Sunday, May 12, 2013

நான் ஒரு முட்டாள் - நாகூர் ரூமி

'நான் ஏழையல்ல, ஏனெனில், நான் பணக்காரன் அல்ல' என்று எளிமையாக எழுதும் நண்பர். 'எந்த மனதையும் ஆழமாகச் சிந்திக்கச் செய்யும் சில கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள்' என்று நகுலனிடம் பா(ரா)ட்டு வாங்கிய நண்பர். அவருடைய 'நதியில் கால்கள்' நூலிலிருந்து...

***

ஒரு முட்டாளின் கவிதை
நாகூர் ரூமி

தெரிந்து விட்டது எனக்கு
நான் ஒரு முட்டாள் என்று
நீங்கள்?

வாசித்துப் பார்த்தேன்
வாசிக்க வாசிக்க
மண்டை நிறைய
முட்டாள் தனம்

விவாதித்துப் பார்த்தேன்
வென்றதெல்லாம்
முட்டாள்தனம்

எழுதிப் பார்த்தேன்
மை போல் கொட்டியது
முட்டாள்தனம்

செலவு செய்ய வேண்டியிருந்தது
எல்லா வார்த்தைகளையும்
மௌனத்தை வாங்குவதற்கு

எனினும்
மேதையென
போற்றினார்கள்
என்னைவிட முட்டாள்கள்

அட என்ன ஒன்று
என் முட்டாள்தனம்
கொஞ்சம் கவர்ச்சியானது
கொஞ்சம் அழகானது
உங்களதை விட

எனினும்
போரடிக்கிறது
இந்த மேதை வேஷம்
பொறுமையில்லை இனி
முட்டாள்களே கேளுங்கள்
நான் ஒரு முட்டாள்
நீங்கள்?

***

நன்றி : நாகூர் ரூமி
***

அசல் முட்டாளின் கவிதைகள் இங்கே :

1 comment: