Saturday, April 21, 2012

இந்தச் செய்தியை இன்னொருவர் சொல்லியிருந்தால்...

நான் , புலி , நினைவுகள் 1

நான் , புலி , நினைவுகள் 2

நான் , புலி , நினைவுகள் 3

***
நான் புலி நினைவுகள் - 04 - எஸ்.எல்.எம்.ஹனிபா

இந்திய அமைதிப்படை எமது தேசத்தை விட்டும் வெளியேறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள் நள்ளிரவில், ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர் செயலாளர் நாயகம் திரு. பத்மநாபா அவர்கள் நான் தங்கியிருந்த செவன் ஐலண்ட் ஹோட்டலுக்கு என்னைக் காண வந்தார். அவருடன் ஈ.பி.ஆர்.எல்.எப். உயர்மட்ட உறுப்பினர்கள் பலரும் இருந்தார்கள்.
நீண்ட நேர உரையாடலுக்குப் பின்னர் "ஐயா! உங்களிடம் ஒரு தூது கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் விடுதலைப் புலிகளுடன் கொஞ்சம் நெருக்கமானவர் என்பதை நாங்கள் அறிவோம். தமிழர்களுடைய அரசியல் போராட்டத்தில் கிடைத்த அற்ப சொற்ப அதிகாரமுள்ள இந்த  வடகிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் கேள்விக்குள்ளாவதை நீங்களும் அறிவீர்கள். இந்த மாகாண சபையை நமது இலட்சியத்தை அடைவதற்கான ஆரம்பமாகக் கொள்வோம். இப்பொழுது இது ஒரு ஒற்றையடிப் பாதை. இன்னும் பத்து வருடங்களில் இது ஒரு தார்ச்சாலை. அடுத்த தலைமுறையில் நெடுஞ்சாலையாக உருவெடுத்து நமது இலட்சியத்தை அடையும். எந்த வகையிலும் இந்தச் சபையை கட்டிக் காக்க வேண்டும். ஈ.பி.ஆர்எல்.எப். உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்கின்றோம். ஸ்ரீலங்கா இந்திய அரசின் அனுசரணையோடு இந்தச் சபையை விடுதலைப் புலிகளின் கைகளில் அளிப்பதற்கு சித்தமாக இருக்கிறோம்.அவர்களைப் பொறுப்பெடுத்து சபையை முன்னெடுத்து செல்லச் சொல்லுங்கள்".

மறுநாளே, ஊருக்கு வந்த நான், கிழக்கிலங்கை பொறுப்பாளர் கரிகாலன் அவர்களை எனது வீட்டுக்கு அழைத்து விடயங்களைச் சொன்னேன். அப்பொழுது கரிகாலனுக்கு 25 வயது. எனக்கு 45 வயது. கரிகாலன் என்னைப் பார்த்து, "ஐயா! இந்தச் செய்தியை இன்னொருவர் சொல்லியிருந்தால் நடப்பது வேறு. எங்களுக்கு நீங்கள் வேண்டியவர் என்பதனால் விட்டு விடுகிறோம். என்னிடம் பேசிய இந்த விடயத்தை நீங்கள் யாரிடமும் சொல்லி விடாதீர்கள்" என்றார்.

(தொடரும்)

***

நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா ( E-Mail : slmhanifa22@gmail.com )

No comments:

Post a Comment