Wednesday, January 9, 2013

பொடுபொடுத்த மழைத்தூத்தல் - அனாரின் புதிய தொகுப்பு

அன்பின் ஆபிதின் நாநா அவர்களுக்கு..

பொடுபொடுத்த மழைத்தூத்தல் - எனும் எனது புதிய தொகுப்பு (கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள்), க்ரியா பதிப்பகத்தினரால் எதிர்வரும் 2013 ஜனவரி 11ஆம் திகதி, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவருகின்றது. புதியதொரு அமைப்பில் இந்நூலைத் தொகுத்திருக்கிறேன். மிகுந்த நிறைவும் மகிழ்ச்சியும் தரும் வகையில் க்ரியா பதிப்பகத்தினர் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் இத்தொகுப்பை  வடிவமைத்திருக்கிறார்கள். என்னுடைய புதிய தொகுப்பின் வரவை உங்களுக்கு சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய கிராமிய நாட்டுப்புறப்பாடல்களை வாய்ப்பிருந்தால் வாசித்துச் சொல்லுங்கள்.

அன்புடன்
அனார்


 அவன் :     வயிறு பசித்தால்
                      வாயால கேட்டிருவன்
                      என்டெ கண்ணின் பசியால
                      கதறினன்கா நாள்முழுதும்

அவள் :      வண்டறுத்த சோலையிலே
                      மரமழுது போறதுபோல்
                      நின்டழுவன் மச்சான்
                      உங்கெ நினைவுவாற நேரமெல்லாம்

***


 நன்றி : அனார் (http://www.anarsrilanka.blogspot.com/)

***

தொடர்புடைய பதிவு:
அனார்: பச்சை வான உடலும் கவிதை முகமும் – கநாசு.தாஜ்

No comments:

Post a Comment