Thursday, September 12, 2013

நடுத்தெருவில் சென்ஷி பாடிய பாட்டு!

ஓசி கிட்டார் கிடைச்சா இப்படி ஊர் ஊரா சுத்த ஆரம்பிச்சுடுறாங்க, குசும்பன் உதவியோடு!

**
'ஷார்ஜா தான்சேன்' சென்ஷிஜீ பாடியது குலாம்அலியின் இந்த பஞ்சாபிப் பாட்டுதான் (song composed by ustad Tasadaq Ali Khan). ஆனால் என்னமோ சத்தம் அன்று வெளிவரவில்லை, அவர் வாயிலிருந்து!

***

சித்தார்த் சொன்னது :

ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு 4 வயசு பையன் திருக்குறள் எல்லாம் நல்லா சொல்றான்னு அவன தூர்தர்ஷன்ல (அப்ப பொதிகை இல்ல) பேட்டி எடுத்தாங்க. கேள்வி கேட்டவங்களுக்கு தூர்தர்ஷன் தொகுப்பாளினிகளுக்கான குறைந்தபட்ச வயதான 40ஐ விட அதிகம் இருக்கும். ஆனாலும் குழந்தைய ஒவ்வொரு கேள்வி கேக்கறதுக்கு முன்னாடியும் ஒரு அதீத அடைமொழி போட்டு அழைச்சு தான் கேள்வி கேட்டாங்க. ”குறள் மொழியும் குறளே”, ”இரண்டடி இமயமே”,,, இப்படி....


நம்ம இசைமேதையை இப்படியான அடைமொழிகளுடன் கூடிய கேள்விகள் கேட்பது ஒரு சம்மூவமா நமக்கு பெருமை?  இல்ல... கடம. அதனால கேள்விகள நானே ஆரம்பிக்கறேன்.


1.
நாதமெனும் ஞானவிளக்கே.... இத்தனை வெயிலில் சுடும் தார்ச்சாலையில் அமர்ந்திருப்பதற்கான வேர்க்காரணங்களாக இரண்டினை நான் யூகிக்கிறேன்.

அ. கலைத்துறையின் மற்றோர் சிகரமான சம்மந்தி +குசும்பன் குசும்பு அவர்களின் பால் நீங்கள் கொண்டிருக்கும் மாறா நட்பு
 
ஆ. இத்தனை நட்பை மீறியும் உங்களை இங்கே உட்கார வைத்து தண்டிக்க வேண்டும் என்ற சம்மந்தியின் காழ்ப்பு.

இந்த காழ்ப்பு கலைரீதியான பொறாமையினால் உருவானதா? இதை பற்றிய உங்களது கருத்து என்ன? கூறுவீரா இருவத்த்தியோராம் நூற்றாண்டின் தான்சேனே?

2 comments:

  1. Replies
    1. இங்கெ துண்டு மிஸ்ஸிங்! - அதிஷா

      Delete