Monday, September 24, 2012

மஹாநடன் திலகனின் மரணம்


ஓவியம் : ராஜசேகரன் பரமேஸ்வரன்
Image Coutesy : http://www.artween.com/Artists/Rajasekharan-Parameswaran/Theme/oil-painting-of-Thilakan

***
திலகனுக்கு என் அஞ்சலி.  நான் பார்த்து ரசித்த சில சினிமாக்கள் இவர் இல்லாமல் சோபித்திருக்காது. பெருந்தச்சன், கிரீடம், மூணாம்பக்கம், கண்ணெழுதிபொட்டும்தொட்டு போன்ற படங்களிலிருந்து முக்கிய காட்சிகளை காட்டிக்கொண்டிருந்தார்கள் காலையில். பழைய பேட்டி ஒன்றும். அவரது பெயரைப் பார்த்துவிட்டு ,’குரல் ஒன்றும் சரி இல்லையே..’ என்றார்களாம் ரேடியோ ஸ்டேஷனில். ‘நாயர்’ என்று சேர்த்து அப்ளிகேஷன் அனுப்பு என்று நண்பர்கள் சொல்லவும் ’சுரேந்த்ரநாத நாயர்’ என்று அனுப்பியிருக்கிறார். செலக்டட்!. அவருடைய வெளிப்படையான பேச்சு போலவே படங்களின் வசனங்களும் அமைந்தன. இயக்குநர் பத்மராஜனின் மூணாம்பக்கம் சினிமாவில் ’செருப்பக்காரனாயிருந்தா ஒருதரமெங்கிலும் போலீஸ் ஸ்டேஷன் கேரியிருக்கனும்’ வசனம் ஒரு உதாரணம். ’இன்னஸண்ட்’ சினிமாவிரும்பிகள் திலகனின் ஒரு படமாவது பார்க்க வேண்டும். - ஆபிதீன்

1 comment:

  1. அழகான ஓவியம். ஓவியர் ராஜசேகரன் பரமேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete