Sunday, October 21, 2012

கரெண்ட் கட்டும் அஸ்மாவின் கால்குலேஷனும்

தமிழ்நாட்டின் கரெண்ட் கட் பிரச்சனை தீர (?) அறிவாளி அஸ்மா சொன்ன யோசனையைக் கேளுங்கள். ‘எஹ வந்தா கரெண்ட் கட்டே இக்யாதும்மா’ என்று ஆசையோடு அம்மாவுக்கு ஓட்டு போட்டவள் அவள்தான்.

’மெட்ராஸ்ல ஒரு மணி நேரம் கரெண்ட் கட் இர்ந்தப்போ  நம்ம ஊர்லெ 15 மணி நேரம் கரெண்ட் கட் இர்ந்திச்சி. இப்ப மெட்ராஸ்ல ரெண்டு மணி நேரம் கட் பண்றதால நம்ம ஊர்லெ 5 மணி நேரம்தான் கட்டாவுது. அப்ப இன்னும் ஒரு மணிநேரம் மெட்ராஸ்ல கட் பண்ணுனா நமக்கு ஃபுல்லா கரெண்ட் கட்டே இரிக்காது. மேக்கொண்டு கூடவும் கெடைக்கிம். மிச்சமாறதை மெட்ராஸுக்கு திருப்பி கொடுத்துடலாமே மச்சான், எப்படி?’  என்கிறாள்.

எனக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச அக்கவுண்டண்ட் மூளையும் குழம்பிவிட்டது. ‘ஒன்னோட அம்மாக்கு ஃபோன் போட்டுச் சொல்லுடீ’ என்று வைத்துவிட்டேன்.

’டைமண்ட் நெக்லெஸ்’ படத்தில் , டாவடிக்கும் மலையாள டாக்டரிடம் தமிழ் நர்ஸ் போடும் ஒரு விடுகதை ஞாபகத்திற்கு வந்தது.

’எறும்பு வாய விட சின்னது. அது என்னது?’

குழம்புகிறதா?

பதில்  இதுதான் : எறும்பு தின்னது!

ஆனால் அதைவிடச் சின்னது , கரித்துக்கொட்டும் கவிஞர் தாஜ் பாணியில் :

முதல்வரின்...
வாய்
சொன்னது!

***
Image Courtesy : ThatsTamil


2 comments:

  1. தங்கைக்கு புத்தி அதிகம்.
    -தாஜ்

    ReplyDelete
    Replies
    1. மடையன வச்சி மாரடிக்கிறதுனாலயா? யோவ், நீர் நேரடியாவே சொல்லிடலாம்.

      Delete