Sunday, June 1, 2014

அடிவாரத்தில் - தாஜ் கவிதை

அடியிலே தாஜ் என்று சொல்வது அத்தனை சரியில்லை :)) - ஆபிதீன்

***

அடிவாரத்தில்  -  தாஜ்
----------------------------
எதிரே சிரஞ்சீவி மலை
சிகரத்தில்தான்
அந்த மூலிகை
செங்குத்தான அதன் பாதை
வளைந்து நெளிந்து மிரட்ட
இடையிடையேயான
குகைப்பாதைகளும்
பயம்தர உண்டு.

முயற்சிகளின் பாடம்
பச்சைக் கொடி காட்ட
கைவிரிக்கிறது அனுபவம்
வாழ்ந்தாகணும்
யோசனையோடு
அடிவாரத்தில்தான் நிற்கிறேன்.

***

நன்றி : தாஜ்

4 comments:

  1. நன்றி தல...
    அடிவாரத்திலிருந்து
    -தாஜ்

    ReplyDelete
  2. வாழ்ந்தேயாக வேண்டும் - அதுதான் வாழ்க்கை!

    இதை அழகுற உணர்த்தியது கவிதை!

    ReplyDelete