Thursday, December 20, 2012

பெண் என்பவள் உடல் மட்டுமல்ல - ப்ரியா தம்பி




டெல்லியில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் முழுக் கதையையும் இன்றுதான் வாசித்தேன்.. இந்த நொடிவரை பதட்டமாகவே இருக்கிறது...

வண்டியின் டிரைவர் அந்தப் பெண் ஒரு ஆணுடன் இரவு நடந்து சென்றதால் பாடம் கற்பிக்கவே அப்படி செய்ததாக சொல்லியிருக்கிறார்..வன்புணர்வு செய்தவர்களில் டிரைவரோடு அவர் தம்பியும் அடக்கம்... அனைவரும் புணர்ந்து முடித்த பின்பும் இரும்பு ராடு எடுத்து அவளது உறுப்பை சிதைத்திருக்கிறார்கள்... முப்பது கிலோமீட்டருக்கு அந்த வண்டி அந்த
பெண்ணின் கதறலை சுமந்து கொண்டி ஓடியிருக்கிறது... ஆடையின்றி சாலையில் வீசப்பட்ட அந்தப் பெண் போலீஸ் வரும்வரை அங்கேயே சீந்துவாரின்றி கிடந்திருக்கிறாள்...

இவ்வளவு வன்மத்தோடு உயிர்வாழ முடியுமா? ஒரு பெண்ணாக, பெண் குழந்தையின் அம்மாவாக மிகுந்த பதட்டமாக உணர்கிறேன்....

எதோ ஒரு பெண், யாரோ ஒருவனிடம் பேசினாலே தாங்க முடியாமல் சித்திரவதை செய்யும் இவர்கள் தன் வீட்டுப் பெண்களை என்னவெல்லாம் செய்வார்கள்? பெண்கள் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என்பதில் தொடங்கி, பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை எல்லாமும் செய்வார்கள்..

காலங்காலமாக பெண் குழந்தைகளை ஆணுக்கு பயந்து அடக்கமாக இருக்கச் சொல்லித் தானே வளர்க்கிறோம்.. பதிலாக பெண்களை மதிப்பது எப்படி என்று சொல்லி ஆண் குழந்தைகளை வளர்க்கலாமே? நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்கேனும் பெண் என்பவள் உடல் மட்டுமல்ல என்று சொல்லி வளர்ப்போம்... பெண்ணை சக மனுஷியாக, நேசத்தோடு, நட்போடு பார்க்க கற்றுத் தருவோம்.. மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்...
***
நன்றி : ப்ரியா தம்பி

1 comment:

  1. 'தலைநகரில் நடந்தால் மட்டும்தான் உங்கள் கண்களுக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். நியாயம்தான்.' - நண்பர் சுரேஷ் கண்ணன் (ஃபேஸ்புக்கில்). அவர் கொடுத்திருக்கும் சுட்டி :

    http://www.thehindu.com/news/states/other-states/8yearold-dalit-girl-raped-killed-in-bihar/article4218550.ece

    ReplyDelete