப்பியனுப்பி விடுவார்கள். ஒரே ஒரு முறை மட்டும் குமுதம் பத்திரிகை ஒழுங்காக நான் வரைந்திருந்த எல்லைக்குள் முத்திரையடித்துத் திருப்பியனுப்பியது.</p><p>இந்தக் கதைகள் பல என்னிடம் தங்கிப் போயின. இந்த ஆண்டு சுதேசமித்திரன் ஆண்டு மலரில் வெளியான 'நம்பிக்கை' 1961 ஆம் ஆண்டில் எழுதிய கதை. ஒரு 'தீபம்' ஆண்டு மலரில் வெளியான 'அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம்' 1956 இல் எழுதப்பட்டது. நான் ஆங்கிலத்தில் எழுதிய கதைகளும் பல என் கைவசம் இருக்கின்றன. சமீபத்தில் இல்லஸ்டிரேட்டட் வீக்லி வெளியிட்ட என் கதை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. இப்போது அந்தக் கதையைத் தேர்ந்தெடுத்த நடுவர் ஒருவர் எழுதியிருந்தார் : 'புதுமையான படைப்பு......'</p><p>இதனால் இப்போது வெளியாவதெல்லாமே என்னுடைய பழங்கதைகள் தான் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. ஆண்டுக்கு மூன்று புதுக்கதைகள் எழுதுகிறேன். உண்மையில் ஓர் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று கதைகளுக்கு மேல் எழுத எனக்கு முடியவில்லை . இந்த 1970 இல் ஐந்தாறு புதுக்கதைகள் 'போட்டோ ' (தீபம் - ஏப்ரல் 1970) 'கல்யாணம் முடிந்தவுடன்' (தினமணி கதிர் - செப்டம்பர் 1970) 'குதுகலம்' (கசடதபற - நவம்பர் 1970).</p><p>என்னை முதன் முதலில் எழுதத் தூண்டிய எழுத்துக்கள் கல்கியுடையதும் சார்லஸ் டிக்கன்சுடையதும் என்று கூறிக் கொள்ள வேண்டும். இருவருக்கும் இலக்கிய உலகில் அவ்வளவு அந்தஸ்து இல்லை. டிக்கன்ஸ் எழுத்தில் மேற் பூச்சான எளிமை. கல்கி எளிதாகவே எழுதினார். தெளிவு, சீரான ஓட்டம், உருவ அமைதி - இவ்வம்சங்களுக்காக க.நா.சு.வின் ‘வாழ்ந்தவர் கெட்டால் ' நாவலைக்கண்டு மிகவும் வியந்திருக்கிறேன்.</p><p>நூல் வடிவத்தில் என்னுடையது ஒரு புத்தகம் ("கரைந்த நிழல்கள்'') வந்திருக்கிறது. ஒரு நண்பர் (இவர் பெயரை வெளியிட எனக்கு அனுமதியில்லை) எடுத்துக் கொள்ளும் முயற்சியால் என் கதைகள் கொண்ட தொகுப்பு வெளிவரவிருக்கிறது. ஜனவரி 1971க்குள் நூறு வாசகர்கள் இப்புத்தகம் வாங்க முன் வந்து ரூ.5/- அசோகமித்திரன், தாமோதர ரெட்டித் தெரு, தியாகராய நகர், சென்னை -17 விலாசத்திற்கு அனுப்புவார்களேயானால், மார்ச் 1971 க்குள் புத்தகப் பிரதிகளைத் தபால் செலவு இலவசமாக அனுப்ப அவர் எண்ணியிருக்கிறார். புத்தகம் சுமார் 200-250 பக்கங்கள் கொண்டதாயிருக்கும். பணம் அனுப்புபவர்களின் பணம் உத்திரவாதம்.</p><p>வேறு இரு தொகுப்பு நூல்களில் என் கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒன்று வாசகர் வட்டத்தின் ‘அறுசுவை'; இன்னொன்று 'நகுலன்' வெளியிட்ட 'குருக்ஷேத்திரம்', 'அறுசுவை' நல்ல தொகுப்பு. சம்பிரதாய கோட்டுக்குள் அடங்கியிருக்கும் வெளியீடாயினும், 'குருக்ஷேத்திரம்' வெளி வந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் நூறு பிரதிகள்தான் விற்றிருக்கின்றன. இந்த நூல் தற்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை உண்மையாக, அழகாக, அறிவுப்பூர்வமாக, பல படைப்பிலக்கியத் துறைகள் மூலமாகப் பிரதிபலிக்கிறது.</p><p>உத்தி மட்டுமே இலக்கியமாகி விடும் என்று நான் எண்ணவில்லை. ஓர் உத்தி கையாளப்பட்டிருக்கிறது என்ற நினைப்பே எழச் செய்யாத உத்திதான் மிகச் சிறந்ததாக நினைக்கிறேன். சொல்ல வேண்டிய பொருள், மனிதனுக்கு வெளியே இருப்பது. இதனால் ஒரு பொருளைப் பற்றி இருவர், அல்லது பலர், எழுதக்கூடும். ஆனால் ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு பொருளைக் காரணமாகக் கொண்டு, அவனுக்கென்ற தனிப்பட்ட வகையில் மனவெழுச்சி அல்லது நெகிழ்ச்சியடைகிறான். இதன் தீவிரம்தான் எழுத்துக்குத் தரமளிக்கிறது என்று நான் நினைக்கிறேன். என் வரையில் என் அனுபவம் எனக்கே சொந்தம். ஆதலால், நான் எழுத நினைத்திருக்கும் கதைகளை வேறு யாராவது எழுதி விடுவார்களோ என்ற பயம் இல்லை.