Tuesday, March 20, 2012

தலமுறை நிழல்கள் - இளைய அப்துல்லா

ஜஸ்கிரீமை ’குளிர்க்கழி’ என்று அழைத்தால் குளிர்ந்துபோகும் எழுத்தாளர் இளைய அப்துல்லா,  புலம்பெயர்  வாழ்வு பற்றி என்னைப்போலவே புலம்புவார்; பெயர மாட்டார். ஆனந்த விகடனில் வெளியான அவருடைய புதிய சிறுகதையைப் பதிவிடுகிறேன் - முதிய வாசகர்களுக்காக. லண்டன் போகாமலும் லாகின் செய்யாமலும் பார்க்கலாம். அதற்கு முன்பு , நண்பர் டி.சே. தமிழனின் ’புலம்பெயர் வாழ்வு: நெருக்கடிகளும், உயிர்த்திருத்தலும்…’  பதிவைப் படித்துவிடுங்கள். நன்றி.

***


தலமுறை நிழல்கள் - இளைய அப்துல்லா


லண்டனில் பனி பொழிந்து கொண்டு இருந்தது.  ராமநாதன் தனது வலது கையைக் கன்னத்தில் வைத்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் படுப்பதற்குப் பட்ட சிரமம் அவர் முகத்தில் தெரிந்தது. 'மகன் கூப்பிட்டபோது லண்டனுக்கு வந்திருக்கக் கூடாதோ’ என்று நினைத்துக்கொண்டார். லண்டனின் தட்பவெப்பம் அவரைப் பாடாய்ப்படுத்தியது. காற்று அதிகமாக அடித்தால் தொண்டைக் கரகரப் பும்; மழை பெய்தால் தும்மலும்; குளிர் வந்தால் இழுப்பும்; வெயில் வந்தால் தலைவலியும் வந்துவிடு கிறது. மார்கழி மாதம்தான் ராமநாதன் லண்டனுக்கு வந்து இறங்கினார். வந்த கையோடு அவருக்கு வந்த முதல் பிரச்னை... இரண்டு கைகளிலும் தோல் உரிய ஆரம்பித்தது. பின்னர், உடம்பு எங்கும் பொரி பொரியாகத் தோல் உதிர்ந்தது. அவர் பயந்துவிட்டார். 'அது இங்கை வாற எல்லாருக்கும் வருகிற நோய்தான்’ என்று மகன் அலட்சியப்படுத்தினான். இலங்கைத் தமிழர்களுக்கு லண்டன் இரண்டாவது தேசம்போல் ஆகிவிட்டது. ஆனால், எல்லாமே அந்நியமாகவே அவர் உணர்ந்தார். மகன் லண்டனுக்கு அவரைக் கூப்பிடப்போறன்...














***
மேலும்... :


No comments:

Post a Comment