Thursday, January 31, 2013

டே, இது நம்ம மன்னாடே!

‘ஒரே.. சங்கீதமா போட்டு அறுக்குறாடா நீ’ என்று அலுத்துக்கொள்ளும் ரியாத் நண்பன் ஒருவனுக்காக  இந்தப் பதிவு. இருவரும்தான் நாகப்பட்டினம் பாண்டியன் தியேட்டரில் ’மெஹ்பூபா’வைப் பார்த்தோம் அப்போது. பாட்டு முடிந்ததும் ‘நல்லா ஆடுறாள்ல?’ என்று கேட்டதற்கு ‘நல்லா ஆடுனிச்சி!’ என்றான்!

**

'பண்புடன்’ சில கருத்துகள் :

‘மன்னாடேயை தெரியாதென்றால் அவர்களுக்கு இசையில் பரிச்சயமில்லை எனலாம்.  செம்மீன் படத்தில் சலீல் ச்வுத்ரி இசையில் ' மானச மயிலெ வ்ரு ' பாடலை பாடியவர். ஷோலேயில் ' யே தோஸ்தி' பாடலை பாடியவர். இவரின் ' லாகா சுன்ரி மே தாக் சுபாவும் கெய்சே '  தனிச்சிறப்பு வாய்ந்தது. துபாயில் இவரின் கச்சேரியை தவற விட்டு விட்டு பின்னர் Al Mansoor Video வில் ஒளி நாடா வெளியிட்டதை வாங்கினேன்.  கவிதா கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து கலக்கியிருக்கிறார். ‘ - அண்ணன் சடையன் அமானுல்லா

**

"ஆனந்த்" படத்தில் வரும் "ஜிந்தகி கைஸி ஹை பஹேலி ஹாயே" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தமிழில் வந்த "அடுத்த வீட்டுப் பெண்" படம் ஹிந்தியில் "படோசன்" ஆனபோது, அதில் கிஷோர்தா, மெகமூத் இருவருடன் சேர்ந்து மன்னாடே கலக்கிய 'ஏக் சதுர நார்," என்ற கலக்கலான நகைச்சுவைப் பாட்டு எத்தனை தடவை பார்த்தாலும் சிரிப்பை வரவழைத்து விடும். பாருங்களேன், இதில் மெகமூத்துக்கு பின்னணி பாடியவரும் மன்னாடே தான்! :-))

இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்ய 12 மணி நேரமானதாம். - தமிழன் வேணு

**

காதலிக்க நேரமில்லையோட இந்திப் பதிப்பு 'ப்யார் கியே ஜா'வுல மனமென்ற கருவண்டு பறக்கட்டும் பாடுனது மன்னாடேதான். ஐ.யய்.யோ. ஐயய்யோன்னு வரும். அதுல நாகேஷ் ரோல்ல ஆடுனது மெஹ்மூத்தான்.கூட ஆடுனது நம்ம பேவரிட் மும்தாஜ். தமிழ்ல ஆடுனது சச்சு. தமிழ்ல எம்.ஜி.ஆர். பாடுன 'மேரா நாம் அப்துல் ரகுமான்' (சிரித்து வாழவேண்டும்) பாட்டோட இந்தி வடிவம் ப்ரானுக்காக பாடுனதும் மன்னாடேதான்.'யாரீ ஹை ஈமானு மேரா யாரு மேரி ஸிந்தகீ' (ஸ்ஞ்ஜீர்) ஆத்தண்டிக் பஷ்தூனியன் வே ஆப் எக்ஸ்ப்ரசிங் பீலிங்ஸ் பாக்கணும்னா இந்தப் பாட்டப் பாக்கலாம். - நண்பர் ஆசாத்

No comments:

Post a Comment