</p><p>மனிதர்கள் நடுவில் இருக்கிறேன். நான் எழுதும் எழுத்தை நான் புரிந்து கொள்ளும் வகையில் புரிந்து கொண்டு வாசிக்க ஒரு வாசகனாவது இருப்பான் என்று தான் நான் எழுதுகிறேன். மனித மனநிலை ஓயாமல் ஊசலாடிக் கொண்டிருப்பது என்பது என் அனுபவம். அதனால், இரு அடுத்தடுத்து வரும் வாக்கியங்கள் கூட அந்த ஊசலாட்டத்தைப் பிரதிபலித்தால்தான், எழுத்து உண்மையானது என்று நான் நினைப்பேன்.</p><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;">என் கதைகளில் அநேகமாக எல்லாமே எனக்குப் பிடித்தவை. 'மறுபடியும்', 'வாழ்விலே ஒரே முறை', 'மஞ்சள் கயிறு' என்ற கதைகள் மிகவும் பிடித்தமானவை. எப்போதோ நிகழப் போவதைப் பற்றி இப்போது என்ன என்று சிலர் அல்லது பலர் கேட்பார்கள். ஆனால், சில நம்பிக்கைளில்தான் ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன.</div><p></p><p>(1971)</p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-43809938493902884342022-03-03T11:08:00.006+04:002022-03-03T11:11:30.837+04:00இந்த அச்சத்தை யார் உருவாக்கியது? - கே. சச்சிதானந்தன் கவிதை<p><span style="background-color: white; font-size: 14px; white-space: pre-wrap;"></span></p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjDOmXLMOSxTIwWveQFk6DO_m-gs0A1rJ_mbFL2X4bkQKs2FF5rkXqy5CF4G26P6Doc90g6kWmyBEU1HpSakQ08MRfVbDE-H0iEvXo7x7KyNhFuliowkBPpoQafTYjI60tlK3DY3WKjrEyVw-0J7V7vFxVBIM0UIfjos1_fqhDY52JE1YVkNkUwXXqgQg=s400" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="320" height="185" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjDOmXLMOSxTIwWveQFk6DO_m-gs0A1rJ_mbFL2X4bkQKs2FF5rkXqy5CF4G26P6Doc90g6kWmyBEU1HpSakQ08MRfVbDE-H0iEvXo7x7KyNhFuliowkBPpoQafTYjI60tlK3DY3WKjrEyVw-0J7V7vFxVBIM0UIfjos1_fqhDY52JE1YVkNkUwXXqgQg=w148-h185" width="148" /></a></div><p></p><p><span face=""Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif" style="background-color: white; color: #050505; font-size: 14px; white-space: pre-wrap;">கவிதை : கே. சச்சிதானந்தன் </span></p><p><span face=""Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif" style="background-color: white; color: #050505; font-size: 14px; white-space: pre-wrap;">(</span><span face=""Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif" style="background-color: white; color: #050505; font-size: 14px; white-space: pre-wrap;">தமிழில் இரவிக்குமார் எம்.பி)</span></p><p><span style="background-color: white; font-size: 14px; white-space: pre-wrap;"><span face="Segoe UI Historic, Segoe UI, Helvetica, Arial, sans-serif" style="color: #050505;">"அதிர்ஷ்டம் இல்லாதவர்களைக் கொல்வதற்காக
தகுதி இல்லாதவர்களால் வழிநடத்தப்பட்டு
நன்றி இல்லாதவர்களின் நலனுக்காக
விருப்பமில்லாமல் இறந்து போனவர்கள் நாங்கள்"
- வியட்நாம் யுத்தத்தில் இறந்துபோன அமெரிக்க வீரர் ஒருவரின் கல்லறையில் எழுதப்பட்டிருந்த வாசகம்
எனது கைகளில் ரத்தக் கறை படிந்திருக்கிறது
எதிரியின் ரத்தம் என்கிறது நாடு
அது மனிதனின் ரத்தம் என்கிறேன் நான்
அவன் வீழ்ந்தது இப்போதும் எனது பார்வையை விரட்டிக் கொண்டே இருக்கிறது
நான் அவனைத் தழுவிக் கொள்ள விரும்பினேன்
அவனது குடும்பத்தைப் பற்றி குழந்தைகளைப் பற்றி கேட்க விரும்பினேன்
ஆனால் அவனைப் பற்றி எனக்குள் பயம்
அதுபோலவே என்னைப்பற்றி அவனுக்குள்ளும் பயம்
இந்த அச்சத்தை யார் உருவாக்கியது?
