Tuesday, June 18, 2019

பயணங்கள் - ஷாஜஹான்

2015இல் ஃபேஸ்புக்கில் ஷாஜஹான் எழுதியது. இன்று மீண்டும் பகிர்ந்திருக்கிறார். அவர் சொல்வது போல என் மனதுக்கும் நெருக்கமான வரிகள். அதுவும் அந்த மூச்சு... அருமை பாய். - AB
*


பயணங்கள்

ஒரு பயணம் நட்புகளையும் உறவுகளையும் வலுவாக்கக்கூடும். சில நட்புகளையும் உறவுகளையும் விலக்கிவிடக்கூடும்.

சில இறப்புகளையும், சில விபத்துகளையும், சில இணைப்புகளையும் சில பிறப்புகளையும் அறிமுகம் செய்யக்கூடும்.

ரயிலில் ஏறும்போது உங்களோடு முட்டி மோதிய அதே நபர் பயணத்தின் இடையில் இட்டிலியோ பிஸ்கட்டோ உங்களோடு பகிரக்கூடும்.

அறிமுகமில்லாத ஊரில் வழிகேட்டபோது நிதானமாக உங்களுக்கு வழிகாட்டிய நபர், பேருந்தில் உங்களுக்கு அமர்வதற்கு இடம்தர மனமின்றி சற்றே அசைந்து கொடுத்த அதேநபராக இருக்கக்கூடும்.

பேருந்து நிறுத்தத்தில் பொம்மை ஸ்டிக்கர் பட்டையை விற்றுக்கொண்டு வந்த சிறுமியிடம் உங்கள் மகளின் ஜாடை இருக்கக்கூடும்.

ஊர்க் குப்பைகளை எல்லாம் சாக்குப்பைக்குள் அடக்கிக்கொண்டு சடைமுடியுடன் திரியும் பைத்தியம் உங்கள் ஊரில் திரியும் பைத்தியத்தை நினைவூட்டக்கூடும்.

சில்லறை தராததற்காகக் கடிந்து முகம் கோணிய அதே கண்டக்டர்தான் உங்கள் பெட்டிகளை இறக்குவதில் உதவியவராக இருக்கக்கூடும்.

முன்னிருக்கையில் அமர்ந்திருப்பவரின் தலைமுடி பாணி உங்களுக்கு அறிமுகமான எவரையோ நினைவூட்டி அடிக்கடி அவரைப் பார்க்கச்செய்யக்கூடும்.

சன்னல்வழி நுழைந்து முகத்தில் படபடவென அறையும் காற்று முன்னர் என்றோ நீங்கள் வெளிவிட்ட மூச்சுக் காற்றாகவும் இருக்கக்கூடும்.

வாசிக்க எடுத்துச்சென்ற புத்தகம் சில பக்கங்கள்கூடப் புரட்டப்படாதிருக்கக்கூடும், பார்க்க எண்ணிய திரைப்படம் தவறிப்போகக்கூடும்.

எல்லாப் பேருந்துகளும் நிரம்பி வழிகிறதே, இத்தனை ஜனங்களும் எங்கேதான் போவார்களோ என உங்கள் மனதில் எழுந்த கேள்வியே மற்றவர்களின் மனதிலும் இருக்கக்கூடும்.

சிலருக்கு பயணங்களின் நோக்கம் இலக்கை அடைவதாக இருக்கவும், வேறு சிலருக்கு பயணங்களே இலக்காகவும் இருக்கக்கூடும்.

*

நன்றி : ‘புதியவன்’ ஷாஜஹான் | http://www.facebook.com/shahjahanr


Sunday, June 9, 2019

Music : Padayatra - Job Kurian

Vocals : Job Kurian, Harish Sivaramakrishnan
*

*
Thanks : Mathrubhumi Kappa TV

Saturday, June 1, 2019

அபியின் கவிதை (கவனம்: ஆங்கிலம்!)

சகோதரர் ஆசிஃப் மீரானின் மகன் அபி (அப்துல் ஜெப்பார்) எங்கள் செல்லப்பிள்ளையும் கூட. எதிர்பாராத விபத்தில் சிக்கிக்கொண்ட அவன் நலமுடன் மீண்டுவர நாளும் எங்களின் பிரார்த்தனைகள் உண்டு.

அவன் எழுதிய ஆங்கிலக் கவிதையை ஆசிப் நேற்று அனுப்பினார்.

'அருமையா இருக்கு. தமிழில் எழுதினால் கொஞ்சம் எனக்குப் புரியும்' என்றேன்.

'அல்ஹம்துலில்லாஹ்!! எழுத மாட்டாண்ணே!!'

