Monday, January 21, 2013

சரி வந்தாப் பாருங்க, இல்லெண்டா... - வீல் ஓடாவியார் ஜோக்

அன்புள்ள ஆபிதீன்,

இப்படி நூறு கதைகளாவது ஊரின் வயல் வெளிகளிலும் பள்ளிவாசல் விறாந்தாக்களிலும் சலூன் கடைகளிலும் சந்து பொந்துகளிலும் உலா வருகிறது. கதைக்குரிய மனிதர்களெல்லாம் மர்ஹூம்களெல்லாம் அவர் தம் கதைகள் உயிர்பெற்று உலா வருவது நமக்கெல்லாம் பெரும் கொண்டாட்டமல்லவா? ஏதோ அடுத்த தலைமுறையினர் நம்மளைப் போன்ற லூசுகளெல்லாம் வாழ்ந்த காலம் பார்த்து மனம் நொந்து போவார்கள்.
அன்புடன்
ஹனீபாக்கா

***

நறுக்கென்று பேசுவதிலும் ஜோக்கடிப்பதிலும் புலவர் மாமாவுக்கு கொஞ்சமும் சளைக்காதவர் எங்களூரில் புகழ்பெற்ற வீல் ஓடாவியார். புலிகளின் கெடுபிடிகளின் போது பெரிய பள்ளி மரைக்கார் மார்கள் ஊரை விட்டு ஓடிப்போக வீல் ஓடாவியார், புலவர் மாமா போன்ற சான்றோர்கள் பள்ளிவாயல் மத்திச்சம் ஆனார்கள்.

வருடந்தோறும் புஹாரி மஜ்லிஸ் வைபவத்தில் பலரும் நேத்திக் கடனை நிறைவேற்றவும் புதிய புதிய நேத்திக்கடன்களுடனும் மஜ்லிசுக்கு வருகை தருவார்கள். ஒரு நாள் நடுத்தர வயதில் ஒரு பெண் ஒரு தென்னம்பிள்ளையுடனும் சேவலுடனும் புஹாரி மஜ்லிசுக்கு வருகை தந்தார்.

"என்னம்மா நேத்திக்கடன்?"

"எனக்கு கல்யாணமாகி பத்து வருஷமாகியும் வவுத்துல புள்ளெ பூச்சி ஒண்டுமில்ல. புள்ளெ கிடைக்க வேண்டி இந்தக் காணிக்கை. அடுத்தவருஷத்துக்குள்ள புள்ளெப் பாக்கியம் கிட்டினால் உசிருக்கு உசிராக ஒரு ஆட்டுக்கிடா கட்டுவேன்" என்றார் பெண்.

மத்திச்சம் வீல் ஓடாவியார் மிகவும் நிதானமாக இப்படிச் சொன்னார்:

"வீட்ட போங்க, மாப்பிள்ளையோட மனம் விட்டுக் கதைங்க. சரி வந்தாப் பாருங்க, இல்லெண்டா வந்து செல்லுங்க, ஆள் போட்டு அடிப்பம்”

***

நன்றி : ஹனீபாக்கா | E-Mail : slmhanifa22@gmail.com

1 comment:

  1. அடிப்பம் னு சொன்ன ஒரு வார்த்தைலயே
    அடிவகுறெல்லாம் வலிக்குது (சிரிச்சு)ஹனிபாக்கா...
    இதுல ஆள்போட்டு வேற அடிப்பீகளோ?

    ReplyDelete