எல்லைக்கோடுகளை உருவாக்கியவர்கள்.
அவர்களே நமது மெய்யான எதிரிகள்.
நான் அவனது உறவினர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்
குழந்தைகளின் முன்னால் மண்டியிடுகிறேன்
அவனைச் சுடுவதற்கு முன் அவனது கண்களைப் பார்த்தேன்
அதில் குரூரம் தென்பட்டிருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும்
நான் பார்த்தது தோழமை, துயரம், கருணை
அவன் விழுந்து கிடந்த போது
மார்பின் மேல் கைகளை வைத்துக் கொண்டு எதை நினைவு கூர்ந்திருப்பான்?
பள்ளிக்குச் செல்லும் வழியில் பறித்துத் தின்ற புளியம் பழங்களையா?
இளமைப் பருவத்தில் நண்பர்களோடு சேர்ந்து பாடிய பாடலையா?
தனது அன்புக்குரியவளுக்கு எழுதிய கடைசி கடிதத்தையா?
கிராமத்தின் குறுகிய சந்தில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் தாயின் மங்கிய விழிகளையா?
கோதுமை வயலில் வீசிய குளிர்ந்த காற்றையா?
வேனிலிருந்து இறக்கப்படும் தனது சவப்பெட்டியைப் பார்த்துக் கதறும் தனது சகோதரியின் அலறலையா?
வீரர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது. பாலைவனத்தில் நடக்கும்போது முளைவிடும் போதே கேள்விகளெல்லாம் கருகிப் போய் விடும்.
அமைதியாக இருக்கும் ஆடுகளின் செவியில் மேய்ப்பவனின் கட்டளைகள் மட்டுமே கேட்கும்.
கழுத்தை அறுக்கும் போது காளையின் வேதனையும் கவலையும்தான் வெளிப்படும்.
வீரம் செறிந்த பாடல்களுக்கு விடை கொடுங்கள்
எனக்காக எந்த சொர்க்கமும் காத்திருக்கவில்லை.
நரகத்தில் ஒரே கோப்பையில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து நஞ்சை அருந்துவோம்
ஒரே முள் படுக்கையில் படுத்துறங்குவோம்
எல்லைகளே இல்லாத உலகம் குறித்து கைவரப் பெறாத கனவைப் பகிர்ந்தபடி
ஒன்றாகச் சேர்ந்து அழுவோம்....
போர் வீரன் ஒருவன் தனக்குள் பேசிக்கொண்டது.</span></span></p><p><span face=""Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif" style="background-color: white; color: #050505; font-size: 14px; white-space: pre-wrap;">*</span></p><p><span face=""Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif" style="background-color: white; color: #050505; font-size: 14px; white-space: pre-wrap;">Thanks to </span><a href="https://www.facebook.com/permalink.php?story_fbid=3138101193139822&id=100008199160657" style="background-color: white; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; white-space: pre-wrap;" target="_blank">Kanagu Kanagraj</a><span face=""Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif" style="background-color: white; color: #050505; font-size: 14px; white-space: pre-wrap;"> & Sadik</span></p><p><span face=""Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif" style="background-color: white; color: #050505; font-size: 14px; white-space: pre-wrap;">*</span></p><p><span face=""Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif" style="background-color: white; color: #050505; font-size: 14px; white-space: pre-wrap;">தொடர்புடைய பதிவு : <a href="https://amruthamagazine.com/2021/12/25/92/">கே. சச்சிதானந்தன் நேர்காணல்</a>
<br /></span></p><p><span style="background-color: white; font-size: 14px; white-space: pre-wrap;"><span face="Segoe UI Historic, Segoe UI, Helvetica, Arial, sans-serif" style="color: #050505;"><br /></span></span></p><p><span face=""Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif" style="background-color: white; color: #050505; font-size: 14px; white-space: pre-wrap;"><br /></span></p><p><span face=""Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif" style="background-color: white; color: #050505; font-size: 14px; white-space: pre-wrap;"><br /></span></p>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-25144112123791240502022-01-24T11:57:00.002+04:002022-01-24T11:57:46.208+04:00திக் நியத் ஹான் <p>நண்பர் கார்த்திக் ஃபேஸ்புக்கில் எழுதிய அஞ்சலி...