'அப்பாடா!'

*

தன்னம்பிக்கையும் பாசமும் பொங்கும் அந்தக் கவிதை இது :


The Start


Some nights, I stay up late and wonder,
Of a different life instead of this blunder.
A moment was all it took for this mishap,
It happened just as quickly as saying ASAP.

The last vision I saw, slowly became blurry,
I woke up to flashes of light, all quite swirly.
I kept hearing people talking, but in a distorted sound,
Though, despite my efforts, I didn't know what was happening all around.

I open my eyes, slowly, after God knows when,
To see a man standing beside me, taking notes with a pen.
It didn't dawn on me, what had taken place within that period due to the stress,
I felt so tired and fatigued that all I could do at the moment was rest.

I awoke to my father right in front of me with tears in his eyes,
The seriousness set in when I found out that I was paralyzed.
All I could do was reassure him and smile, regardless of the circumstance,
My only hope? To pray to the Most Merciful, to make me recover soon and advance.

*
ஆங்கிலத்திலிருந்து
தமிழாக்கம் - மதுமிதா

ஆரம்பம் -    அபி (அப்துல் ஜப்பார்)

-----------------------------------------------------------

இந்த பிழையான வாழ்க்கைக்கு
மாற்றான வாழ்க்கையை விரும்பி
உறங்காமல் சில இரவுகள் 
நீண்டநேரம் விழித்திருப்பேன்.

நொடிப் பொழுதில்
இந்த விபத்து
நிகழ்ந்து விட்டது

கணநேரத்தில்
அத்தனை விரைவாக
அனைத்தையும் தவறாக
மாற்றிப்போட்டு விட்டது.

நான் கண்ட கடைசிக் காட்சி
மெல்ல மெல்ல மங்கலானது

சுழன்று கொண்டிருந்த
ஒளியின் பளிச்சிடல்களுக்கிடையில்
கண் விழித்தேன்.

நம்பிக்கையிழந்த ஒலியில்
சிலர் பேசுவதை
கேட்டுக்கொண்டிருந்தேன்

எத்தனை முயன்ற போதும்
என்னைச் சுற்றிலும்
என்ன நடக்கிறதென்று தெரியவில்லை.

கடவுள் நிச்சயித்த நாளொன்றில் 
கண்களை நான் மெதுவாகத் திறந்தேன்

ஒருவர் கையில் பேனாவுடன்
குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.

மன அழுத்தத்தின் காரணமாக
அந்த காலகட்டத்தில் நிகழ்ந்தது எதுவும்
என்னில் பதியவில்லை

நான் மிகவும் சோர்ந்துபோய்
அதீத களைப்புடன் இருந்தேன்

அந்த தருணத்தில்
என்னால் செய்யமுடிந்தது
ஓய்வெடுத்தல் மட்டுமே

என் எதிரில்
கண்ணீருடன் நின்றிருந்த தந்தையைப் பார்த்தபடி
கண்விழித்தேன்

நான் உடலை அசைக்க முடியாமல்
முடங்கிப் போய் இருக்கிறேன் என்று அறிந்தபோது
நிலமையின் தீவிரத்தை உணர்ந்தேன்

இந்த சூழலை கருத்தில் கொள்ளாமல்
என்னால் செய்ய முடிந்ததெல்லாம்
அவருக்கு உத்தரவாதம் அளிக்கும் புன்னகை

எனது ஒரே நம்பிக்கை
நான் விரைவில் எழுந்து
நடமாடவும் நலம்பெறவும்
பெருங்கருணையாளனை
பிரார்த்தனை செய்வதே

நன்றி: "இனிய திசைகள்"
-------------------------------------------------------


அபியின் இன்னொரு சிந்தனை இது :

The View

We are now at a point where black screens always face us,
In our homes, our place of work or even on the local bus.
What they all display varies from person to person,
The content is almost endless that it's so hard to reach a conclusion.

A single letter to an entire sculpture in just one screen,
To infinite lines of code on another, which can make an amateur coder scream.
It doesn't matter if it's small, large, tall or wide,
All those who stare into them seem to be in a daze or hypnotized.

Some say it's a hazard, some say it's fine,
What happens when, even little kids, watch YouTube for hours at a time?
Some may give excuses like, "Look at this video, this cat is mixing the pudding!"
Heck, some of us take our phones to the bathroom! To whom are we kidding?

Yes, I'll admit that I'm a hypocrite and I've done some of these crimes,
Yet, I've never cut myself, staring at the TV, while trying to slice some limes.
I say, let's start changing ourselves by choosing to stay offline,
To spend time with family and friends so that we don't get disconnected and whine.

*

Thanks : Asif Meeran