Sunday, April 7, 2013

மனதை உலுக்கிய மகுடேசுவரன்

இந்த உலகின்
மிகச்சிறந்த புகைப்படம்
மனைவி பிள்ளைகளைப் பிரிந்து
அயல்நாட்டில்
உழைத்துத் தேய்பவனின் பர்ஸில்
இருக்கிறது !

***
நன்றி : கவிஞர் மகுடேசுவரன்


1 comment:

  1. தாஜின் பழைய கவிதை :

    ------------------------

    கணக்கு


    நிழல் தேடி ஒதுங்கின
    பணமரத்தின்
    நிழல் தரும் சுகம் = x

    அந்நியமான அரபு ராஜ்ஜியம் +
    சுதந்திரமின்மை + நினைவில்
    விரியும் குடும்பம் + என்
    பிஞ்சுக் குழந்தைகள் + இரவில்
    உணரும் மனைவியின் உஷ்ணம்
    + குறியின் தொல்லை = y
    இன்னும்......
    அது இல்லை + இது இல்லை = y

    y x y = y2
    x - y2 = எதிர்கால நிம்மதி.

    மனக்கணக்கு
    ஒவ்வொன்றாய் பெருகிக் கூடும்.
    ஒன்றோடு ஒன்று மோதி
    பத்து நூறாகும்.
    மூளை எல்லாவற்றையும்
    கூட்டிப் பெருக்கிக்
    கழித்து விடும்.

    ***
    பிரம்மராஜனின் 'மீட்சி'-1984

    ReplyDelete