</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh0Zlno1y0bkRnp7uIa6YR_TJcsDHyE5uP04C1ICIl9gYzTElyBdUXMlhO-JPPloEOMefbhvaxsTEUaf9IkbNNESUV1BiIjfet7ooLnRna-w88YDSmWCa-TGOzcVbe2-LEhPot2TfdQ-veMFgs1NEqdYq6MvxAaOPOUmP_X5c_RBfcfCgzODwTzaVD61A=s1002" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="752" data-original-width="1002" height="346" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh0Zlno1y0bkRnp7uIa6YR_TJcsDHyE5uP04C1ICIl9gYzTElyBdUXMlhO-JPPloEOMefbhvaxsTEUaf9IkbNNESUV1BiIjfet7ooLnRna-w88YDSmWCa-TGOzcVbe2-LEhPot2TfdQ-veMFgs1NEqdYq6MvxAaOPOUmP_X5c_RBfcfCgzODwTzaVD61A=w461-h346" width="461" /></a></div><p>இன்று காலை (22 Jan 2022) கொஞ்சம் சோம்பேறித்தனமாகவே விடிந்தது . விடுமுறை முடிந்தும் முடியாதது போன்ற ஒரு மனநிலை . ஜென் மாஸ்டர் திக் நியத் ஹான் சமாதி அடைந்த செய்தி அறிந்ததும் மனம் முற்றிலும் வேறோரு உணர்வு நிலைக்கு சென்று விட்டது. இதை வருத்தம் என்று சொல்வதற்கில்லை மீண்டும் அவரை அணுக்கமாக நினைவுகூறும் தருணமாகவே இதை உணர்ந்தேன் </p><p>திக் நியத் ஹான் , உலகம் முழுதும் பரவலாக அறியப்பட்ட ஜென் மாஸ்டர் , வியட்நாமில் பிறந்தவர் . இவரை நீங்கள் நேரடியாக கேள்விப்பட்டிருக்காவிட்டாலும் இவரின் எளிமையும் தெளிவும் பொதிந்த வாசகங்களை எங்காவது பார்க்கவோ கேட்கவோ செய்திருக்கலாம் . ஆன்மீக தளத்தில் மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் சமூகத்தில் அமைதி போக்கிற்கான தேவையை முன்வைத்து தொடர்ந்து பேசி வந்தவர்.</p><p>1926 ல் பிறந்த திக் நியத் ஹான் , பதினாறு வயதிலேயே பெளத்த மடலாயம் ஒன்றில் சேர்ந்து துறவறம் பெற்றுக்கொள்கிறார் .அவரின் பெயரில் உள்ள திக் (Thich) என்பது புத்தரின் குலத்தில் வந்தவர் என்பதை சுட்டும் வார்த்தை . 1960 களில் வியட்நாம் போர் உச்சத்தில் இருந்த சமயம் இவரின் போருக்கு எதிரான கருத்துக்களினால் வியட்நாம் அரசு இவரை மீண்டும் வியட்நாமுக்குள் நுழைய அனுமதி மறுத்தது ( அப்போது பிரான்சில் இருந்தார் ) . </p><p>அதன் பிறகான தனது பெரும்பாலான நாட்களை அமெரிக்காவிலும் பிரான்சிலும் கழித்தார் . அமெரிக்க கருப்பின தலைவரான மார்ட்டின் லூதத் கிங் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவில் எழுந்த எதிர்ப்பின் ஆரம்பப் புள்ளி திக் நியத் ஹான் அவர்களில் இருந்து ஆரம்பித்தது எனலாம் , அதை மார்ட்டின் லூதர் கிங் மேலும் முன்னெடுத்துச் சென்றார். திக் நியத் ஹான் இறுதிவரை தொடர்ந்து எல்லா விதமான போர்களுக்கும் , வன்முறைக்கும் எதிராகவே பேசிவந்திருக்கிறார்</p><p>திக் நியத் ஹான் அவர்கள் எனக்கு முதலில் அவரின் புகைப்படத்தின் மூலமே அறிமுகமானார் . சில வருடங்களுக்கு என் மனைவி பணி நிமித்தமாக கலந்துகொண்டிருந்த கான்பிரன்ஸ் ஒன்றில் மனநலம் குறித்த ஒரு விவாத்தத்தில் 'இக்கணத்தில் இருத்தல்' (minufulness ) என்ற அணுகுமுறையை விளக்கும் விதமாக திக் நியத் ஹான் அவர்களின் சிந்தனைகளும் புத்தகங்களும் முன் வைத்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.</p><p>கருத்தரங்கில் இருந்து அவர் வாங்கி வந்த புத்தகத்தில் இருந்த திக் நியத் ஹான் அவர்களின் புகைப்படத்தை பார்த்ததுமே எனக்கு இயல்பாகவே ஒரு ஈர்ப்பு உருவாகியது .அவர் முகத்தின் தெரிந்தது ஒரு புன்னகை என்று கூட சொல்லிவிட முடியாது .அதை ஒரு நிறைவு என்று வேண்டுமானால் சொல்லலாம், மேலதிகமாக வேறெதுவும் தேவையிருக்காத ஒரு பூரணம். </p><p>அதன் பின் அவரை வாசிக்க ஆரம்பித்த போது அவரின் இருப்புக்கும் அவர் சொல்வதற்கும் இடையே வித்தியாசமே இல்லை என்பதை உணர முடிந்தது . பின்னர் அவரின் உரைகளையும் கேட்டேன் - அந்த ஒருமை உணர்வு முழுமை அடைந்தது . சில விஷயங்களை அறிதல்களாக ஆலோசனைகளாக, வழிகாட்டல்களாக ஒருவர் முன்வைப்பது வேறு ஆனால் அந்த தன்மையில் இருந்து கொண்டே அதை ஒருவர் அதைச் சொல்வது என்பது நம்மை அந்தரங்கமாகத் தொடுவது. </p><p>மகிழ்ச்சி என்பது எதிலிருந்தோ ,எதன் மூலமாகவோ , எதை அடைந்தோ பெறும் ஒன்றல்ல . மகிழ்ச்சி அல்லது ஆனந்தத்தில் (joy ) இருந்து தான் அனைத்தும் துவங்குகிறது . Mindfulness practice எனப்படும் 'இக்கணத்தில் இருத்தல்' என்பது எதனோடும் பிணைத்துக்கொள்ளாத , எதையும் நிபந்தனையாக்கிக்கொள்ளாத "அடிப்படையான மகிழ்ந்திருக்கும் நிலையை" அடைவதே என்கிறார் . </p><p>மனதும் உடம்பும் இக்கணத்தில் இங்கு இருக்கும்போது, அதை நாம் கவனிக்கும் போது , நமக்குள் நாம் குவியும் போது, வாழ்வெனும் மலர் இயல்பாகவே நமக்குள் மலர ஆரம்பிக்கிறது . உயிர்த்திருத்தல் என்பதே ஒரு அற்புதமாகிறது . மகிழ்ந்திருக்க அல்லது ஆனந்தித்திருக்க தேவையான அத்தனை சாத்தியங்களும் அந்தந்த கணத்திலேயே பொதிந்துள்ளது என்பதை அறியும் தருணமது .