Friday, June 7, 2013

அப்பனே நமச்சிவாயா! - ஜோ டி குரூஸின் அகவெளி

தனுஷ் நடிக்கும் மரியான் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார், 'ஆழி சூழ் உலகு' எனும் அற்புத நாவலை நமக்குத் தந்த ஜோ.டி. குரூஸ். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்தால் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு ('காக்கைச் சிறகினிலே' ஜூன்'2013 இதழ்) அவர் சொன்ன பதில் இது :

'இதற்கு நான் என்ன சொல்வது? காரணமில்லாமல் காரியமில்லை.

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின்

என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றுக்கு ஏற்பத்தான் வாழ்க்கையை நான் பார்க்கிறேன்.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மிதவைக்கு தனித் திசைவழியோ, வேகமோ கிடையாது. வெள்ளம் அடித்துக்கொண்டு போய் எங்கேயோ சேர்க்கும்.
அதுபோல் இந்த உயிர், அதாவது இந்தப் பிறவி நம்மை எங்கே அடித்துச் செல்கிறதோ அதுதான் நடக்கும். நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தில் டி
குரூசியார் பேரனாகப் பிறந்த ஜோ டி குரூஸ், இன்று சென்னையில் மரியான்' படத்துக்கு வசனம் எழுதுகிறான் என்றால் எப்படி..? இது எப்படி நடந்தது? எனக்குத் தெரியவில்லை. வாய்ப்புகளைத் தேடி நான் வரவில்லை. நெல்லை மாவட்டத்திலிருந்து சினிமாக் கனவுடன் கள்ள ரயிலேறியோ அல்லது பஸ்
ஏறியோ சென்னை வந்தவனல்ல நான். எனக்குத் தொழில் கப்பல் சார்ந்தது, நான் எப்படி இந்தப் புள்ளிக்கு நகர்த்தப்பட்டேன்? இது காரணமில்லாமல் காரியமில்லை என்பதுதானே.. அப்பன் நமச்சிவாயத்தின் அருளன்றி வேறென்ன..?

நமச்சிவாயத்தின் அருளா? அப்படியெனில் இறை சக்திதான் மனித வாழ்வின் மூலவிசை என்கிறீர்களா?

நிச்சயமாக அவன் சித்தம்தானே எல்லாம்! 'அறிய அறிய அறியாமை புரிகிறது' என்ற ஈரோடு தமிழன்பனின் கவிதை வரிகளுக்கேற்ப நமது அறியாமை வில விலக புதிய புரிதல் உருவாகிறது.

அறியாமல் இருள் அகல, அகல எனக்குள்ளிருக்கும் ஒரு போராளி வெளி வருகிறான். இந்தச் சமூகம் சார்ந்த கேள்விகள் தொடர்ந்து எழுகின்றன.
சாதாரண ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்துவனாக இறை ஊழியனாக இருந்த நான், இன்று ஓம் நமச்சிவாய என்று சொல்கிறேனென்றால்.. அது ஏன்?

....

நாவல் சார்ந்து அதற்கு வெளியிலும் மதம் ஆன்மீகம் மீது நீங்கள் முன்வைத்த பார்வை கடும் விமர்சனத்துக்குள்ளானதே?

ஆன்மிகம், ஆன்மிகம் என்று கதறுபவர்களெல்லாம் ஆன்மிகம் பற்றி அறிந்திருக்கிறார்களா? ஏசுபிரான் ,முதற்கொண்டு எல்லா அடியவர்களும்
எம்மவரை நாடி இமயமலைக்கு வந்திருக்கிறார்கள் என்றுதானே அறிகிறோம். ஆன்மிகத்தில் நாம் இமயத்தின் கைலாயத்தில் இருக்கிறோம். எல்லாம் அவன் அருளன்றி வேறென்ன?

எல்லாம் அவன் அருளா! உண்மையில் நீங்கள் யார் கத்தோலிக்கரா.. சைவ நெறியாளரா.. துறவியா? போராளியா?

அதைத்தானே தேடிக் கொண்டிருக்கிறேன். தேடல் ஒரு சுகம்.

***

நன்றி : ஜோ டி குரூஸ், 'காக்கைச் சிறகினிலே' இதழ்.

2 comments:

  1. :) அல்லாஹு அக்குபர்... அல்லேலூயாஆஆ..ஓம் சாந்தி ஓம்..

    ReplyDelete
  2. ஜோ டி க்ரூஸ் எனும் உண்மையான மனிதருக்கு என் வணக்கங்கள்.

    ReplyDelete