Monday, March 17, 2014

ஏனோ தெரியவில்லை... - இஜட். ஜபருல்லாஹ்

இறைவா......!
நீ - மரமாக இல்லை...
மரத்துக்குள் இருக்கிறாய்...!
மனிதனாக இல்லை...
மனிதனுக்குள் இருக்கிறாய்...!

நீ - மனசாக இல்லை...
மனசுக்குள் இருக்கிறாய்...!
கண்ணாக இல்லை...
கண்ணுக்குள் இருக்கிறாய்..!
காட்சியாய் இல்லை...
காட்சிக்குள் இருக்கிறாய்...!

நீ -  வெளிச்சம் அல்ல...
வெளிச்சத்துக்குள் இருக்கிறாய்...!
இருட்டும் அல்ல...
இருட்டுக்குள்ளும் இருக்கிறாய்...!

இப்படி -
நீ யாராகவும் இல்லை...
நீ எதுவாகவும் இல்லை..
எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறாய்...!
ஏனோ தெரியவில்லை...
நாங்கள் மட்டும் ...
உன்னை - 
வெளியே தேடுகிறோம்...!
***
3-7-2008
***
நன்றி : இஜட். ஜபருல்லாஹ் , தட்டச்சு உதவி : ஹமீது ஜாஃபர்


1 comment:

  1. இஜட். நானாவை தேடுகிறேன்..

    ReplyDelete