</p><p>இக்கணம் என்பது நிறையும் போது , நிறைந்து ததும்பும்போது , மனதுக்கு எங்கோ , எதுவோ என்று பரபரக்கும் தேவை எழுவதில்லை. கடந்த காலம் குறித்த ஏக்கங்களோ, எதிர்காலம் குறித்த பயங்களோ , நிகழ்காலம் குறித்த போதாமைகளோ நம்முள் படர்ந்து நம்மை திணற அடிப்பதில்லை . இப்படி குவிந்த ஒரு புள்ளியில் உருவாகும் தெளிவு ஞானத்தின் முதற்படி ஆகிறது .</p><p>இந்த தெளிவு உருவாக்கும் மனவிரிவு கொண்டே நாம் மற்றவர்களையும் புரிந்துகொள்ளவும் அன்பு செய்யவும் முடியும் என்கிறார் . அதிலிருந்தே பிறர் மீதான முற்றான compassion பிறக்கும் என்கிறார் . நம்மை நாம் அன்பு செய்யாமல் பிறர் மீது அன்பு செலுத்த முடியாது .அந்த புள்ளியிலேயே நீ அல்லது நான் என்றும் பிரிவும் மறைய ஆரம்பிக்கிறது. இந்த இடத்தில் நான் வள்ளலாரையும் நினைவுறுத்திக்கொண்டேன் .இந்த மனநிலை தான் 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று சொல்லும் இல்லையா ?</p><p>திக் நியத் ஹான் அடிக்கடி சொல்லும் வார்த்தை ஒன்று உண்டு 'Bring your mind home, to your body ' என்று .இதுவே ஆரம்பம் , இதுவே பயிற்சி , இங்கிருந்தே அனைத்தும் ஆரம்பிக்கிறது.</p><p>ஞானியர் மரணம் என்றுமே வருத்தம் அளிப்பதல்ல . அவர்களுடனான நம் தொடர்பு என்றைக்குமானது (eternal ). அவர்கள் உணர்த்தும் விஷயமும் என்றைக்குமானவை. மரணம் என்ற சுழற்சியை வெகு இயல்பாக கடந்து செல்லும் வாழ்க்கையை அவர்கள் முன்னரே அமைத்துக்கொண்டு விடுகிறார்கள் . இந்த தருணம் நாம் அவர்களையும் , அவர்கள் அளித்துச்சென்ற ஞானத்தையும் நெருங்கி உணர இன்னுமொரு வாய்ப்பு. </p><p>*</p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhvi-0qi8EDXGxU3DrKn9cxyg159dcBIQKpDG2Je1M9FbrMuLFl68mQtLIy9eCxzGJMjXb_JW51O5JbCYKcoQk6jBh4CHL2PLXrxZrhvTyBMiXyK3QN9BNX0mynAlLN2YtpCOPZ5YqnJbgTY7FsN8FZ5V4iehdUto2t4OrRYc6BEt1AioHchIF-34iAlA=s320" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="320" data-original-width="320" height="134" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhvi-0qi8EDXGxU3DrKn9cxyg159dcBIQKpDG2Je1M9FbrMuLFl68mQtLIy9eCxzGJMjXb_JW51O5JbCYKcoQk6jBh4CHL2PLXrxZrhvTyBMiXyK3QN9BNX0mynAlLN2YtpCOPZ5YqnJbgTY7FsN8FZ5V4iehdUto2t4OrRYc6BEt1AioHchIF-34iAlA=w134-h134" width="134" /></a></div><br /><p>நன்றி : <a href="https://www.facebook.com/photo/?fbid=479705790381369&set=a.111917700493515" target="_blank">கார்த்திக்</a></p>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-3300557019503396242022-01-13T10:27:00.003+04:002022-01-13T10:31:09.822+04:00கலைந்து போன கனவு ராஜ்யம் – சிதம்பரப்பிள்ளை சிவகுமார் சிறுகதை<p>Please Click the Image to read the Story..<br /></p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://abedheen.wordpress.com/2011/11/08/sivakumar-kanaiyazhi/" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="576" data-original-width="768" height="356" src="https://abedheen.files.wordpress.com/2011/11/sivakumar-01.jpg" width="475" /></a></div><br />Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-53965911779939518142022-01-10T13:38:00.002+04:002022-01-10T13:43:25.963+04:00மதுர அனுபவம் - ஆசிப் மீரான்<p><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 14px; white-space: pre-wrap;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg28eSIg5sLB0bIaqbIkUWWMF_SuklWVjqQjJWSptgkSWG-gYmPTdO3IgnbVtDVzochzpLMxRhOTVPKAba0SwRYjZcDtCRzi78E9FSO1z7XICY5P0hycpouBKQyAPxPxskOkVgCOTG_GbjErIh_7C2QMMx0Qc6DRQPi40OQlCAMKn3GIjPuUstegVvbXA=s1076" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="600" data-original-width="1076" height="178" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEg28eSIg5sLB0bIaqbIkUWWMF_SuklWVjqQjJWSptgkSWG-gYmPTdO3IgnbVtDVzochzpLMxRhOTVPKAba0SwRYjZcDtCRzi78E9FSO1z7XICY5P0hycpouBKQyAPxPxskOkVgCOTG_GbjErIh_7C2QMMx0Qc6DRQPi40OQlCAMKn3GIjPuUstegVvbXA=s320" width="320" /></a></div>வலி