Monday, September 18, 2017

நுரை தள்ளிய வரிகள் - பாதசாரி


1. வாழ்வெனும் போதை தெளிய வைத்து
தெளிய வைத்து அடிக்கிறது
2. உனக்கு நான் கடவுள்
எனக்கு நீ கடவுள்
போய்த் தூங்கு சாமி.
3. என் காலம் என் கோமாளி.
4. மனதின் வெற்றிடம் நிரப்பத்தான் காலம்.
இடம் தெரிவதும் மறைவதுமே வாழ்வு சாவு.
5. இருப்பை அளக்க இன்மையே அளவுகோல்.
6. நிபந்தனை அற்ற அன்பு பொது மூச்சுக்காற்று.
7. அருளும் பொருளும் பகையானால் மண்ணில்
மருளும் மனித முகம்.
*

நன்றி : பாதசாரி , குங்குமம்

No comments:

Post a Comment