Saturday, September 22, 2012

ஆயிரமே.. ஆனாலும்... அன்னாகயிரே அவுந்தாலும்...

அ.மார்க்ஸ் அவர்களின் முகநூலில்  சகோதரர் ராஜாராம் ஒரு கமெண்ட் கொடுத்திருந்தார். பிடித்திருந்தது. அவர் குறிப்பிடும் கவிஞர் இன்குலாபின் பிள்ளையார் கட்டுரை  யாரிடமாவது இருக்கிறதா? அனுப்புங்களேன். - ஆபிதீன்

***

Rajaram Komagan :


முகநூல் அலுப்பை பல நேரங்களில் தருகிறது.எனக்கு தெரிந்து மிகக்குறைந்த அளவில் தான் அதிக கவனத்தோடும்,சிரத்தையோடும் இதில் வினை எதிர்வினைபுரிகின்றனர்.மற்றபடி இதில் பொழுது வீணாகிறதோ என்று கூட எண்ணம் தோன்றுகின்றது. ஆயிரமே.. ஆனாலும்... அன்னாகயிரே அவுந்தாலும் உடுரா பல்லாக்க..என வண்டியை ஒட்டுகின்றோமா? அன் தோன்றுகிறது. மதமோ, ஆன்மீகமோ தனி மனித நம்பிக்கை என்ற ரீதியிலான அணுகுமுறை இல்லாதாது பெரும்  குறை.நம்பிக்கைகளை நிறுவனப்படுத்தி குழுவாக,அதற்குரிய தனி வாழ்வியல் முறையை அடையாளப்படுத்துவதில் மத நிறுவனங்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்திருக்கின்றன.தனிமனித சுதந்திரத்தை அங்கீகரிக்கின்ற நாகரிகத்தை இழந்து வெகுதொலைவுக்கு வந்துவிட்டோம்.பக்ரீத்து பாய் வீட்டு பிரியாணி நம் வீட்டிற்கும் நம் வீட்டு தீபாவளி பலகாரம் பாய் வீட்டுக்கும் பரிமாற்றப்பட்ட காலங்கள் ஏக்கத்திற்குரிய இறந்த காலங்களாகி விட்டன. கவிஞர் இன்குலாபின்
பிள்ளையார் கட்டுரையை வாசித்தவர்களுக்கு இந்த ஆதங்கம் புரியக்கூடும்.... ஆன்மீகம் மக்களைப் பிரிக்க அல்ல இணைக்க வேண்டும்..அப்படி இல்லாதவை தடை செய்யப்பட வேண்டும்.... அதிகார அட்டகாசங்கள் கடுகி ஓழிக.!
 
***
நன்றி : அ.மார்க்ஸ் , ராஜாராம் கோமகன்

No comments:

Post a Comment