Sunday, November 10, 2013

கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள்

'கொ’ என்று தவறாக அடித்ததுமே கொக்கோகம் என்று முதலில் தருகிறான் குறும்பு செய்யும் கூகுளான்! கொத்தமல்லி, கொள்ளு, கொக்கு என்றும் தருகிறான் பிறகு என்றாலும் முதலில் தந்ததற்காக அங்கேபோய் அதிவீரராம பாண்டியனை அறியாமல் இருக்க முடியுமா? அப்புறமாத்தான் ’கோ’வை அடித்தேன்’ ; கோபாலகிருஷ்ண பாரதியாரையும் தரிசித்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். எதற்கு?  நந்தன் புகழ் பாடியவர்,   நாகூர் பக்கத்து நரிமணத்தில் பிறந்தவர் என்பதால் ஒரு பிரியம். அவ்வளவே. இப்போது பகிரும் இந்த ஒலிப்பதிவில் அவர்  இயற்றிய ஏழு அருமையான பாடல்கள் இருக்கின்றன. சிக்கல் குருசரன், சௌம்யா, ஓ.எஸ்.தியாகராஜன், ஜி.என்.பி., சீதளாபதி பாலசுப்ரமணியம், நீலா ராம்கோபால், நிஷா பி. ராஜகோபால் என்று பலர் பாடினாலும் எழுந்து நிற்க வைப்பது எங்கள்  ஜி.என்.பியின் குரல்தான். கேளுங்கள்.

கேட்பதற்கு முன்பு ஒரு ஜோக்.  ”ஸங்கீத ஸரிகமபதநி' இதழில் ரா.கி.ரங்கராஜன் படித்ததை பசுபதிஐயா தளத்தில் பார்த்தேன்:

'என் அப்பா சங்கீத வித்வான். அம்மாவும் பாடுவாள். அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும். அண்ணி வீணை வாசிப்பாள்...'

'சரி, நீ என்ன பண்ணறே?'

'தனிக் குடித்தனம் வந்துட்டேன். வேறென்ன பண்றது?'.
***
***
Thanks to : Lakshminarayanan Noorani
+

கோபாலகிருஷ்ணபாரதியார் பாடல்கள்

1 comment:

  1. போட்டதற்கு உங்களுக்கும் கேட்டதற்கு எனக்கும் ஆயுளை நீட்டி வைப்பானாகவும், ஆமீன்.

    ReplyDelete