Thursday, September 19, 2013

ஐஸ் கீஸ் வைக்கிறானா பய?

'புதுசா என்னா பாட்டு வாப்பா நல்லாக்கிது?' என்று நேற்று கேட்டதற்கு ஆஷிக்கீ-2வில் வரும் 'தும்ஹி ஹோ'வைச்   சொன்னான். 'அத கேட்டுட்டேன் வாப்பா முதல்லயே. தமிழ்ல சொல்லு' . 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் வரும் பாட்டை சொன்னான். இப்போதுதான் கேட்கிறேன். பாடியவர்: விஜய் ஏசுதாஸ் இசை: யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர்: நா.முத்துகுமார். 'நமக்கெனவே வந்த நண்பன் தந்தை…' என்ற வரியில் நெகிழ்ந்துதான் போனேன். என் சீதேவி வாப்பாவின் நினைப்போடு பயமும் வந்தது. அஸ்மா மூலமாக இன்றிரவு என்ன கேட்கப்போகிறானோ இந்தப் பயல்? என்று. ஆனாலும் கஷ்டத்தோடு கஷ்டமாக நிறைவேற்றத்தான் வேண்டும்! - ஆபிதீன். நன்றி : சுப்றமணியம் முத்துலிங்கம்

No comments:

Post a Comment