Wednesday, June 5, 2013

திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்

நாகூர் கவிஞர் சாதிக்  இயற்றி  நாகூர் ஈ.எம். ஹனிபா அவர்கள் பாடிய இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். என்னிடமுள்ள வெர்ஷன் மிகச் சிறந்தது. ஆனால் ஃபைல்டென் தளத்தில் தற்போது அதை வலையேற்ற இயலாததால் இதைக் கேட்டு மகிழுங்கள். மெஹ்ராஜ் ஸ்பெஷல் இதுதான். நன்றி.
***


Thansk to : commentclips
***


சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை


வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு…
வெண்ணிலவும் வியப்படையும் வேந்தர் முகம் கண்டு விட்டு
விண்ணகத்துத் தாரகையும் வெட்கப்படும் பார்த்து விட்டு
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பேரழகை


அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்…
அண்ணலிடம் அறிவு வந்து ஆயிரம் பாடம் பெறும்
பண்பு வந்து நபியிடத்தில் பணிவைக் கேட்டுச் செல்லும்
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் சொல்லழகை


திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்…
திரும்பும் திசை எல்லாம் திருநபி செயல் மணக்கும்
அருள் மறை வேதத்திலே அவர் புகழ் நிறைந்திருக்கும்
என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பெருமைதனை


சொன்னால்…முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை
அண்ணல் நபி பேரழகை ஆற்றல் மிகும் சொல்லழகை


சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ…

***
நன்றி : கவிஞர் சாதிக்
Lyrics Courtesy : http://www.maslahi.in/2012/06/blog-post_7563.html

No comments:

Post a Comment