Thursday, July 4, 2013

கங்கைத்தாய் (Ganga Maiya)

ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா எழுதிய இந்தி நாவலான 'கங்கைத்தாய்’-ல் ஒரு பத்தி... (தமிழில் திருமதி சரஸ்வதி ராம்னாத்)
***

துயரமும் துக்கமும் எத்தனை சக்திவாய்ந்ததாக இருந்தாலும், இயற்கை அதைவிட அதிகமாகவே அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் அளித்துள்ளது. துக்கத்திற்கு வரையறைக்கப்பட்ட எல்லை என்பது எப்படி இல்லையோ, அப்படியேதான் அதைத் தாங்கும் சக்தியும் எல்லையற்றது. எந்தத் துக்கத்தைப் பற்றிய கற்பனை கூட ஒருவனுடைய ஆன்மாவின் அஸ்திவாரத்தையே கலகலக்கச் செய்து நடுங்க வைக்கிறதோ, அதே துக்கம் சற்றும் எதிர்பாராது, திடீரெனத் தலையில் வந்து விழும்போது, அதைச் சகித்துக்கொள்ளும் சக்தியும் எங்கிருந்தோ அவனுக்கு வந்துவிடுகிறது. அதை அவன் சிரித்துக்கொண்டோ அல்லது அழுதுகொண்டோ தாங்கிக் கொள்கிறான். துக்கமெனும் கருமேகத்தினடியிலே அமர்ந்து அவன் துடிக்கிறான். அழுகிறான். அழுது அழுது அவன் அத்துக்கத்தை மறக்கிறான். மேகம் விலகுகிறது; மகிழ்ச்சியின் பிரகாசம் மின்னலிடுகிறது. மனிதனும் சிரிக்கிறான். தன்மீது துயர மேகங்கள் படிந்திருந்தன, தான் அழுதோம், துடித்து தவித்தோம் என்பதைக் கூட அவன் மறந்து விடுகிறான். இது ஒருசில அசாதாரணமான மனிதர்களுக்குப் பொருந்தாமலிருக்கலாம். ஆனால் சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரையில் முற்றிலும் உண்மையானது இது.

***

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி 

***
Cover Designed by Deo Prakash Choudhary

No comments:

Post a Comment