Sunday, February 28, 2016

கடைசி ஆசை... - தாஜ்

தாஜ் : அன்பு ஆபிதீன்... இது சமீபத்திய தலைவலி பிரசவம். முழுசா ஒன்பது நாள் - சுமந்தேன். ஆனாலும், ஆயுதப் பிரசவம்தான்! லாப் டாப் - குமுறல் எனக்கே கஷ்டமாகிப் போனது.

ஆபிதீன் : நல்லது. வாசகர்களின் கஷ்டம் உணர்ந்த கவிதை :)

**

கடைசி ஆசை... - தாஜ்

தூக்கு மேடை ஏறி நின்ற தருணம்
என் கடைசி ஆசை கேட்கப்பட்டது,
'யாரும் எழுதாததோர் கவிதையை
எழுத ஆசை' என்றேன்...!
'நீ கவிதைகள் எழுதப் போய்
வாசித்த வாசகர்களது
சித்தம் பேதலிப்பு நிதர்சனமாக
அவர்களது தற்கொலைகளுக்கும் கூட நீயே
ஆளாகிப் போனதும் ருசுவாக
வழக்கின் தண்டனயை வேண்டி ஒப்புக் கொண்டு
இன்றைக்கு மேடையேறிய நாழியிலும்
கவிதையெழுத ஆசையென்கிறாய்!'
வியந்த அவர்கள்
தட்டாது அனுமதியும் தந்து காத்தார்கள்
நேரம் கடந்தும்
இதோ நான் எழுதிக் கொண்டே இருக்கிறேன்
யாரும் எழுதாத இக் கவிதையை....!!

*

நன்றி : தூக்குமேடைக்கு !

No comments:

Post a Comment