மிகுந்த வாழ்க்கை யாருக்குத்தான் இல்லை? ஆனாலும் வலிகளை இல்லாமல் ஆகச் செய்யும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை இல்லாத மனிதர்கள்தான் அந்த நம்பிக்கையை உணராமல் தங்களையும் தங்களது வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள் . ஆனால் எல்லா வலிகளையும் குணப்படுத்தும் அருமருந்தாக அன்பு இருக்கிறது என்று நம்புகிறவர்கள் தங்கள் வாழ்க்கையில் எத்தனை சோதனைகளைச் சந்திக்கின்ற போதும் அவற்றை நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லில் கடந்து போய்விடவே விரும்புகிறார்கள்<p></p><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">எத்தனை வலிகள் இருந்தபோதும் அன்பிலும் அது தரும் நம்பிக்கையிலுமே வாழ்க்கையின் மதுரம் இருக்கிறது என்பதுதான் மதுரம் திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை</div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">மிகச் சாதாரணமான இந்தக் கதையை தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையின் மூலமாக அன்றாடம் நாம் சந்திக்கின்ற எளிய மனிதர்களின் சின்னச் சின்ன உணர்வுகளைக் காட்சிப் படுத்துவதன் மூலமாக ஓர் அபாரமான அனுபவத்திற்குத் தயார்படுத்தி இருக்கிறார்கள் இந்தப் படக்குழுவினர்.</div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">மருத்துவமனையில் நோயாளிகளின் துணைக்காக வருகின்றவர்கள் தங்குவதற்காக அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய கூடம் தான் இந்தப்படத்தின் களன்.</div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">இந்தக் கூடத்தில் தங்கியிருப்பவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் அழைத்து வந்த நோயாளிகள் குணம் பெற்று தங்களோடு வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையோடும், "அவர்களுக்குச் சரியாகிவிட வேண்டுமே" என்ற பதைபதைப்போடும் கலவை உணர்ச்சியோடு இருப்பார்கள். </div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">இருந்தபோதிலும் அந்த உணர்வுகளிலிருந்து வெளியாகி, பிற நோயாளிகளிக்குத் துணையாக வந்து தங்கி இருப்பவர்களோடு தங்களது கதைகளைப் பகிர்ந்து கொண்டும், இணக்கமும் பிணக்கமும் கொண்டும், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அடுத்தவருக்கு ஆறுதலாக முனைந்து, அதன்மூலம் நெருக்கமாகி, புதிய நட்புகள் தழைக்கும் காட்சிகளின் வழியாக எல்லா மனிதர்களுக்குள்ளும் இயல்பாக இருக்கும் அன்பை, அடுத்தவர்கள் மீதான கரிசனையை மெல்லிய இழையாய் படம் முழுதும் உலவ விட்டிருக்கிறார்கள்.</div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">உணர்ச்சிகரமாகக் கதை சொல்லும் உத்திதான் என்றாலும் "மெலோ டிராமா" வாக மாற்றி அழுது புரளாமல் இயல்பான சம்பவங்களோடு காட்சிக்குக் காட்சி ஒன்ற வைத்திருக்கிறார்கள்.</div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">கப்பலில் வேலைக்குச் சென்று விட்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் சாபுவுக்கும், சாபுவிற்கு இணக்கமான நண்பரின் பிரியாணி கடைக்கு அப்பளம் விற்பனைக்கு வரும் சித்ராவுக்குமிடை யே உருவாகும் அந்தக் காதல்தான் படத்தின் அடிநாதம். </div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">பெரிய ஆர்ப்பாட்டங்களில்லாத, சிறிய கடையின் அடுக்களையில், பிரியாணியில் தொடங்கும் பெண்ணுடல் சார்ந்த கவர்ச்சிகளைத் தவிர்த்து காட்சிப்படுத்தப்படும் அந்தக் காதல், சாரல் மழையில் நனைந்தபின் உடல் மெல்ல நடுங்கும் நிலையில் ஆவி பறக்கக் குடிக்கும் சூடான தேநீரின் இதத்தோடு மதுரமாய் இனிக்கிறது. ஜோஜு ஜார்ஜும் ஸ்ருதியும் நல்ல ஜோடியும் கூட. </div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">95லேயே சின்ன வேடத்தில் அறிமுகமாகி, மம்மூக்கா, லாலேட்டன், திலீப் போன்றவர்களுடன் நடி ல்த்திருந் தாலும் கூட ஜோஜுவை என்னளவில் அடையாளப்படுத்திய படம் 1983. 'கிரிக்கெட் கோட்சாக' அந்தப் பாத்திரத்தை அவ்வளவு அழகாகக் கையாண்டிருந்தார். அதன் பின்னர் 'லுக்கா சுப்பி' உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திரிந்தாலும் 'ஞான் மேரிக்குட்டி' யில் சப்-இன்ஸ்பெக்டராக கலக்கியிருந்தார். 'ஜோஸஃப்' வந்தபோது முழுப்படத்தையும் தோளில் தாங்கும் அளவிற்கு வளர்ந்தபோதிலும் கூட கதாநாயக வேடம் மட்டுமே செய்வேன் என்ற பிடிவாதமேதும் இல்லாமல் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். 