Wednesday, January 13, 2016

பயங்கரமான நல்லவர்கள் ! - ஓஷோ

Thanks to :  Venni La  & Zara Thustra  (fb)
*

நீங்கள் ஏதோ ஒரு நல்ல காரியத்தைச் செய்கின்றபோதும்கூட, நீங்கள் கெடுதல்தான் செய்கிறீர்கள்.

நல்லது செய்பவர்களைப் பாருங்கள். அவர்கள் எப்போதுமே கெடுதல்தான் செய்கின்றனர்.

இந்த உலகிலேயே மிகவும் தீங்கானவர்கள் அவர்கள்தான். சமூக சீர்திருத்தவாதிகள், சமூக புரட்சியாளர்கள், இவர்கள்தான் மிகவும் தீங்கானவர்கள்.

ஆனால் அவர்கள் செய்கின்ற அந்தத் தீங்கு எங்கு இருக்கிறது என்பதைக்கண்டு பிடிப்பது மிகவும் கடினம்.

ஏனெனில் அவர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு நல்லதையே செய்து கொண்டிருப்பார்கள்.

ஆனால் மற்றவர்களுக்கான சிறைவாசத்தை அவர்கள் உருவாக்குகின்ற வழி அதுதான்.

நீங்கள், அவர்களை உங்களுக்கு ஏதாவது செய்வதற்கு அனுமதித்தால், அதன்பிறகு நீங்கள் அவர்களின் உடைமை ஆகிவிடுவீர்கள்.

அவர்கள், முதலில் உங்கள் பாதங்களை சுகமாக அமுக்கிவிடுவார்கள். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் கைகள் உங்கள் கழுத்தை நோக்கி நகர்வதை நீங்கள் காணலாம்.

பாதத்தில் ஆரம்பித்து உங்களது கழுத்தில் அவர்கள் முடிப்பார்கள். ஏனெனில் அவர்களும் விழிப்புணர்வு அற்றவர்கள்தான்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. அவர்கள் ஒரு தந்திரத்தைக் கற்று வைத்திருக்கிறார்கள்.

அதாவது, நீங்கள் யாரையாவது உங்களுக்குச் சொந்தமானவராக ஆக்க விரும்பினால் அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் என்பதுதான் அது.

இப்படிப்பட்ட ஒரு தந்திரத்தை அவர்கள் கற்றுவைத்திருப்பதும் கூட அவர்களுக்குத் தெரியாது.

ஆனால், அவர்கள் செய்வது எல்லாம் கெடுதலில்தான் முடியும். ஏனெனில், அவர்கள் செய்வது எதுவாக இருந்தாலும், அது மற்றவர்களை தங்களுடையராக்கிக் கொள்வதற்கான முயற்சியாகத்தான் இருக்கும்.

அது என்ன பெயரில், என்ன வழியில் வந்தாலும், அது ஒரு பாவச் செயல், சமயச் பற்றற்றது.

- ஓஷோ -

No comments:

Post a Comment