Monday, July 11, 2016

தீர்வு - சி.மணி கவிதை

கவிஞர் நேசமித்திரனின் ஃபேஸ்புக்கில் பார்த்த இந்தக் கவிதையும், பெயர் சொல்லாமல் நேசன் தேர்ந்தெடுத்திருந்த Bryon Draper வடித்த சிற்பமும் பிடித்திருந்தது. நன்றியுடன் பகிர்கிறேன். - AB-


தீர்வு - சி.மணி

என்ன செய்வ திந்தக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றிருந் தால் பிரச்னை இல்லை
மற்ற நேரம் நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறும் தோள்முனைத் தொங்கல்; தொங்காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்.

**
தொடர்புடைய சுட்டிகள் :
சி.மணி (1936 - 2009) - சுகுமாரன்
சி. மணியின் கவிதை உலகம் - குவளைக் கண்ணன்

No comments:

Post a Comment