'ஜூன்', 'பொரிஞ்ஞு மரியம் ஜோஸ்' படங்களுக்குப் பின் 'ஹலால் லவ் ஸ்டோரி', 'நாயாட்டு', 'மாலிக்' என்று கவனிக்கத்தகுந்த கதாபாத்திரங்களில் மின்னிய பிறகே 'மதுரம்' வாய்த்திருக்கிறது ஜோஜுவுக்கு. தயாரிப்பாளராகவும் களமிறங்கியதோடு முழுப்படத்தையும் மிகையில்லாத ஆற்றொழுக்கான உடல்மொழியோடு தாங்கியிருக்கிறார் ஜோஜு. மனைவியை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துப் போகச் சொல்லும் காட்சிகளே போதும் ஜோஜு எத்தனை பண்பட்ட நடிகனென்பதைப் பறைசாற்ற.</div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">குஜராத்திப் பெண் சித்ராவாக ஸ்ருதி ராமச்சந்திரன் கனகச்சிதம். சென்னையைச் சேர்ந்தவராம். மலையாளத்தின் இனி நிறைய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். </div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">நாற்பதாண்டு கால மனைவியுடனான காதல் வாழ்க்கையை எப்போதும் சிலாகித்துக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் இந்திரன் வாழ்ந்திருக்கிறார். "உனக்கு வருத்தமாக இல்லாவிட்டால் ஒன்று சொல்லவா?" என்று எல்லாரிடமும் அவர் கேட்கும் அந்த வசனமுமே கூட ஓர் உதாரணம். ஆரம்பத்தில் நகைச்சுவைபோலத் தோன்றும் இதே வசனத்தை மனைவி குணமாகி வீடு திரும்ப யத்தனிக்கும் வேளையில் ஜோஜு ஜார்ஜிடம் அவர் சொல்லும்போது அந்த வசனத்தின் தொனி வேறாக மாறி நிற்கும்.</div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">படத்தில் சில கதாபாத்திரங்களின் பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றனவே தவிர அவர்கள் காட்சியில் வருவதில்லை. என்றாலும் ரவியின் மனைவி சுலேகாவும், தாஜினுடைய தகப்பனாரும், நீது என்ற பெண்ணின் அக்காவும், கெவினுடைய அம்மாவும் நாம் காணாமலேயே நமக்கு அறிமுகமானவர்களாகிவிடுகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் இன்னும் ஒரு சுவாரசியம்.</div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">படத்தின் காட்சிச் சட்டங்களை அழகுறப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜிதின் ஸ்டாலினிஸ்லாஸ். ஜோஜுவும் ஸ்ருதியும் காதலைப் பகிர்ந்து கொள்ளும்போது பின்னணி மழையில் அந்த அழுக்கான அடுக்களையும் கூட ஒளிப்பதிவின் மிகைவால் மின்னுவதோர் உதாரணம் மட்டும்.</div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">மலையாளப் படங்களுக்கேயுரிய மெதுவான தொடக்கமும், கதாபாத்திரங்களுக்கான அறிமுகமும் இருந்தாலும் சற்றும் சலிப்படைய வைக்காத, மனித உணர்வுகளின் எல்லா அம்சங்களையும் தொட்டுச் செல்கிற அபாரமான திரைக்கதை.</div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">ஆஷிக் அமீர், ஃபாஹிம் ஸஃபர் (தாஜ் என்ற வளைகுடாவாசி கதாபாத்திரத்திலும் இவர்தான் நடித்திருக்கிறார்) இருவருடைய பங்களிப்பில் மிளிர்கிறது. </div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">எந்தப் பூச்சுகளுமின்றி, படம் பார்க்கிறவர்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் முடிவோடு படத்தை இயக்கி, அதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் அஹம்மது கபீர். 'ஜூன்' என்ற முதல் படத்திலேயே நம்பிக்கை விதைத்த இயக்குநர் இவர். </div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">சொல்ல மறந்து விட்டேனே?! படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு மதுரம் கூட்டவே செய்திருக்கின்றன. இசை அமைப்பாளர் ஷிஹாம் அப்துல் வஹாபுக்கு <span style="animation-name: none; font-family: inherit; transition-property: none;"><span class="l9j0dhe7" style="animation-name: none; font-family: inherit; position: relative; transition-property: none;"><div class="oajrlxb2 g5ia77u1 qu0x051f esr5mh6w e9989ue4 r7d6kgcz rq0escxv nhd2j8a9 nc684nl6 p7hjln8o kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x jb3vyjys rz4wbd8a qt6c0cv9 a8nywdso i1ao9s8h esuyzwwr f1sip0of lzcic4wl" role="button" style="-webkit-tap-highlight-color: transparent; animation-name: none; background-color: transparent; border-color: initial; border-style: initial; border-width: 0px; box-sizing: border-box; cursor: pointer; display: inline; font-family: inherit; list-style: