Tuesday, May 24, 2016

'உன்னிடத்தன்றோ உதவியும் அல்லாஹ்..'

இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்  இயற்றி,  அண்ணன் ஈ.எம். ஹனீபா பாடிய 'அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன் திருநாமம் போற்றி துவக்குகின்றேன் அல்லாஹ்' என்ற பாடலைப் பற்றி முகநூலில் கவின்மலர் கூறியிருந்தார் இப்படி : 'மனம் நெகிழ்ந்த பொழுதொன்றில் ஒலித்த இந்தப் பாடல் மேலும் நெகிழ வைத்து கண்ணீரை வரவழைத்தது. இறைப்பாடல்களில் ஹனீபாவின் பாடல்கள் ஒரு தனி வகை. இப்பாடலின் சரணத்தில் கம்பீர ஹனீபாவின் குரல் எப்படி கனிந்து குழைந்து உருகுகிறது! தபேலாவின் விளையாட்டு நம் செவிகளுக்கு ஒரு விருந்து. இதில் வரும் கோரஸ் 'அல்லாஹூ' தான் இப்பாடல் உச்சத்தைத் தொடும் இடம். கேட்டுப் பாருங்கள்.' என்று. 'உன்னையே நாங்கள் உவந்தேற்றுகின்றோம், உன்னிடத்தன்றோ உதவியும் அல்லாஹ்...' என்ற வரியை மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
*

*
(Thanks to : wahaabjani's channel & Kavin Malar / fb)

No comments:

Post a Comment