none; margin: 0px; outline: none; padding: 0px; text-align: inherit; touch-action: manipulation; transition-property: none;" tabindex="0"><span style="animation-name: none; color: #f1765e; font-family: inherit; font-weight: bold; transition-property: none;">வாழ்த்துகள்</span></div><div class="n00je7tq arfg74bv qs9ysxi8 k77z8yql i09qtzwb n7fi1qx3 b5wmifdl hzruof5a pmk7jnqg j9ispegn kr520xx4 c5ndavph art1omkt ot9fgl3s" data-visualcompletion="ignore" style="animation-name: none; border-radius: 4px; font-family: inherit; inset: -2px -4px; opacity: 0; pointer-events: none; position: absolute; transition-duration: var(--fds-duration-extra-extra-short-out); transition-property: none; transition-timing-function: var(--fds-animation-fade-out);"></div></span></span>!</div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">சினிமா 'ஹராம்' என்று இங்கே சிலர் கதறிக் கொண்டிருக்கும் நிலையில் மலையாள சினிமா இளம் இஸ்லாமியர்களின் கலைப் படைப்புகளோடு புதிய பாய்ச்சல் காணத் தொடங்கியிருப்பது மேலும் நம்பிக்கையளிக்கிறது. </div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">மனிதாபிமானமும், அன்பும், நம்பிக்கையும் இருந்தால் வாழ்க்கையை எதிர்கொள்வதில் எந்த அகச்சிக்கலும் இருக்காதென்பதை விழிகளை நனைத்துச் சொன்னாலும்.....</div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="animation-name: none; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;"> "மதுரம்" நிச்சயம் இனிப்பான அனுபவம்தான்.</div><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;"><br /></div><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">*</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://2.bp.blogspot.com/-UExnRVngpJ4/Wflg05PHhMI/AAAAAAAAkrc/B6QOKvUEoGAl6jo79ml1wmzfwpdBAROIgCLcBGAs/s441/asifmeeran1.JPG" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="441" data-original-width="440" height="141" src="https://2.bp.blogspot.com/-UExnRVngpJ4/Wflg05PHhMI/AAAAAAAAkrc/B6QOKvUEoGAl6jo79ml1wmzfwpdBAROIgCLcBGAs/w140-h141/asifmeeran1.JPG" width="140" /></a></div><br /><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;"><br /></div><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;"><br /></div><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;"><br /></div><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;"><br /></div><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;"><br /></div><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;"><br /></div><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;"><br /></div><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;"><br /></div><div dir="auto" style="animation-name: none; font-family: inherit; transition-property: none;">நன்றி : <a href="https://www.facebook.com/asifmeeran/posts/10220411515094645" target="_blank">ஆசிப் மீரான்</a></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-65279988172638476162021-12-20T13:00:00.001+04:002021-12-20T13:00:00.289+04:00பாரதி கிருஷ்ணகுமார் உரை<p>ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை நடத்திய கவிஞர் திருலோக சீதாராம் நூற்றாண்டு விழாவில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் உரை.<br />Thanks : Shruti TV<br />*<br /><br /></p>
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/ByXK7fFdeVI" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3538237327464454447.post-67606901049417590382021-12-16T10:58:00.003+04:002021-12-16T11:07:08.801+04:00சாபங்களின் மோகனம் - கென்<p>கென்’ன் கவிதைத் தொகுப்பு. (எச்சரிக்கை : ஆசிப்மீரான் முன்னுரையும் உண்டு!). Click 'pop-out' to Download.<br />*</p><p> </p>
<iframe allow="autoplay" height="480" src="https://drive.google.com/file/d/1L29gc97woSWhosi7LpbXkYl5CJwR2oYo/preview" width="640"></iframe>Unknownnoreply@blogger.com0